இந்த பதிவினை தமிழில் படிக்க இங்கே சொடுக்கவும், நன்றி.
As the saying goes “Thirumaalai (the prabandham) ariyaadhaar, Thirumaalaye (Perumalai) ariyaadhaar”, we all need to learn and understand Thirumaalai , sung by Thondaradipodi Azhwaar, to know more and more about Perumal/Emperumaan.
In the first three hymns of this Divyaprabandham, Azhwaar enjoyed the experiences, graced by Emperumaan on him and in the subsequent eleven hymns, Azhwaar was preaching us his experiences with Emperumaan or Paramathma. When people raised many objections, Azhwaar responded to them to follow Sri Rama, by mentioning “silaiyinaal ilangai setra devane devan aavaan”; and asked them to follow Sri Krishna, who is simple and easy to approach, as ‘katrinam meytha kazhalinai panimin‘; and finally to Aranganathan, by mentioning ‘uybavaruku uyyum vannam Thiruvarangam kaatinaan”.
Still people did not follow Azhwaar, he decided to move on to describe the great favours he received from Periyaperumal in the next ten hymns, 15 to 24.
These are the first three subtopics of Thirumalai, namely, Azhwaar’s experience (1-3), Azhwaar’s preaching based on his experience (4-14), and the favours graced by Him to Azhwaar (15-24).
Now Azhwaar sings that he did not have any good qualities but had only bad qualities in the next 10 hymns (25-34), which is the fourth subsection, known as naichiyaanusanthaanam in our tradition. Azhwaar cannot be taken to speak atheism in this subsection. Azhwaar is telling us about a higher state of devotion than a normal situation. For example, when Azhwaar says that he did not have abilities to practise karma(actions), gnana (knowledge) and bhakthi (devotional) yogams, and that he had not offered his prayers using his hands(offering flowers), mind (thinking about Him) and mouth(singing His glories), it is to be taken as though he sings the ten hymns in this subsection with his mind in a higher level of understanding such as,
We had earlier seen in our previous weblog, about the first hymn of this subsection, namely, the 25th hymn of Thirumaalai, (Kulithu Moondru Analai), where Azhwaar conceded that he was not even qualified to do karma, gnana, bhakti yogas and asked Thiruvarangan to bless him with everything from the qualification onward. Let us now move on to the next hymn.
Podhellam Podhu kondu, un ponnadi punaiya maaten, theethila mozhigal kondu un thirukunam seppa maaten, kaadhalaal nenjam anbu kalandhilen adhu thannaale, yedhilen Arangarku elle, en seyvaan thondrinene (Thirumaalai 26)
In this hymn, Periyaperumal had asked Azhwaar if he could not practise karma, gnana, bhakti yogas, which are stipulated for Brahmins, Kshatriyas, Vysyas, then, he could do, what are prescribed for others, such as the archana, sthuti, etc. To adorn Him with flowers, to say His praises by words, and to think of Him by the mind, are said to be as the archana and stuti as mentioned by Emperumaan.
Azhwaar said that all the time, he never had the strength to offer the flowers to His holy feet or express His virtues with faultless words, or had truthful love towards Him from within his heart. By this hymn, Azhwaar said that he did not use any of his limbs to enjoy the experience of Thiruvarangan and cried why he was born.
Here we refer to the hymn from Bhoothathazhwaar, “Podharindhu vaanarangal poonchunai pukku, aangu alarndha podhu arindhu kondu yethum podhu ullam – podhu, Manivenkadavan malar adike sella, Anivenkadavan per aaynthu” (Irandaam Thiruvandhaadhi, 72). In this hymn, the monkeys of Thirumala, does service to Emperumaan, by the three deeds, that is with their hands, pluck the flowers, (poonchunai pukku, aangu alarndha podhu arindhu kondu), with their mouths recite His holy names (per aayndhu) and with their minds, think about Emperumaan’s glories ( yethum podhu ullam). The salient words of the hymn are given in brackets at the respective places.
Azhwaar says that it is always the right thing to adorn His holy feet that are shining like gold, with red flowers and that he has no strength or motivation to do so. It could be taken, that Azhwaar had strength and motivation in other things besides matters pertaining to Him. As mentioned earlier, in Vishnudharma, it is said that whichever tongue that says the name of Vishnu alone can be called as ‘tongue’ and similarly whatever body that serves Vishnu, alone can be classified as body, everything else is a waste.
In this phrase, there are two places where the word “podhu” is used; the first one represents the period or time and the second one refers to flowers.
Here Azhwaar did not mean that he has prayed some times, but not all the times, like 24 hours a day or seven days a week. The commentator clarified that Azhwaar meant that he did not pray even once and he did not have stamina to offer the prayers even once.
It is said in Vishnu Dharma (70.84) that all the things that lead to Moksha are done by uttering the two letters Hari just once. If one thinks of Lord Govinda once, He burns the sins committed in hundreds of births like burning sacks of cotton . We must remember that Lord Rama (Ramayana, Yudha Kaantam, 18-33) said that for the one who surrenders once and for all who say that they are His servant, He would endanger them completely and that was His vow.
Thus, He is illustrious and capable to grace the benefits on those who get involved with Him even for one time. Azhwaar says that all the time, he had never had the capability to worship such a Lord.
The service rendered to Emperuman with flowers is one of His favorites, because Vishnu is Alankarapriyan and Shiva is Abhishekapriyan, meaning that Vishnu likes to get beautified, whereas Siva likes to get him holy bathed. The chances of making a mistake in offering this service with flowers are very low. It makes it easier to do also. In our tradition, many have done this service with flowers.
History is that Periyaazhwaar raised and reared a garden for flowers (Nandavanam) in Srivilliputhur, and brought them to Lord Vatapathrasayi . It was in the same garden that he found Andal and raised her as his daughter. Periyaazhwaar enjoyed this kainkaryam and sang ten hymns, “aanirai meyka” in Periyazhwaar Thirumozhi (2.7) as Yasodha calling out Krishna and enjoying the various flowers adorning Him.
Aandal, got named Soodi Kodutha Sudarkodi, by garlanding Thirumal with both hymns and floral garlands. She made the three important parts of prayers, simple by singing “thoomalar thoovi thozhudhu, vaayinaal paadi, manathinaal sindhikka” (Thiruppavai 5), meaning, He shall be worshiped by offering the flowers with folded hands, singing His glory with the tongue and thinking about Him with our mind.
History is that Tondaradipodi Azhwaar had a floral garden for Emperumaan in Thiruvarangam. When Thirumangaiazhwaar was constructing a fortification wall for the Thiruvarangam temple, he made sure that the garden of Thondaradipodi Azhwaar was not disturbed. As a mark of mutual respect to Thirumangaiazhwaar, Thondaradipodi Azhwaar also named one of his gardening tool, as Arulmari, one of the titles of Thirumangai Azhwaar.
It can be seen from the Bhagavatham that before Lord Krishna killed Kamsan, one of His devotees, Malaakaaran bedecked Krishna with the best garlands and enjoyed the dharsan of beautiful Krishna. Adhering Swami Ramanujar’s wishes, Ananthaazhwaan a disciple of Swami Ramanuja and an achaaryan, moved to Thirumala and raised a floral garden in Thirumalai to grow and offer flowers for Ezhumalaiyan for many years. The crowbar he used is still on display in Thirumalai temple.
We can also recollect and enjoy the Thirukkannapuram hymns ‘Malai Nanni Thozhudhu Ezhumino’ (Thiruvaaimozhi 9.10) sung by Swami Nammazhvaar about the services related to offering flowers (Pushpa kainkaryam). He sang,
When Periyaperumal said that it was enough to say the divine qualities of the Emperumaan, with unflawed words, even if Azhwaar was involved in other worldly affairs without doing any service to Emperumaan using his limbs. Azhwaar said that although his words were innocent and beautiful, he was incapable of speaking the Emperumaan’s glories. Vishnu Dharmam, says that the tongue should only speak about Vishnu. Azhwaar said that his tongue was very sharp when it talks about other worldly matters, but when it comes to talking about Vishnu, it is incapable of talking.
Periyaperumal asked, whether Azhwaar could love Perumal through his heart, even if he could not render his services with his limbs and tongue. Azhwaar said in this case, his affection towards Periyaperumal did not come from true love and whatever he showed until then was untrue. As told in Bhagavadh Gita (2.62) that interest in material things will result in lust which again will lead to anger, Azhwaar said that the love he had experienced till that day, even in worldly matters, was also not a true one and it was only to steal others’ possessions.
The commentator takes the 62nd sloka from Aalavandhaar’s Sthothra Rathna, in which he declared himself as
With so many sins under his belt, Aalavandhar was asking Emperumaan, how to cross the large ocean of pain, which has no shore or end, and reach Him to do service to Him.
Next quote is taken from the Vishnu Purana (3.7.30), where Emperuman said that he who thinks of harming his friends, relatives, wife, children, parents and servants and plans coveting their wealth is not His devotee.
Azhwaar said that he did not use any of these triads, mind, body and words to get involved in Him, unlike the great adults who benefitted by using these triads. Azhwaar regretted that he became a void, who could not even engage any one of the above.
Here again, the commentator takes the 16th verse of Sthothra Rathnam and quotes how Emperuman is truthful to His devotees with the same triad, namely, mind, body and words. Emperuman, naturally is the ocean of all good qualities, and lists them as follows.
Tondaradipodi Azhwaar says in this hymn that there is Thiruvarangan in a beautiful reclining posture, and a simple dharsan of whom could easily give us the moksham, and we do not have to study any Shastras with such difficulty to understand and look for moksham. He laments that he has become nothing, without offering any prayers using any of his parts of the body or mind.
Azhwaar says that the reason for Emperumaan not to merge Azhwaar with Him was not because any of the following faults of Azhwaar, but because of the sins committed by Azhwaar by a single word ‘elle‘.
Azhwaar tells an important point for us to learn, that Emperumaan does not consider the faults of jeevathmaas, but the sweetest Emperumaan takes them as virtues. Azhwaar also states that every jeevathmaa is very dear to Emperumaan like the gemmed jewel Kausthubha, and Azhwaar cries with remorse that he wasted his life. Here a hymn from Periya Thirumozhi (3.7.6) “Arangathu uraiyum inthunaivan” is taken as a reference. Azhwaar cries that he has moved very much away from such a sweet companion and lost the favour graced by Emperumaan, Who can be enjoyed with all His beauty and Who graces us with Moksham, like milk which is enjoyed as a drink and also used as a medicine too.
Azhwaar cries that he had wasted his limbs, mind and body by not using them to serve Emperumaan, as told in Vishnu Dharmam and regrets why he even was born.
It is customary to say that evil planets appeared, when they come out in the sky. Similarly, Azhwaar concluded the song by saying that he was born evil, like an evil planet, without doing any good to others, but only to do bad things to others. This he called it as “thondrinene” rather than ‘piranthen‘, which is generally used for normal birth of human beings.
Let us catch up again in our next weblog, thanks.
அகிலவல்லி நாச்சியார் ஸமேத லக்ஷ்மிவராக சுவாமி திருவடிகள் போற்றி போற்றி
| திவ்யதேசம் | திருஇடவெந்தை திருவடந்தை நித்ய கல்யாணபுரி வராகபுரி அசுரகுல கால நல்லூர் ஸ்ரீபுரி | |||
| மூலவர் | லட்சுமி வராகப் பெருமாள் | |||
| உத்ஸவர் | நித்யகல்யாண பெருமாள் | |||
| தாயார் | கோமளவல்லி நாச்சியார் (தனிக்கோவில் நாச்சியார்) அகிலவல்லி நாச்சியார் | |||
| திருக்கோலம் | நின்ற திருக்கோலம் | |||
| திசை | கிழக்கு | |||
| பாசுரங்கள் | 13 | |||
| மங்களாசாசனம் | திருமங்கையாழ்வார் 13 | |||
| தொலைபேசி | +91 44 – 24272235 / +91- 98405 99310 / +91- 98409 36927 |
கோவில் பற்றி
எம்பெருமான் தினமும் ஒரு திருமணம் செய்து கொண்டதால் பெருமாளுக்கு நித்ய கல்யாணப் பெருமாள் என்று பெயர்.
நித்ய கல்யாண அவதாரத்தில் எழுந்தருளியிருப்பதாக ஐதீஹம். இவர் முகத்தில், தாடையில் பொட்டு இயற்கையாகவே அமைந்துள்ளது. இந்தப் பொட்டு திருமண நிகழ்ச்சியில் மணமகனுக்கு வைக்கும் த்ருஷ்டி பொட்டு போல் இயற்கையாகவே உள்ளது என்பார்கள்.
இங்கு எம்பெருமான், ஒரு திருவடியை பூமியிலும் மற்றொன்றை ஆதிசேஷன் தலையினிலும் வைத்துக்கொண்டு, அகிலவல்லி நாச்சியாரை இடது
தொடையில் தாங்கிக்கொண்டு, அவர் மூலமாகவே, சரம ஸ்லோகத்தை இந்த உலகத்திற்கு உபதேசிக்கும் வராஹ மூர்த்தியாய் நின்று சேவை சாதிக்கிறார். ஆதிசேஷன் அருகில் அவரது மனைவியும் இருக்கிறார்.
360 கன்னியரை ஒன்றாக்கி ஒரே பெண்ணாகச் செய்தமையால் இங்குள்ள பிராட்டிக்கு அகிலவல்லி நாச்சியார் என்று பெயரும் உண்டு. 360 கன்னியரில் முதற்கன்னிக்கு கோமளவல்லி என்பது பெயர்.
எம்பெருமான் தினமும் ஒரு திருமணம் செய்து கொண்டதால், ஊருக்கு நித்ய கல்யாணபுரி என்றும் ஒரு பெயர் உண்டு.
எம்பெருமான் ஒருவனே நாயகன், நாம் எல்லோரும் நாயகிகளே என்று சொல்லும் வைஷ்ணவ தத்துவத்தின் பொருளாக, இவ்வுலகத்தில் பிறக்கும் எல்லாரையும் எம்பெருமான் ஏற்றுக்கொள்வதின் அடையாளமாக தினம் ஒரு திருமணம் செய்து நித்யகல்யாண பெருமாளாக உள்ளார் என்றும் சொல்வர்.
வராக அவதாரம் எடுத்தமையால் வராகபுரி என்னும் பெயருண்டு. அசுரகுல கால நல்லூர் என்பதே கல்வெட்டுகளில் காணப்படும் பெயர். ஸ்ரீயின்
அவதார ஸ்தலமாதலால் ஸ்ரீபுரி என்றும் இந்த ஊருக்கு பெயர் உண்டு.
இன்று கோவளம் என்பதே ஒரு காலத்தில்
பிராட்டியின் அவதார மகிமையைக் குறிக்கும் கோமளவல்லிபுரம் என்று வழங்கப்பட்டதாகும். இங்குதான் காலவரிஷி தவம் புரிந்தார்.
கோமளவல்லித்தாயாருக்கு தனி சன்னதியும், ஆண்டாள் சன்னதியும், ரங்கநாதர் சந்நிதியும் உள்ளன.
யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட பல்லக்கு ஒன்று இக்கோவிலில் உள்ளது. கொச்சி மகாராஜாவின் அரண்மனையில் ஒன்றும், இங்கொன்றுமாக
இந்தியாவிலேயே இந்த இரண்டு யானைத் தந்த பல்லக்குகள்தான் உள்ளதென தொல் பொருள் ஆய்வுத்துறையினர் கூறுகின்றனர்.
இது திருஷ்டி பரிகார ஸ்தலம், ராகு, கேது, சுக்கிரன் தோஷ பரிகார ஸ்தலம், மற்றும் திருமண தடை உள்ளவர்கள் பரிகார ஸ்தலம் ஆகும்.
Google Map
திருஇடவெந்தை பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்
திருஇடவெந்தை பற்றி தினம் ஒரு திவ்யதேசம் சொல்வது
ஸ்தல வரலாறு
க்ருத யுகத்தில், மேகநாதன் என்னும் அரசன் இருந்தான். அவன் புதல்வன் பலி மிகவும் நீதிமானாக அரசு நடத்தி வந்தான். அப்பொழுது மாலி, மால்யவான், ஸு மாலி என்னும் மூன்று அரக்கர்கள் தேவர்களுடன் யுத்தம் செய்ய பலியின் உதவியைக் கேட்டனர் பலி மறுத்தான். அரக்கர்கள் தேவர்களோடு யுத்தம் செய்து தோற்றுப் போய் மீண்டும் பலியிடமே தஞ்சம் புகுந்தனர்.
அரக்கர்களுக்காக பலி தேவர்களுடன் யுத்தம் செய்து வென்றான். தேவர்களைக் கொன்ற பாவம் போவதற்காக இவ்விடத்து வந்து திருமாலைக் குறித்து கடுந்தவம் செய்தான். தவத்தில் மகிழ்ந்த விஷ்ணு, வராஹரூபியாய் அவனுக்கு காட்சிகொடுத்து அவனுக்கு மோட்சம் நல்கி சக்தி வாய்ந்த வராஹ மூர்த்தியாய் இங்குள்ள வராஹ குளத்தில் நின்றருளினார்.
சரஸ்வதி நதிக்கரையில் குனி என்னும் ஒரு ரிஷி தவம் செய்து சுவர்க்கம் பெற்றார். குனியின் மகளும் அவ்விதமே ஸ்வர்க்கம் செல்ல எண்ணி தவம் செய்யும் போது, நாரதர் வந்து, அவள் மணமாகாதவள், திருமணம் செய்தால் அன்றி ஸ்வர்க்கம் கிடைக்காது என்று சொல்லி, அங்குள்ள மற்ற முனிவர்களிடம் அவளை திருமணம் செய்து கொள்ள வேண்டினார்.
அங்கு காலவரிஷி என்ற ஒரு ரிஷி அந்த பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு 360 கன்னிகைகளைப் பெற்றார். பருவமடைந்த இவர்களை திருமணம் செய்து கொடுக்கத் திண்டாடிக் கொண்டிருந்த வேளையில், வாரகப்புரி என்னும் ஊருக்கு வருமாறும் அங்கு எழுந்தருளியுள்ள வராஹமூர்த்தி மிகப்பெரிய வரப்பிரசாதி என்றும் காலவரிஷிக்குச் சொல்ல அவரும் இங்கு வந்து வராஹமூர்த்தியைக் குறித்து கடும் தவம் செய்தார். இவரின் தவத்தை மெச்சிய ஸ்ரீமந் நாராயணன் ஒரு பிரம்மச்சாரி வடிவில் வந்து இம்முனிவரிடம் வர, ரிஷி அவரிடம் தனது பெண்களை திருமணம் செய்து கொள்ள வேண்டினார். எம்பெருமானும் அதற்கு சம்மதித்து, தினம் ஒரு கன்னிகையாக 360 பெண்களையும் ஒரு வருடத்தில் திருமணம் செய்து கொண்டார்.
கடைசி தினத்தில் 360 கன்னியர்களையும் ஒன்றாகச் சேர்த்து ஒரே பெண்ணாக்கி அவரை இடப்புறம் ஏற்றுக் கொண்டார். அவரே திருவாகிய மஹாலக்ஷ்மி. தனது இடப்பக்கத்தில் வைத்துக்கொண்டு வராஹ ரூபியாக சேவை சாதித்தார். இடது புறம் திருவை வைத்து எம்பெருமான் சேவை கொடுத்ததால், இந்த திருத்தலம், திரு இட எந்தை என்று மாறி, திருவிடவெந்தையாயிற்று, காலப்போக்கில் மருவி திருவடந்தை என்று ஆயிற்று.
இந்த வராஹ மூர்த்தியை மாமல்லபுரத்திலிருந்து அரிகேசரிவர்மன் என்னும் மன்னன் தினமும் வந்து வணங்கி சென்று கொண்டிருந்தான். இம்மன்னன் தன் பொருட்டு தினமும் 12 மைல் வந்து சேவித்துச் செல்வதைக் கண்ட எம்பெருமான் இவனது கனவில் தோன்றி உனக்காக மாமல்லையில் எழுந்தருளுகிறேன் என்று சொல்லி பிராட்டியை வலப்பக்கத்தில் வைத்துக் கொண்டு மாமல்லபுரத்தில் எழுந்தருளினார். அந்த கோவில் மாமல்லபுரத்தில் கலங்கரை விளக்கத்திற்கு செல்லும் பாதையில் அமைந்துள்ளது.
