016 திருக்கண்ணமங்கை thirukannamangai

அபிஷேகவல்லித்தாயார் ஸமேத பக்தவத்சலப் பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி

திவ்யதேசம்திருக்கண்ணமங்கை , கிருஷ்ண மங்கள க்ஷேத்திரம் ஸப்தாம்ருதக்ஷேத்திரம், ஸப்தபுண்ணியக்ஷேத்திரம், லக்ஷ்மிவனம்
மூலவர்பக்தவத்சலப்பெருமாள், பத்தராவிப்பெருமாள்
உத்ஸவர்பெரும்புறக்கடல்
தாயார்அபிஷேகவல்லி, கண்ணமங்கை நாயகி
திருக்கோலம்நின்ற
திசைகிழக்கு
பாசுரங்கள்14
மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 14
தொலைபேசி+91 4366 278 288, +91 98658 34646

கோவில் பற்றி

எம்பெருமானுக்கு மிகப் பெரிய திரு உருவம். மகாலட்சுமி தவம் செய்து பக்தவத்சலப் பெருமாளைக் கைப்பிடித்த தலம். சாபத்தால் துன்புற்ற சந்திரன் இங்கு உள்ள புஷ்கரணியில் நீராடி சாபவிமோசனம் பெற்றான். மஹாலக்ஷ்மி, எம்பெருமானின் திருமண கோலத்தைக் காண தினசரி தேவர்களும், முனிவர்களும் தேனீ வடிவில் இங்கு உள்ளனர்

கோவிலுக்கு வேண்டிய விமானம், மண்டபம், ஆரண்யம், தீர்த்தம், க்ஷேத்திரம், ஆறு, நகரம் ஆகிய ஏழு அம்சங்களும் மரணமில்லா வாழ்வைத் தரும் அமிர்தத்தின் சிறப்பைக் கொண்டதால், ஸப்தாம்ருத க்ஷேத்திரம் என்றும் ஸப்தபுண்ணியக்ஷேத்திரம் என்றும் பெயர்.

லட்சுமி தவம் செய்த ஸ்தலம் ஆகையால், லக்ஷ்மிவனம் என்ற பெயரும் உண்டு.

எம்பெருமான், திருமகளை திருமணம் செய்ய தன்னுடைய திருப்பாற்கடலில் இருந்து புறத்தே வந்ததால், இந்த ஸ்தலம், பெரும்புறக்கடல் என்ற திருநாமம்.

பக்தர்களின் பொருட்டு ஆவி போல் வேகமாக வந்து அருள் பாலிப்பதால் பத்தராவி என்றும், பக்தர்களை விட்டு ஒரு போதும் நீங்காது பக்தர்களின் அருகிலேயே இருப்பதால் பக்தவத்ஸலர் என்றும் இந்த எம்பெருமானுக்குத் திருநாமங்கள். 

திருக்கண்ணமங்கை ஆண்டான் என்று ஒரு ஆச்சாரியார் இந்த ஊர் எம்பெருமானை வழிப்பட்டு தொண்டு புரிந்த வாழ்ந்த தலம் என்பதால் இவ்வூர் அவரது பெயரால் வழங்கப்படுகிறது.

விஷ்ணுவிடம் இருந்த பக்தியினால், தர்மம், தண்ணீராக மாறியது என்றும், அப்படிப்பட்ட தண்ணீரை, சிறந்த பக்தியுடன் விஷ்ணுவின் திருவடிகளை, அவர் திருவிக்ரமனாக உலகு அளந்த போது, பிரம்மன் சுத்தம் செய்து மரியாதை செய்த போது ஒரு துளி நீர் இந்த புஷ்கரணியில் விழுந்தது. சந்திரன் தனக்கு ஏற்பட்ட சாபம் இந்த புண்ணிய தீர்த்ததை பார்த்ததும் தீர்ந்ததால், இது தரிசன புஷ்கரணி என்று பெயர் ஏற்பட்டது.

பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்களில் ஒன்று. (திருக்கண்ணபுரம், திருக்கண்ணமங்கை, திருக்கண்ணங்குடி, திருக்கவித்தலம், என்ற நான்கு சோழதேச திவ்யதேசங்களும், நடுநாட்டில் உள்ள திருக்கோவிலூரும் சேர்ந்து பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்கள் என்று கூறப்படும்).

கிருஷ்ணாரண்யம் பகுதியில் இதுவும் ஒன்று. ஒரு இரவு இந்த க்ஷேத்திரத்தில் இருந்தாலும் மோக்ஷம் கிடைக்கும் என்று ஐதீகம். இங்குள்ள அருமையான சிற்பங்களில், வைகுண்ட நாதன் சிற்பமும், கருடன் மேல் எழுந்தருளியிருக்கும் மஹாவிஷ்ணுவின் சிற்பமும் மிக அழகானவை.

சிவபெருமான் நான்கு வடிவங்கள் எடுத்துக்கொண்டு, நான்கு திசைகளிலும் இந்த ஊரை காத்து வருகிறார் என்று சொல்வர்.

இங்குள்ள பெருமாள் சன்னதியில் வெளிப்புறச் சுவரில் அஞ்சலி செய்யும் கரங்களுடன் புத்தர் பிரான் சிலை உள்ளது.

ஸ்தலபுராணம்

திருமால் பாற்கடலைக் கடைந்த போது சந்திரன், கற்பகத் தரு, காமதேனு என்று ஒவ்வொன்றாகத் தோன்றி இறுதியில் மகாலெட்சுமி தோன்றினாள். பாற்கடல் கடைந்த தோற்றத்துடன் இருந்த எம்பெருமானை சுற்றி இருந்த கோடானகோடி தேவர்களைக் கண்டு, மிகவும் நாண முற்ற திருமகள், இத்தலத்திற்கு வந்து எம்பெருமாளைக்
குறித்து தவம் இருக்கலானாள். திருமகளின் தவம் பற்றி அறிந்த மஹாவிஷ்ணு அவளை ஏற்றுக் கொள்ள நினைத்து தனது மெய்க்காவலரான விஷ்வக்சேனரிடம் (சேனை முதலியார்) முகூர்த்த நாள் முடிவு செய்து கொடுத்தனுப்ப, விஷ்வக்சேனர் அதைக் கொணர்ந்து பிராட்டியிடம் சேர்ப்பித்தார். அதனால் இங்குள்ள விஷ்வக்சேனருக்கு இரண்டே கரங்கள் மட்டும், மற்ற விஷ்ணு கோவில்களில், விஷ்வக்சேனருக்கு நான்கு கரங்கள். பிறகு முப்பத்து முக்கோடி தேவர்கள் காண எம்பெருமான் திருமகளை மணம் புரிந்து கொண்டார். 

தேன்கூடு

இன்றும் தாயார் சந்நிதியில் ஒரு பெரிய தேன்கூடு போன்ற அமைப்பு உள்ளது. அதற்கு தினமும் பூஜை நடக்கிறது. இந்த தேன்கூட்டில் முப்பத்து முக்கோடி தேவர்கள் தேனீக்களாக இருப்பதாக ஐதீகம். இங்கு நடந்த மஹாலக்ஷ்மியின் திருமணத்தைக் காண தேவர்கள் கூட்டம் கூட்டமாக வந்ததோடு, எப்போதும் இத்திருக்கோலத்தைக் கண்டு கொண்டே இருக்க வேண்டும் என்பதால் தேனிக்களாக உருவெடுத்து அதன் மூலம் தினமும் அவர்களை கண்டு மகிழ்கிறார்கள்.

ஆழ்வார் ஆச்சாரியார்

12 ஆழ்வார்கள் பாடிய பாசுரங்களை நாலாயிர திவ்ய பிரபந்தமாக தொகுத்த நாதமுனிகளின் சீடரான திருக்கண்ணமங்கை ஆண்டான் என்று ஒரு ஆச்சாரியார் இந்த ஸ்தலத்தில் இருந்து மோக்ஷம் அடைந்தார்.

திருமங்கையாழ்வார் ஒரு பாடலில், “வெண் சங்கம் ஒன்று ஏந்திய கண்ண, நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் தானே” என்று சொல்லி இருக்கிறார். இதன் பொருள், “எம்பெருமானே! உனக்கும் இந்த பாடல்களை கற்க வேண்டும் என்று ஆசை உண்டானால், எனக்கு சிஷ்யனாயிருந்து கற்று கொள்ளலாம் ” என்பதாகும்.

இத்திருமொழியின் இனிமையையும் சீரிய பொருளையும் கண்டு எம்பெருமானும் சீடனாக இருந்து கற்றுக்கொண்டதை, நம்பிள்ளை, பெரியவாச்சான் பிள்ளை குரு சிஷ்ய உறவு மூலம் தெரிந்து கொள்ளலாம். இத்திருமொழியின் (பெரிய திருமொழி பிரபந்தம்) சீரிய சொல்இன்பமும் பொருள்இன்பமும், எம்பெருமான்கூட, ஆழ்வாரை வணங்கச் செய்யும் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். நம்பிள்ளை என்ற ஆச்சாரியார், திருமங்கை ஆழ்வார் போல், கார்த்திகை மாதம் கார்த்திகை நக்ஷத்திரத்தில் அவதரித்தவர். அவருடைய சீடராக இருந்த பெரியவாச்சான் பிள்ளை, பகவான் கிருஷ்ணனைப் போல் ஆவணி, ரோஹிணியில் அவதரித்தவர்.   பெரியவாச்சான் பிள்ளை எல்லா திவ்யப்ரபந்தங்களின் அர்த்தங்களையும் கற்றுக்கொண்டு வியாக்யானச் சக்ரவர்த்தி என்று பெருமையுடனும் மரியாதையுடனும் அழைக்கப்படுகிறார்.

இங்கே குருவான நம்பிள்ளையின் வாழிதிருநாமத்தில்  கார்த்திகையில் கார்த்திகை உதித்த கலிகன்றி வாழியே என்று சொல்வதில் உள்ள, கலிகன்றி என்பது திருமங்கையாழ்வாரின் திருநாமமே ஆகும்.

Google Map

திருக்கண்ணமங்கை பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

தினம் ஒரு திவ்யதேசம் திருக்கண்ணமங்கை பற்றி சொல்வது

015 திருச்சேறை Thirucherai

சாரநாயகித்தாயார் ஸமேத சாரநாதப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி

திவ்யதேசம்திருச்சேறை / பஞ்சஸார க்ஷேத்திரம்
மூலவர்ஸாரநாதன்
உத்ஸவர்மாமதலைப்பிரான்
தாயார்ஸாரநாயகி /ஸார நாச்சியார் / பஞ்ச லக்ஷ்மி
திருக்கோலம்நின்ற
திசைகிழக்கு
பாசுரங்கள்12
மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 12
தொலைபேசி+ 91 435 246 8078, +91 435 245 8001,. +91 94441 04374

கோவில் பற்றி

சாரநாதன் என்ற எம்பெருமான், சாரநாச்சியார் என்ற தாயார், சார புஷ்க்ரணி, சாரவிமானம் மற்றும் சார க்ஷேத்திரம் என்ற ஐந்தும் சேர்ந்து பஞ்ச சார க்ஷேத்திரம் என்று ஆயிற்று.

ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி, மஹாலக்ஷ்மி, சார நாச்சியார் என்று ஐந்து தேவிகளுடன் எம்பெருமான் காட்சி அளிக்கிறார். இங்குள்ள மூலவர் தனது வலது கையில் பத்மம் வைத்துள்ள காட்சி பரமபதம் எனப்படும் வைகுண்டத்தில் எம்பெருமான் தனது வலதுகரத்தில் பத்மம் வைத்துள்ளதற்கு ஓப்பானதாகும்.

எம்பெருமான் காவிரி தாய்க்கு ப்ரத்யக்ஷம். குளக் கரையில் காவிரியம்மனுக்கு சன்னதி உள்ளது. காவிரித் தாயின் தவத்தின் பலனாக அவரது மடியில் பெருமாள் குழந்தையாகத் திகழ்ந்ததோடல்லாது, அவருக்கு ஸ்ரீதேவி, பூதேவி, நிளாதேவி, மகாலட்சுமி, சாரநாயகி ஆகிய ஐந்து தேவியருடன் காட்சியளித்தார் 

ராஜகோபாலன் சன்னதி உள்ளது. புஷ்கரணிக்கு வடமேற்கு திக்கில் உள்ள ஆஞ்சநேயரும் அவசியம் தரிசிக்க வேண்டிய சன்னதி.

கும்பகோணத்திற்கு குடத்தின் மூக்கு என்று சொல்வதை ஒட்டி, குடத்திற்கு வாசல், குடவாசல் என்ற அருகில் உள்ள ஊர். இந்த திவ்யதேசம், குடத்தின் சாரம், அதாவது மத்திய பாகம்.

மார்க்கண்டேயர் முக்தியடைந்த தலம் இது

ஸ்தல வரலாறு

பிரளய காலத்தில் இந்த ஊரின் கெட்டியான மண்ணை கொண்டு ஒரு குடம் செய்து அதில் வேதங்களை வைத்து காப்பற்றியதாக வரலாறு. இதை எம்பெருமான் சொல்லும்போது, தனக்கு உகந்த ஊர் என்று இந்த சாரக்ஷேத்திரத்தை சொல்லி உள்ளார். இந்த ஊரின் மண், சாரம் நிறைந்தது, அதனால் எம்பெருமான் சாரநாதன், ஸ்தலமும் திருச்சார ஸ்தலம், அது மருவி திருச்சேறை ஆயிற்று.

காவிரித்தாய் தவமிருந்த வரலாறு

ஒரு காலத்தில் விந்திய மலையின் அடிவாரத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி, சிந்து, காவேரி, கோதாவரி போன்ற 7 நதிகளும் கன்னிகைகளாக மாறி விளையாடிக் கொண்டிருக்கையில் யார் பெரியர் என்ற விவாதம் ஏற்பட்டது. இதில் மற்ற நதிகள் எல்லாம் விலகிக்கொள்ள கங்கையும் காவிரியும் தாமே நதிகளுள் பெரியவர்கள் என்று வாதிட்டு முடிவில் பிரம்மனிடமே விடை தேடி சென்றனர்.

விஷ்ணுவிடம் இருந்த பக்தியினால், தர்மம், தண்ணீராக மாறியது என்றும், அப்படிப்பட்ட தண்ணீரை, சிறந்த பக்தியுடன் விஷ்ணுவின் திருவடிகளை, அவர் திருவிக்ரமனாக உலகு அளந்த போது, தான் சுத்தம் செய்து மரியாதை செய்ததாகவும் பிரம்மன் கூறுகிறார். எனவே கங்கையே புனிதமானவள், உயர்வானவள் என்று கூறினார்.

இதைக் கேட்டு மிகவும் வருத்தமுற்ற காவேரி நான் கங்கையினும் பெருமைபெற்றவள் என்ற பெயரை அடைய என்ன செய்யவேண்டும் என்று கேட்க, ஸாரபுஷ்கரிணியில் உள்ள அரச மரத்தடியில் திருமாலைக் குறித்து கடுந்தவஞ் செய்யுமாறு கூறினார். அவ்வண்ணமே கடுந்தவஞ்செய்ய, மஹாவிஷ்ணு ஒரு தை மாச பூச நட்சத்திரத்தன்று சிறு குழந்தையாய்த் தோன்றித் தவழ்ந்து வர, அந்த பிரகாசத்தைக் கண்ட காவிரி இது எம்பெருமானே என்று தீர்மானித்து வணங்கினாள்.

உடனே எம்பெருமான் தனது மழலை வேடத்தை மறைத்து கருடவாகனத்தில் ஸ்ரீதேவி, பூமாதேவி, நீளா தேவி, மகாலெட்சுமி, ஸாரநாயகி என்னும் 5 தேவிகளுடன் சங்கு சக்ரத்துடன் காட்சியளித்தார். இக்காட்சியைக் கண்டு பேரானந்தம் கொண்ட காவேரி இதே கோலத்தில் இங்கு காட்சி தரவேண்டுமென்றும்,     கங்கையினும் மேன்மையைத் தனக்கு தரவேண்டுமெனவும் வேண்டினாள்.

அவ்விதமே அருளிய எம்பெருமான், தான் இராமாயண காலத்தின் முடிவில் காவிரியிடத்தில் தங்குவேன் என்று கூறினார். இராமாவதாரம் முடிந்து, விபீஷணன் எம்பெருமானை இலங்கைக்கு கொண்டு செல்கையில் அரங்கநாதனாக காவிரியில் பள்ளிகொண்டார். அன்று முதல் கங்கையில் புனிதமான காவிரி என்று ஆயிற்று.

ஆழ்வார்கள்

எம்பெருமான் குழந்தையாகத் தவழ்ந்து வந்ததால் “மாமதலையாய்” என்று இந்த திவ்யதேசத்திற்கும், காவிரிக்கும் மேன்மை அளித்ததால் “கங்கையிற் புனிதமாய காவேரி” என்று திருவரங்கம் பாசுரத்திலும் ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்து உள்ளனர்.

திருமங்கையாழ்வார் இந்த திவ்யதேச எம்பெருமானை பற்றி பாடும் போது, இந்த எம்பெருமானின் திருவடிகளை வணங்கும் எல்லா பக்தர்களையும், ஆழ்வார் தன்னுடைய தலையில் தாங்குவதாக கூறி உள்ளார். “செல்வத் தண்சேறை எம்பெருமான் தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலாரே” (பெரிய திருமொழி 7.4.1) என்ற இந்த வரிக்கு விளக்கம் சொல்லும் பெரியவாச்சான் பிள்ளை, “ஒரு வைணவ பக்தர் இந்த ஊரின் வழி செல்லாமல், வயல்களில் கடந்து சென்று கொண்டு இருந்ததை பார்த்தவர், இந்த ஊரின் வழியே சென்று சார நாதனையும் சேவித்து விட்டு செல்லலாமே” என்று சொன்னதற்கு, அந்த வைணவர், ஆழ்வாரின் இந்த பாசுரத்தை சொல்லி, தான் ஆழ்வாரின் திருமுடியில் ஏறி, ஆழ்வாரிடம் அபச்சார பட வேண்டாம் என்பதால் தான் இந்த ஊர் வழியே செல்லவில்லை என்று கூறினாராம். இது ஒரு ரசமான விளக்கமே தவிர வேறு ஒன்றும் இல்லை என்றும் உரையாசிரியர் கூறி உள்ளார்.

Google Map

திருச்சேறைப் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

தினம் ஒரு திவ்யதேசம் திருச்சேறை பற்றி சொல்வது

014 திருநறையூர் Thirunaraiyur

வஞ்சுளவல்லி நாச்சியார் ஸமேத நறையூர் நம்பிபெருமாள் திருவடிகள் போற்றி போற்றி

திவ்யதேசம்திருநறையூர், நாச்சியார்கோவில் , சுகந்தகிரி , சுகந்தவனம்
மூலவர்திருநறையூர் நம்பி, ஸ்ரீனிவாசன், வாசுதேவன்
உத்ஸவர்ஸ்ரீனிவாசன்
தாயார்வஞ்சுளவல்லி , நம்பிக்கை நாச்சியார் (பெருமாள் பக்கத்தில் திருமண கோலத்தில் நின்ற திருக்கோலம் )
திருக்கோலம்நின்ற (தாயாரை மணம் புரிந்து கொள்ளும் நிலையில் )
திசைகிழக்கு
பாசுரங்கள்110
மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 110
தொலைபேசி+91 435 246 7017 ; + 91 94435 97388

கோவில் பற்றி

இந்த ஒரு வைஷ்ணவ கோவில் மட்டும் மணிமாட கோவில் முறையில் கட்டப்பட்டது. கோபுர வாயிலினின்று நோக்கினால் இப்பெருமான் ஒரு மாடத்தின் மேல் பொலிந்து நிற்பது போன்று தெரியும்.இதனை கட்டியவர் சோழ மன்னன் கோச்செங்கட் சோழன், அவன் 63 நாயன்மார்களில் ஒருவர். மூலவர் சன்னிதியை அடைய 21 படிகள் ஏறிச் செல்ல வேண்டும்.

இத்தலம் உள்ள பகுதி கிருஷ்ணாரண்யம் என்று வழங்கப்படுகிறது. திருநறையூர்தான் கிருஷ்ணாரண்யத்தின் துவக்கமாகும். கிருஷ்ணாரண்யம் என்னும் இந்த கிருஷ்ணன் காடு திருநறையூரில் ஆரம்பித்து திருச்சேறை, திருக்கண்ணமங்கை, திருக் கண்ணபுரம் வரை சென்று திருக்கண்ணங்குடியில் முடிகிறது.

நாச்சியார்

மேதாவி ரிஷியின் வளர்ப்பு பெண்ணான வஞ்சுளவல்லி தாயாரை, எம்பெருமான், சங்கர்ஷ்ண, ப்ரத்யும்ன், அநிருத்த, புருஷோத்தம, வாசுதேவ என்ற ஐந்து உருவங்களில் மணந்து கொள்கிறார். அப்போது மேதாவி மகரிஷிக்கு எம்பெருமான், நாச்சியாரே (தாயார்) அனைத்திலும் முதலிடம் பெறுவார் என்று ஒரு வரம் அளித்தார். அதனால் இந்த ஸ்தலம் நாச்சியார்கோயில் என்றே அழைக்கப்படுகிறது. தாயார் கர்ப்பகிரஹத்தில் எம்பெருமானுக்கு சற்று முன் மத்தியில் பிரதானமாக காட்சி அளிப்பார்.