ஆழ்வார்
திருமங்கையாழ்வார் 13 பாசுரங்கள் பாடியுள்ளார்.
பார்த்தற்காய் அன்று பாரதம் கை செய்திட்டு வென்ற பரஞ்சுடர், * கோத்து அங்கு ஆயர் தம் பாடியில் குரவை பிணைந்த வெங்கோவலன் * ஏத்துவார்த் தம் மனத்துள்ளான் இடவெந்தை மேவிய எம்பிரான் * தீர்த்த நீர்த் தடஞ்சோலைசூழ் திருவேங்கடம் அடை நெஞ்சமே. (பெரிய திருமொழி 1.8.4)
முற்காலத்தில் அர்ஜுனுக்காக பாரத யுத்தத்தில் கையும் அணியும் வகுத்து வெற்றி பெற்ற பரம்சோதியானவனும், திருவாய்பாடியில் ராசக் கீரீடை செய்து அருளின நம் கோபலனும், தன்னை துதிப்பவர்கள் நெஞ்சில் வசிப்பவரும் திருவிடவெந்தையில் பொருந்திய ஸ்வாமியானவன் எழுந்தருளி இருக்க பெற்றதும், புண்ணிய தீர்த்தங்களாலும், சூழ பெற்றதுமான திருவேங்கடம் அடை நெஞ்சே என்கிறார்.
பெரிய திருமொழி பதிகம் 2.7 ல் வரும் எல்லா பாடல்களில், திருமங்கையாழ்வாராகிய பரகாலநாயகியைப் பெற்றெடுத்த திருத்தாயார், திருவிடந்தைப் பெருமானிடத்திலே தன் மகள் காதல் கொண்டு இருப்பதையும், அந்த அநுபவம் கைகூடாததால் பலவகை மாற்றங்களை அடைந்திருக்கிறதை ஒவ்வொரு பாட்டில் ஒவ்வொரு வகையாகப் பேசி ‘இப்படிப்பட்ட இப்பெண்பிள்ளை விஷயத்தில் நீ செய்ய நினைத்திருப்பது என்ன பிரானே!’ என்று கேட்பதாகச் செல்லுகிறது. உண்மையில், ஆழ்வாரே, ‘தாய்’ என்று பாடுவதால், ஆழ்வார் தாமே தம்முடைய காதலை கூறி ‘இப்படிப்பட்ட ஆசைகள் உடைய என் விஷயத்திலே என்னை நிராகரிக்க திருவுள்ளமோ! அன்றி அங்கீகரித்துக்கொள்ளவே திருவுள்ளமோ? இரண்டில் ஓன்றைச் சோதி வாய் திறந்து அருளிச் செய்யவேணும்’ என்று கேட்கிறார் என்றே எடுத்து கொள்ளவேண்டும்.
திவளும் வெண் மதி போல் திருமுகத் தரிவை செழுங் கடல் அமுதினில் பிறந்த * அவளும், நின் ஆகத்திருப்பது அறிந்தும் ஆகிலும் ஆசை விடாளால், * குவளையங் கண்ணி கொல்லியம் பாவை சொல்லு நின் தாள் நயந்திருந்த * இவளை, உன் மனத்தால் என் நினைந்திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே. (பெரிய திருமொழி 2.7 1)
திருவிடவெந்தையில் எழுந்தருளி இருக்கிற எம்பெருமானே, ஒளி வீசிக்கொண்டு இருக்கும் வெளுத்த சந்திரனை போன்று அழகிய முகம் உடையவளாய், நித்ய இளமை உடையவளாய், செழுமை தங்கிய கடலில் அமுதத்தோடு கூட பிறந்தவளான அந்த பெரிய பிராட்டியாரும் உனது திருமார்பில் எழுந்தருளி இருப்பதை, இந்த பரகால நாயகி அறிந்திருந்த போதும், உன்னிடத்தில் ஆசையை விடுவதாக இல்லை; கரு நெய்தல் போன்று அழகிய கண்கள் உடையவளும், கொல்லி மலையில் உள்ள அழகிய பதுமை போன்றவளும், உனது திருவடிகளை ஆசை பட்டு கொண்டு இருப்பவளுமான இந்த பெண் விஷயத்தில் என்ன செய்வதாக நினத்து இருக்கிறாய், அதனை வெளியிட்டு அருள் என்று தாயார் சொல்வதான பாசுரம். .
துளம் படு முறுவல் தோழியர்க்கு அருளாள் துணை முலை சாந்து கொண்டணியாள், * குளம்படு குவளைக் கண்ணிணை எழுதாள் கோல நன்மலர்க்குழற் கணியாள், * வளம்படு முந்நீர் வையம் முன்னளந்த, மால் என்னும் மால் இனமொழியாள், * இளம்படி இவளுக்கு என்ன நினைந்திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே. (பெரிய திருமொழி 2.7.2)
இடவெந்தை எம்பெருமானே, தன்னுடைய ஆசைக்கு தகுதியான பேச்சை உடையவளான இப்பெண்பிள்ளையானவள், மாதுளம் விரை போன்ற பற்களில் உண்டாகின்ற புன்சிரிப்பை தன் தோழிமார்களை நோக்கி, அருளுகின்றாள் இல்லை; சேர்த்தி அழகுடைய முலைகளை சந்தனத்தை கொண்டு அலங்கரிக்கிறாள் இல்லை; தடாகத்தில் உள்ள செவ்விய குவளை மலர் போன்ற கண்களில் மை இட்டு கொள்ளவில்லை; கூந்தலில் அழகிய சிறந்த பூக்களை சூட்டி கொள்ளவில்லை; ரத்னம் முதலிய நல்ல சரக்குகளுக்கு இடமான கடலால் சூழப்பட்ட பூமியை, முன்னொரு கால், அளந்த மால், ஸர்வேஸ்வரன் என்று சொல்லி கொண்டு இருக்கிறாள்; விரகம் பொறாத சுகுமாரமான பாவையான இவள் விஷயத்தில் என்ன செய்வதாக திருவுள்ளம் என்று தாயார் கேட்பதாக அமைந்த பாசுரம்.
சாந்தமும் பூணும் சந்தனக் குழம்பும் தடமுலைக் கணியிலும் தழலாம், * போந்த வெண் திங்கள் கதிர் சுடமெலியும் பொருகடல் புலம்பிலும் புலம்பும், * மாந்தளிர் மேனி வண்ணமும் பொன்னாம் வளைகளும் இறைநில்லா, என்தன் * ஏந்திழை இவளுக்கு என் நினைந்திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே. (பெரிய திருமொழி 2.7.3)
இடவெந்தை எம்பெருமானே, கலவை சந்தனமும், முத்து வடத்தையும், குழம்பான சந்தனத்தையும், இவள் தனது பெரிய முலைகளில் அணிந்து கொண்டாலும், அவையெல்லாம், நெருப்பாகவே தகின்றன. வெளி வந்த தோன்றின வெளுத்த சந்திரனின் கிரணங்கள் நெருப்பு போல தகிக்க, அதனால் நோவு பட்டு நின்றாள் ; அலை எறிகின்ற கடலானது கோஷம் செய்ய தொடங்கினால் இவளும் கூக்குரல் இட்டு கொண்டு இருக்கிறாள்; மாந்தளிர் போன்ற இவளின் உடம்பின் நிறமும் பசலை நிறமாக மாறி விட்டது; கையில் வளைகளும் சற்றேனும் தங்குவதில்லை. எனது பெண்பிள்ளை ஆகிய இவள் விஷயத்தில் என்ன செய்வதாக திருவுள்ளம் என்று தாயார் கேட்கிறார்.
ஊழியில் பெரிதால் நாழிகை. என்னும் ஒண்சுடர் துயின்றதால் என்னும், * ஆழியும் புலம்பும். அன்றிலும் உறங்கா தென்றலும் தீயினிற் கொடிதாம், * தோழியோ. என்னும் துணை முலையரக்கும் சொல்லுமினென் செய்கேன் என்னும், * ஏழையென் பொன்னுக் கென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே. பெரிய திருமொழி 2.7.4)
இடவெந்தை எம்பெருமானே, இந்த பெண்பிள்ளையானவள் ஒரு நாழிகை பொழுதானது ஒரு கல்பத்தை காட்டிலும் நெடிது என்கிறாள்; சூரியன் செத்து விட்டான் என்கிறாள்; அடியே தோழி என்று அழைத்து அவளிடம் என்ன சொல்கிறாள் எனில், சமுத்திரமோ கோஷம் போடுகின்றது ; அன்று பறவையோ உறங்குவதில்லை ; தென் திசை காற்றோ நெருப்பை விட கொடியதாக உள்ளது; ஐயோ என்ன செய்வேன் என்கிறாள்; இரண்டு முலைகளையும் பிடுங்கி எறிபவள் போல இருக்கிறாள்; இப்படி பட்ட கஷ்டங்களுக்கு என்ன பரிகாரம் செய்வேன் ? மிகவும் சாபல்யம் உடைய என் பெண் விஷயத்தில் என்ன உன் திருவுள்ளம் என்று தாயார் கேட்கிறாள்;
ஓதிலும் உன் பேரன்றி மற்றோ தாள் உருகும் நின் திருவுரு நினைந்து, * காதன்மை பெரிது கையற உடையள் கயல் நெடுங் கண் துயில் மறந்தாள், * பேதையேன் பேதை பிள்ளை மை பெரிது தெள்ளியள் வள்ளி நுண் மருங்குல், * ஏதலர் முன்னா என் நினைந்திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே. (பெரிய திருமொழி 2,7,5)
இடவெந்தை எம்பெருமானே, என் மகள் வாய் விட்டு எதை சொன்னாலும், உனது திருநாமம் தவிர வேறு ஒன்றையும் சொல்கிறாள் இல்லை; உனது திருமேனியை சிந்தித்து உருகி நின்றாள் ; உன் விஷயத்தில் ஆசை பெருகுகிறது என்று ஒன்றும் செய்யாமல் இருந்தாள் ; கயல் மீன் போன்று நீண்ட கண்களிலே உறக்கத்தை மறந்து விட்டாள் ; அறிவு கெட்டவளான இந்த பெண் பிள்ளை; மிகவும் இளம் வயதில் இருந்த போதும், எம்பெருமானுடைய ஸ்வரூப குணங்களில் தெளிவாக இருக்கிறாள்; கொடி போன்ற நுட்பமான இடையை உடைய இம்மகளை பற்றி, எதிரிகள் முன்பாக, என்ன செய்வதாக திருவுள்ளம்; அவமானபடுத்துவாயா அல்லது மரியாதை செய்வாயா என்று தாயார் சொற்களால் திருமங்கைஆழ்வார் கேட்பதாக அமைந்த பாசுரம்.
தன் குடிக்கேதும் தக்கவா நினையாள் தடங்கடல் நுடங்கெயில் இலங்கை, * வன்குடி மடங்க வாளமர் தொலைத்த வார்த்தை கேட்டின் புறும் மயங்கும், * மின்கொடி மருங்குல் சுருங்க மேல் நெருங்கி மென்முலை பொன் பயந் திருந்த, * என்கொடி இவளுக்கு என் நினைந்திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே. (பெரிய திருமொழி 2.7.6)
இடவெந்தை எம்பெருமானே, இந்த என் பெண்ணானவள் தனது குல மரியாதைக்கு தக்கபடி, சிறிதும் ஆராயாமல் பெரிய கடலோடும், வளைந்த மதிலோடும் கூடின இலங்கையில் இருந்த வலிய ராக்ஷச குலமானது அழியும்படி, கொடிய போர்க்களத்தில் ஒழித்த செய்தியை கேட்டு, ஒரு பிராட்டிக்காக இவ்வளவு காரியம் செய்கிறாயே என்று ஈடுபட்டு நின்றாள் ; அந்த பிராட்டிக்கு செய்தது போல எனக்கு செய்ய வில்லையே என்று மூர்ச்சித்து விழுந்தாள் ; மின்னலும் வஞ்சிக்கொடியும் போன்ற இடையானது நுடங்கும்படி மெல்லிய மூலைகளானவை மார்பின் மேல் ஒன்றோடு ஒன்று நெருக்கமாக பசலை நிறத்தில் எனது பெண்பிள்ளையின் திறத்திலே என்ன செய்வதாக திருவுள்ளம் என்று தாயார் கேட்கிறாள்;
உளங் கனிந்திருக்கும் உன்னையே பிதற்றும் உனக்கன்றி எனக்கு அன்பு ஓன்று இலளால் * வளங் கனி பொழில் சூழ் மாலிருஞ் சோலை மாயனே! என்று வாய் வெருவும், * களங் கனி முறுவல் காரிகை பெரிது கவலையோடு அவலம் சேர்ந்திருந்த, * இளங் கனி இவளுக்கு என்ன நினைந்திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே. (பெரிய திருமொழி 2.7.7)
இடவெந்தை எம்பெருமானே, இந்த என் பெண்பிள்ளையானவள் உன்னையே நினத்து இருக்கிறாள்; நெஞ்சு கனிந்து இருக்கிறாள்; உன்னை பற்றியே வாய் பிதற்றுகிறாள்; உன் விஷயத்தை தவிர, என் விஷயத்தில் கூட அன்பு இல்லாதவளாக இருக்கிறாள்; செழிப்பான பழங்களை உடைய சோலைகளால் சூழப்பட்ட திருமாலரின்சோலையில் எழுந்தருளி இருக்கின்ற என் ஆச்சாரியனே, என்று வாய் வெறுவுகின்றாள்; களா பழம் போல இனிதான முறவலையும், அழகையும் உடையவளாய், மிக்க மனக்கவலையையும் இளைப்பும் உடையவளாய் இளம் கன்னியாகிற என் பெண்பிள்ளை திறத்தில் என்ன நினத்து இருந்தாய் என்று தாயார் கேட்கிறாள்;
அலங்கெழு தடக்கையாயன் வாயாம் பற்கழியுமால் என்னுள்ளம் என்னும், * புலங்கெழு பொரு நீர்ப் புட்குழி பாடும் போதுமோ நீர் மலைக்கென்னும், * குலங் கெழு கொல்லி கோமள வல்லிக் கொடியிடை நெடுமழைக் கண்ணி, * இலங்கெழில் தோளிக்கு என் நினைந்திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே. (பெரிய திருமொழி 2.7.8 )
இடவெந்தை எந்தை பிரானே, கலப்பை விளங்குகின்ற பெரிய திருக்கையை உடையவனான கோபால கிருஷ்ணனுடைய திருபவளத்தில் வைத்து ஊதுகின்ற குழல் ஓசைக்கு என் நெஞ்சு அழிகின்றது என்கிறாள்; மனோகரமான அலை எரிகின்ற நீர் பெருக்கை உடைய திருபுட்குழி விஷயமாக பாடுகிறாள்; திருநீர்மலைக்கு போவோம் என்கிறாள்; மிக சிறந்த கொல்லி மலையில் உள்ள பாவை போன்றவளும் வஞ்சி கொடி போன்ற இடை உள்ளவளும் பெரு மழை போல நீர் தாரை பெருக பெற்ற கண்களை உடையவளாய், விளங்குகின்ற அழகிய தோள்களை உடையவளாய் என் பெண்பிள்ளை திறத்தில் என்ன நினைத்து இருக்கிறாய் என்று தாயார் கேட்பதாக அமைந்த பாசுரம்.
பொன் குலாம் பயலை பூத்தன மெந்தோள் பொரு கயல் கண் துயில் மறந்தாள், * அன்பினால் உன் மேலாதரம் பெரிது இவ்வணங்கினுக்கு உற்ற நோயறியேன், * மின்குலா மருங்குல் சுருங்க மேல் நெருங்கி வீங்கிய வனமுலையாளுக்கு, * என்கொலாம் குறிப்பில் என் நினைந்திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே. (பெரிய திருமொழி 2.7.9)
இடவெந்தை எந்தை பிரானே, இந்த பெண்பிள்ளையினுடைய மென்மை தங்கிய தோள்கள் ஆனவை, பொன்னிறம் என்று சொல்லத் தக்க பசலை நிறத்தை கொண்டவை. ஒன்றோடுஒன்று போர் செய்ய தக்க இரண்டு மீன்களாகிற கண்களில் உறக்கத்தை மறந்து விட்டாள் ; உன் விஷயத்திலே ஆசையினால், ஆதரவு பெருகி செல்கின்றது; இந்த பெண்ணுக்கு உண்டான வியாதியை நான் அறிந்து இலேன் ; மின்னல் போன்ற கொண்டாடத்தக்க இடையானது துவளும் படியாக மார்பின் மேலே ஒன்றோடு ஒன்று நெருக்கமுற்று வளர்ந்துள்ள அழகிய முலைகளை உடைய இம்மகளுக்கு என்ன ஆகுமோ , இவளை பற்றி உன் திருவுள்ளத்தில் என்ன நினத்து உள்ளாய் என்று தாயார் கேட்கிறாள்;
அன்னமும் மீனும் ஆமையும் அரியும் ஆய எம் மாயனே ! அருளாய், * என்னுமின் தொண்டர்க்கு இன்னருள் புரியும் இடவெந்தை யெந்தை பிரானை, * மன்னு மா மாட மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாயொலிகள், * பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழவினை பற்றறுப் பாரே! (பெரிய திருமொழி 2.710)
ஹம்ஸரூபியாகவும் மத்ஸ்யரூபியாகவும் கூர்மரூபியாகவும் நரஸிம்ஹரூபியாகவும் திருவவதரித்த ஆச்சரியமான எம்பெருமானே, கிருபை செய்ய வேண்டும் என்று பிரார்த்திக்கின்ற உன் அடியவர்களுக்கு பரம கிருபை செய்து அருளுகின்ற திருவிடவெந்தைப் பெருமான் விஷயமாக, நிரந்தரமாக பெரிய மாடங்களையுடைய திருமங்கையில் உள்ளவர்களுக்கு தலைவரும் சிறந்த வேல் என்ற ஆயுதத்தை உடைய திருமங்கை ஆழ்வார் விளக்கம்ஆகிய அருளி செய்த இப்பாசுரங்களை பாடுபவர்கள் எந்நாளும் முந்திய வினைகளை முற்றுமாக அறுத்து பற்று இல்லாமல் இருப்பார்கள் என்று முடிக்கிறார்.
இந்த பதிகத்தின் முதல் ஒன்பது பாட்டும் வேற்று வாயாலே (தாயார்) பேசி, இதில் கலியன் வாயொலிகள் என்பதால், தம்முடைய பக்திப் பெருங்காதலைத் தாமே பேசிக்கொண்டார் என்பது விளங்கும் . “உன் மனத்தால் என் நினைந்திருந்தாய்?” என்று பாசுரந்தோறும் எம்பெருமானை வினவிக் கொண்டேவந்தவர் அகற்கு ஒரு மறுமொழியும் பெறாமல் எப்படி பதிகத்தை முடித்து விட்டார் என்பதற்கு கீழ்கண்டவாறு மறுமொழி பெற்றே முடித்தார் என்று கொள்ளலாம். “நீர் கவலையற்று இரும்; உம்மை நாம் கைவிடுவோமோ? உம்மிடத்தில் பரிபூர்ண க்ருபை செய்வதாகவே திருவுள்ளம் பற்றி யிருக்கிறோம். இல்லை என்றால் அங்கு (பரமபதத்தில்) இருந்து இங்கு வந்து திருவிடவெந்தையிலே நிற்போமோ, அஞ்சாதே கொள்ளும், உமக்கு அருள்புரித்தோம்’ என்று எம்பெருமான் சோதி வாய் திறந்து அருளிச் செய்தது கொண்டு தேறுதலடைந்து இந்த பதிகத்தை முடித்ததார்.
காரார் மணினிர கண்ணனூர் விண்ணகரம் சீரார் கணபுரம் சேரை திருவழுந்தூர் *காரார்க் குடந்தை கடிகை கடல்மல்லை ஏரார் பொழில் சூழ் இடவந்தை நீர்மலை * சீராரும் மாலிரும் சோலை திரு மோகூர் (சிறிய திருமடல் 2707 2673 -73)
சிறிய திருமடலில் சில திவ்ய தேசங்களை குறிப்பிடும் போது இட வெந்தை என்று இதனையும் ஆழ்வார் இணைத்து கொள்கிறார்.
வல்லவாழ் * பின்னை மணாளனை பேரில் பிறப்பிலியை, தொன்னீர்க் கடல்கிடந்த தோளா மணிச்சுடரை, * என்மனத்து மாலை இடவெந்தை ஈசனை, மன்னும் கடன்மல்லை மாயவனை, – வானவர்தம் (பெரிய திருமடல் 119 /2774)
பெரிய திருமடலில் என் மனத்து மாலை என்று இடவெந்தை எம்பெருமானை குறிப்பிடுகிறார்.
மீண்டும் இன்னொரு திவ்ய தேச அனுபவத்தில் சந்திக்கலாம், நன்றி.
அணிமாமலர்மங்கை தாயார் ஸமேத நீர்வண்ணபெருமாள் திருவடிகள் போற்றி போற்றி
| திவ்யதேசம் | திருநீர்மலை தோயாத்ரிகிரி (காண்டவனம்) | |||
| மூலவர் 1 தாயார் திசை திருக்கோலம் இடம் | நீர்வண்ணன், நீளமுகில்வண்ணன் , நீலவண்ணப்பெருமாள், காண்டபவனப் பெருமாள், காண்டபவன நாதன் அணிமாமலர் மங்கை (தனிக்கோவில் நாச்சியார்) கிழக்கே திருமுகமண்டலம் நின்ற திருக்கோலம் மலை அடிவாரக்கோவில் | |||
| மூலவர் 2 திசை திருக்கோலம் இடம் | சாந்த நரசிம்மன் , பாலநரசிம்மர் கிழக்கே திருமுகமண்டலம் வீற்று இருந்த திருக்கோலம் மலைக்கோவில் | |||
| மூலவர் 3 தாயார் திசை திருக்கோலம் இடம் உற்சவர் | ரங்கநாதன் ரங்கநாயகி (தனிக்கோவில் நாச்சியார்) தெற்கே திருமுகமண்டலம் மாணிக்க சயன திருக்கோலம் (கிடந்த) மலைக்கோவில் அழகிய மணவாளன் (இவர் இருப்பது மலையடிவார கோவிலில்) | |||
| மூலவர் 4 திசை திருக்கோலம் இடம் | த்ரிவிக்ரமன் , உலகளந்த பெருமாள் கிழக்கே திருமுகமண்டலம் நின்ற திருக்கோலம் (நடந்தான்) மலைக்கோவில் | |||
| பாசுரங்கள் | 20 | |||
| மங்களாசாசனம் | திருமங்கையாழ்வார் 19 பூதத்தாழ்வார் 1 | |||
| தொலைபேசி | 91- 44-2238 5484, +91 98405 95374, +91 94440 20820. |
கோவில் பற்றி
இது ஒரு மலைக்கோயில் ஆகும். சுமார் 200 அடிஉயரம் உள்ள மலை இது ஆகும். மலைக்கு மேல் ஏறிச்செல்ல படிகள் வசதியாக உள்ளன. மலையடிவாரத்திலும், மலையின் மேலும் இரண்டு பெரிய கோவில்கள் உள்ளன. இங்கு எம்பெருமான் நான்கு திருக்கோலங்களில், மூன்று அவதார பெருமைகளோடு காட்சி அளிக்கிறார். நின்றான்(நீர்வண்ணன்), இருந்தான்(நரசிம்மன்), கிடந்தான்(ரங்கநாதன்), நடந்தான்(த்ரிவிக்ரமன்) என்ற நான்கு திருக்கோலங்களில் இந்த எம்பெருமான் நரசிம்மன், த்ரிவிக்ரமன், இராமபிரான் என்ற அவதாரங்களாக திருநீர்மலையில் காட்சி தருகிறார்.
தாமரை மலர் பீடத்தில் ஹஸ்த முத்திரை பொருந்திய
அபயமளிக்கும் அழகிய திருக்கரத்துடன், திருமார்பில் சாளக்கிராம மாலையுடன் நீர்வண்ண எம்பெருமான், மலையடிவாரத்தில் காட்சி தருகிறார். நீர் சூழ்ந்த மலையின் நடுவில் காட்சி கொடுப்பதால், இவருக்கு நீர்வண்ணன் என்ற பெயர் உண்டாயிற்று. இந்த எம்பெருமான் நீல வண்ணத்தில் இருப்பதால், நீலவண்ணப்பெருமாள் என்றும் பெயர் உண்டு.
இராமன் தனி சன்னதியில் மலையடிவார கோவிலில் தரிசனம் தருகிறார். வால்மீகி இராமரை வணங்கிய நிலையில் சுயம்புவாக இந்த சந்நிதியில் உள்ளார்.
பொதுவாக கோவில்களில் சுவாமி, கோபுரம், கொடிமரம், பலிபீடம் என்று எல்லாம் ஒரே நேர்கோட்டில் இருக்கும். வால்மீகிக்கு நீர்வண்ணனாகவும், ராமனாகவும் காட்சி அளித்ததால் இரண்டு எம்பெருமான்களுக்கும் மரியாதை செய்யும் வண்ணம், கோபுரம் ராமர் சன்னதிக்கு எதிராகவும், கொடிமரம் நீர்வண்ணனுக்கு எதிராகவும் அமைக்கப்பட்டு உள்ளது.
மலைமேல் உள்ள நரசிம்மர் பாலநரசிம்மராக காட்சி அளிக்கிறார். இங்குள்ள நரசிம்மனும் த்ரிவிக்ரமனும் பூலோகத்தில் அவதாரம் முடிந்தபின், அவதார பயன் கிடைத்தபின், மகிழ்ச்சியுடன் ஸ்ரீ வைகுண்டத்திற்கு திரும்பும் காட்சி இங்கு ஸேவையாகிறது என்கிறார்கள். அதாவது வீற்றுஇருந்த திருக்கோலத்தில் பாலநரசிம்மராகவும், நடந்த நிலையில் உலகளந்த திரிவிக்ரமனாகவும் காட்சி அளிக்கிறார்கள்.
மேலும், மலைமேல் சயன திருக்கோலத்தில், ரங்கநாதனாகவும், மலையடிவாரத்தில் திருமணக் கோலத்தில் இராமபிரான் கல்யாணராமனாக அதாவது வனம் போகும் முன் உள்ள சீதாராமனாகவும், நின்ற திருக்கோலத்தில் நீர்வண்ணனாகவும் காட்சி அளிக்கிறார்கள்.
பொதுவாக மூலவரும் உற்சவரும் ஒரே இடத்தில் தான் இருப்பார்கள். ஆனால் இங்கு, மலைமேல் உள்ள மூலவரான ரங்கநாதரின் உற்சவரான அழகிய மணவாளன் வருடத்தில் மூன்று முறை தான் மலைமேல் காட்சி அளிக்கிறார். மற்ற நாட்களில் மலையடிவார கோவிலிலே தான் இருக்கிறார். சித்திரை ப்ரம்மோத்ஸவத்தின் போது கொடியேற்றம் நாள் அன்றும், விடையாத்தி (உற்சவ கடைசி நாள்) நாளன்றும், பங்குனி திருக்கல்யாண வைபவத்தின் போதும் மட்டும் மலைமேல், அழகியமணவாளன் மூலவருடன் காட்சி அளிக்கிறார்.
மணிகர்ணிகா தடாகம், ஷீர புஷ்கரணி, காருண்ய புஷ்கரணி, ஸித்த புஷ்கரணி, ஸ்வர்ண புஷ்கரணி என்று ஐந்து தீர்த்தங்கள் பெயர்களுடன், இங்கு உள்ள திருக்குளம் மூன்று ஏக்கர் பரப்பில், நடுவில் நீராழி மண்டபத்துடன் அமைந்து உள்ளது.
காண்டபவனப் பெருமாள் என்றும், காண்டபவன நாதன் என்றும், இந்த பிரதேசத்தின் பெயரில் இந்த எம்பெருமானை அழைத்து வந்தார்கள். திருமங்கை ஆழ்வார் வந்த போது நீர் சூழ்ந்து நின்ற காரணத்தால் நீர்மலை என்றும் திருநீர்மலை என்றும் பெயர் வந்தது. திருமங்கையாழ்வார் இவ்வூருக்கு வந்தபோது நீர்சூழ்ந்து கொண்டதால் 6 மாத காலம் அவர் தங்கியிருந்த இடம் இன்று திருமங்கைஆழ்வார்புரம் என்னும் பெயருடன் இங்கிருந்து சமீபத்தில் உள்ளது.
மலைமேல் உள்ள கோவில் என்பதால் பௌர்ணமி அன்று கிரிவலம் செய்வதும் இங்கு ஒரு விஷேசம். தோயம் என்ற சொல்லுக்கு நீர் என்பது பொருள். இங்குள்ள மலைக்கு தோயாத்ரி, நீரால் சூழப்பட்ட மலை என்று பெயர்.
திரு நீர் மலை என்று பிரித்துப் பார்த்தால் நீர் என்பது எம்பெருமானின் நீர்மை என்ற குணத்தை குறிக்கும். நீர்மை என்பது எளிமை, அல்லது அடியார்களைக் கண்டால் உருகும் தன்மை. மலை என்பது எம்பெருமானின் உறுதியை குறிக்கும், அதாவது அடியார்களை ஏற்றுக்கொள்வதில் அவருக்கு உள்ள உறுதியை குறிக்கும். நீர் என்பது எம்பெருமானின் சௌலப்யத்தையும் (எளிமை), மலை என்பது எம்பெருமானின் பரத்துவத்தையும் (உயர்ந்தவன்) என்பதையும் குறிப்பதாக கொள்ளலாம்.
கோவில் திருவிழாக்கள்
சித்திரையில் ப்ரம்மோத்ஸவம் 10 நாட்கள் மலைமேல் உள்ள ரங்கநாதருக்கும், வைகாசியில் வசந்த உற்சவம், ஆனியில் கோடை உற்சவம், புரட்டாசியில் சனிகிழமைகள், பவித்ரோத்ஸவம், என்று பல திருவிழாக்கள் மலைக்கோவில், மற்றும் மலையடிவாரக் கோயில்களில் கொண்டாப்படுகின்றன. ப்ரம்மோத்ஸவத்தின் போது ஒவ்வொரு நாளும் ஒரு வாகனத்தில் எம்பெருமான் புறப்பாடு காண்கிறார்.
தைமாதம், ரதசப்தமி அன்று ஒரே நாளில் ரங்கநாதர் ஏழு வாகனங்களில் எழுந்தருளி சேவை சாதிப்பார். அன்று சூரிய உதயத்திற்கு முன்பு சூரிய பிரபை வாகனத்தில் புறப்பட்டு தீர்த்தக்கரையில் சூரிய உதயத்தின் போது, எம்பெருமானின் பாதம் முதல் கேசம் வரை படிப்படியாக தீபாராதனை காண்பார். இது எம்பெருமானுக்கு சூரியனே செய்யும் பூஜையாக கருதுவார்கள். பின்னர் அன்று, அனுமந்த வாகனம், கருட வாகனம், சேஷ வாகனம், குதிரை வாகனம், சிம்ம வாகனம் என்று தொடர்ந்து, சந்திரப்பிரபையுடன் என்று அன்றைய திருவிழா நிறைவுபெறும். ரதசப்தமி திருவிழா திருமலையிலும் சிறப்பாக ஏழு வாகன புற்பாடுகளுடன் நடைபெறுகிறது.
வைகுண்ட ஏகாதசியின் போது அழகிய மணவாளன் சொர்க்கவாசல் கடக்கிறார். மாசி மகத்தின் போது கருடவாகனம் காண்பதும் அவரே. பங்குனி உத்திரத்தில் ரங்கநாதருக்கும் ரங்கநாயகிக்கும் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
ஆனியில் ஒரு நாள் உற்சவம் நரசிம்மருக்கும், ஆடியில் ஒருநாள் உற்சவம் உலகளந்த பெருமாளுக்கும் நடைபெறுகிறது. அப்பொழுது அவர்கள் மலையடிவார கோவிலுக்கு எழுந்தருளி கருடசேவையும் சாதிக்கிறார்கள்.
பங்குனியில் நீர்வண்ண பெருமாளுக்கு மலை அடிவாரத்தில் ப்ரம்மோத்ஸவம். சித்திரை மாதம் உத்திர நட்சத்திரத்தில் நீர்வண்ணனுக்கும் அணிமாமலர் மங்கை தாயாருக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.
சித்திரை மற்றும் பங்குனி ப்ரமோத்ஸவத்தின் போது 9ம் நாள், வைகுண்ட ஏகாதசிக்கு அடுத்த நாள் துவாதசி அன்றும் என்று மூன்று துவாதசி நாட்களில் தீர்த்தவாரி நடைபெறும்.
ஸ்தல வரலாறு
இராமாயணம் இயற்றிய வால்மீகி இந்த ஸ்தலத்திற்கு வந்ததாக ஒரு வரலாறு உண்டு. வால்மீகி மலை மீது ஏறி சயனத் திருக்கோல ரங்கநாதன், அமர்ந்த திருக்கோல நரசிம்மன், நடந்த திருக்கோல திருவிக்ரமன் ஆகிய மூவரையும் வழிபட்டு கீழே வந்தார்.
வால்மீகிக்கு இம்மூவரைச் சேவித்தும் ஏனோ பூரண திருப்தி உண்டாகவில்லை. உள்மனத்தை ஏதோ வருத்தியது. மலையில் இருந்து இறங்கியதும் கிழக்கு நோக்கி நின்று, வால்மீகி தன்னுடைய இனிமையான, பிரியமான, பேரழகு வாய்ந்த ஸ்ரீராமபிரான் எங்கே என்று கண்ணீர்நீர் மல்க பிரார்த்தித்து வணங்கினார்.
ஸ்ரீமன் நாராயணன் வால்மீகியின் பிரார்த்தனைக்கு இரங்கி, இங்கு எழுந்தருளியுள்ள எம்பெருமான்கள் மூலமாகவே வால்மீகிக்கு இராமராக காட்சி அளித்தார். அதாவது இங்குள்ள ரங்கநாதனே ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியாகவும், மகாலட்சுமியே சீதா பிராட்டியாகவும், ஆதிசேஷன் இலட்சுமணனாகவும், சக்ரத்தாழ்வான் பரதராகவும், சங்கு சத்ருக்னனாகவும், விஷ்வக்சேனர் சுக்ரீவனாகவும், கருடன் ஆஞ்சநேயராகவும், ரம்யமான நீர்வண்ண ரூபத்தில் காட்சி கொடுத்து வால்மீகியின் துக்கத்தைப் போக்கி, கண்ணீரைத் துடைத்ததாக ஐதீஹம். நீர்வண்ணனாக ராமனின் பேரழகுடன், காட்சி அளித்த திருக்கோலத்துடன் இங்கேயே எப்பொழுதும் தரிசனம் கொடுக்க வேண்டும் என்று வால்மீகி வேண்ட, அப்படியே எம்பெருமான் காட்சி அளிக்கிறார் என்பது வரலாறு.
மிகுந்த கோபத்துடன், ஹிரண்யகசிபுவை இரண்டாக பிளந்த பின், இருந்த உக்ர நரசிம்ம தோற்றத்தைக் கண்டு சிறுவன் பிரஹலாதன் பயந்து நடுங்கியபோது, அவனுக்காக, சாந்த சுவரூபியாய், பாலநரசிம்மனாக காட்சி அளித்தார்.
பிருகு முனிவருக்கும் மார்கண்டேய மகரிஷிக்கும் அவர்களின் வேண்டுதலின் படி ரங்க நாயகி சமேத ரங்கநாதராய் சதுர் புஜங்களுடன் அரவணையில் மாணிக்க சயன சேவையில் இங்கு காட்சி கொடுத்ததும் அவர்களும் மூலவரின் சந்நிதியில் வணங்கி நிற்கிறார்கள்.
ஆழ்வார்
இந்த மலைக்குத் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்ய வந்த போது தொடர்ந்து மழை பெய்ததால், மலையைச் சுற்றிலும் அரண் போல் நீர் சூழ்ந்து கொண்டது. ஆழ்வாரால், எம்பெருமானை தரிசிக்க முடியவில்லை. ஆறு மாதங்கள் காத்து இருந்து நீர்வற்றிப் போன பின்பு இந்த எம்பெருமானை சேவித்து சென்றார் என்பது வரலாறு.
திருநரையூரில் நின்ற திருக்கோலத்திலும், திருவாலியில் வீற்றுஇருந்த திருக்கோலத்திலும், திருகுடந்தையில் சயனத் திருக்கோலத்திலும், திருக்கோவிலூரில் நடந்த திருக்கோலத்திலும் காணும் எம்பெருமான்களை இவ்வூரில் நான்கு நிலைகளிலும் காணலாம். அதனால் நீர்மலையான இந்த திவ்யதேசம், மாமலை ஆயிற்று என்று பெரிய திருமொழி (2.4.1) பாடலில் திருமங்கையாழ்வார் கூறுகிறார்.
பூலோக வைகுண்டமென போற்றப்படும் திருவரங்கம், திருமலை, திருக்கோட்டியூர் ஆகிய ஸ்தலங்களுக்கு உண்டான புகழோடு இத்தலத்தையும் இணைத்துப் பாடி உள்ளார் பூதத்தாழ்வார்.
பித்ரு தோஷங்களில் இருந்து நிவர்த்தி பெறுவற்கு பல வழிகள் சொல்லப்பட்டாலும், அவற்றுள் மணிகர்ணிகா வழிபாடு விசேஷமானது. காசிக்குச் செல்பவர்கள் கங்கைக்கரையிலுள்ள ‘மணிகர்ணிகா காட்’ என்ற தீர்த்தக் கட்டத்துக்குச் சென்று பித்ருக்களை நினைத்து வழிபட்டு வரலாம். ஒருமுறை, இந்த தீர்த்தக்கட்டத்துக்கு எழுந்தருளிய ஆதிசங்கரர், அங்கே தன் தாயாருக்குத் தர்ப்பணம் செய்தார். அப்போது, தமது ஞானதிருஷ்டியால் மணிகர்ணிகாவின் பெருமையையும் சக்தியையும் அறிந்து வியந்து மணிகர்ணிகா அஷ்டகம் என்ற ஸ்லோகத்தை இயற்றினார். எவரொருவர், மணிகர்ணிகா தீர்த்தக் கரையில் அமர்ந்து பித்ரு பூஜை செய்து, இந்தத் துதியை மூன்று முறை படிக்கிறாரோ, அவர் பிரம்மனைப் போன்று மதிக்கப்படுவார்கள்.
தமிழகத்தில் உள்ள நான்கு மணிகர்ணிகா தீர்த்தங்களில், திருச்சிக்கு அருகில் உள்ள திருவெள்ளறையில், ஸ்ரீசெண்பகவல்லி உடனுறை ஸ்ரீபுண்டரீகாட்சப் பெருமாள் தலத்தில் உள்ள தீர்த்தமும் சென்னை திருநீர்மலையில், ஸ்ரீஅணிமாமலர் தாயார் சமேத ஸ்ரீநீர்வண்ணர் சந்நிதிக்கு எதிரில், புஷ்கரிணி தீர்த்தமும் அடங்கும். திருநீர்மலை மணிகர்ணிகா தென்னகத்து விஷ்ணு கயா ஆகும்.
1.த்வத்தீரே மணிகார்ணிகே ஹரிஹரௌ ஸாயுஜ்ய முக்திப்ரதௌ
வாதம் தௌ குருத:பரஸ்பரமுபௌ ஜந்தோ:ப்ரயாணோத்ஸவே!
மத்ரூபோ மனுஜோsயமஸ்து ஹரிணா ப்ரோக்த:சிவஸ்தத்க்ஷணாத்!