இவ்வூரில் திருவெள்ளறையில் பார்த்தது போல், நாச்சியார்க்கே முதல் ஸ்தானம். அங்கு ஸ்ரீதேவி தாயார், இங்கு நீளாதேவி தாயார் பிரதானம். ஸ்ரீவில்லிபுத்தூரில் பூமிதேவி. ஸ்ரீவில்லிபுத்தூரை நாச்சியார் திருமாளிகை என்றும், திருநறையூரை நாச்சியார் கோவில் என்றும் அழைப்பர்.

நறை என்றால் தமிழில் தேன், மணம் என்னும் இருபொருள்களும் உண்டு. திருநறையூர் என்பதற்கு திருவாகிய இலக்குமி தேவிக்கு தேன்போல் இனிக்கும் இருப்பிடமாயிற்று என்று பொருள் கூறுவார்கள்.

நறையூர் நம்பி

சங்கர்ஷ்ண, ப்ரத்யும்ன், அநிருத்த, புருஷோத்தம, வாசுதேவ என்ற ஐந்து உருவங்களுடன் கர்ப்பகிரகத்தில் இன்றும் திருநறையூர் நம்பி காட்சி கொடுக்கிறார். எம்பெருமானை திருமணக்கோலத்தில் நாள்தோறும் பிரம்மனால் பூஜிக்கப்படும் தலம் என்று புராணங்கள் கூறுகின்றன. இந்த திவ்யதேசத்தில், 108 திவ்யதேசத்து எம்பெருமானின் விக்ரகங்ள் உள்ளன என்றும் அவை எம்பெருமான், ஒரு பக்தனுக்காக அருளியவை என்றும் சொல்கிறார்கள்.

கருடசேவை

எம்பெருமானின் கல் கருட வாகன சேவை மிகவும் சிறப்பு பெற்றது. கல் கருடனுக்கு தனி சன்னதி உள்ளது. கல்லான கருடன் முதலில் சன்னதியில், நான்கு பேர்களாலும், பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அதிக கனத்துடன் முடிவில் 64 பேர்கள் தூக்கவேண்டிய அளவிற்கு கனம் கூடி, மீண்டும் சன்னதிக்கு வரும்போது 4 பேர் அளவுக்கு கனம் குறையுமாம்.

எம்பெருமான் கருட வாகனத்தில் உலா வரும் போது, தாயார் எம்பெருமானுக்கு முன்னால் அன்னபறவை (ஹம்ஸ) வாகனத்தில் எழுந்தருளுவார். பெருமாள் வீற்றிருக்கும் கருடனோ பலமும், அதே சமயம் வேகமாக செல்லும் திறனும் கொண்டவர். எனவே வீதி உலா செல்லும் போது நாச்சியாரின் அன்ன வாகனத்தை முந்திச் செல்லாமல் இருக்க, கருடன் தன்னுடைய எடையை அதிகரிக்கிறாராம். இதனால் பறக்க முடியாத நிலையில் பின் தங்கிச் செல்வதாக ஐதீகம்.

ஆழ்வார்

இந்த எம்பெருமான் தான் திருமங்கையாழ்வாருக்கு ஸமாச்ரயணம் (பஞ்ச சம்ஸ்காராம்) செய்து வைத்தார். திருநறையூர் நம்பி, சங்கு, சக்கரம் இவற்றை மற்ற எம்பெருமான்கள் போல் அல்லாமல் கரம் மாற்றி பிடித்து இருப்பார். திருநறையூர் நம்பியை உற்று நோக்கினால் அவர் சற்றே முன்வந்து பஞ்ச ஸமஸ்காரம் செய்யும் தோற்றத்திலேயே இருப்பது போலத் தோன்றும். இது திருமங்கை ஆழ்வாருக்கு சங்கு சக்கர பொறி ஒற்றியதை சொல்லும்.

நம்பி என்றால் முழுமையானவர், பூர்ணர்; நற் குணங்களில் முழுமையானவர் என்று பொருள். திருக்குறுங்குடி எம்பெருமானுமும், இத்தலத்து எம்பெருமானும் மட்டுமே திருக்குறுங்குடி நம்பி என்றும் திருநறையூர் நம்பி என்றும் அழைக்கப்பட்டு நம்பி என்ற புகழ் பெறுகிறார்கள்.

வைணவ சம்பிரதாயத்தில் நம்பி என்னும் சொல் ஆச்சாரியர்களைக் குறிக்கும். இத்திருப்பெயரை முதலில் மதுரகவியாழ்வார் தமது ஆச்சார்யரான நம்மாழ்வாருக்குச் சூட்டினார். “நண்ணித் தென்குருகூர் நம்பி என்றக்கால் ” என்றார். அவ்விதமே தமக்கு வைணவ லட்சணத்தைப் பொறித்து மந்திர உபதேசம் செய்த இந்த (ஆச்சார்யனை) எம்பெருமானை திருமங்கையாழ்வார் திருநறையூர் நம்பி என்றழைத்தார்.

எம்பெருமான் ஆச்சர்யாராக இருந்த ஸ்தலங்களில் பத்ரிநாத்தும் திருநறையூரும் முக்கியமானவை பரமாத்மா, தானே ஆச்சார்யனாகவும், தானே சிஷ்யனாகவுமிருந்து பத்திரிநாத்தில் எம்பெருமானே திருமந்திரத்தை உலகிற்கு அருளினான் என்று சொல்வர். பரமாத்மாவே ஆசிரியனாகவும், சீடனாகவும் இருந்ததால், பத்திரி எம்பெருமானை
முழுமையான ஆச்சார்ய லட்சணம் பெற்றவன் என்று சொல்ல முடியாது. ஆனால் பரமாத்மாவான நறையூரானோ தாம் முழு லட்சணம் பெற்ற ஆச்சார்யனாய் இருந்து நீலன் என்னும் பக்தனை (ஜீவாத்மாவை) சீடனாகக் கொண்டு பஞ்ச ஸமஸ்காரம் செய்து திருமங்கையாழ்வாராக ஆக்குகிறார்.

திருமங்கையாழ்வார் இந்த பெருமானுக்கு நூறு பாசுரங்களுக்கு மேல் பாடினார். சிறிய திருமடல், பெரிய திருமடல் என்ற இரண்டு பிரபந்தங்களும் இந்த எம்பெருமானுக்கே பாடினார். இவ்விதம் திருமங்கையாழ்வாரிடம் மடல் பெற்றது இத்தலத்திற்குண்டான தனிச் சிறப்பாகும். 108 திவ்யதேசங்களில் இத்தகைய சிறப்பு வேறெந்த தலத்திற்கும் இல்லை.

திருவரங்கம் கோவிலுக்கு மதில் திருப்பணிகள் செய்த பொழுது திருவரங்கன் மகிழ்ந்து ஆழ்வாருக்கு மரியாதைகள் செய்ததாகவும், அப்படியே ஆழ்வாரிடம் இந்த மடல்களை பற்றி சொல்லி, அதே போல் மடல் ஒன்று தனக்கும் இயற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்க,  எம்பெருமான் முன் பணிந்து வாய் புதைத்து நின்று ‘நம்பிக்குத் திருமடலும், தேவரீருக்கு திருமதிலும் அமைந்தது, மதில் இங்கே மடல் அங்கே ” என்று கூறியதாக ஒரு ஸ்வாரசியமான தகவல் ஒன்று உண்டு.

Google Map

திருநறையூர் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

தினம் ஒரு திவ்யதேசம் திருநறையூர் பற்றி சொல்வது

Thanks to friends from whatsapp group

013 திருவிண்ணகர் Thiruvinnagar

பூமிதேவி ஸமேத ஒப்பிலியப்பப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி

திவ்யதேசம்திருவிண்ணகர் / ஒப்பிலியப்பன் கோவில், மார்கண்டேய க்ஷேத்திரம் / ஆகாச நகரி
மூலவர்ஒப்பிலியப்பன் (ஒப்பற்றவன்) ஸ்ரீனிவாசன் / உப்பிலியப்பன்
உத்ஸவர்பொன்னப்பன்
தாயார்பூமி தேவி தாயார்
திருக்கோலம்நின்ற
திசைகிழக்கு
பாசுரங்கள்47
மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 34
நம்மாழ்வார் 11
பேயாழ்வார் 2
தொலைபேசி+91 435 245 3386 ; +91 435 245 3685

கோவில் பற்றி

திருவேங்கடம் செல்ல இயலாதவர்கள் தங்கள் பிரார்த்தனைகளை இங்கேயே செலுத்தலாம். திருவேங்கடமுடையானுக்கு தமையனார் என்று ஐதீகம். எம்பெருமானுக்கு உப்பு இல்லாத பிரசாதம். திருவோண நக்ஷத்திரத்தன்று ச்ரவண தீபம் எடுத்து குறி சொல்வது இந்த ஸ்தலத்தின் சிறப்பு.

மாம் ஏகம் சரணம் வ்ரஜ ‘ என்ற கிருஷ்ண சரம ஸ்லோக பகுதி, எம்பெருமானின் வலது திருக்கரத்தில் வைரங்களால் பதிக்க பட்டு உள்ளது.

இங்குள்ள புஷ்கரணி (இரவு, பகலென்றில்லாமல்) 24 மணி நேரமும் நீராடலாம் என்பதால் அஹோராத்ர தீர்த்தம் என்று ஆயிற்று. வடமொழியில் இத்தலம் வைகுண்டத்திற்குச் சமமானதாகப் பேசப்படுகிறது. எனவே இதனை ஆகாச நகரி என்றே வடநூல்கள்
கூறுகின்றன.

108 திவ்யதேசங்களில், சில ஸ்தலங்களே (6) விண்ணகர் (வைகுந்தம்) என்ற பெயர் பெற்றுள்ளன. அவை :

  • திருவிண்ணகர் (ஒப்பிலியப்பன் கோவில்)
  • நந்திபுர விண்ணகரம் (நாதன் கோவில்)
  • காழிச்சீராம விண்ணகரம் (சீர்காழி த்ரிவிக்ரமப் பெருமாள்)
  • அரிமேய விண்ணகரம் (திருநாங்கூர் திவ்யதேசம், குடமாடு கூத்தன் கோவில்)
  • வைகுண்ட விண்ணகரம் (திருநாங்கூர் திவ்யதேசம், வைகுண்ட நாதர் கோவில்)
  • பரமேச்சுர விண்ணகரம் (பரமபத நாதன், காஞ்சிபுரம்)

தாயார் அவதார ஸ்தலங்களில் இதுவும் ஒன்று. இங்குள்ள தாயார் ஸ்ரீதேவி தாயார் தான், ஆனால் பூமாதேவி என்ற பெயருடன் மண்டியிட்டு வணங்கும் திருமண திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். இங்கு தாயாருக்கு தனிக்கோவில் இல்லை. இங்கு பெருமாள் மட்டும் தனியே புறப்பாடு ஆவதே இல்லை. எப்போதும் பிராட்டியுடன் சேர்ந்தே செல்வார்.

திருவாய்மொழி காலத்திற்கு முன்பே இந்த எம்பெருமானுக்கு ஒப்பிலியப்பன் என்ற திருநாமமா அல்லது ஆழ்வார் பாடலுக்கு பிறகு தான் இந்த திருநாமம் அமைந்ததா என்று ஒரு சுவாரசியமான விவாதம் இன்றும் நடைபெறும், ஏன் என்றால், ஸ்தலபுராணத்தின் படி இவர் உப்பிலியப்பன் (உப்பு இல்லாத அப்பன்). ஆக, இரண்டுவிதமாகவும் பொருந்தும்.

திருவோண தினங்களில் ஒப்பிலியப்பன் கோயில் மூலவர் நில மாலையிலும், உற்சவர் ரத்ன அங்கியிலும், பூமி தேவி நாச்சியார் ரத்ன கொண்டை, மரகத கிளி, ரத்ன ஜடை அலங்காரத்தில் சேவை சாதிப்பார்கள்.
ஐப்பசி சிரவணத்தன்று தொடங்கி திருக்கல்யாண உற்சவமும், பங்குனி சிரவணத்தை ஒட்டி பிரம்மோற்சவமும், இராம நவமி உற்சவமும் இந்த திவ்ய தேசத்தில் சிறப்பாக நடைபெறுகின்றது. பங்குனி பிரம்மோற்சவத்தின் போது ஒப்பிலியப்பன் வெள்ளி கருட சேவை காண்கின்றார். கட்டளை பிரம்மோற்சவம் இத்திவ்ய தேசத்தின் ஒரு சிறப்பு. இன்றும் தாயாரும் பெருமாளும் எழுந்தருளும் போதெல்லாம், தேசிகனும் உடன் எழுந்தருளுவார்

இந்த எம்பெருமான், இராமனாகவும், கண்ணனாகவும் ஒரே நேரத்தில் சேவை சாதிக்கின்றான். ஏக பத்னி விரதனாக, பூமிதேவித் தாயார் மட்டும் இருப்பதால் இராமன் என்றும் மாம் ஏகம் சரணம் வரஜ (என் ஒருவனையே சரணமாகப் பற்று) என்று வலது திருக்கரத்தில் சொல்வதால் கண்ணனாகவும் காட்சி அளிக்கிறார்.

ஸ்தல வரலாறு

ஒரு சமயம், துளசி தேவி (திருத்துழாய் தேவி), மகாவிஷ்ணுவிடம், தன்னைக்கும் ஸ்ரீதேவி தாயாரைப் போல் எப்பொழுதும் அவருடைய மார்பில் இடம் பெரும் பாக்கியம் கிடைக்கவேண்டும் என்று வேண்டுகிறாள். மஹாவிஷ்ணு, ஸ்ரீதேவி நாச்சியார் கடும் தவம் புரிந்து இந்த இடத்தைப் பெற்று உள்ளாள், என்றும் அவள் மீண்டும் பூவுலகு சென்று, காவிரிக்கரையில் பூதேவி என்ற பெயருடன் பிறந்து தன்னை அடையப் போவதாகவும் சொல்கிறார். அந்த நிகழ்வில், அவளுக்கு துணைபுரிய, துளசி செடியை அங்கு செல்ல சொல்கிறார்.

துளசி, அங்கு சென்று, ஸ்ரீதேவி தாயாருக்கு ஆதரவு தரும் வகையில், நிழல் தரும் செடியாகி அதன் அடியில் ஸ்ரீதேவி தாயார் தோன்றுகிறார். மஹாலக்ஷ்மி (ஸ்ரீதேவி) அவதரிப்பதற்கு ஆதாரமாக துளசி இருந்தபடியால் சிறந்த பேற்றினை பெற்றாள். லக்ஷ்மியின் அருளை ஒருவன் கடும் தவத்திற்கு பிறகே அடைய முடியும். ஆனால் துளசியால் திருமாலை வணங்குபவர்கள் அசுவமேத யாகத்திற்கு உண்டான பலனைப் பெறுவார்கள்.மேலும், எப்போதும் திருமால் விரும்பி ஏற்கும் மாலையாக துளசி திகழ்வாள் என்றும் திருமால் அருள் புரிகிறார்.

மிருகண்டு மகரிஷியின் புதல்வரான மார்க்கண்டேயர் திருமகள் தனக்கு மகளாகவும், திருமால் தனக்கு மாப்பிள்ளையாகவும் வரவேண்டும் என்று பேராவல் கொண்டு இருந்தார். இவ்விடத்தில், திருமாலைக் குறித்து தவம் இருக்க, ஸ்ரீதேவி என்னும் மஹாலக்ஷ்மி, சிறு குழந்தையாக துளசி செடியின் கீழ், நிழலில் தோன்றினார். மகரிஷி, திருமகள், இவள் என்று உணர்ந்து எடுத்து அவளுக்கு பூதேவி என்று திருநாமம் இட்டு வளர்த்து வந்தார்.

ஓரூ பங்குனி மாதம் ஏகாதசி திருவோண நாளன்று திருமால், வயதான பிராமணன் வேடம் பூண்டு, மகரிஷியிடம் பெண் கேட்டு வந்தார். மகரிஷி, தன்மகள் சிறியவள் என்றும், அவர் முதியவர் என்றும் சொல்ல, திருமால் விடாமல் அந்த பெண்ணே வேண்டும் என்று கேட்டார். ரிஷி அவள் சிறியவள், உணவில், உப்பு கூட சேர்க்க தெரியாதவள் என்று சொல்லி பார்த்தார்.

எம்பெருமான், அந்த சிறுமி சமைக்கும் உப்புஇல்லாத உணவே தனக்கு சிறப்பு என்று சொல்லி அவளை மணந்து கொள்ளாமல் செல்ல மறுத்தார். மகரிஷி, வந்திருப்பவர் திருமாலே என்று உணர்ந்து கண் திறக்கும் வேளையில் எம்பெருமான் சங்கு சக்கரத்துடன் காட்சி அளித்தார் என்பதும் மஹரிஷி திருமகளை திருமாலுக்கு மணம் செய்து வைத்தார் என்பதும் வரலாறு.

உப்பு இல்லாத உணவே தனக்கு சிறப்பு என்று எம்பெருமான் சொன்னதால், இன்றும் உப்பு இல்லாத நிவேதனமே உப்பிலாத நிவேதனமே சமர்பிக்க படுகிறது. . இதனால் தான் இப்பெருமானுக்கு உப்பிலியப்பன் என்று திருநாமம் அமைந்தது என்பர்.

ஆழ்வார்

நம்மாழ்வார் தான் இருந்த இடத்திலேயே (திருக்குருகூர் திவ்யதேசம்) இருக்க பல திவ்யதேச எம்பெருமான்கள் அவருக்கு காட்சி கொடுக்க ஆழ்வார் பாசுரங்கள் பாடியதாக ஐதீஹம். திருவிண்ணகர எம்பெருமான் தானே மிகவும் உகந்து ஆழ்வாருக்கு ஐந்து திருக்கோலங்களில் காட்சி கொடுத்தார்.அவையாவன. பொன்னப்பன், மணியப்பன், முத்தப்பன், என்னப்பன், திருவிண்ணகரப்பன், இந்த ஐந்து பெயர்களுடன் ஆழ்வார் திருவாய்மொழி (6.3.9) பாசுரம் பாடி உள்ளார்.

என்னப்பன் எனக்காய் இகுளாய் என்னைப் பெற்றவளாய்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என் அப்பனுமாய்
மின்னப் பொன் மதில் சூழ் திருவிண்ணகர் சேர்ந்தவப்பன்
தன்னொப்பார் இல்லப்பன் தந்தனன் தனதாழ் நிழலே

Google Map

திருவிண்ணகர் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

தினம் ஒரு திவ்யதேசம் திருவிண்ணகர் பற்றி சொல்வது

நன்றி whatsapp நண்பர்கள் image
நன்றி whatsapp நண்பர்கள் image

011 திருஆதனூர் Thiruaadhanur

ரங்க நாயகித்தாயார் ஸமேத ஆண்டளக்குமய்யப் பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி

திவ்யதேசம்திருஆதனூர்
மூலவர்ஆண்டளக்கும் ஐயன் / படியளக்கும் பரந்தாமன்
உத்ஸவர் ரங்கநாதர் (அழகிய மணவாளன்)
தாயார்ரங்கநாயகி தாயார் பார்கவி தாயார் கமலவாஸிநி
திருக்கோலம்கிடந்த (புஜங்க சயனம்)
திசைகிழக்கு
பாசுரங்கள்1
மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 1
தொலைபேசி+91 94435 25365

கோவில் பற்றி

இத்தலத்தில் பள்ளி கொண்ட கோலத்தில்  ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன் என எம்பெருமான் புஜங்க சயனத்தில், கிழக்கு நோக்கி திருமுகமண்டலம் கொண்டு காட்சி அளிக்கிறார். கர்ப்பகிரகத்தில் எம்பெருமான், ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன், தமது நாபிக் கமலத்தில் இருந்து பிரம்மா மேல் எழ காட்சி அளிக்கிறார்.

மரக்காலைத் தலைக்கு வைத்து இடதுகையில் எழுத்தாணியும் ஏடும் கொண்டுள்ளதால் எம்பெருமானின் இத்தோற்றம் உலகுக்குப் படியளந்த பெருமாள் ஓய்வாகப் பள்ளிகொண்ட கோலம் என அழைக்கப்படுகிறது.

இக்கோவிலில் காமதேனுவுக்கும் காமதேனுவின் மகள் நந்தினிக்கும் பிருகு மகரிஷி, அக்னி பகவான், திருமங்கையாழ்வார் ஆகியோருக்கும் எம்பெருமான் சந்நிதியில் சிற்பங்கள் உள்ளன.

இத்தலத்தைக் காமதேனு தன் கன்றுடன் வழிபட்டுப் பேறு பெற்றுள்ளது. அக்னி பகவான் இத்தலத்து இறைவனை வணங்கி வழிபட்டுள்ளார்.  இது நவக்கிரக தலத்தில் குரு தலமாகவும் விளங்குகின்றது.

இந்த ஆலயம் அகோபில மடத்தின் மூலம் நிர்வஹிக்கப்படுகிறது. இந்த ஆலயத்தின் அருகே நரசிங்கபுரம் தலத்தில் அகோபில மடத்தின் சார்பான நரசிம்மர் சன்னிதியும், அதன் வளாகத்தில் அமைந்துள்ள ஐந்து ஜீயர்களின் பிருந்தாவனங்களையும் அனுமதி பெற்று தரிசிக்கலாம்.

திருவரங்கம் போல், இங்கும் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளுக்கு இடையே எம்பெருமான் பள்ளிகொண்டு உள்ளான்.