தன்மத்யாத் ப்ருகுலாஞ்சனோ கருடக:பீதாம்பரோநிர்கத:!!
ஹே மணிகர்ணிகே!உனது கரையில் ஸாயுஜ்ய முக்தி வழங்கும் ஹரியும் ஹரனும் ஒருவருக்கொருவர், ஒரு பிராணி மரிக்கும் தருவாயில் வாதம் செய்வார்கள். ஹரி சிவனிடம் கூறினார். இந்த மனிதன் என்னைப் போன்றிருக்கட்டுமே என்று. உடனேயே அந்த மனிதன் சரீரத்திலிருந்து, பிருகு மஹர்ஷியின் அடையாளத்துடனும், கருட வாஹனத்துடனும், பீதாம் பரத்துடனுமாக வெளியேறினான்.
2.இந்த்ராத்யாஸ்த்ரிதசா:பதந்தி நியதம் போகக்ஷயே யே புன:
ஜாயந்தே மனுஜாஸ்ததோsபி பவச:கீடா:பதங்காதய:!
யே மாத:மணிகர்ணிகே தவ ஜலே மஜ்ஜந்தி நிஷ்கல்மஷா:
ஸாயுஜ்யேsபி கிரீடகௌஸ்து பதரா நாராயணா:ஸ்யுரநரா:!!
தேவராகியிருப்பவர்கூட ஒரு சமயம்-புண்ய பலமாக கோகக் காலம் முடிந்தவுடன் மனிதராகவோ, பசுக்களாகவோ, பறவை பூச்சிகளாகவோ தான் பிறக்கிறார்கள். ஆனால், ஹேதாயே!மணிகர்ணிகே!உனது ஜலத்தில் ஸ்னாநம், செய்தவர்கள் பாபம் நீங்கி ஸாயுஜ்ய நிலையிலும் கிரீடம், கௌஸ்துபம் தாங்கிய நாராயணர்களாக ஆகிவிடுகிறார்களே!
3.காசீ தன்யதமா விமுக்திநகரீ ஸாலங்க்ருதா கங்கயா
தத்ரேயம் மணிகர்ணிகா ஸுககரீ முக்திர்ஹி தத்கிங்கரீ!
ஸ்வர்லோக ஸ்துலித:ஸஹைவ விபுதை:காச்யா ஸமம் ப்ரஹ்மணா
காசீ க்ஷே£ணிதலே ஸ்திதா குருதரா ஸ்வர்கோ லகுத்வம் கத:!
புண்ணியமான காசீ க்ஷேத்ரம் மோக்ஷத்தை கொடுக்கவல்லது. அதிலும் கங்கையுடன் சேர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், சாச்வத சுகத்தை (மோக்ஷத்தை) கொடுப்பதான மணிகர்ணிகையும் அங்குள்ளது. ஆகவே, பிரம்மதேவன், காசீ க்ஷேத்திரத்தையும் ஸ்வர்கத்தையும் எடைபோட்டதில், காசீ மிக கனம் கொண்டதால் பூமியில் தட்டியது. ஸ்வர்கம் எடை குறைவால் லகுவாகிறது.
4.கங்காதீரமெனுத்தமம் U ஸகலம்;தத்ராபி காச்யுத்தமா
தஸ்யாம் ஸா மணிகர்ணிகோத்தமதமா யத்ரேச்வரோ முக்தித: I
தேவானாமபி துர்லபம் ஸ்தலமிதம் பாபௌக நாசக்ஷமம்
பூர்வோபார்ஜிதபுண்ய புஞ்ஜகமகம் புண்ணயைர்ஜனை:ப்ராப்யதே!!
கங்கைக்கரைப்பிரதேசம் முழுதுமே புண்யமானது. அதிலும் காசீ மிக உத்தமக்ஷேத்ரம், அதிலும், ஈச்வரன் முக்தி வழக்குமிடமான மணிகர்ணிகை மிக மிக உத்தமமானது. பாபத்தைப் போக்கும் இந்த மணிகர்ணிகை ஸ்தலம் தேவருக்கும் கிடைத்தற்கரியது. முன்பிறவியில் செய்த புண்யக் குவியலால் ஆன்றோர்க்கு மட்டுமே கிடைக்கக் கூடியது.
5.து:காம்போதி கதோ ஜந்து நிவஹஸ்தேஷாம் கதம் நிஷ்க்ருதி:
ஜ்ஞாத்வா தத்ஹி விரிஞ்சிநா விரசிதா வாராணஸீ சர்மதா!
லோகா:ஸ்வர்க முகாஸ்ததோsபி லகவோ போகாந்தபாதப்ரதா:
காசீமுக்தி புரீ ஸதாசிவகரீ தர்மார்த்த மோக்ஷப்ரதா!!
உலகத்தில் பிறந்த உயிரினங்கள் துன்பக்கடலில் விழ, அவர்களுக்கு விடிவுதான் எப்படி?என்றெண்ணி பிரம்மன் மங்கலம் பயக்கும் காசியை தோற்றுவித்துள்ளார். உலக மக்கள் சுவர்கத்தை நாடுகின்றனர். ஆனால் சுகானுபவத்தின் பின் வீழ்ச்சியைத்தான் அவை தருகின்றன. காசியோ தர்மம், அர்த்தம், மோக்ஷம் இவற்றை பயக்கும் முக்திபுரியாகும்.
6.ஏகோ வேணுதரோ தராததரதர:ஸ்ரீவத்ஸ பூஷாதார
யோsப்யோக:கில சங்கரோ விஷதரோ கங்காதரோ மாதவ: !
யே மாதர்மணிகர்ணிகே தவ ஜலே மஜ்ஜந்தி தே மானவா:
ருத்ரா வா ஹரயோ பவந்தி பஹவஸ்தேஷாம் பஹ§த்வம் கதம் !!
புல்லாங்குழல், கோவர்தனமாலை, ஸ்ரீவத்ஸம் என்ற அலங்காரம் இவற்றை தரிப்பவர் ஒரு கிருஷ்ணர்தானே!சங்கரர் என்பவரும் விஷம் உண்டவர், கங்கையை தலையில் கொண்டவர், உமையின் பர்த்தாவாகியவரும் ஒருவர்தான். ஆனால் தாயே மணிகர்ணே. நினது பிரவாஹத்தில் பலர் மூழ்கி, பல ருத்ரர்களாகவும், பல விஷ்ணுவாகவும் ஆவதுதான் எப்படியோ!ஆச்சர்யம் இது.
7.த்வத்தீரே மரணம்து மங்கல கரம் தேவை ரபி ச்லாக்யதே
சக்ரஸ்தம் மனுஜம் ஸஹஸ்ரநயநை:த்ரஷ்டும் ஸதா தத்பர: !
ஆயாந்தம் ஸவிதா ஸஹஸ்ரகிரணை:ப்ரத்யுத்கதோsபூத் ஸதா
புண்யோsஸெள வ்ருஷகோsதவா கருடக:கிம் மந்திரம் யாஸ்யதி!!
ஹேமணிகர்ணிகே!உனது தீரத்தில் மரணமெய்துவது தேவர்களே போற்றும் படி மங்கலகரமானது. இந்திரன் அப்படி மரித்த ஒருவரை ஆயிரம் கண்களாலும் காண விழைகிறான்:சூர்யன் தன் பக்கம் வந்து கொண்டிருக்கிற அவனை எதிர் கொண்டு அழைக்கிறார். ஆகவே, அவர் வ்ருஷபத்தின் மீதோ, கருடன் மீதோ ஏறி ஏதோ ஒரு கோயிலை அடையப் போகிறான்.
8.மத்யாஹ்னே மணிகர்ணிகாஸ்நபனஜம் புண்யம் வ வக்தும் க்ஷம:
ஸ்வீயை ரப்தசதை:சதுர்முகதரோ வேதார்த்த தீக்ஷ£ குரு: !
யோகாப்யாஸ பலேந சந்த்ர சிகரஸ்தத்புண்யபாரங்கத:
த்வத்தீரே ப்ரகரோதி ஸுப்தபுருஷம் நாராயணம் வா சிவம் !!
மத்யான வேளையில் மணிகர்ணிகையில் ஸ்நானம் செய்வதன் பயனாக புண்யம் உண்டைவதை சொல்ல இயலாது. சதுர்முக பிரம்மா அதாவது வேதார்த்தத்தை விளக்கியவர் அல்லது சந்த்ரசேகரர் யோகாப்யாஸபலத்தால் அந்த புண்யத்தின் எல்லைக்கே போய் உனது தீரத்தில் மரித்தவளை நாராயணனாகவோ சிவானகவோ செய்து விடுகிறார்.
9.க்ருச்ரை:கோடிசதை:ஸ்வபாபநிதனம் யாச்சாச்வமதை:பலம்
தத்ஸர்வம் மணிகர்ணிகாஸ்நபனஜே புண்யே ப்ரவிஷ்டம்பவேத்!
ஸ்நாத்வா ஸ்தோத்ரமிதம் நர:படதி சேத் ஸம்ஸாரபாதோநிதிம்
தீர்த்வா பல்வலவத் ப்ரயாதிஸதனம் தேஜோமயம் ப்ரஹ்மண:!!
கோடிக்கணக்கில் செய்த க்ருச்சாசரணம் மூலமாக தத்தம் பாபங்களை போக்கிக் கொள்வதோ அல்லது பல அச்வமேதங்களால் உண்டாகும் பயனையோ மணிகர்ணிகையில் ஒரு முறை ஸ்நானம் செய்து இந்தஸ்லோகத்தை படிப்பவர், ஸம்ஸாரக்கடலை ஒரு குட்டையைக் கடப்பது போல் கடந்து பிரம்மலோகம் எய்துவர்.
*- Thanks to friends from whatsapp group for the details on Manikarnika.
ருக்மணி தாயார் ஸமேத பார்த்தசாரதி திருவடிகள் போற்றி போற்றி
| திவ்யதேசம் | திருவல்லிக்கேணி பிருந்தாரண்ய க்ஷேத்திரம் (துளசி வனம் அல்லது துளசிக் காடு) பஞ்சமூர்த்தி ஸ்தலம் | |||
| மூலவர் 1 உத்ஸவர் 1 தாயார் 1 மற்றவர்கள் | வேங்கடகிருஷ்ணன் (கிழக்கே திருமுகமண்டலம்- நின்ற திருக்கோலம் ) பார்த்தசாரதி ருக்மணி தாயார் (மூலவர் 1 சன்னதியில்) பலராமன், ஸாத்யகி, அநிருத்தன், பிரத்யும்னன் | |||
| மூலவர் 2 தாயார் 2 | ரங்கநாதன், மன்னாதன் ( கிழக்கே திருமுகமண்டலம் -புஜங்க சயனம்) வேதவல்லி தாயார் (தனிக்கோவில் நாச்சியார்-மன்னாதனுக்கு) | |||
| மூலவர் 3 தாயார் 3 மற்றவர்கள் | ஸ்ரீ ராமன் (தெற்கே திருமுகமண்டலம், நின்ற திருக்கோலம்) சீதா தேவி (மூலவர் 3 சந்நிதியில்) பரதன், லக்ஷ்மணன், சத்ருக்கனன் | |||
| மூலவர் 4 | ஸ்ரீ வரதராஜன் (கிழக்கே திருமுகமண்டலம், கருடன்மேல் அமர்ந்த திருக்கோலம்) | |||
| மூலவர் 5 | தெள்ளிய சிங்க பெருமாள் (மேற்கே திருமுகமண்டலம், அமர்ந்த திருக்கோலம்) | |||
| திசை | கிழக்கு (மூலவர் 1,2 மற்றும் 4); மேற்கு (மூலவர் 5), தெற்கு (மூலவர் 3) | |||
| பாசுரங்கள் | 12 | |||
| மங்களாசாசனம் | திருமங்கையாழ்வார் 10 பேய் ஆழ்வார் 1 திருமழிசையாழ்வார் 1 | |||
| தொலைபேசி | +91 44 – 2844 2462, +91 44 2844 2449. |
திருவல்லிக்கேணி பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்
திருவல்லிக்கேணி தொடர்பான நம் பதிப்புகள்
கோவில் பற்றி
திருவேங்கடவனால் காட்டப்பட்ட எம்பெருமான், ஆதலால் வேங்கட கிருஷ்ணன் என்னும் திருநாமம் உண்டாயிற்று. வலதுபுறம் ருக்மிணி பிராட்டியுடன் தெற்கே பலராமன், இடது புறம் ஸாத்யகி, வடக்குப்புறம் அநிருத்தன், பிரத்யும்னன் இவர்களோடு குடும்ப சகிதமாக கிழக்கு நோக்கி 9 அடி உயரம் கொண்ட நின்ற திருக்கோலம். 108 திவ்ய தேசங்களிலே தன் குல வழக்கப்படி பெரிய மீசையுடன் எழுந்தருளியுள்ள ஸ்தலம் இது ஒன்றுதான். மார்கழி மாதம் பகல் பத்து உற்சவத்தில், ஆறாம் நாள் முதல் பத்தாம் நாள் வரை மட்டும் இவரை மீசை இல்லாமல் சேவிக்க முடியும். மூலவர் திருவடிகளில், அனந்தாழ்வான், நின்றால் திருவடியாம் என்பதைக் காட்டும் திருக்காட்சியை காணலாம்.
இங்கு பார்த்தசாரதி எம்பெருமான், இரண்டு திருக்கரங்களுடன் தான் காட்சி அளிக்கிறார். ஒரு திருக்கரத்தில் சங்கும், இன்னொரு திருக்கரத்தால், திருமலையில் உள்ளது போல் தன் திருவடியைக் காட்டியபடி சேவை சாதிக்கிறார். தன் முக்கிய ஆயுதமான சுதர்சன சக்கரம் இல்லாமல் காட்சி தருகிறார். மஹாபாரத போரின் தொடக்கத்தில் இவர் எந்த ஆயுதமும் ஏந்தாமல் இருப்பதாக வாக்கு கொடுத்ததால், போரின் தொடக்கம் மற்றும் முடிவினை தெரிவிக்கும் சங்கத்தை மட்டும் ஏந்தியுள்ளார்.
கண்ணன் அர்ஜு னனுக்குத் தேரோட்டியாக இருந்த போது, பீஷ்மர் விட்ட அம்புகளை ஏற்றுக் கொண்டதை காண்பிக்க இன்றைக்கும், பார்த்தசாரதி (உற்சவர்) திருமுகத்தில் வடுக்களைக் காணலாம். அதனால் இந்த கோவிலில் செய்யப்படும் பிரசாதங்களில் அதிகம் நெய் சேர்க்கப்படுகிறது. இங்கு உற்சவ மூர்த்தி கதாயுதம் இல்லாமல் செங்கோலுடன் காட்சி தருகிறார்.
நம் ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும், அதிகமாக ஈடுபட்டு வந்த ஒரு சில திவ்ய தேச மூர்த்திகளில் திருஅரங்கம், திருப்பதி, மற்றும் காஞ்சி தேவப் பெருமாள் என்ற மூன்று ஸ்தலங்களின் பெருமையாக ஸ்வாமி ராமானுஜர் இயற்றிய ”ஸ்ரீரங்க மங்கள நிதிம் கருணா நிவாஸம், ஸ்ரீ வேங்கடாத்ரி சிகராலய காளமேகம், ஸ்ரீ ஹஸ்திசைல சிகரோஜ்வல பாரிஜாதம், ஸ்ரீசம் நமாமி சிரஸா யது சைல தீபம்” என்ற ஸ்லோகம் உள்ளது. அந்த முக்கிய திவ்யதேசங்களான வேங்கடம், அரங்கம், கச்சி என்ற மூன்று எம்பெருமான்களையும் இந்த ஒரு இடத்திலேயே தரிசிப்பது ஒரு சிறப்பு. (ஸ்லோகத்தில் உள்ள மற்றொரு திவ்யதேசமான மேல்கோட், 108 திவ்யதேசங்களுக்குள் இல்லை).
ஒரே கோவிலில் உள்ள ஐந்து மூலவர்களும் ஆழ்வார்களிடம் இருந்து பாடல் பெற்ற ஸ்தலம் இது ஒன்று தான். ராமர், ரங்கநாதர், நரசிம்மர், வரதராஜர், பார்த்தசாரதி என்ற ஐந்து எம்பெருமான்களுக்கும் தனியே பாசுரங்கள் பெற்ற திவ்யதேசம். இவர்களில், பார்த்தசாரதியை நின்ற திருக்கோலமாகவும், நரசிங்க பெருமானை அமர்ந்த திருக்கோலமாகவும், ரங்கநாதனை சயன திருக்கோலமாகவும், ராமனை நடந்த திருக்கோலத்திலும், வரதராஜனை பறந்த திருக்கோலத்திலும் சேவிக்கலாம் என்று சொல்வார்கள்.
நித்யம் கருட சேவை சாதிக்கும் பெருமாள் என்று இந்த கஜேந்திர வரதராஜ பெருமாளை கூப்பிடுகிறார்கள்.
திருப்பதியில் வராக பெருமாள் ஸ்தலத்து பெருமாளாக இருப்பது போல், இங்கு ஸ்தலத்து பெருமாள், மன்னாத பெருமாள் என்று அழைக்கப்படும் ரங்கநாதன் ஆவார். ரங்கநாதர் நான்கு திருக்கரங்களுடன் ஒரு ஆயுதமும் இல்லாமல் சயனித்து காட்சி அளிக்கிறார்.
இக்கோயிலிலுள்ள யோக நரசிம்மர் யோகபீடத்தில் வீற்றுஇருந்த திருக்கோலத்தில் தனி சந்நிதியில் காட்சி அளிக்கிறார் அங்கு அவரை வழிபட்டு அந்த நரசிம்மருக்கு உரிய சங்கு தீர்த்தத்தை முகத்தில் தெளித்தால், அந்த தீர்த்ததை அருந்தினால், பீடித்திருக்கும் “துஷ்ட ஆவிகள், செய்வினை, பில்லி, சூனியம், ஏவல், தேவையற்ற பயங்கள்” போன்ற பாதிப்புகள் நீங்கும் என்ற நம்பிக்கை உண்டு. நரசிம்மர் யோக நிலையில் இருப்பதால் எந்த சப்தமும் வரக்கூடாது என்பதால், இந்த சந்நிதியில் உள்ள மணிகளில் நாக்கு கிடையாது.
இங்கே, பார்த்தசாரதி மற்றும் நரசிம்மருக்கு தனித்தனி வாயில்கள், கொடிமரங்கள் உற்சவங்கள் உண்டு. இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு திருவிழா நடைபெற்றுக்கொண்டு இருக்கும்.
ஐப்பசி மாதம் திருமூல நட்சத்திரத்தில் நடைபெறும் கைத்தல சேவை சிறப்பு வாய்ந்தது. இந்த கோவிலில் தெப்போத்ஸவம் மாசி மாதம் ஏழு நாட்கள் நடைபெறுகின்றன. பார்த்தசாரதிக்கு 3 நாட்கள், ஸ்ரீ நரசிம்மர், ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ ராமர் மற்றும் ஸ்ரீ கஜேந்திர வரதருக்கு தலா ஒரு நாள் என்று ஐந்து எம்பெருமான்களும் வெவ்வேறு தினங்களில் தெப்பத்தில் இருந்து தரிசனம் தருகிறார்கள். தெப்பத்திலேயே ஒரு நாள் பார்த்தசாரதிக்கு நடைபெறும் திருமஞ்சனம் மிகவும் விசேஷம்.
வேதவல்லி தாயார், வரதராஜர், நரசிம்மர், ஆண்டாள், ராமர், ரங்கநாதர், சக்ரத்தாழ்வார், திருமழிசை ஆழ்வார், திருக்கச்சி நம்பிகள், இராமானுஜர், வேதாந்த தேசிகன், மணவாள மாமுனிகள் சன்னதிகள், பிரகாரத்தில் உள்ளன.