திருமங்கையாழ்வாருக்கு வணிகனாக வந்து காட்சி கொடுத்தது அரங்கன் என்றும் அவன் மரக்கால், எழுத்தாணி, ஓலை இவற்றுடன் ஓடி வந்து புகுந்த இடம் ஆதனூர் என்றும் சொல்வதுண்டு. அவ்வாறு ஓடிவரும்போது இவ்வூருக்கு (ஆதனூருக்கு) அருகில் உள்ள ஓர் ஊரில் ஓலை எடுத்து கணக்கு எழுதியதால் அவ்வூருக்கு ஓலைப்பாடி என்றும் கம்பீரமாக நடந்துவந்த ஊர்க்கு விசயமங்கை எனவும், ஓடிவரும் போது திரும்பிப்பார்த்த ஊர் திரும்பூர் எனவும், திருமங்கையாழ்வார் விரட்டிக் கொண்டு வருகின்றானா இல்லையா என்று மயங்கி நின்ற ஊர் (மாஞ்சுபோனது) மாஞ்சேரி எனவும், மரக்காலுக்குள் கை வைத்த ஊர் வைகாவூர், என்றும் புகுந்தது பூங்குடி என்றும், அமர்ந்தது ஆதனூர் என்றும் கூறுவர். இந்த ஊர்கள் எல்லாம் இன்றும் அதே பெயரில் வழங்கி வருகின்றன. எனவே இந்நிகழ்ச்சியும் (அரங்கனே இங்கு வந்ததால்) திருவரங்கத்திற்கும் ஆதனூருக்கும் உள்ள ஒற்றுமையை புலப் படுத்துகிறது.

ஆழ்வார்

இத்தலத்திற்கெனத் தனிப்பாசுரம் இல்லை. திருமங்கையாழ்வார் பெரிய திருமடலில்

என்னை மனங் கவர்ந்த ஈசனை, – வானவர்தம்       (2780)

முன்னவனை – மூழிக்களத்து விளக்கினை
அன்னவனை ஆதனூர் ஆண்டளக்கும் ஐயனை
பெரிய திருமடல் 126 – 129 (2674)

என ஆண்டளக்கும் ஐயனை திருமங்கையாழ்வார் குறிப்பிடுகிறார். திருமூழிக்களத்து எம்பெருமானும் இப்பெருமானும் ஒருவரே என்பது ஐதீஹம். என்னை மனங்கவர்ந்த என்று சொல்லி நம்மாழ்வார் திருமூழிக்களத்து எம்பெருமானுக்காக எடுத்தாண்ட மூழிக்களத்து வளத்தின் என்பதை இவர் மூழிக்களத்து விளக்கினையென்று மங்களாசாசனம்.

Google Map

திருஆதனூர் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

தினம் ஒரு திவ்யதேசம் திருஆதனூர் பற்றி சொல்வது

010 திருப்புள்ளபூதங்குடி ThiruPullaboothankudi

பொற்றாமறையாள் ஸமேத வல்வில் ராமன் தாயார் திருவடிகள் போற்றி போற்றி

திவ்யதேசம்திருப்புள்ளபூதங்குடி
மூலவர்வல்வில் இராமன், சக்ரவர்த்தித் திருமகன்
உத்ஸவர்வல்வில்ராமன் (நான்கு கரங்களுடன்)
தாயார்ஹேமாம்புஜவல்லி தாயார் / பொற்றாமரையாள்
திருக்கோலம்கிடந்த (புஜங்க சயனம்)
திசைகிழக்கு
பாசுரங்கள்10
மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 10
தொலைபேசி+91 94435 25365

கோவில் பற்றி

பொதுவாக இராமர் நின்ற திருக்கோலத்தில் தான் சேவை சாதிப்பார். இந்த ஸ்தலத்திலும், பாண்டியநாட்டு திவ்யதேசமான திருப்புல்லாணியிலும் சயன (கிடந்த) திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார்.

இங்கே எழுந்தருளி இருக்கும் யோக நரசிம்மருக்கு திருமஞ்சனம் செய்து வேண்டிக்கொண்டால், உத்யோகம் கிடைப்பது, மற்றும் உத்யோக உயர்வு போன்ற பலன்கள் கிடைக்கும் என்று நம்பிக்கை. சோழ தேசத்தில் உள்ள வைணவ தலங்களில் இதுவும் ஒரு நவகிரஹ பரிகார ஸ்தலம். இது புதன் பரிகார ஸ்தலம்

கோவில் அஹோபில மடம் நிர்வாகத்தில் நடைபெறுகிறது. அஹோபில மடம் 19வது பட்டம் ஜீயர் (ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீனிவாச யதீந்த்ர மஹாதேசிகன்) அவர்களுக்கு பிருந்தாவனம் உள்ளது.

ஸ்தல வரலாறு

ஜடாயுவாகிய பறவைக்கு மோக்ஷம் அளித்து ஈமக்கிரியை செய்த நிகழ்வை குறிக்கும் தேசம் ஆனதால் இது திருப்புள்ளபூதன்குடி என்று ஆனது. புள் என்றால் பறவை என்று பொருள். ஈமக்கிரியை செய்யும் போது மனைவி உடன் இருக்கவேண்டும் என்பது மரபு. அப்பொழுது சீதை இல்லாததால், இராமன் மனசார நினைத்தபோது, பூமிபிராட்டி வந்து அதனை நடத்தியதாக ஸ்தலவரலாறு கூறுகிறது. ஸ்ரீராமன் ஜடாயுவிற்கு மோக்ஷம் அளித்தபின் சிரமபரிகாரம் செய்து கொள்ளும் நிலையில் காட்சி அளிக்கும் திருத்தலம். சீதாதேவியை பிரிந்த சமயம் ஆனதால், பக்கத்தில் சீதாதேவி காட்சி அளிக்கவில்லை. பூமிபிராட்டி மட்டுமே அமர்ந்து இருக்கிறார். தனிக் கோவில் நாச்சியார்.

இந்த திவ்யதேசத்தின் ஸ்தல புராணத்தைப்போலவே, தொண்டைநாட்டு திவ்யதேசமான திருப்புட்குழி என்ற திவ்யதேசத்திற்கும் ஜடாயு ஈமக்கிரியை செய்ததாக ஸ்தல புராணம் உள்ளதாக சொல்வார்கள். இது தொண்டை நாட்டில் நடந்ததா, சோழ நாட்டில் நடந்ததா அல்லது மராட்டிய அல்லது கர்நாடக மாநிலங்களில் நடந்ததா என்று விவாதிப்பதைவிட, பல இடங்களில், பலருக்கு எம்பெருமான் காட்சி இவ்வாறாக அளித்திருக்க கூடும் என்று மனதில் கொண்டு அனுபவிக்கலாம்.

திருபுள்ளபூதங்குடி பற்றி தினம் ஒரு திவ்ய தேசம்

ஆழ்வார்

திருமங்கையாழ்வார் 10 பாசுரங்கள் – பெரிய திருமொழி

அறிவது அரியான் அனனைத்துலகும் உடையான் என்னை ஆளுடையான், குறிய மாணி உருவாய கூத்தன் மன்னி அமரும் இடம், நறிய மலர்மேல் சுரும்பு ஆர்க்க எழிலார் மஞ்ஞை நடமாட, பொறிகொள் சிறை வண்டு இசைபாடும் புள்ளம் பூதங் குடிதானே! (1348)

முதலில் திருமங்கையாழ்வார் பெருமாள் என்று அறியாமல், பாடாமல் சென்று விட்டார் என்றும், பிறகு அவனே தன்னை காட்டிக்கொடுத்ததனால், ‘அறிவது அரியான்’ என்று ஆரம்பித்து நம் முயற்சியால் அவனை காண்பது அரிது என்று பாடுகிறார்.

கள்ளக் குறளாய் மாவலியை வஞ்சித்து உலகம் கைப்படுத்து, பொள்ளைக் கரத்த போதகத்தின் துன்பம் தவிர்த்த புனிதனிடம், பள்ளச் செறுவில் கயலுகளப் பழனக் கழனி அதனுள்போய், புள்ளுப் பிள்ளைக்கு இரைதேடும் புள்ளம் பூதங் குடிதானே! (1349)

‘பள்ளச் செறுவில் கயலுகளப்  ‘ என்று சொல்லும்போது, வயல்களில் மீன்கள் அளவற்று உள்ளன என்று சொல்லி பிறகு ‘புள்ளுப் பிள்ளைக்கு இரைதேடும்‘ என்று சொல்வது முரண்பாடாக தோன்றினாலும், உண்மையில், பறவையானது பிள்ளைக்கு தேவையான சிறிய மீன்களை தேடும் என்று பொருள் கொள்ளவேண்டும்.

மேவா அரக்கர் தென்னிலங்கை வேந்தன் வீயச் சரம் துரந்து, மாவாய் பிளந்து மல் அடர்த்து மருதம் சாய்த்த மாலது இடம், காவார் தெங்கின் பழம்வீழக் கயல்கள் பாயக் குருகிரியும், பூவார் கழனி எழில் ஆரும் புள்ளம் பூதங் குடிதானே! (1350)

மீன்கள் துள்ளி குதிப்பதைப் பார்த்த பறவைகள் மருண்டு ஓடுகின்றன.

வெற்பால் மாரி பழுதாக்கி விறல் வாள் அரக்கர் தலைவன் தன், வற்பார் திரள் தோளை ஐ நான்கும் துணித்த வல்வில் இராமனிடம், கற்பார் புரிசை செய்குன்றம் கவினார் கூடம் மாளிகைகள், பொற்பார் மாடம் எழிலாரும்  புள்ளம் பூதங் குடிதானே! (1351)

மலையை தூக்கி மழையை தடுத்த கண்ணனும், இராவணனின் இருபது (5 x 4) தோள்களை அறுத்து ஒழித்த வல்வில்ராமன் இருக்கும் இடம்.

மையார் தடங்கண் கருங்கூந்தல் ஆய்ச்சி மறைய வைத்த தயிர், நெய்யார் பாலோடு அமுது செய்த நேமி அம் கை மாயனிடம், செய்யார் ஆரல் இரை கருதிச் செங்கால் நாரை சென்றணையும், பொய்யா நாவில் மறையாளர் புள்ளம் பூதங் குடிதானே! (1352)

சுதர்சன சக்கரத்தை ஏந்திய கண்ணன் என்னும் மாயன் இங்கு உள்ளான்.