ஆனந்த விமானம், ப்ரணவ விமானம், புஷ்ப விமானம், சேஷ விமானம், தைவீக விமானம் என்று ஐந்து விமானங்களுடன், இந்திர, ஸோம, அக்கினி, மீன, விஷ்ணு என்ற 5 தீர்த்தங்கள் சூழ்ந்துள்ள கைரவிணி (அல்லிக்கேணி) என்ற தீர்த்தமும் அடங்கிய திருத்தலம். கடலுக்கு மிக அருகில் இருந்தாலும், இந்த தீர்த்தத்தில் (குளத்தில்) மீன்கள் வசிப்பதில்லை. அழகிய அல்லிமலர்கள் நிறைந்த குளத்தை கொண்டதால், திரு அல்லிக் கேணி என்ற பெயர் வந்தது என்பர்.
இக்கோவிலில், சக்கரை பொங்கல் பிராசாதம் மிகவும் பிரசித்தமானது.
| தமிழ் மாதம் | ஆங்கில மாதம் | திருவிழாக்கள் |
|---|---|---|
| சித்திரை | Apr-May | ப்ரம்மோத்ஸவம், உடையவர் உற்சவம் |
| வைகாசி | May-Jun | வசந்தோத்ஸவம், கஜேந்திரவரதர்உற்சவம் , ரங்கநாதஸ்வாமி வேதவல்லி உற்சவம் |
| ஆனி | Jun-Jul | ஸ்ரீ நரசிம்ம சுவாமி ப்ரம்மோத்ஸவம் மற்றும் கோடை உற்சவம் |
| ஆடி | Jul-Aug | கஜேந்திரமோக்ஷம், பார்த்தசாரதி ஜேஷ்டாபிஷேகம், திருப்பாவாடை, திருஆடிப்பூரம் |
| ஆவணி | Aug-Sep | பவித்ரோத்ஸவம் ஸ்ரீ ஜெயந்தி அல்லது கிருஷ்ண ஜெயந்தி |
| புரட்டாசி | Sep-Oct | நவராத்திரி, வேதவல்லி தாயாருக்கு லக்ஷார்ச்சனை, புரட்டாசி சனி |
| ஐப்பசி | Oct-Nov | ஸ்ரீ மணவாள மாமுனிகள் உற்சவம், தீபாவளி, அன்னக்கூட உற்சவம் |
| கார்த்திகை | Nov-Dec | கார்த்திகை தீபம் |
| மார்கழி | Dec-Jan | மார்கழி பகல் பத்து, வைகுண்ட ஏகாதசி, இராப்பத்து |
| தை | Jan-Feb | பார்த்தசாரதி பெருமாளுக்கு லக்ஷார்ச்சனை, ரத சப்தமி |
| மாசி | Feb-Mar | மாசி மகம், தெப்போத்ஸவம் |
| பங்குனி | Mar-Apr | பங்குனி உத்திரம், ஸ்ரீ ராம நவமி |
புகழ் பெற்ற மனிதர்களான “சுவாமி விவேகானந்தர்”, “மகாகவி பாரதியார்”, “கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜம்” போன்றோர் அவர்களின் காலத்தில் இக்கோவிலில் வந்து வழிபட்டுள்ளனர். தியாகப்ரம்மம், முத்துஸ்வாமி தீக்ஷிதர், பாரதியார் இந்த எம்பெருமானைப் பாடி உள்ளார்கள்.
சுவாமி விவேகானந்தர், பார்த்தசாரதியின் பக்தர். 1893 ஆம் ஆண்டில் தனது சீடரான அலசிங்காவுக்கு எழுதிய ஒரு கடிதத்தில், ‘திருவல்லிக்கேணியின் பார்த்தசாரதி பகவான் முன் சிரம் தாழ்ந்து (குனிந்து), ஏழைகளுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும், ஒடுக்கப் பட்டவர்களுக்கும் தியாகத்தை செய்ய முன் வாருங்கள், அப்படிப்பட்டவர்களின் வாழ்க்கையில் பார்த்த சாரதி இறைவன் அவ்வப்போது வருகிறார், எல்லாவற்றிற்கும் மேலாக அவன் அவர்களை நேசிக்கிறான்’ என்று எழுதி உள்ளார். அவரது சீடருக்கு எழுதிய இந்த கடிதத்தை கோவில் நடைபாதையில் சுவர்களில் ஒன்றில் பொறிக்கப்பட்டு உள்ளதை இன்றும் காணலாம்.
ஸ்தல வரலாறு
வேத வியாசருக்கு, ஆத்ரேய முனிவர் என்னும் ஒரு சீடர் இருந்தார். அவர் தம் குருவின் கட்டளைப்படி, தவம் செய்ய பிருந்தாரண்யத்திற்கு வந்தார். அப்பொழுது வியாசரால் கொடுக்கப்பட்ட கண்ணனின் திவ்ய மங்கள விக்ரகம் ஒன்றையும் கொண்டு வந்தார். அந்த விக்ரகம் ஒரு திருக்கரத்தில் சங்குடனும், மற்றொரு திருக்கரத்தை தன் திருவடியில் சரணம் அடைய சொல்லி அருள் புரியும் வண்ணமும் விளங்கியது.
சுமதி என்னும் மன்னன் வேங்கட மலையில் ஸ்ரீனிவாசப் பெருமாளை வழிபட்டு, பார்த்தனுக்கு சாரதியாக தேரோட்டிய கண்ணனாக எம்பெருமானை தரிசிக்க விரும்புவதாக பிரார்த்தித்து தவம் செய்ய தொடங்குகிறார். தவத்தின் பலனாக ஸ்ரீனிவாசப் பெருமாள் வானில் தோன்றி, மன்னன் விரும்பிய தோற்றத்துடன் கைரவிணி தீர்த்தம் உள்ள பிருந்தாரண்யத்தில் எழுந்தருளி உள்ளேன் என்றும் அங்கு சென்று தரிசிக்கவேண்டும் என்றும் சொன்னார். சுமதி என்ற மன்னனும் அவ்வாறே செய்தான் என்பது வரலாறு. சுமதி என்னும் மன்னனின் விருப்பத்திற்கு இசைந்து, ஆத்ரேய முனிவர் பிரதிஷ்டை செய்த எம்பெருமானே இங்கு வேங்கட கிருஷ்ணனாக / பார்த்தசாரதியாக எழுந்து அருளி உள்ளார்.
அத்ரி முனிவரின் தவத்திற்கு மகிழ்ந்த திருமால் அவர் விருப்பப்படி நரசிம்ம மூர்த்தியாக இத்தலத்தில் எழுந்து அருளினார்.
மதுமான் மகரிஷி என்னும் முனிவரின் தவத்திற்கு இசைந்து அவர் விரும்பிய வண்ணம் ராமனாக இத்தலத்து எழுந்தருளினார். சீதை, இலக்குவன், பரத சத்ருக்னரும் பின் தொடர்ந்தனர்.
சப்தரோமர் என்னும் ரிஷியின் தவத்திற்கு உகந்து கஜேந்திரவரதர் கோலத்தில் இங்கு காட்சி தந்தார்.
திருமகள் இவ்விடத்தில் தவஞ்செய்துகொண்டிருந்த பிருகு மகரிஷியின் குடிசைக்கருகில் குழந்தையாய் அவதரிக்க, வேதங்களில் கூறப்பட்ட தேவ பெண் இவளே என்று வேதவல்லி என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். ரங்கநாதனே இளவரசர் வடிவம் பூண்டு திருமகளான இந்த வேதவல்லியை திருமணம் புரிந்து ரங்கநாதராக இங்கேயே எழுந்து அருளி ஏற்றுக் கொண்டார். திருமகள் ரங்கநாதரைக் கண்டதும் இவரே என் கணவர் (மந்நாதர்) என்று கூறியதால், மந்நாதர் என்ற பெயரும் இந்த ரங்கநாதருக்கு உண்டு. இங்கே உள்ள தனிக்கோவில் நாச்சியாரான வேதவல்லித் தாயார், இந்த மந்நாதரான ரங்கநாதனுக்குத் தேவி.
ஆழ்வார்கள் ஆச்சாரியார்கள்
முதலாழ்வார்களுள் ஒருவரான பேயாழ்வாரும், திருமழிசையாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் இந்த எம்பெருமான்களைப் பாடி உள்ளார்கள்.
தெள்ளிய சிங்கம் ஆக அவதரித்த தேவன் என்று ஆழ்வார் அழைத்ததால் திருவல்லிக்கேணியில் எழுந்தருளிய நரசிம்ம பெருமாளை “தெளிசிங்கப்பெருமாள்” அல்லது தெள்ளிய சிங்க பெருமாள் என்று திருநாமம் கொண்டு அழைப்பர். ‘துளசிங்கப் பெருமாள்’ என்று அழைப்பது பிழை ஆகும்.
திருமங்கை ஆழ்வார், பெரிய திருமொழியில் (2.3.1) பாசுரத்தில், “விற்பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ, செற்றவன் தன்னை, புரமெரி செய்த சிவனுறு துயர்களை தேவை, பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு பார்த்தன் தன் தேர்முன் நின்றானை, சிற்றவை பணியால் முடி துறந்தானைத் திருவல்லிக் கேணிக் கண்டேனே” என்று பார்த்த சாரதியையும்,
பெரிய திருமொழியில் (2.3.7) பாசுரத்தில், “பரதனும் தம்பி சத்துருக்கனனும் இலக்குமனோடு மைதிலியும், இரவு நன் பகலும் துதி செய்ய நின்ற இராவண அந்தகனை எம்மானை,” என்று ராமரையும்,
பெரிய திருமொழியில் (2.3.8) பாசுரத்தில், “பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன் வாயில் ஓர் ஆயிர நாமம், ஒள்ளிய ஆகிப் போத ஆங்கு அதற்கு ஒன்றும் ஓர் பொறுப்பு இலனாகி, பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்பப் பிறை எயிற்று அனல்விழிப் பேழ்வாய், தெள்ளிய சிங்கமாகிய தேவைத் திருவல்லிக் கேணிக் கண்டேனே” என்று நரசிம்மரையும்,
பெரிய திருமொழியில் (2.3.9) பாசுரத்தில் “மீன் அமர் பொய்கை நாண்மலர் கொய்வான் வேட்கையினோடு சென்று இழிந்த, கான் அமர் வேழம் கை எடுத்து அலறக் கரா அதன் காலினைக் கதுவ, ஆனையின் துயரம் தீரப் புள் ஊர்ந்து சென்று நின்று ஆழி தொட்டானை, தேன் அமர் சோலை மாடமா மயிலைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே” என்று கஜேந்திர வரதனையும் பாடி உள்ளார்.
திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதி என்ற பிரபந்தத்தில், (35), “தாளால் உலகம் அளந்த அசைவே கொல், வாளா கிடந்து அருளும் வாய்திறவான், – நீள் ஓதம்வந்து அலைக்கும் மாமயிலை மாவல்லிக் கேணியான், ஐந்து தலைவாய் நாகத்தணை” என்று பள்ளிகொண்டு காட்சி கொடுக்கும் ரங்கநாதனைப் பார்த்து, வாமனனாக இந்த உலகத்தை அளந்ததால் வந்த களைப்பின் மிகுதியால், பேசாமல் இந்த கடற்கரையில் ஐந்து தலை நாகத்தின் மேல் அயர்ந்து சயனித்துக் கொண்டுவிட்டாயோ என்று பாடி உள்ளார்.
ஸ்ரீ பிள்ளைலோகச்சாரியார் தனது “ராமானுஜ திவ்யசரிதம்” என்ற படைப்பில், ஸ்வாமி ராமானுஜரின் தந்தை ஸ்ரீ அஸூரி கேசவ சோமயாஜி, திருவல்லிகேணியில் உள்ள கோயில் குளத்தில் புத்ரகாமேஷ்டி யாகத்தை நிகழ்த்தினார் என்றும், அவருக்கு புத்திர பாக்கியம் வேண்டி இந்த எம்பெருமானிடம் பிரார்த்தனை செய்தார் என்றும் எழுதி உள்ளார். பார்த்தசாரதி எம்பெருமான் ஸ்ரீ அஸூரி கேசவ சோமயாஜியின் கனவுகளில் தோன்றி, மனிதகுலத்தின் நலனுக்காக தனது கீதையின் போதனைகளை வழங்க, தானே அவருக்கு மகனாகப் பிறப்பதாக உறுதியளித்தார். பார்த்தசாரதிப் பெருமானே அவர்களுக்கு மகனாக பிறந்ததாக நம்பப்படுகிறது. பின் காலத்தில் ஸ்ரீ ராமானுஜரால் கீதா பாஷ்யம் என்ற நூல், பகவத் கீதை பற்றிய மதிப்பாய்வு மற்றும் வர்ணனைகளை உள்ளடக்கி எழுதப்பட்டது.
திருவிழாக்களின் போது மேற்கண்ட மரபுக்கு இணங்க, மற்ற ஆழ்வார் மற்றும் ஆச்சார்யர்களைப் போல் அல்லாமல், ஸ்ரீ ராமானுஜர் காலையிலும் மாலையிலும் தனியே புறப்பாடு காண்பார். அதாவது பார்த்தசாரதி எம்பெருமான், அவரே ராமானுஜராக அவதரித்ததால், ராமானுஜருடன் சேர்ந்து புறப்பாடு காண்பதில்லை.
இப்படி குடும்பத்துடன் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ பார்த்தசாரதிக்கு மங்களம் பாடும் போதும், “ப்ருந்தாரண்ய நிவாஸாய, பலராம அநுஜாய ச, ருக்மிணி ப்ராண நாதாய, பார்த்தஸூதாய மங்களம்“ என்று எல்லோருக்கும் சேர்த்து வணக்கம் செலுத்தி, அவர்களுடைய பரிபூர்ண அனுக்கிரகம் எல்லோருக்கும் கிடைக்க பிரார்த்தித்து, இந்தத் திருத்தலம் பற்றிய மேல் விவரங்கள் கிடைத்தால், திரும்ப வந்து பதிவு செய்வோம் என்றும் கூறி, இந்தப் பதிவில் இருந்து இப்போது விடைபெறுவோம். நன்றி.
கனகவல்லி தாயார் ஸமேத வைத்ய வீரராகவப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி
| திவ்யதேசம் | திருஎவ்வுள் திருவள்ளூர் புண்ணியாவர்த்த க்ஷேத்திரம் விஷாரண்யக்ஷேத்திரம் | |||
| மூலவர் | வீரராகவ பெருமாள், வைத்யவீரராகவப்பெருமாள் , க்ரும்க்ருஹேசன் | |||
| உத்ஸவர் | வீரராகவ பெருமாள் | |||
| தாயார் | கனகவல்லி, வஸுமதி (தனிக்கோயில் நாச்சியார்) | |||
| திருக்கோலம் | கிடந்த (புஜங்க சயனம்) | |||
| திசை | கிழக்கு | |||
| பாசுரங்கள் | 12 | |||
| மங்களாசாசனம் | திருமங்கையாழ்வார் 11 திருமழிசையாழ்வார் 1 | |||
| தொலைபேசி | +91 44-2766 0378, +91 97894 19330 |
கோவில் பற்றி
இந்த திவ்யதேசத்திற்கு திருவள்ளூர் என்பதே பிரசித்தமான பெயர். சென்னை திருப்பதி சாலையில் சென்னையில் இருந்து சுமார் 50 கீ மீ தூரத்தில் உள்ளது.
சாலிஹோத்திரர் முனிவரின் சிரசில் வலது கரத்தால் ஆசி செய்து பிரம்மனுக்கு உபதேசம் செய்யும் பாவனையில் இடது கரத்தை ஞான முத்திரையாகக் காட்டி கிழக்கே திருமுகம் வைத்து காட்சி அளிக்கிறார். மூலவர் சுமார் 15 அடி நீளமும் 5 அடி உயரத்திலும் பிரம்மாண்டமாக எழுந்து அருளி உள்ளார். மூலவருக்கு சந்தனத்தில் மட்டுமே திருமஞ்சனம். இந்த எம்பெருமானுக்கு திருக்கோவிலில் கிடைக்கும் பப்பிளி துப்பட்டி என்ற மேல் வஸ்திரம் வாங்கி சாத்தலாம்.
எம்பெருமானுக்கு வடமொழியில் கிங்க்ருஹேசன், என்னும் திருநாமம். அதுவே தமிழில் எவ்வுள் கிடந்தான் என்னும் திருநாமமாக மாறியது.
இந்த தாயாருக்கு வசுமதி என்றும், கனகவல்லித் தாயார் என்றும் திருநாமங்கள் உண்டு. அவருக்கு தனி சன்னதியும் உண்டு.
இக்கோவிலில் உள்ள சக்கரத்தாழ்வார், நரசிம்மர் சன்னதிகள் பிரசித்தி பெற்றவை.
இந்த திருத்தலத்தில் உள்ள விமானம், விஜயகோடி விமானம் ஆகும்.
இங்கு செய்யப்படும் புண்ணியமாவது பல்லாயிரம் மடங்காக விருத்தியாவதால் புண்யாவர்த்த க்ஷேத்ரம் என்று பெயர்.
அமாவாசை அன்று இங்குள்ள திருக்குளத்தில் நீராடி, குளத்தில் வெல்லம் கரைத்து, இந்த எம்பெருமானை சேவித்தால் எல்லா வியாதிகளும் நீங்கும் என்பது நம்பிக்கை. வீரராகவன், வைத்ய வீரராகவனாக கருணை புரிவான் என்பது ஐதீகம். தை அமாவாசை அன்று இங்கு பக்தர்கள் பெருந்திரளாக கூடியிருந்து நீராடுவர்.
ஹ்ருதபாபநாசினி என்பது இங்குள்ள திருக்குளத்தின் பெயர். ஹ்ருதயத்தில் உள்ள பாபங்களை கூட நாசம் செய்யவல்ல இந்த திருக்குளம் கங்கையை விட புனிதமானது என்று சொல்லப்படும்.
இத்தீர்த்தமும் திருக்கோவில் சன்னதியும் அஹோபில மடத்தின் நிர்வாகத்திற்குட்பட்டதாகும்.
தீர்த்தக் கரையின் முன்னால் இப்பெருமானைத்
தரிசித்தபடி சிவன் நின்றுள்ள காட்சியைக் காணலாம்.
தைமாத ப்ரமோத்ஸவம், சித்திரை மாதம் ப்ரமோத்ஸவம் பத்து நாட்கள் என்று சிறப்பாக கொண்டப்படுகின்றன. பவித்ரோத்ஸவம் 7 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
Google Map
திருவள்ளூரைப் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்






Thanks to friends from whatsapp group for all the images
ஸ்தல வரலாறு
இது பல சரித்திரங்கள் கொண்ட புண்ணியம் நிறைந்த திவ்யதேசம் ஆகும்.
க்ருதயுகத்தில் புரு புண்ணியர் என்பவர் பத்ரியில் புத்திரப்பேறு வேண்டி சாலி எனப்படும் நெல்மணிகளால் செய்யப்படும் சாலியக்ஞம் என்னும் யாகம் செய்தார். யாகத்தின் முடிவில் தோன்றின மகாவிஷ்ணு அவரின் யாகத்தை மெச்சி, அவரது விருப்பனான புத்திர பாக்கியத்தையும் அளித்தார். சாலி யக்ஞம் செய்து புத்திரப்பேறு பெற்றதால், சாலிஹோத்ரன் என்ற பெயருடன் பிரசித்தி பெற்று, தீர்த்த யாத்திரை மேற்கொண்டு இந்த திவ்யதேசத்தை அடைந்தார். இங்கு, பல ரிஷிகள், தவம் செய்வதும், இங்குள்ள ஹ்ருதபாபநாசினி என்னும் தீர்த்தத்தில் தேவர்கள் வந்து நீராடி செல்வத்தையும் பார்த்து, இங்கேயே தங்கி எம்பெருமானிடம் பக்தியுடன் தொண்டு செய்து வந்தார். அரிசியை மாவாக்கி எம்பெருமானுக்கு அமுது படைத்து அதனை அதிதிக்கு கொடுத்த பின்னே தான் உண்பதை வழக்கமாக கொண்டு இருந்தார்.