மின்னின் அன்ன நுண்மருங்குல் வேய் ஏய் தடந்தோள் மெல்லியற்கா, மன்னு சினத்த மழவிடைகள் ஏழு அன்று அடர்த்த மாலது இடம், மன்னு முது நீர் அரவிந்த மலர்மேல் வரி வண்டு இசைபாட, புன்னை பொன் எய்து தாது உதிர்க்கும் புள்ளம் பூதங் குடிதானே. (1353)

நப்பின்னைக்காக கண்ணன் ஏழு எருதுகளை வென்றது இந்த பாடலில் சொல்லப் படுகிறது. நப்பின்னை பிராட்டியின் சிறப்பை இந்த பாடலின் விளக்கத்தில் குறிப்பிட்ட “கருமாறி பாய்ந்து அணைய வேண்டும் ‘ என்று சொன்னதை நன்றாக ரசிக்கலாம். இந்த பாடலில் குறிப்பிட்டுள்ள திருத்தல குளத்தில் உள்ள ஒற்றை பனைமரம் போல், திருக்குறுங்குடியில் உள்ள குளத்திலும் ஒற்றைப்பனைமரம் உள்ளதை, மற்றொரு ஆழ்வாரான திருமழிசையாழ்வார் சொல்வதையும் மனதில் கொள்ளலாம்.

குடையா விலங்கல் கொண்டு ஏந்தி மாரி பழுது ஆ நிரை காத்து, சடையான் ஓட அடல்வாணன் தடந்தோள் துணித்த தலைவனிடம், குடியா வண்டு கள்ளுண்ணக் கோல நீலம் மட்டு உக்கும், புடையார் கழனி எழிலாரும் புள்ளம் பூதங் குடிதானே. (1354)

கோவர்தன மலையை கொண்டு பசுக்கூட்டங்களை காத்தவனும், பாணாசுரனின் தோள்களை அரித்து எறிந்தவனான கண்ணனை இங்கு காண்கிறேன்.

கறையார் நெடுவேல் மறமன்னர் வீய விசயன் தேர்கடவி, இறையான் கையில் நிறையாத முண்டம் நிறைத்த வெந்தையிடம், மறையால் மூத்தீ அவை வளர்க்கும் மன்னு புகழால் வண்மையால், பொறையால் மிக்க அந்தணர்வாழ் புள்ளம் பூதங் குடிதானே. (1355)

இந்த பாடலிலும் கண்ணன் வாழும் இடமாகவே ஆழ்வார் காண்கிறார்.

துன்னி மண்ணும் விண்ணாடும் தோன்றாது இருளாய் மூடியநாள், அன்ன மாகி அருமறைகள் அருளிச் செய்த அமலனிடம், மின்னு சோதி நவமணியும் வேயின் முத்தும் சாமரையும், பொன்னும் பொன்னி கொணர்ந்தலைக்கும் புள்ளம் பூதங் குடிதானே, (1356)

மூங்கிலில் வளர்கின்ற நவமணிகளில், முத்தையும், பொன்னையும் அதிகமாக கொண்டு வரும் என்று சொல்லி, அவற்றை சேர்கின்ற காவிரி ஆற்றினையும் சிறப்பிக்கும் பாடல். இந்த கருத்தையே ரங்கராஜஸ்தவம் என்ற நூலில் சொல்வதையும் காணலாம்.

கற்றாமறித்து காளியன் தன் சென்னி நடுங்க நடம் பயின்ற, பொற்றா மரையாள் தன்கேள்வன் புள்ளம் பூதங்குடிதன்மேல், கற்றார் பரவும் மங்கையர்க்கோன் காரார் புயற்கைக் கலிகன்றி, சொல்தான் ஈரைந்து இவை பாடச் சோர நில்லா துயர்தாமே! (1357)

இது பலஸ்ருதி பாடல். இந்த பத்து பாடல்களை பாடினால், இவ்வாத்மா சோர்வு அடையும்படி துன்பங்கள் தங்கியிருக்கமாட்டாது என்று முடிக்கிறார்.

கம்ப ராமாயணத்தில் ஜடாயு

Mr, Swaminathan, one of the experts in both Valmiki and Kamba Ramayanam, has written about Kamba Ramayanam and we are happy to host his daily posts on Kamba Ramayanam. Kamban has written about Jatayu in two subsections, namely, சடாயு காண் படலம், ஜடாயு உயிர் நீத்த படலம் consisting of about 265 poems. He has taken some selective poems from Kamba Ramayanam on Jatayu and we are happy to share the same for you.

Google Map

திருபுள்ளபூதங்குடி பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

புள்ளபூதங்குடி
புள்ளபூதங்குடி
புள்ளபூதங்குடி
புள்ளபூதங்குடி
புள்ளபூதங்குடி
புள்ளபூதங்குடி
புள்ளபூதங்குடி
புள்ளபூதங்குடி
A Friend in the Forest, Jatayu – வனத்தில் ஓர் நண்பன்,  ஜடாயுKamban Suvai 058
Jatayu;s self introduction to Rama – இராமனுக்கு ஜடாயுவின் சுயஅறிமுகம் Kamban Suvai 059
Jatayu accepts Rama’s request – இராமனின் வேண்டுகோளை சடாயு ஏற்றல் Kamban Suvai 060
Jatayu takes on Ravana – சடாயு இராவணனை எதிர்கொள்ளல் Kamban Suvai 061
Jatayu advises Ravana – சடாயு இராவணனுக்கு அறிவுரை கூறல் Kamban Suvai 062
Jatayu’s heroic deed – சடாயுவின் வீரம் Kamban Suvai 063
ராவணனின் வில்லும் வேலும் தோற்றல் – Ravana’s bow and trident failedKamban Suvai 064
The fall of Jatayu சடாயு வீழ்தல் Kamban Suvai 065
சடாயுவை பார்த்த ராமனின் புலம்பல் – Rama’s Lamentations on seeing JatayuKamban Suvai 066
Jatayu’s advices to Rama – இராமனுக்கு சடாயுவின் நல்வார்த்தைகள் Kamban Suvai 067
ராமனின் கோப வார்த்தைகள் – Rama’s furious words Kamban Suvai 068
Jatayu’s calms down Rama – சடாயு ராமனை சாந்தப்படுத்துதல் Kamban Suvai 069
சடாயுவின் தெய்வ முக்தி / Divine Salvation of Jatayu Kamban Suvai 070

Vella neer parandhu paayum

இந்த பதிப்பினை தமிழில் படிக்க இங்கே சொடுக்கவும், நன்றி

As the saying goes “Thirumaalai (the prabandham) ariyaadhaar, Thirumaalaye (Perumalai) ariyaadhaar”, we all need to learn and understand Thirumaalai , sung by Thondaradipodi Azhwaar, to know more and more about Perumal/Emperumaan. In the first three hymns of this Divyaprabandham, Azhwaar enjoyed the experiences, graced by Emperumaan on him and in the subsequent eleven hymns, Azhwaar was preaching us his experiences with Paramathma. When people raised many objections, Azhwaar responded to them to follow Sri Rama, when he mentioned silaiyinaal ilangai setra devane devan aavaan”; and asked them follow Sri Krishna, who is simple and easy to approach, by ‘katrinam meitha kazhalinai panimin; and finally to Aranganathan, by mentioning ‘uybavaruku uyyum vannam Thiruvarangam kaatinaan”. Azhwaar continued his preaching by singing the glories of Thiruvarangam in the next three hymns.

As people still did not follow Azhwaar’s preachings, he decided to leave them and started to sing about the great help graced by Periyaperumaal to him in the next ten hymns. We discussed the first of these hymns, the fifteenth paasuram, ‘Meiyerke Meiyanaagum, where Azhwaar sang that Emperumaan does everything for those who show truthful devotion to him; He also protects those who do things related to devotion which are not really truthful, but could be classified as truthful; He lets down those who are not even showing such false devotion as mentioned above. Azhwaar concluded that hymn that Perumal uses His beauty to clarify all the doubts. In the next hymn, “soodhanaai kalvanaai“, Azhwaar mentioned that Azhwaar himself was a thief and a fraud, who got entangled in the beauty of the eyes of the other women and fell in deep pits. Azhwaar confirmed that Periyaperumal used His beauty to correct him and diverted all his love and affection towards Him.

In the next hymn, “Virumbi nindru“, Azhwaar stated that previously he did not use his hands to pray, mouth to say prayers or heart to devote himself to Emperumaan. Emperumaan used His soft and sweet beauty to melt the hardened heart of Azhwaar and Azhwaar was so happy that his eyes were filled tears. Initially, Azhwaar was happy about the opportunity he got to have the dharsan of Thiruvarangan, who is alone and without any peer, ruling the entire kingdom and that happiness caused continuous tears. With tears, he could not enjoy the dharsan continuously. So Azhwaar was distressed and frustrated at himself in not making use of the opportunity offered to him and hence called himself a sinner in the eighteenth hymn,ini thirai thivalai“.

In the nineteenth hymn, Kuda thisai mudiyai vaithuAzhwaar sang that Perumal created the four directions and kept the holy parts of His form (Thirumeni) in each direction, so that we can get abode by having dharsan of those holy form. Azhwaar continued that his mind and body started to melt after having the splendid dharsan of Periyaperumal and wondered how others were unaffected; if they were using any potion to sustain such a strong state, Azhwaar asked them to give him a small portion of that.

For that, people responded by asking him to come out of the devotion to Emperumaan. According to Azhwaar, those who know the glories of Emperumaan, would understand that Emperumaan is in Thiruvarangam only for themselves. Only those who are selfish and proud of themselves would get away from Periyaperumal and Azhwaar said that he would not do that. This is what he conveyed in the twentieth hymn, Paayuram Neer Arangam Thannul.

In the previous hymn, Azhwaar said that he could not leave Arangan after having His dharsan. Azhwaar was suggested that he could try limiting his time to enjoy the experience of the beauty of Arangan or he could stay at a corner and think about or offer prayers to Arangan, in stead of having dharsan of Arangan so that he would not suffer. To that, Azhwaar advised his mind/heart that limiting the experience of enjoying the beauty of Arangan, would be like what he lost in the past about the Bhagawath experience, due to his own level of confidence or faith. This was the summary of the hymnPanivinaal manam adhu ondri“.

Azhwaar sang “manithinaal ninaikalaame ?“, to confirm that enjoying the beauty of Periyaperumal could not be contained within a time frame or with a restricted frame of mind by the heart. Then people advised Azhwaar to avoid seeing Him, but only keep speaking about the beauty of Periyaperumal. Azhwaar asked them back as, how to talk about something which could not be conceived by the heart fully. This is the core of hymn 22, “pesitre pesal allaal’. Azhwaar told his heart that we could talk only what vedas and our acharyaas had spoken and we would not be able to speak anything new about the glories of the Emperumaan, who lives in the hearts of those who are faultless. Emperumaan would not be understood or visible to others.

People told Azhwaar that if he could not think or could not speak about Paramathama, he could forget Him. Ahwaar responded by saying how he could forget Him and live, after having the dharsan of Arangan in the beautiful reclining posture. This was seen in the hymn 23, Gangayyil Punidhamaaya.

Now let us go into the next hymn.