இவரது பக்தியை மெச்சிய எம்பெருமான், தானே ஒரு முதியவர் ரூபத்தில் அதிதியாக வர, தாம் வைத்திருந்த மாவில் ஒரு பகுதியை சாலிஹோத்ரர் கொடுத்தார். அதை உண்ட பின்பும் தமது பசி அடங்கவில்லை என்று முதியவர் கேட்க தனக்கு வைத்திருந்த மீதி மாவினையும் கொடுத்தார். அதனையும் உண்டு முடித்த எம்பெருமான் மிகவும் களைப்பாக உள்ளது என்றும், படுக்கச் சற்று இடம் வேண்டும் என்றும், எங்கு படுக்கலாம் என்றும் கேட்டது “எவ்வுள்” என்பதால், இந்த திருத்தலம் திரு எவ்வுள் என்று ஆனது.
சாலி ஹோத்ரர் அங்குள்ள ஒரு இடத்தைக் காட்டி, “இந்த அறையில் சயனிக்கலாம்” என்று சொல்ல, தனது முதிய சொரூபத்தை மாற்றி, எம்பெருமான் கிழக்கே திருமுகம் வைத்து சயனித்தார். சாலிஹோத்ரர் தாம் செய்த பாக்கியத்தை எண்ணி எம்பெருமானிடம் பணிந்து நிற்க அவரும், தமது வலது திருக்கரத்தை சாலிஹோத்ர முனிவரின் தலையில் வைத்து அவரை ஆசீர்வதித்து அருள்பாலித்து சயன திருக்கோலத்தில் எழுந்தருளினார்.
சாலிஹோத்ர முனிவருக்காக எம்பெருமான் இங்கே சயனித்துவிட, எம்பெருமானைச் சேரும்பொருட்டு மகாலட்சுமி வஸு மதி என்ற பெயரில், தர்மசேனபுரம் என்னும் நாட்டை ஆண்ட திலீப மகாராஜாவுக்குப் பெண்ணாக அவதரித்து, இந்த எம்பெருமானை மணம் முடித்ததாக வரலாறு.
ஒரு சமயம் சிவனை அழைக்காது அவரது மாமனார் தட்சன் யாகம் செய்ய, அவனுக்குப் புத்திமதி கூறி திருத்துவதற்காகச் சென்ற உமையவளின் பயணம் பயனில்லாது போயிற்று. இதனால் சிவனுக்கும் பார்வதிக்கும் பெரும் போராட்டம் உண்டாகி பின்பு சிவன் தனது நெற்றியின் வியர்வைத் துளிகளிலிருந்து தோன்றிய வீரபுத்திரனை ஏவி தட்சனை அழித்தான்.
பிரம்ம வித்தான தட்சனைக் கொன்றதால் பிரம்மஹத்தி தோஷம் சிவனுக்கு ஏற்பட்டது. அதனில் இருந்து விடுபட, சிவன் இத்திருத்தலம் வந்து திருக்குளத்தில் நீராடி, எம்பெருமானை வணங்கியதால், சிவனுக்குப் பிரம்ம ஹத்தி தோஷம் நீங்கியது என்ற வரலாறும் உண்டு.
பயங்கர ரூபங்கொண்ட மது கைடபன் என்ற இரண்டு அரக்கர்கள் பிரம்மாவின் படைப்புத் தொழில் ரகசியத்தை திருடி பிரம்மாவை அச்சுறுத்த, பிரம்மன் திருமாலிடம் வேண்டினார். திருமால், இவ்விருவரையும் போர் செய்து ஓட விட்டார். அவர்கள் சூர்ய சந்திரர்களின் ஒளியை மறைத்து இந்த உலகை இருளில் மூழ்கடித்தனர். இறுதியில் எம்பெருமான் அவர்கள் மீது சக்ராயுதத்தை ஏவ, இருவரும் ஓடி ஒழிந்தார்கள்.
அவ்விதம் ஓடிவந்த இவ்விருவரும் இறுதியில் ஹ்ருதபாபநாசினி என்னும் இந்த தீர்த்தத்தில் மூழ்கி தம்மை மறைத்துக்கொண்டனர். இந்த தீர்த்தத்தில் மூழ்கியதால் எம்பெருமான் சினம் தணிந்து அவர்களையும் ரட்சித்தான் என்பர்.
இந்த மது கைடபர்கள் வரலாறு, ஸ்தல புராணமாக வானமாமலை திருமய்யம் போன்ற திவ்ய தேசங்களுக்கும் சொல்லப் பட்டுள்ளன. ஓடி ஒளிந்த மது, கைடபர் மீண்டும் மீண்டும் தவம் செய்து வலிமை பெற்று பல முயற்சி செய்தார்கள் என்றோ வேறு வேறு மது கைடபர்கள் என்றோ கொள்ளலாம்.
பத்ரிகாஸ்ரமத்தில் உள்ள கங்கா தீர்த்தத்தில் தேவ பாகர் என்னும் முனிவர் ஒருவர் இருந்தார். அவர் ஒரு முறை மார்க்கண்டேய முனிவரை சகல பாபங்களையும் போக்கவல்ல புண்ய தீர்த்தமும், மோக்ஷத்தைத் தரக் கூடிய எம்பெருமான் எழுந்து அருளியுள்ள திருத்தலம் எது என்று வினவ அவர் தேவபாகரிடம் இந்த திருத்தலத்தின் மேன்மைகளை எடுத்துக் கூறியதாக புராணம் கூறுகிறது.
கௌசிகன் தனது முதுமை பருவத்தில் இங்குள்ள ஹ்ருதபாபநாசினியினில் நீராடி உயிர் நீத்தான். அன்று தை அமாவாசை என்றும் இவனை யமலோகத்திற்கு எடுத்து சென்ற யமதூதர்கள் இவன் செய்த பாவங்களால் நரகத்திற்கு கொண்டு வந்ததாக சொல்ல, எமன் இவன் தை அமாவாசையன்று ஹ்ருதபாபநாசினி நீராடியதால் இவனுடைய பாவங்கள் தீர்க்கப்பட்டன என்றும் சொல்லி, கௌசிகனை மோக்ஷத்திற்குக் கொண்டு செல்லவும் உத்தரவு விட்டதாக புராணம் கூறும்.
ஆழ்வார்கள்
இராவணனைக் கொன்ற இராமபிரான் தான் இந்த திருத்தலத்தில் சயன திருக்கோலத்தில் (கிடக்கிறார்) என்று திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டு உள்ளது. திருமழிசையாழ்வாரால் ஒரு பாடலாலும் திருமங்கையாழ்வாரால் பத்து பாசுரங்களாலும் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசம்.
திருமழிசையாழ்வார், நான்முகன் திருவந்தாதி (3.6) என்ற பாசுரத்தில், ஸமயம் பார்த்து அன்பருடைய நெஞ்சிலே வந்து சேர்வதற்காகவே எம்பெருமான் திருஎவ்வுள் போன்ற ஏழு திவ்யதேசங்களில் சயனித்துள்ளான் என்று சொல்லி உள்ளார். அந்த ஏழு திவ்ய தேசங்களாவன, “திருக்குடந்தை, திருவெஃகா, திருவெவ்வுளுர், திருவரங்கம், திருப் பேர்நகர், அன்பில் மற்றும் திருப்பாற்கடல்.
நாகத் தணைக் குடந்தை வெஃகா திருவெவ்வுள், நாகத்தணை அரங்கம் பேரன்பில், – நாகத் தணைப் பாற்கடல் கிடக்கும் ஆதி நெடுமால், அணைப்பார் கருத்தனாவான்.
ஸ்ரீகிங்கிருஹேச ஸ்துதி என்ற பெயரால் சுவாமி தேசிகன் இப்பெருமானுக்கு தனி ஸ்துதி நூல் ஒன்று எழுதி உள்ளார்.
ஸ்ரீ ஸுதாவல்லித் தாயார் ஸமேத பக்தவத்ஸல பெருமாள் திருவடிகள் சரணம்
| திவ்யதேசம் | திருநின்றவூர் | |||
| மூலவர் | பக்தவத்சலப் பெருமாள் / பத்தராவிப் பெருமாள் | |||
| உத்ஸவர் | பத்தராவிப்பெருமாள் | |||
| தாயார் | என்னைப்பெற்ற தாயார் / ஸுதா வல்லி | |||
| திருக்கோலம் | நின்ற திருக்கோலம் | |||
| திசை | கிழக்கு | |||
| பாசுரங்கள் | 2 | |||
| மங்களாசாசனம் | திருமங்கையாழ்வார் 2 | |||
| தொலைபேசி | +91 44 5517 3417 |
தொண்டைநாட்டைப் பற்றிய ஓர் முன்னுரையை இங்கே காணலாம், நன்றி.
கோவில் பற்றி
இத்தலம் சென்னையிலிருந்து பூந்தமல்லி வழியாகத் திருவள்ளூர்ச் செல்லும் சாலையில் உள்ளது. திருநின்றவூர் என்பதை விட திண்ணனூர் என்று சொன்னாலே பலருக்கு தெரிகிறது.
திருவாகிய மஹாலக்ஷ்மி, திருப்பாற்கடலை விட்டு இங்கு வந்து நின்றதால் இந்த திருத்தலம் திரு நின்ற ஊர் ஆயிற்று.
பக்தர்க்கு இரங்கும் பண்பினானதால், பக்தவத்சல பெருமாள் என்றும் பக்தர்கள் அவனுக்கு உயிர் ஆனதால், பக்தராவி பெருமாள் என்றும் எம்பெருமானுக்கு திருநாமம். பக்தர்களின்
உயிருக்குயிராய் இருப்பதால் பக்தராவி பெருமாள் என்றும் கொள்ளலாம்.
ஸமுத்திரராஜன் வந்து மஹாலக்ஷ்மியிடம் தன்னை மன்னிக்குமாறு வேண்டும் போது, “என்னை பெற்ற தாயே” என்று வேண்டியதால், தாயார் திருநாம என்னை பெற்ற தாய் என்று ஆயிற்று. தெலுங்கில் ‘நன்னு கன்ன தல்லி’ என்பர்.
ஸமுத்திர ராஜன் இங்கே வந்தபோது, மேகத்திற்கு எடுத்து செல்ல சமுத்திர நீர் இல்லாததால், மழை தேவதையான வருணனும் இங்கே வந்தபோது அவனுக்கும் இங்கு எம்பெருமானும் தாயாரும் காட்சி அளித்துள்ளனர்.
இக்கோவிலில், ஆண்டாள், சக்கரத்தாழ்வார், ஆதிசேஷன், விஷ்வக்சேனர் (சேனை முதல்வன்), பன்னிரு ஆழ்வார்கள் மற்றும் இராமானுஜர், மணவாள மாமுனிகள் ஆகியோருக்கு சன்னதிகள் உண்டு.
இங்குள்ள ஆதிசேஷன் சந்நிதியில் பால்பாயசம் செய்து நிவேதனம் செய்வதன் மூலம் இராகு கேது தோஷங்கள் நீங்கும் என்று சொல்கிறார்கள்.
இராஜகோபுரம் பிரம்மாண்டமாக உள்ளது. கொடிமரம், பலிபீடம், கருடன் சன்னதி தாண்டி சென்றால் உள்மண்டபத்தில், எம்பெருமான் தாயாருடன் சுமார் 11 அடிஉயரத்தில் ஐந்து ஆயுதங்களுடன் சேவை சாதிக்கிறார்.
வருண தீர்த்தம் அருகில் (குளம்) ஏரி காத்த இராமர் சன்னதி உள்ளது ஆஞ்சநேயருக்கு சன்னதி உண்டு. மதுராந்தகம் போன்ற இங்கும் ஒரு ஏரி காத்த ராமன் உள்ளார்.
ஸ்தல வரலாறு
மஹாலக்ஷ்மி ஆதிசேஷனைத் தாங்கியுள்ள தன்னுடைய தந்தையான ஸமுத்திர ராஜனுடன் கோபம் கொண்டு, இவ்விடத்து வந்து நின்றார். பிறகு ஸமுத்திரராஜன் நேரில் வந்து மன்னிப்புக் கேட்டு மீண்டும் எழுந்தருள வேண்டும் என்று விண்ணப்பம் செய்தான். எவ்வளவு கூறியும், மஹாலக்ஷ்மி மறுத்துவிடவே ஸமுத்திர ராஜன் வைகுந்தம் சென்று, எம்பெருமானிடம் முறையிட்டுத் தாங்களே என்னை ரட்சிக்க வேண்டும் என்றும், ஸ்ரீதேவித் தாயாரை மீண்டும் எழுந்தருளச் செய்ய அருள்புரிய வேண்டும் என்றும் வேண்டினான். பக்தர்க்கு இரங்கும் பண்பினான பரந்தாமன், ஸமுத்திர ராஜனை முதலில் பிராட்டியிடம் செல்லச் சொல்லியும், பிறகு தான் பின்னால் வருவதாகவும் சொல்லியனுப்ப, அப்படியே ஸமுத்திர ராஜன் பிராட்டியிடம் திரும்ப வந்து, “என்னை பெற்ற தாயே, என்னை மன்னிக்கவேண்டும்” என்று வேண்டியும் திருமகள் சமாதானம் அடையவில்லை. அப்பொழுது அங்கு எம்பெருமானும் எழுந்தருளி, சமாதானம் செய்ய மஹாலக்ஷ்மி மீண்டும் வைகுந்தம் எழுந்தருள சம்மதித்தார். எம்பெருமானும் பிராட்டியும் ஸமுத்திர ராஜனைக் நோக்கி, என்ன வேண்டும் என்று
கேட்க, தாங்கள் இருவரும் இத்திருமணக் கோலத்தில் காட்சி தந்து இங்கேயே நின்றிருக்க வேண்டும் என்று வேண்ட அப்படியே திருமகளும், திருமாலும் அருளினார்கள்.
குபேரன் தன் செல்வதை இழந்தபோது, இந்த திருத்தலத்தின் என்னை பெற்ற தாயாரை வணங்கி செல்வதை திரும்ப பெற்றான் என்று ஒரு வாய்வழி செய்தியும் உள்ளது.
இந்த எம்பெருமானிடம் உண்மையான பக்தியுடன் வேண்டிக்கொண்டவர்களுக்கு அவர்களது பிரார்த்தனை ஈடேறுகிறது என்பதற்கு உதாரணம் இராமானுஜரின் மூத்த சகோதரிக்கு ராமபிரானின் அம்சமாக முதலியாண்டான் என்ற ஆசார்யன், அவர்களின் தாய் தந்தை இந்த எம்பெருமானிடம் மனதார வேண்டிக் கொண்டதால், பிறந்து அந்த பெற்றோர்களுக்கு பெருமை சேர்த்தது.
Google Map
திருநின்றவூர் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்
திருநின்றவூர் பற்றி தினம் ஓர் திவ்யதேசம்
ஆழ்வார்
திருமங்கையாழ்வார் வடக்கில் இருந்து தொடங்கி, திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்து கொண்டு வரும் போது எம்பெருமான் மஹாலக்ஷ்மியையே பார்த்துக் கொண்டு இருந்து, ஆழ்வாரை பார்க்காமல் இருந்ததால், இத்தலத்தின் வழியாகச் சென்றும் ஆழ்வார் இதனைப் பாடாது சென்றார். இதைக் கண்ட பிராட்டி, பெருமாளை ஆழ்வாரிடம் உடனே சென்று ஒரு பாசுரம் பெற்று வருமாறு சொல்ல, பெருமாள் வருவதற்குள் திருமங்கை ஆழ்வார் திருவள்ளூர், திருவல்லிக்கேணி, திருநீர்மலை மற்றும் திருவிடந்தை சென்று அதையும் தாண்டி, திருக்கடல்மல்லைக்கு (மாமல்லபுரம்) சென்று விட்டார். திருக்கடல் மல்லை திவ்யதேசத்தை பாடும் போது, அங்கு திருநின்றவூர் எம்பெருமானைக் கண்ட திருமங்கையாழ்வார், “நின்றவூர் நித்திலத்தைத் தொத்தார்சோலை, காண்டவத்தைக் கனலெரிவாய்ப் பெய்வித்தானைக் கண்டது நான் கடல்மல்லைத் தலசயனத்தே” என்று பக்தராவிப்பெருமாள் வந்து நின்றதை நான் கண்டது திருக்கடல்மல்லையில் என்று (பெரிய திருமொழி 2.5.2) பாடி உள்ளார்.
பாடல் பெற்றுவந்த எம்பெருமானை நோக்கிய பிராட்டி, ஒன்று தானா என்று கேட்க எம்பெருமான் மீண்டும் பாடல் பெற திருமங்கை ஆழ்வாரை தேட, அதற்குள் அவர் திருக்கண்ணமங்கை வந்துவிட்டார். திருநின்றவூர் எம்பெருமான் அங்கு வர, திருக்கண்ணமங்கை எம்பெருமானை பாடும் போது, திருநின்றவூர் பெருமாள் நிற்பதைக் கண்ட ஆழ்வார் “நின்ற வூர்நின்ற நித்திலத் தொத்தினை, காற்றி னைப் புனலைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே” என்று திருநின்றவூர் எம்பெருமானை, திருநின்றவூரிலே முத்துத் திரள்போலே தாபஹரமான வடிவு கொண்டு எழுந்து அருளி இருப்பவன் என்றும், அவன் காற்றினும் மேலாக வந்த வேகத்தைக் குறித்தும் பெரியதிருமொழியில் (7.10.5) திருக்கண்ணமங்கை எம்பெருமானுடன் சேர்த்து மங்களாசாசனம் செய்து உள்ளார்.











Thanks to friends from whatsapp group for all the images
மரகதவல்லித் தாயார் ஸமேத விஜயராகவப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி
| திவ்யதேசம் | திருப்புட்குழி / க்ருத்ர புஷ்கரணி சேஷத்தரம் | |||
| மூலவர் | விஜயராகவப்பெருமாள், ஸமர புங்கவன், போரேற்று நாயனார் | |||
| உத்ஸவர் | விஜயராகவன் | |||
| தாயார் | மரகதவல்லித் தாயார் | |||
| திருக்கோலம் | வீற்றுஇருந்த திருக்கோலம் | |||
| திசை | கிழக்கு | |||
| பாசுரங்கள் | 2 | |||
| மங்களாசாசனம் | திருமங்கையாழ்வார் 2 | |||
| தொலைபேசி | +91 44 2724 6501 |
தொண்டை நாட்டு திவ்யதேசங்களைப் பற்றிய ஒரு சிறு முன்னுரையை இங்கே காணலாம். நன்றி
கோவில் பற்றி
திருப்புட்குழி என்னும் இந்த திருத்தலம் காஞ்சிக்கு மேற்கே சுமார் 10 கீ.மீ. தூரத்தில் உள்ள பாலு செட்டி சத்திரம் என்ற ஊரிலிருந்து தெற்கே சுமார் 400 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து வேலூர் சாலையில் பாலுச்செட்டிசத்திரம் உள்ளது.
ஜடாயுவாகிய பறவைக்கு மோக்ஷம் அளித்து ஈமக்கிரியை செய்த நிகழ்வை குறிக்கும் தேசம் ஆனதால் இது புள்ளுக்கு குழி எடுத்த இடம், திருப்புட்குழி என்று ஆனது. புள் என்றால் பறவை என்று பொருள்.
இந்த திருத்தல எம்பெருமானுக்கு விஜயராகவன் என்று திருநாமம்; ராகவம் என்பது இராமனையே குறிக்கும். விஜயராகவப் பெருமாள். நான்கு திருக்கரங்களுடன் கிழக்குநோக்கி வீற்றிருந்த திருக்கோலத்துடன் காட்சி அளிக்கிறார். ஸ்ரீராமன் ஜடாயுவை மடியில் கிடத்திக்கொண்டு இருக்கும் நிலையில் அமர்ந்த திருக்கோலத்துடன் காட்சி அளிக்கும் திருத்தலம்.
ஈமக்கிரியை செய்யும் போது மனைவி உடன் இருக்கவேண்டும் என்பது மரபு. அப்பொழுது இராமாயணத்தின்படி சீதை இராமருடன் இல்லை. இருந்தாலும், இந்த திருத்தலத்தில், ஸ்ரீதேவி, பூமிபிராட்டி என்று இரண்டு தாயார்களும் உள்ளனர்.
சீதாதேவி அக்னியின் தாக்கத்தை தாங்க முடியாததால் தன்னுடைய திருமுகத்தை சற்று தள்ளியும், எம்பெருமானுக்கு இடது புறத்திலும் மாறி அமர்ந்து உள்ளார். எப்போதும் இடது புறம் இருக்கும் பூமிபிராட்டி, இங்கு எம்பெருமானுக்கு வலது புறத்தில் அமர்ந்து உள்ளார். அதேபோல், தனிக்கோவில் நாச்சியார் மரகதவல்லி தாயார் சன்னதியும் எம்பெருமானுக்கு இடது புறத்திலும், ஆண்டாள் சந்நிதி வலது புறத்திலும் இருக்கும்.
ஸ்ரீதேவி தாயார் இங்கும் திருவிடவெந்தை என்ற திவ்ய தேசங்களில் மட்டுமே எம்பெருமானுக்கு இடப்பக்கத்தே இருப்பது.
தனிக் கோவில் நாச்சியார் மரகதவல்லி தாயார். வறுத்த பயிறு முளைக்க வைக்கும் தாயார் என்பது ஒரு நம்பிக்கை. பிள்ளைப்பேறு வேண்டுபவர் இங்குள்ள புஷ்கரணியில் சாயங்காலம் மடியில் பச்சைபயிற்றை கட்டிக்கொண்டு நீராடி, அதை திருமடப்பள்ளியில் கொடுத்து வறுத்து எடுத்தபின், மீண்டும் தன்னுடைய இடுப்பில் கட்டிக்கொண்டு இரவு தூங்கி எழுந்தால், மறுநாள் காலை, அந்த வறுத்த பயிறு முளை விட்டு இருக்கும் என்றும் இந்த மரகதவல்லி தாயாரின் கருணையினால் பிள்ளைப்பேறு உண்டாகும் என்றும், நம்பிக்கை. இதனால் இந்தத் தாயாருக்கு வறுத்த பயறு, முளைவிக்கும் மரகதவல்லித் தாயார் என்றும் பெயர்.
இங்கு கோவிலுக்கு எதிர்ப்புறத்தில் குளத்திற்கு அருகே ஜடாயுவுக்கு சன்னதியுள்ளது. இங்கு எம்பெருமான் வெளியே புறப்பாடு காணும் போது எல்லாம், ஜடாயுவுக்கும் சகல மரியாதைகளும் நடைபெறும்.
ஜடாயுவிற்கு இறுதிச்சடங்குகள் செய்த திருத்தலம் என்பதால் அதற்கு மரியாதை கொடுக்கும் வண்ணம், கொடிமரமும் பலிபீடமும் கோவிலுக்கு வெளியே அமைந்து உள்ளன.
க்ருத்ர புஷ்கரணி என்பது இங்குள்ள திருக்குளம். க்ருத்ர என்றால் பறவைகளின் ராஜாவான ஜடாயுவைக் குறிக்கும். இந்த புஷ்கரணியில் நீராடி மரகத்தவல்லி தாயாரையும், எம்பெருமானையும் சேவித்தால் எல்லா நோய்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.
இராமானுஜர் படித்த மண்டபம் இன்றும் உள்ளது. இராமானுஜர் கல்வி கற்றதை விளக்கும் சிற்பமும் இக்கோவிலில் உள்ளது. கூரத்தாழ்வார், மணவாள மாமுனிகள் இவர்களுக்கும் சன்னதி உண்டு.
இங்கு எம்பெருமான் புறப்பாடு காணும் குதிரை வாகனம் அதிசயமானதாகும். மரத்தினால் செய்யப்பட்ட குதிரை உண்மையான குதிரை போலவே அசையும் உறுப்புக்களைக் கொண்டது. இதனை உருவாக்கிய கலைஞன் இது போல் இனி வேறு யாருக்கும் செய்வதில்லை என்று உறுதியோடு இருந்து இறந்தான். இவனது உறுதிக்கும் பக்திக்கும் பாராட்டுத் தெரிவித்து பெருமாள் 8ஆம் நாள் உற்சவத்தன்று அவனது வீதிக்கு எழுந்தருளுகிறார்.
இக்கோவிலைப் ‘போரேற்றுப் பெருமாள் கோவில்’ என்றும் ‘சித்தன்னவேலி திருப்புட்குழி நாயனார் கோவில்’ என்றும் சொல்லும், பாண்டிய, விஜயநகர பேரரசு காலத்திய கல்வெட்டுகள் உள்ளன.
இராமனே இங்கு ஜடாயுவிற்கு ஈமக்கிரியை செய்து இருப்பதால், அமாவாசை, மஹாளயம் போன்ற சமயங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது பல மடங்கு பலன் கொடுக்கும் என்று நம்புகிறார்கள்.
எம்பெருமான், மோக்ஷம் அழிப்பார்; தாயார் பிள்ளைப் பேறு அளிப்பார்; புஷ்கரணி நோய்கொடிகளை நீக்கும்.
ஸ்தல வரலாறு
ஜடாயுவாகிய பறவைக்கு இராமபிரான் ஈமக்கிரியை செய்து மோக்ஷம் அளித்த திருத்தலம்.
இத்தலத்திற்கு கூறப்படும் அதே வரலாறு அப்படியே புள்ளம்பூதங்குடி ஸ்தலத்திற்கும் கூறப்படுகிறது. அங்கே சொன்னது போல், இது தொண்டை நாட்டில் நடந்ததா, சோழ நாட்டில் நடந்ததா அல்லது மராட்டிய அல்லது கர்நாடக மாநிலங்களில் நடந்ததா என்று விவாதிப்பதை விட, பல இடங்களில், பலருக்கு எம்பெருமான் காட்சி இவ்வாறாக அளித்திருக்க கூடும் என்று மனதில் கொண்டு எல்லாவற்றையும் அனுபவிக்கலாம்.
இராமாயணத்தில், சீதையை இராவணன் சிறையெடுத்துச் சென்றபோது அவனை எதிர்த்து போரிட்ட ஜடாயு இராவணனால் வெட்டப்பட்டு இவ்விடத்தில் வீழ்ந்தார். பின்னர் சீதையைத் தேடி அவ்வழி வந்த இராமனிடம் இராவணன் பற்றிய விவரங்களைத் தெரிவித்துவிட்டு ஜடாயு உயிர் நீத்தார். ராமன், தன் திருத்தகப்பனாரான தசரதனுக்கு செய்யாத அந்திமச் சடங்குகளை ஜடாயுவிற்கு தனது திருக்கரங்களால் செய்து, ஜடாயுவிற்கு மோட்சமும் அளித்து தன்னுடைய பெரிய தகப்பனார் என்று மரியாதையும் செய்தார்.
ஜடாயுவுக்கு மோட்சமளித்த ராமன் இங்கு அவரது அம்பினால் ஜடாயு தீர்த்தத்தை உண்டாக்கினார் என்று சொல்லப்படுகிறது.
ஆழ்வார் ஆச்சாரியார்
இங்கு எழுந்தருளியுள்ள விஜயராகவப் பெருமாளுக்கு வடமொழியில் ஸமர புங்கவன், என்று பெயர். இதை புட்குழி எம் போர் எற்றை என்று ஆழ்வார் தமிழில் உரைத்தார்.
இவ்வூரில் வாழ்ந்த யாதவப் பிரகாசர் என்பவரிடமே இராமானுஜர் முதலில் வேத பாடங்களைப் பயின்றார். இராமானுஜரோடு எம்பார் என்ற ஆச்சார்யாரும் இங்கு தான் வேதபாடங்கள் கற்றார்.
நம்பிள்ளை என்ற ஆச்சாரியாரின் சீடரான பின்பழகிய பெருமாள் ஜீயர் அவதரித்த தலம் ஆகும்.
கம்ப ராமாயணத்தில் ஜடாயு
Mr, Swaminathan, one of the experts in both Valmiki and Kamba Ramayanam, has written about Kamba Ramayanam and we are happy to host his daily posts on Kamba Ramayanam. Kamban has written about Jatayu in two subsections, namely, சடாயு காண் படலம், ஜடாயு உயிர் நீத்த படலம் consisting of about 265 poems. He has taken some selective poems from Kamba Ramayanam on Jatayu and we are happy to share the same for you.
To Read this in English, please click here, thanks
திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்றொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும், தொண்டரடிப்பொடிஆழ்வார் எழுதிய திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும்.
முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார், அடுத்த பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து பலர், பல காரணங்களை சொல்லியபொழுது ஆழ்வார், “சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்” என்று சொல்லி இராமபிரானையும் “கற்றினம் மேய்த்த கழலிணை பணிமின்” என்று எளிமையான கண்ணனையும், “உய்பவர்க்கு உய்யும் வண்ணம் திருவரங்கம் காட்டினான்” என்று சொல்லி நம்மை அரங்கனிடம் அழைத்து செல்கிறார்.
அப்படியும் மக்கள் எல்லோரும் ஆழ்வார் பக்கம் செல்லாமையால், ஆழ்வார் அவர்களை விட்டு, எம்பெருமான் தனக்கு செய்த மிக பெரிய உதவிகளை அடுத்த பத்து பாசுரங்களில் விவரிக்கிறார்.
இதுவரை, எம்பெருமான் தனக்கு கொடுத்த அனுபவத்தை சொல்வது (1-3), தன்னுடைய அனுபவத்தை கொண்டு உபதேசம் செய்வது (4-14), மற்றும் எம்பெருமான் தனக்கு செய்த நன்மைகளை நினைத்துக் கொள்ளுதல்(15-24) என்ற முதல் மூன்று உட்பிரிவுகளை பார்த்தோம்.
இனி, தன்னிடம் ஒரு நல்ல குணமும் இல்லை, எல்லா கெட்ட குணங்களும் உள்ளன என்று ஆழ்வார் சொல்லும் 25 முதல் 34 வரை உள்ள பத்து பாசுரங்கள் கொண்ட நான்காவது பகுதி. இந்த பகுதியில் ஆழ்வார் நாத்திகம் பேசுவதாக எடுத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால், ஆழ்வார் ஒரு நிலையை கடந்து மற்றொரு உயர்ந்த நிலையை பற்றி நமக்கு சொல்கிறார் என்றே எடுத்துகொள்ள வேண்டும். உதாரணமாக, ஆழ்வார் கர்ம, ஞான பக்தி யோகங்கள் தன்னிடம் இல்லை என்றும், முக்கரணங்களால் தான் அர்ச்சித்தது இல்லை என்றும் சொல்வது எம்பெருமான் எல்லாம் தெரிந்தவர், எல்லாம் வல்லவர், எல்லாம் அவன் செயல், சர்வ சுதந்திரமாக செயல்படுபவர் என்றும் எல்லாவற்றையும் முழுவதுமாக மனதில் கொண்டு, தான் அவனின் அடிமை என்றும், தன்னால் ஒன்றும் தனியாக இயங்க முடியாது என்றும், தன் முயற்சியால் ஒன்றும் நடக்கக்கூடாது என்றும், அவனே தனக்கு எல்லாம் அருள வேண்டும் என்ற ஒரு உயர்ந்த நிலையை மனதில் கொண்டு இந்த பகுதியில் உள்ள 10 பாசுரங்களை பாடுகிறார் என்று கொள்ளவேண்டும். ,
இந்த பகுதியின் முதல் பாசுரத்தை, திருமாலையின் 25வது பாடலை (குளித்து மூன்று அனலை) சென்ற வலைப்பதிவினில், ஆழ்வார் தனக்கு கர்ம, ஞான, பக்தி யோகங்கள் செய்வதற்கான தகுதி கூட இல்லை, திருவரங்கன் அந்தத் தகுதி முதல் எல்லாவற்றையும் அருள வேண்டும் கேட்டு கொண்டதை பார்த்தோம். இனி அடுத்த பாசுரம்.
போதெல்லாம் போது கொண்டு உன் பொன்னடி புனைய மாட்டேன், தீதிலா மொழிகள் கொண்டு உன் திருக்குணம் செப்ப மாட்டேன், காதலால் நெஞ்சம் அன்பு கலந்திலேன் அது தன்னாலே, ஏதிலேன் அரங்கற்கு எல்லே என் செய்வான் தோன்றினேனே. திருமாலை 26
ப்ராமண, க்ஷத்ரிய, வைஸ்யர்களுக்கான கர்ம, ஞான, பக்தி யோகங்கள் இல்லை என்றால், மற்றவர்கள் செய்யக்கூடிய அர்ச்சனை, துதி போன்றவற்றை செய்யலாமே என்று பெரியபெருமாள் கேட்க, அவைகளும் தன்னிடம் இல்லை என்று ஆழ்வார் சொல்வதாக அமைந்த பாசுரம். பூக்களைக்கொண்டு அவனை அலங்கரிப்பது, வாக்கினால் அவனுடைய ஸ்தோத்திரங்களைச் சொல்வது, மனதினால் அவனை நினைப்பது என்று இந்த பாடலில் சொல்வது மூன்றும், எம்பெருமான் கேட்ட அர்ச்சனை, துதி ஆகும்.
எல்லாக்காலங்களிலும் பூக்களை கொண்டு, அவனுடைய அழகிய திருவடிகளில் சமர்பிக்க சக்தி அற்று இருப்பதாகவும், குற்றமற்ற வார்த்தைகளைக்கொண்டு அவனின் நற்குணங்களை சொல்ல முடியாதவனாக இருப்பதாகவும், உண்மையான காதலினால் அவன் மீது வரும் அன்பை தன் நெஞ்சத்தில் சேர்க்கவில்லை என்றும் ஆழ்வார் சொல்லி, தன்னுடைய ஒரு அவயத்தாலும் (உறுப்பினாலும்) திருவரங்கனை அனுபவிக்கவில்லை என்பதால், தான் ஏன் பிறந்தேன் என்று கதறுகிறார்.
இங்கு பூதத்தாழ்வார் பாடிய “போதறிந்து வானரங்கள் பூஞ்சுனைபுக்கு, ஆங்கலர்ந்த, போதரிந்து கொண்டேத்தும் போது,உள்ளம் – போது, மணிவேங்கடவன் மலரடிக்கே செல்ல, அணிவேங்கடவன் பேர் ஆய்ந்து. (இரண்டாம் திருவந்தாதி 72) பாசுரத்தை நினைவில் கொள்ளலாம். திருமலையில் உள்ள குரங்குகள், திருவேங்கடமுடையானுக்கு அதிகாலையில். முக்கரணங்களாலும் சேவை செய்கின்றன என்றும் பூக்களை பறித்து சமர்பிக்கின்றன என்றும் ஆழ்வார் பாடுகிறார். பேர் ஆய்ந்து என்பது வாயினால் திருநாமங்களை சொல்வது. ஏத்தும் போது,உள்ளம் என்பது மனத்தினால் ஸ்தோத்திரம் செய்வதை சொல்வது. போது அரிந்து கொண்டு என்பது பூக்களை கைகளால் பறித்துக்கொண்டு வருவதை சொல்வது.
எல்லா காலத்திலும் சிவந்த பூக்களைக் கொண்டு பொன் போன்ற அவனுடைய திருவடிகளை அலங்கரிப்பதே சரியான ஒன்று, அப்படி செய்வதில் தனக்கு ஊற்றம் இல்லை என்றும் அதற்கான சக்தியும் இல்லை என்று ஆழ்வார் சொல்கிறார். அவனைத்தவிர மற்ற விஷயங்களில் சக்தியும் ஊக்கமும் உள்ளன என்று கூறுவதாக கொள்ளலாம். முன்பு சொன்னது போல் விஷ்ணுதர்மத்தில், எந்த நாக்கு விஷ்ணுவின் பெயரை சொல்கிறதோ அதுவே நாக்கு எந்த உடல் விஷ்ணுவைப் பணிகிறதோ அதுவே உடல், மற்றதெல்லாம் வீண் என்று சொன்னதை நினைவில் கொள்ளலாம்.
இந்த சொற்தொடரில், முதல் போது, என்பது காலத்தையும், இரண்டாவது போது என்பது பூக்களையும் குறிக்கின்றது.
எல்லா காலத்திலும் செய்ய முடியவில்லை, எப்போதாவது ஓரிரு முறை செய்ய முடியும் என்ற கருத்து இல்லை. எந்த காலத்திலும் (ஒரு முறை கூட) அர்ச்சிக்க முடியாதவனாக, சக்தி இல்லாவதவனாக உள்ளேன் என்றே ஆழ்வார் சொல்வதாக உரையாசிரியர் கூறுகிறார்.
ஹரி என்று இரண்டு எழுத்துகளை ஒரு முறை சொன்னாலே மோக்ஷம் செல்ல வேண்டிய அனைத்துக் காரியங்கள் செய்யப்பட்டன என்று விஷ்ணு தர்மத்தில் (70.84) சொல்லப்பட்டது. கோவிந்தா என்று ஒருமுறை நினைத்தால், நூற்றுக்கணக்கானப் பிறவிகளில் செய்த பாவக்கூட்டத்தை நெருப்பு பஞ்சுமூட்டையை எரிப்பது போல் எரித்து விடுகிறான். ஒரு தடவை சரணம் அடைந்தவன் பொருட்டும், அவனுக்கு அடியேன் ஆகிறேன் என்று சொல்பவன் பொருட்டும் அவர்களுக்கு முழுவதும் அபயமளிக்கிறேன் என்றும் அதுவே தன்னுடைய விரதம் எனறும் இராமபிரான்(இராமாயணம், யுத்த காண்டம், 18-33) சொன்னதை நினைவில் கொள்ளவேண்டும்.
இப்படி, ஒரு காலத்தில்/ஒரு முறை அவனிடம் ஈடுபாடு கொண்டாலே, பலன் கொடுக்கவல்ல பெருமை உடையவன் அவன். அப்படிப்பட்டவனை ஒரு காலத்திலும் அர்ச்சிக்க சக்தி இல்லாவதன் ஆகிவிட்டேன் என்று ஆழ்வார் சொல்கிறார்.
எம்பெருமானுக்கு பூக்களைக்கொண்டு செய்கின்ற சேவை, அவனுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, ஏனென்றால் விஷ்ணு அலங்காரப்ரியன், சிவன் அபிஷேகப்ரியன். கைங்கர்யத்தில் தவறு நிகழ வாய்ப்பு மிக குறைவாக உள்ளது. அதனை செய்வது எளிதாகிறது. நம் சம்பிரதாயத்தில், இந்த கைங்கர்யத்தைப் பலர் செய்து உள்ளனர்.
பெரியாழ்வார், ஸ்ரீவில்லிபுத்தூரில் நந்தவனம் அமைத்து மலர்கள் பயிரிட்டு அவற்றை கொண்டு வடபத்ரசாயிக்கு தொண்டு செய்து வந்தார் என்பது வரலாறு. அதே நந்தவனத்தில் தான் ஆண்டாளையும் கண்டெடுத்து தன் மகளாக வளர்த்து வந்தார். பெரியாழ்வார் ‘ஆனிரை மேய்க்க‘ என்று யசோதை நிலையில் இருந்து எம்பெருமானுக்கு பலவிதமான மலர்களை சூட்டி அழகு பார்த்ததை, பெரியாழ்வார் திருமொழியில் (2.7) அனுபவித்து பாடி உள்ளார்.
ஆண்டாள், திருமாலுக்கு பூமாலையோடு பாமாலையும் சூட்டி, சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என்று ஆனாள். தூமலர் தூவித் தொழுது, நாவினால் பாடி, மனதினால் சிந்திக்க (திருப்பாவை 5) என்பதால், எம்பெருமானை முக்கரணங்களால் அர்ச்சிக்க வேண்டும் என்பதை எளிதாக எடுத்து சொன்னவர்.
தொண்டரடிப்பொடி ஆழ்வார், திருவரங்கத்தில் நந்தவனம் அமைத்து கைங்கரியம் செய்து வந்தார் என்பதும், திருமங்கையாழ்வார் கோவிலுக்கு திருமதில் கட்டும்போது இந்த நந்தவனத்தை விட்டு அதற்கு ஒரு தடையும் வராமல் காட்டினார் என்பதும் வரலாறு.