Thirumalai 24th hymn

Vella neer parandhu paayum viri pozhil arangam thannul, kallanaar, kidandhavaarum kamala nan mugamum kandum, ullame valaiyai polum, oruvan enru unara maataai, kallame kaadhal seidhu un kallathe kazhikindraaye (Thirumaalai 24)

Thondaradipodi Azhwaar in the previous hymns, expressed his love and affection towards Periyaperumal as,

  • manathinaal ninaikalaame” meaning that He can not be fully conceptulasied by the heart;
  • pesithaan aavadhu undo” meaning we can not talk anything new about Him; and
  • enganam marandhu vaazhgen”, meaning how can Azhwaar live forgetting Him after having had His beautiful dharsan.

Now in return Periyaperumal displayed His affection towards Azhwaar and Azhwaar realised that his love and affection towards Periyaperumal was too lowly compared what He has shown. Azhwaar sang that his love and affection was like the sanity that a mad man would get for a short while and hence called his devotion as deceitful (kallathanam) in this hymn.

Vella neer parandhu paayum viri pozhil Arangam

Azhwaar still remembering “pongu neer parandhu paayum” from the last hymn, continued here as well with “vella neer parandhu paayum” to express the glories of the river Cauvery.

The river Cauvery, right from its origin, has the main objective of reaching Thiruvarangam and hence comes with heavy floods to show its eagerness, flowing everywhere, unstoppable and uncontained. Azhwaar had carefully used present tense, instead of past tense, when he called “paayum” instead of paayndha, to indicate that her eagerness is boundless. And the copious water flowing everywhere also makes the orchards and gardens grow everywhere in Thiruvarangam.

Arangam thannul, Kallanaar

Emperumaan honestly could have been with the undeceitful Nithyasoories but has come all the way to Thiruvarangam to attract the faulty jeevathmaas through His own deceptive means. All the fair and honest methods will work with honest and fair people, whereas it has to be achieved only through deceptive means with faulty people. Azhwaar called Him as Kallanaar or Kalvanaar. Jeevathmaas who enter the temple with many bad thoughts are reformed into devotees by Emperumaan using His charming beauty. So, it is appropriate that Azhwaar call Him Kalvannar. Azhwaar did not call Him a normal thief (kalvan), instead, Kalvannar, to indicate that He is a big theif ! since jeevathmaas believe that the soul belongs to them, though it belongs to Him and if Emperumaan annonce His approaching to them for taking back His property, the soul, no one would be available and so He has come as a Kalvannar, according to Azhwaar.

It may look like that Emperumaan came down to Thiruvarangam becuse of the bountiful water and the abundant gardens as mentioned earlier. But the real objective of His presence in Thiruvarangam is to attract the Jeevathmaas and hence called Him Kalvan.

We can recall Swami Nammazhwaar in Thiruvaaimozhi, referring to the main deity of Thirumaliruncholai, ” senchor kavigaal, uyir kaathu aat seymin”.

Thirupaanazhwaar should have seen some deceptiveness in His holy face when he had the dharsan of Periyaperumal and hence sang “seyya vaai aiyo en sindhai kavarndhadhuve“, in his Amalanaadhi Piraan(7). In other words, He takes the soul of the jeevathmaas who come to Him for some purpose and the commentator said that He steals the soul and put into His pocket ! and turns them as His confidants . Since Emperumaan takes the soul or attaches the soul to Him, from the devotees or jeethavamaas without their knowledge, even though the jeevathmaas believed that the soul belonged to them for a long time, Azhwaar called Him as Kalvannar.

This is explained the first hymn of jitante stotram as Emperumaan takes the soul of the Jeevathmaa by the simple beauty of His form.

  • The Lord, you have beautiful eyes similar to the reddish lotus flower, you won this soul
  • This soul does not belong to me, it is Yours
  • It is You, who have created all the worlds
  • You are the One, who designate what each sense shall perform
  • You are the foremost bestower
  • You are the one, who came into existence, before anyone else
  • Kindly make sure that this soul serves only You and not me

Since time immemorial, the jeevathmas believe that the soul belongs to them, and now when Emperuman takes the soul that rightfully belongs to Him, it looked to jeevathmaas, as a deceptive one, similar to Krishna stealing butter in Ayarpadi in His early days, according to the commentator. Even though the soul belonged to Paramathma and even though the Jeevathmaas continued to believe that the soul belonged to them for a long long time, the commentator says that it is appropriate to call Him as Kalvan.

Even if we submit our souls to Emperumaan by ourselves, it is like how Mahavali gifted the worlds to Him, which always belonged to Emperumaan and hence it is also a deceptive act only.

Kidandhavaarum

It is the overall beauty of the Form of Periyaperumal that enchanted Azhwaar, rather than the beauty of His various parts of His Form (Thirumeni) or the various glories of Periyaperumal, like simplicity. We can also refer to the previous hymn of Thirumalai (23) “kidanthathor kidakkai”

Kamala Nan Mugamum

Here the lotus is compared to the holy face of Emperumaan. The flower and the face may be comparable in terms of blossom, fragrance, coolness and freshness. But the flower can not be equal to the face, as Azhwaar qualified the face as ‘nan mugam‘. The holy face of Emperumaan is completely pure (sudha satvam), fully radiant and always shining, that cannot be compared to a nonliving thing. The lotus blossoming with the sun can not be compared to the blossom of Emperumaan on seeing His devotees, according to Azhwaar. By ‘nanmugam‘, Azhwaar confirms that the holy face of Emperumaan is the most cooling face in all the worlds and all others are harsh.

The same commentator said that Periyazhwaar was praised by Aandal in her Thirupaavai (30) (vanga kadal kadaindha), as “than theriyal pattarpiraan”, meaning that Periyazhwaar was wearing a very cool floral garland. The commentator continued that all others, including Emperumaan were wearing hotter garlands compared to Periyazhwaar. If we consider both the situations together, we may be able to take it as Azhwaars are more saathvikargal than Emperumaan. Emperumaan is the coolest among all, except Azhwaars.

Kandum, ullame valiyai polum

Azhwaar was surprised that his heart was strong and unchanged, even after having the dharsan of Emperumaan with all His beauties, in His reclining posture. Azhwaar’s heart was asking why he sang, in the earlier hymns, like Kanninai kalikumaare (17), pani arumbu uthirumaalo (18) and udal enaku urugumaalo (19) expressing the changes that happened to his body. Azhwaar admitted / responded that after considering the glories of the Emperumaan, whatever he mentioned earlier as the changes that happened to him were very minimal.

Oruvan endru unara maataai

Azhwaar tells his heart that it does not understand that Emperumaan has none, equivalent or superior to Him. Had the heart understood that, it would have started thinking about His glories as they are, which should have triggered appropriate involvement with Him. According to Azhwaar, the heart is harder, mainly because it did not generate such an involvement.

Kallame Kathal Seithu

Azhwaar sang that we behave in a very deceitful manner regarding Bhagawadh matters, the same deceitful manner we behave in the worldly matters, similar to what he sang earlier Kanninai kalikumaare (17), pani arumbu udhirumaalo (18) and udal enaku urugumaalo (19).

Un kallathe kazhikindraaye

Azhwwar further said to heart that the regular and continued deceitful ways we have practised for many years and many births for the worldly matters had resulted in Azhwaar showing a deceitful devotion very well, even in Bhagawadh matters. Azhwaar said to his heart that he did not show true love and devotion and particularly he did not show the appropriate, true love and devotion in this bhagawadh matters.

As we know that this hymn is part of the subsection, where Azhwaar was mentioning the list of favours that were extended to him by Emperumaan. Here Azhwaar said that Emperumaan was preparing Azhwaar for the total surrender to Him, as one of the important qualifications for the total surrender is to realise that we do not have anything to offer to Him. In this hymn, Azhwaar said that even after having the dharsan of Emperumaan, his heart was very strong and was showing falsely devotion to Emperumaan. This made Azhwaar to admit that he did not have any of the requirements for the total surrender.

In a similar way, Periyazhwaar in his Periyazhwaar Thirumozhi (5.2.8), mentioned “edhangal aayina ellaam iranga viduvithu ennule, Peethaga aadai Piraanaar Pirama Guruvaagi vandhu, podhil kamala vann nenjam pugundhum en chenni thidaril paadha illaichinai vaaithaar pandandru pattinam kaappe”, meaning that Emperumaan got entered into Azhwaar, removing all the sins that were in the heart of Periyazhwaar. Emperumaan also did a favour by placing His holy feet on Azhwaar’s head.

With this, Azhwaar had completed the section, namely the favours done to him by Periyaperumal. Next section is where Azhwaar in the coming hymns 25 to 30, felt that he did not have any qualification to start any of the practices to attain abode (Paramapadham), the place where he could get eternal happiness.

Thank you very much and let us try to catch up again in our next weblog.

009 திருக்கவித்தலம் ThiruKavithalam

ரமாமணிவல்லித்தாயார் ஸமேதஜேந்திரவரதப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி

திவ்யதேசம் திருக்கவித்தலம் / கபிஸ்தலம் / கிருஷ்ணாரண்ய க்ஷேத்திரம்
மூலவர் கஜேந்திர வரதன் (புஜங்க சயனம்) / ஆதிமூல பெருமாள் / (ஆற்றங்கரை கிடக்கும்) கண்ணன்
உத்ஸவர் கஜேந்திர வரதன்
தாயார் ரமாமணிவல்லி / பொற்றாமரையாள் / செண்பகவல்லி
திருக்கோலம் கிடந்த
திசை கிழக்கு
பாசுரங்கள் 1
மங்களாசாசனம் திருமழிசையாழ்வார்
தொலைபேசி +91 4374 223434

கோவில் பற்றி

ஆடி மாத பௌர்ணமி அன்று இங்கு நடக்கும் கஜேந்திர மோக்ஷம் ஒரு சிறப்பு.

பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்களில் ஒன்று. (திருக்கண்ணபுரம், திருக்கண்ணமங்கை, திருக்கண்ணங்குடி, திருக்கவித்தலம், என்ற நான்கு சோழதேச திவ்யதேசங்களும், நடுநாட்டில் உள்ள திருக்கோவிலூரும் சேர்ந்து பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்கள் என்று கூறப்படும்).

ஆஞ்சநேயர் இந்த தலத்தில் வழிபட்டதாக வரலாறு. கபி என்றால், குரங்கு என்று ஒரு அர்த்தம் உள்ளது. அதனால் இந்த ஊர் கபி ஸ்தலம் என்று ஆனது.

ஸ்தல வரலாறு

ஆதிமூலமே என்று கஜேந்திரன் என்ற யானை அழைத்தபோது, அதற்கு அபயம் அளித்த பெருமாள், கஜேந்திர வரதன்.

 இந்திராஜு ம்னன் என்னும் மன்னன் மிகச் சிறந்த
விஷ்ணு பக்தனாக இருந்தான். விஷ்ணு பக்தியில் ஈடுபட்டு அவன் பூஜையில் இருக்கும்போது இவ்வுலகம்
மறந்த நிலையில் இருப்பான்.  இவ்விதம் பக்தியில் ஈடுபட்டிருந்த ஒரு நாள் துர்வாச முனிவர் அவனைக் காண வந்தார். இந்திராஜு ம்னன் தனது பக்திக் குடிலை விட்டு வெளிவராததால், துர்வாசர் இறுதியில் இந்திராஜும்னன் மீது மிகவும் சினங்கொண்ட முனிவர் அவனுக்கு விலங்குகளிலேயே மதம் பிடித்த யானையாக பிறக்க சாபமிட்டார். நிலையுணர்ந்த மன்னன் தன் தவறினை உணர்ந்து முனிவரிடம் சாபவிமோசனம் வேண்டி நின்றான். சினந்தணிந்த முனிவர் நீ யானையாக இருந்தாலும் திருமால் மீது பக்திகொண்ட கஜேந்திரனாகத் திகழ்வாய். ஒரு முதலை உன் காலை பிடிக்க நீ மஹாவிஷ்ணுவை கூவி அழைக்க உனக்கு மோட்சம் கிடைக்கும் என்றார்.

கூஹு என்னும் அரக்கன் ஒருவன் ஒரு நாள், அகத்தியர் தண்ணீரில் மூழ்கிக் குளித்துக் கொண்டிருக்கும் போது அவரின் காலை பிடித்து இழுத்தான். சினமுற்ற அகத்தியர் அவனை ஒரு முதலையாக பிறக்க சாபம் இட்டார். அவனும் விமோசனம் வேண்ட நீ கஜேந்திரன்
என்னும் யானையின் காலை பிடித்து இழுக்கும் போது திருமாலின் சக்ராயுதம் பட்டு சாபவிமோசனம் அடைவதாக கூறினார்.

கபிஸ்தலத்தில் உள்ள கோவிலின் முன்பு (கிழக்கு திசையில்) அமைந்துள்ள கபில தீர்த்தம் என்னும் குளத்தில் இது நடந்தாக நம்பிக்கை.

ஆழ்வார்

ஆழ்வாரால், ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன் என்று மங்களாசாசனம் செய்யப்பெற்றார்.

Google Map

திருக்கபிஸ்தலம் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

தினம் ஒரு திவ்யதேசம் திருக்கபிஸ்தலம் பற்றி சொல்வது

008 திருக்கூடலூர் (ஆடுதுறை) Thirukoodaloor

பத்மாசானவல்லித் தாயார் ஸமேத ஜகத்ரட்சகப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி

திவ்யதேசம்திருக்கூடலூர், ஆடுதுறை, சங்கம க்ஷேத்திரம்
மூலவர்ஜெகத்ரக்ஷகன், வையம்காத்த பெருமாள், உய்யவந்தார், அம்பரீஷவரதர்
உத்ஸவர்ஜெகத்ரக்ஷகன்
தாயார்பத்மாஸனி தாயார், புஷ்பவல்லி தாயார்
திருக்கோலம்நின்ற
திசைகிழக்கு
பாசுரங்கள்10
மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 10
தொலைபேசி+91 93443 03803; 93452 67501

ஸ்தல வரலாறு

 திருமால் வராஹ அவதாரமெடுத்துப் பூமிக்குள் புகுந்தது இந்த இடம் தான் என்று புராணங்கள் பேசுகின்றன. இதனைத் திருமங்கைஆழ்வாரின் பாசுரத்தில் நாம் காணலாம். வராஹம் பூமியை இங்கே உள்புகுந்து ஸ்ரீமுஷ்ணத்தில் வெளியே எழுந்து ஸ்ரீதேவி தாயாரோடு அங்கு காட்சி அளிக்கிறார்.

அம்பரிஷன் என்னும் ஒரு மன்னன் மிகச்சிறந்த திருமால்
பக்தன். அவன் ஏகாதசி விரதங்களைக் கடைப்பிடித்து சிறந்தவனாக விளங்கினான். ஒருமுறை துருவாச முனிவர் வருகை புரிந்தார். துருவாசர் வந்திருப்பதையும் பொருட்படுத்தாது தனது விரதத்திலேயே அம்பரிஷி மூழ்கியிருந்தார். தன்னைச் சற்றும் மதிக்காத நிலையைக் கண்ட துர்வாசர் அம்பரிஷிக்கு சாபம் கொடுக்க அம்பரிஷி மகாவிஷ்ணுவை துதித்தார். மஹா விஷ்ணு துர்வாசர் மீது தனது சக்ராயுதத்தை ஏவினார்.
சக்ராயுதத்தை எதிர்த்து நிற்க முடியாத துர்வாசர் சக்ராயுதத்தை சரண் அடைந்து தன்னைக் காப்பாற்றுமாறு வேண்ட சக்ராயுதத்தை திருப்பிப் பெற்ற மஹாவிஷ்ணு துர்வாசரை மன்னித்தது
இத்தலத்தில்தான்.

புண்ணிய நதிகள் எல்லாம் நீராடி தான் பாவக்கறை மிகுந்து போயிருப்பதைப் கண்டு தனது பாவங்களை இந்த திருத்தல எம்பெருமானிடம் தவமிருந்து காவிரி
போக்கிக் கொண்டாள் என்பது ஐதீகம்.

இங்கே தேவர்கள், நந்தக முனிவரோடு சேர்ந்து வந்து எம்பெருமானை சேவித்ததால், கூடி வந்த ஊர், கூடலூர் ஆயிற்று. காவிரி இந்த ஸ்தலம் வந்து ஒளியை மீண்டும் பெற்ற ஊர் என்று சொல்வதுண்டு. காவிரி வெள்ளத்தில் இந்த ஊர் மண்மேடு ஆகிவிட்டது. ராணி மங்கம்மாளின் கனவில் தோன்றி கோவிலை புதுப்பிக்க சொன்னதால், அந்த அரசி புதுப்பித்த கோவில் இது.

கோவில் பற்றி

ஆடுதுறை திருவையாறிலிருந்து கும்பகோணம் செல்லும் பாதையில் உள்ள ஒரு சிறிய கிராமம். 

அனுமன், ஸ்ரீராமருக்கே மக்கள் இங்கு வழிபடுகிறார்கள் என்று தாமும் அவர்களோடு கலந்து ஆனந்தக் கூத்தாடி மயங்கி விழ, எம்பெருமான் ஆஞ்சநேயருக்கு காட்சி கொடுத்தாராம். இக்கோவிலின் முன் கூத்தாடும் பாவனையில் ஆஞ்ச நேயருக்கு இன்றும் ஒரு சிறிய கோவில் உள்ளது.

தாயார் தெற்கு நோக்கி வீற்றிருந்த திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார்.

கும்பகோணத்தை சுற்றி உள்ள சில விஷ்ணு கோவில்களை நவகிரஹ பரிகார க்ஷேத்திரங்களாக கொள்கிறார்கள். இந்த ஸ்தலம் கேது பரிகார ஸ்தலமாக கொள்கிறார்கள்.

ராணி மங்கம்மாளின் சிலை வடிவத்தில் ஒரு தூணில் உள்ளது.

ஆழ்வார்

திருமால் வராஹ அவதாரமெடுத்துப் பூமிக்குள் புகுந்தது இந்த இடம் தான் என்று புராணங்கள் பேசுகின்றன. இதனைத் திருமங்கைஆழ்வாரின் பாசுரத்தில் நாம் காணலாம்.

Google Map

திருக்கூடலூர் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

ஆடுதுறை / திருக்கூடலூர்

தினம் ஒரு திவ்யதேசம் திருகூடலூர் பற்றி சொல்வது

007 திருக்கண்டியூர் / Thirukandiyur

கமலவல்லித் தாயார் ஸமேத ஹரசாபவிமோசனப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி

திவ்யதேசம்திருக்கண்டியூர் / த்ரிமூர்த்தி க்ஷேத்திரம் / பஞ்சகமல ஷேத்ரம்
மூலவர்ஹரசாபவிமோசன பெருமாள்
உத்ஸவர்கமலநாதன்
தாயார்கமலவல்லி தாயார்
திருக்கோலம்நின்ற
திசைகிழக்கு
பாசுரங்கள்1
மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 1
தொலைபேசி+91 93446 08150

ஸ்தல வரலாறு

சிவனுக்கு (ஹரன் ) சாபம் தீர்த்தத்தால் இந்த ஸ்தல எம்பெருமான், ஹரசாபவிமோசன பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். சிவன், ப்ரஹ்மாவின் ஐந்தாவது தலையை கொய்ததால், பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது, அந்த தோஷம் இங்கு நீங்கியது. சிவனுக்கே தோஷம் போக்கிய திவ்யதேசம் ஆகியதால், எல்லாவிதமான தோஷங்களும் நீங்கும் என்று ஐதீகம்.

கோவில் பற்றி

Whatsapp group நண்பர்களுக்கு நன்றி
Whatsapp group நண்பர்களுக்கு நன்றி

மும்மூர்த்திகளான, சிவா,விஷ்ணு மற்றும் ப்ரஹ்மா ஆகிய மூவரும் இந்த ஊரில் அருள்செய்கின்றனர். பிரம்மாவிற்கு தனி கோவில் கிடையாது என்பதால், சரஸ்வதி சமேதயாராக எழுந்தருளி உள்ளார். சிவனுக்கும், பெருமாளுக்கும் தனி கோவில்கள் 500 மீட்டர் தூரத்தினுள் உள்ளன.

தஞ்சாவூரிலிருந்து திருவையாறு செல்லும் வழியில் வடக்கே சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது.

கமலா ஷேத்ரம், கமலா புஷ்கரணி, கமல விமானம், கமலநாதன், கமலவல்லி நாச்சியார் என ஐந்து கமலங்கள் உள்ளதால், பஞ்ச கமல .க்ஷேத்திரம் என்றாயிற்று.

ஆழ்வார்கள்

திருமங்கை ஆழ்வார், திருகுறுந்தாண்டகம் என்ற பிரபந்தத்தில் “பிண்டியார் மண்டை ஏந்திப் பிறர்மனை திரிந்து உண்ணும், உண்டியான் சாபம் தீர்த்த ஒருவனூர், உலக மேத்தும் கண்டியூர், (திரு)அரங்கம் (திரு)மெய்யம் (திரு)கச்சி, (திருப்) பேர்(நகர்) , (திருக்கடல்)மல்லை என்று” பல திவ்யதேசங்களை சேர்த்து பாடி, சிவனின் சாபத்தை தீர்த்த திருக்கண்டியூர் பெருமாள் பற்றி சொல்கிறார்.

Google Map

திருக்கண்டியூர் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

தினம் ஒரு திவ்யதேசம் திருக்கண்டியூர் பற்றி சொல்வது

நன்றி கண்ணன் பட்டர் திருக்கண்டியூர் (whatsapp)

RSS
Follow by Email