கண்ணன், கம்சனை அழிப்பதற்கு முன், மாலாக்காரன் என்ற அடியவன் கண்ணனுக்கு சிறந்த பூ மாலைகளை சூட்டி அழகு பார்த்து அனுப்பி வைத்தான் என்பது பாகவதத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம். ஸ்வாமி ராமானுஜரின் எண்ணத்திற்கு ஏற்ப திருமலையில் நந்தவனம் உருவாக்கி, அங்கே பூக்கும் பூக்களைக்கொண்டு ஏழுமலையானுக்கு பல ஆண்டுகள் புஷ்ப கைங்கர்யம் செய்தவர் அனந்தாழ்வான் என்னும் ஆச்சாரியர். அவர் உபயோகித்த கடப்பாரை இன்றும், திருமலையில் காட்சிக்கு உள்ளது.
நம்மாழ்வார் புஷ்பகைங்கர்யத்தைப் பற்றி பாடிய ‘மாலை நண்ணி தொழுது எழுமினோ‘ என்று பாடிய திருக்கண்ணபுர பாசுரங்களையும் (9.10) இங்கே நினைவில் கொள்ளலாம். காலை மாலை கமல மலர் இட்டு என்றும், கள் அவிழும் மலர் இட்டு என்றும், விண்டு வாடா மலர் இட்டு என்றும், தேனை (உடைய) வாடா மலர் இட்டு என்றும், பாடியதை நாமும் அனுபவிக்கலாம்.
இப்படி உடம்பினால் செய்யும் கைங்கர்யங்கள் செய்யாமல், மற்ற உலக விஷயங்களில் ஈடுபட்டாலும், குற்றமற்ற வாக்கினைக் கொண்டு எம்பெருமானின் திவ்ய குணங்களை சொல்வதே போதுமானது என்று பெரியபெருமாள் சொல்லியபோது, ஆழ்வார் தன்னுடய வார்த்தைகள் குற்றமற்றவைகளாக இருந்தபோதிலும், அவை அழகானவைகளாக இருந்தபோதிலும், எம்பெருமானுடைய திருக்குணங்களை பேச இயலாதவனாக இருக்கிறேன் என்று ஆழ்வார் கூறுகிறார். ஆழ்வார் விஷ்ணுதர்மத்தில் கூறியபடி எம்பெருமானை பற்றி பேச வேண்டிய நாக்கு, மற்ற விஷயங்களை பேசும் போது நறுக்கு தெரித்தாற்போல் உள்ளது என்றும் எம்பெருமான் விஷயத்தில் அதனால் இயலவில்லை என்றும் கூறுகிறார்.
உடம்பினாலும் வாக்கினாலும் சேவை செய்யமுடியாவிட்டாலும், நெஞ்சத்தைக்கொண்டு எம்பெருமானிடம் அன்பு செல்லுத்தலாமே, என்று பெரியபெருமாள் வினவியபோது, ஆழ்வார், இந்த விஷயத்தில், காதலால் வரும் அன்பு வரவில்லை என்று கூறுகிறார். விஷயங்கள் சேரும் போது, காமம் வருகிறது என்றும், காமத்தினால் கோபம் வருகிறது என்றும் பகவத் கீதை (2.62) சொன்னபடி, ஆழ்வார் தான் இதுவரை அனுபவித்த காதலும் உண்மையானது அல்ல என்றும், அவர்களின் பொருள்களை கவர்வதற்கே அப்படி செய்ததாகவும் சொல்கிறார்.
இங்கு உரையாசிரியர், ஆளவந்தாரின் ஸ்தோத்ர ரத்னத்தின் 62வது ஸ்லோகத்தை எடுத்து கொள்கிறார். அதில், தான்,
என்று சொல்லி, கரை காணா துன்பக்கடலைக் கடந்து, எப்படி அவனை அடைந்து அவனுக்கு அடிமை செய்வது என்று கூறுகிறார். அடுத்து, விஷ்ணு புராணத்தில் (3.7.30) இருந்து, எவன் ஒருவன் கெட்டபுத்தியுடன், தன் உயிர் நண்பனுக்கும், சொந்தங்களுக்கும், மனைவிக்கும், பிள்ளைகளுக்கும், தாய் தந்தையருக்கும், வேலைக்காரர்களுக்கும் கெடுதல் நினைத்து, அவர்களின் செல்வங்களை கவர நினைக்கிறானோ அவன் தன்னுடைய பக்தன் இல்லை என்று எம்பெருமான் சொல்வது மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
மனம், வாக்கு, உடல் என்ற இந்த முக்கரணங்களாலும் அவனிடம் ஈடுபாடு கொண்டு பயன் பெரும் பெரியவர்கள் போல் இல்லாமல் தன்னால், ஒரு கரணத்தால் கூட ஈடுபாடு கொள்ள முடியாதவானாக, ஓன்றும் இல்லாதவனாக, இருப்பதாக ஆழ்வார் கூறுகிறார்.
இங்கு மறுபடியும், ஆளவந்தாரின் ஸ்தோத்திர ரத்னத்தின் 16வது பாடலை எடுத்துக்கொண்டு எம்பெருமான் எப்படி தன்னுடைய முக்கரணங்களால் அடியவர்கள் இடத்தில உண்மையாக உள்ளான் என்பதற்கு மேற்கோள் காட்டுகிறார். இயற்கையாகவே எம்பெருமான் எல்லா கல்யாண குணங்களின் கடலாக இருப்பவன் என்பதை, கீழ்கண்டவாறு ஒரு பட்டியல் இடுகிறார்.
தொண்டரடிப்பொடி ஆழ்வார் இந்த பாசுரத்தில் சொல்வது, இப்படி கஷ்டப்பட்டு சாஸ்திரங்களை படித்து தெரிய வேண்டாதபடி, நேரடியாகவே சுலபமாக தெரிந்துகொள்ள சயன திருக்கோலத்தில், பள்ளி கொண்டுள்ள திருவரங்கன் இருக்கிறான் என்கிறார். இப்படிப்பட்ட பெரியபெருமாளுக்கு ஒரு கரணத்தினால் கூட அர்ச்சனம் ஏதும் செய்யாமல், ஒன்றும் இல்லாதவன் ஆகிவிட்டேன் என்று புலம்புகிறார்.
எம்பெருமான் தன்னை அவனிடம் சேர்க்காததற்கு தன்னுடைய எந்த ஒரு குற்றமும் காரணம் இல்லை என்றும், தான் செய்த பாவங்களே காரணம் என்றும் இந்த ஒரு ‘எல்லே‘ என்ற வார்த்தையினால் ஆழ்வார் கூறுகிறார். ஆழ்வார், தான் அருகில் இல்லாததாலோ, தான் தகாதவராய் இருப்பதாலோ, தான் எம்பெருமானிடம் உள்ளவற்றை குறைகளாகப் பார்ப்பதாலோ, எம்பெருமானை இழக்கவில்லை என்றும், தன்னுடைய பாவங்களால் தான் இழந்தோம் என்றும் சொல்கிறார். எம்பெருமான், குற்றத்தை பாராமல் அதையே குணமாக கொள்ளும் இனியவன் என்பதையே காரணமாகச் சொல்கிறார். மேலும், எம்பெருமான் மிக விரும்பும் கௌஸ்துபமணி போல் உள்ள இந்த ஆத்மா வீணானதே என்று வருந்துகிறார். பெரியதிருமொழி (3.7.6), “அரங்கத்து உறையும் இன் துணைவன் ” என்ற பாசுரம் மேற்கோளாக சொல்லப்படுகிறது. அப்படிப்பட்ட இனிமையான துணைவனை விட்டு வெகுதூரம் போய்விட்டேன் என்று ஆழ்வார் சொல்கிறார். பால் மருந்தாகவும், அதுவே அனுபவிக்க கூடிய ஒரு பொருளுமாக இருப்பது போல் அழகுடன் கூடிய, மோக்ஷத்தை அளிக்கவல்ல எம்பெருமானை இழந்தோமே என்று கதறுகிறார்.
விஷ்ணுதத்வத்தில் சொன்னபடி, எம்பெருமான் தமக்கு அளித்த கை, உடல், மனம் போன்றவற்றை அவருக்குப் பயன் படுத்தாமல், வீணடித்த தாம் ஏன் தான் பிறந்தோமோ என்பதை, ஆழ்வார் தோன்றினோமோ என்று கூறுகிறார். தீய கோள்கள் வானில் வருவதை, தோன்றின என்று கூறுவது வழக்கம். அதுபோல், தான் பிறந்ததும், தீய கோள் போல், பிறருக்கு நன்மை செய்யாமல், தீயவை புரியவே என்று ஆழ்வார் தான் பிறந்ததும் தீங்கு விளைவிப்பதாகி விட்டதே என்று கூறி இந்த பாடலை முடிக்கிறார்.
மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்
வைகுந்தவல்லி ஸமேத வைகுந்தநாதர் திருவடிகள் போற்றி போற்றி
| திவ்யதேசம் | திருப்பரமேச்சுர விண்ணகரம் , ஸர்ப்ப க்ஷேத்ரம் | |||
| மூலவர் | பரமபதநாதன், வைகுந்தநாதன் | |||
| உத்ஸவர் | வரம்தரும் மாமணிவண்ணன் | |||
| தாயார் | வைகுந்தவல்லி தாயார் | |||
| திருக்கோலம் | வீற்றுஇருந்த திருக்கோலம் | |||
| திசை | மேற்கு | |||
| பாசுரங்கள் | 10 | |||
| மங்களாசாசனம் | திருமங்கையாழ்வார் 10 | |||
| தொலைபேசி | +91 44 2723 5273 |
தொண்டை நாட்டு திருப்பதிகள் பற்றி ஒரு சிறு முன்னுரையை இங்கே காணலாம். நன்றி
கோவில் பற்றி
இந்த கோவில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் நிர்வகிக்கப்படுகிறது. இங்கு பூஜைகள் முதல் நிலையில் மட்டும் தான், மற்ற இரண்டு நிலைகளில் கிடையாது.
இத்திருத்தலம் பல்லவ மன்னன் முதலாம் பரமேஸ்வரவர்மன் (கி.பி. 669) காலத்தில் தான்
இன்றுள்ள நிலையில் 3 அடுக்குகளாக கட்டப்பட்டது.
இந்த கோவிலின் விமானம், மூன்று அடுக்குகளாக, அஷ்டாங்க விமானமாக உள்ளது. கீழ் அடுக்கில், அமர்ந்த திருக்கோலத்திலும், நடு தளத்தில் ஸ்ரீதேவி, பூதேவி இவர்களுடன் ரங்கநாதனாக சயனத் திருக்கோலத்திலும், மேல் நிலையில், நின்ற திருக்கோலத்தில் உள்ளனர். நடு நிலையில் செல்வதற்கு சன்னதிக்கு பின் பக்கத்தில் வழி உள்ளது. அது ஏகாதசி அன்று மட்டும் திறக்கபடுகிறது. ரங்கநாதருக்கு ஒரு உத்சவர் உள்ளார்.
ஸ்ரீவைகுந்ததில் உள்ள விரஜா நதி, இங்கே தீர்த்தமாக உள்ளது. இதுவும் ஆறு விண்ணகர திவ்யதேசங்களில் ஒன்று. இங்கு சொர்க்கவாசல் கிடையாது.
108 திவ்யதேசங்களில், சில ஸ்தலங்களே (6) விண்ணகர் (வைகுந்தம்) என்ற பெயர் பெற்றுள்ளன. அவை :
பரமேஸ்வர பல்லவனுக்கு இந்த எம்பெருமான் 18 கலைகளை சொல்லி கொடுத்தார் என்றும், அவைகளைச் சொல்வதற்காக நின்ற திருக்கோலத்தில் இருந்தார் என்றும், சீடனுக்கு உபதேசிக்கும் போது குருவாக அமர்ந்த திருக்கோலத்தில் இருந்தார் என்றும், அவனுக்கு
சேவை சாதிக்க, கிடந்த திருக்கோலத்தில் இருந்ததாகவும் கூறுவர்.
மாமல்லபுரத்தைப் போன்று சிறந்த சிற்பங்கள் இக்கோவிலின் உட்புறச் சுவற்றில் செதுக்கப்பட்டு உள்ளது. பல்லவ காலத்து குடவரைக் கோவில் அமைப்பின்படி இத்தலத்தின் மூலவரும் அதைச் சுற்றியுள்ள பிரகாரம் மற்றும் தூண்கள் யாவும் ஒரே பாறையில் செதுக்கப்பட்டன.
பரமேசுவரவர்மனின் பிறப்பைச் சித்திகரிக்கும் சிற்பங்கள், அவனுக்கு எம்பெருமான் கலைகளை கற்றுக்கொடுத்த சிற்பங்கள் போன்றன இத்தலத்தின் உட்பிரகாரத்தில் செதுக்கி வைக்க பட்டுள்ளன. 18 பல்லவ மன்னர் முடிசூடும் காட்சிகளும் சிற்பங்களாக உள்ளன.
இக்கோவிலின் மேல் மாடியில் இரண்யவதம் செய்த நரசிம்ம அவதாரம், நரகாசுர வதம் செய்த கிருஷ்ணவதாரம், வாலி வதம் செய்த இராமவதாரம், போன்ற காட்சிகள் தத்ரூபமாய் செதுக்கப்பட்டு உள்ளன.
இந்த கோவிலில் இருந்து மாமல்லபுரத்திற்கும், கைலாச நாதரின் கோவிலுக்கும், பரமேஸ்வர வர்மனின் அரண்மனைக்கும் சுரங்கப்பாதை இருந்ததாக சொல்வதுண்டு.
ஸ்தலவரலாறு
விதர்ப்ப நாட்டு மன்னன் சந்ததி வேண்டி காஞ்சியில் உள்ள கைலாச நாதனை வணங்க, விஷ்ணுவின் துவார பாலகர்கள் இருவரும் பல்லவன், வில்லவன் என்ற பெயர் கொண்டு பிறந்ததாகவும், அவ்விருவரும் மஹா விஷ்ணுவைக் குறித்து இக்கோவிலின் வாயு மூலையில் அஸ்வமேத யாகம் செய்ய மஹாவிஷ்ணு ஸ்ரீ வைகுண்ட நாதனாக வீற்றிருந்த திருக்கோலத்தில் காட்சி கொடுத்து அதே நிலையிலிருந்து இன்றும் பக்தர்கட்கு அருளுவதாக ஐதீஹம்.
பரத்வாஜ முனிவர் தவம் செய்து கொண்டிருக்கும்
போது அவரின் தவத்தைக் கெடுக்க வந்த காந்தர்வக் கன்னியின் மேல் மோகம் கொண்டு, ஒரு ஆண் மகவு உண்டாக அதற்கு மஹாவிஷ்ணுவும் சிவபெருமானும் இக்குழந்தையின் வளர்ச்சி குறித்து தாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்லி, மஹாவிஷ்ணுவும் லட்சுமியும் வேடர் உருக்கொண்டு அக்குழந்தைக்கு
உயிர் கொடுத்து வளர்க்க தொடங்கினார்கள்.
அந்த சமயத்தில் பல்லவ சாம்ராஜ்யத்தின் வம்ச வீழ்ச்சி
ஏற்படவே, தங்கள் குலம் தழைக்க நல்ல வாரிசு வேண்டுமென இந்த எம்பெருமானை வேண்ட, வேடன் வேடத்தில் வந்த எம்பெருமான் இந்த குழந்தையை அவர்களிடம் கொடுத்து மறைந்தார். சிவனும் விஷ்ணும் பொறுப்பு எடுத்து கொண்டு வளர்த்ததால், பரமேஸ்வரன் என்ற பெயர் வந்ததாக சொல்வார்கள். பரமேஸ்வரன் இக்கோவிலுக்கு 18 யானைகளை தானம் கொடுத்ததாகவும் சொல்வதுண்டு.
பல்லவர்களின் வம்ச வழியை அடையாளம் காணும் போது அந்த அரசர்கள் பரத்வாஜ கோத்ரம் என்று குறிப்பிட்டது இந்த சரித்திரத்தை மேலும் உறுதிப் படுத்துகிறது.
ஆழ்வார்கள்
பல்லவ மன்னன் பரமேஸ்வரவர்மன் போர் மேற்கொள்வது போன்ற தனது அரசு சம்பந்தப்பட்ட எல்லா காரியங்களுக்கும், இந்த எம்பெருமானையே குருவாகக் கொண்டு வெற்றி பெற்றான் என்பதை திருமங்கையாழ்வார் தனது பெரிய திருமொழி (2.9.2) பாடலில், தேர்மன்னு தென்னவனை முனையில் செறுவில் திறல் வாட்டிய திண் சிலையோன் பார் மன்னு பல்லவர் கோன் பணிந்துவரும் – பரமேச்சுர விண்ணக ரமதுவே என்று பாடுகிறார்.
திருமங்கையாழ்வார், எல்லா பாடல்களிலும் பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் என்று அந்த மன்னனுக்கும் இந்த திவ்யதேசத்திற்கும் உள்ள தொடர்பை எடுத்து சொல்லி உள்ளார்.
Google Map
திருப் பரமேச்சுர விண்ணகரம் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்
திருப் பரமேச்சுர விண்ணகரம் பற்றி தினம் ஒரு திவ்யதேசம் சொல்வது
பவளவல்லி சமேத பவளவண்ணன் திருவடிகளே போற்றி போற்றி
| திவ்யதேசம் | திருப்பவளவண்ணன் – ப்ரவாளேச வண்ணன் | |||
| மூலவர் | திருப்பவளவண்ணன் | |||
| உத்ஸவர் | ||||
| தாயார் | திருப்பவளவல்லி (தனிக்கோவில் நாச்சியார்) | |||
| திருக்கோலம் | நின்ற | |||
| திசை | மேற்கு | |||
| பாசுரங்கள் | 1 | |||
| மங்களாசாசனம் | திருமங்கையாழ்வார் 1 | |||
| தொலைபேசி | +91 98423 51931 |
தொண்டை நாட்டு திருப்பதிகள் பற்றிய ஒரு சிறு குறிப்பினை இங்கே காணலாம், நன்றி.
கோவில் பற்றி
எம்பெருமானுக்கு நான்கு யுகங்களிலும் நான்கு வெவேறு வர்ணங்கள். க்ரித யுகத்தில் வெண்ணிறம் ; திரேதா யுகத்தில் பவள நிறம் ; துவாபார யுகத்தில் பச்சை நிறம் ; கலியுகத்தில் கருநீலம் நிறம்.
எம்பெருமானின் நிறத்தைக்கொண்டு மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம் இது ஒன்றுதான்.
இந்தப் பவள வண்ணர் கோவிலுக்கு எதிரிலேயே பச்சை வண்ணர் (மரகத வண்ணர்) கோவில் அமைந்துள்ளது இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று எதிர்த்திசையில் அமைந்துள்ளது. இந்த பச்சை வண்ணர் ஆதிசேடன் மீது
அமர்ந்த திருக்கோலத்தில் பரமபத நாதனாக எழுந்தருளியுள்ளார்.
ஸ்தல வரலாறு
பிரம்மனின் யாகத்தைக் கலைக்க சரஸ்வதி கொடிய அரக்கர் கூட்டத்தை அனுப்பிய போது, எம்பெருமான் அஷ்டபுஜகரத்தானாகத் தோன்றி, அந்த அரக்கர்களை எல்லாம் கொன்று குவித்து ரத்தக்களரியாக நின்றாரே அந்த செம்மை சேர்ந்த பவள வண்ணத்தில் இந்த பவளவண்ணர் நின்று காட்சி அளிக்கிறார்.
ஆழ்வார்
பணி வரையின் உச்சியாய் பவள வண்ணா என்று திருநெடுந்தாண்டகத்தில் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்து உள்ளார்.
Google Map
திருப்பவளவண்ணன் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்
தினம் ஒரு திவ்யதேசம், திருப்பவளவண்ணன் பற்றி சொல்வது