Thirumaalai (35) – Thaavi Andru Ulagamellaam

இந்த பதிவின் தமிழ் பதிவை இங்கே காணலாம், நன்றி.

Thirumalai Till Now

As the saying goes “Thirumaalai (the prabandham) ariyaadhaar, Thirumaalaye (Perumalai) ariyaadhaar”, we all need to learn and understand Thirumaalai , sung by Thondaradipodi Azhwaar, to know more and more about Perumal/Emperumaan. .

Azhwaar’s Experience and Preaching

In the first three hymns (1-3) of this Divyaprabandham, Azhwaar enjoyed the experiences, graced by Emperumaan on him and in the subsequent eleven hymns, (4-14) Azhwaar was preaching us his experiences with Emperumaan. When people raised objections, Azhwaar responded to them to follow Sri Rama, by  saying silaiyinaal ilangai setra devane devan aavaan”; and asked them to follow Sri Krishna, who is simple and easy to approach, by saying ‘katrinam meytha kazhalinai panimin; and finally asked them to follow Aranganathan, by mentioning ‘uybavarku uyyum vannam Thiruvarangam kaatinaan”. 

Favours from Emperuman to Azhwaar

Azhwar described the great favours he received from Periyaperumal in the next ten hymns, 15 to 24.

  • Emperumaan clarified Azhwaar’s doubts on Paramathma, the most supreme concept among the twenty six concepts of our tradition (sampradhayam) in Meyyerke meyyanaagum.
  • Emperumaan entered the heart of Azhwaar in Soodhanaai Kalvanaai, and made Azhwaar’s devotion and affection towards Periyaperumal to swell.
  • Emperumaan melted the hardened heart of Azhwaar and graced Azhwaar with His dharsan and blessings, in spite of Azhwaar’s belief that he was not worth to receive any favours from Periyaperumal, Virumbi ninru.
  • Emperumaan nullified Azhwaar’s long time loss of not seeking Emperumaan’s dharsan and made Azhwaar to worship Him, which made Azhwaar’s eyes to pour out tears of joy, in ini thirai thivalai modha.
  • Emperumaan created the four directions and kept His holy parts of His form in each of these directions so that He can be worshipped to get abode / Moksham in Kuda Thisai mudiyai.
  • Emperumaan made Azhwaar happy by making him realise that His lustrous and effulgent Holy form and parts are only for the happiness of His devotees in Paayum Neer Arangam.
  • Emperumaan made Azhwaar realise, that he missed experiencing Him for a such a long time, mainly because Azhwaar did not surrender to Him completely, which shattered Azhwaar, Panivinal manamadhu onri.
  • Emperumaan made Azhwaar sing that we can simply follow what the Vedas had already said about Him and we need not toil to create anything new to speak about Him in, Pesitre pesal allaal.
  • Emperumaan showed the beauty of His reclining posture to Azhwaar in Thiruvarangam, that made Azhwaar to realise that he would not live without His dharsan, in Gangaiyil punidhamaaya.
  • Emperumaan made Azhwaar realise and sing that he did not have any pre-requisites for total surrender, and that helped Azhwaar to get prepared for total surrender to Him in Vella Neer parandhu paayum.
Naichyaanusandhaanam

After the first three subtopics of Thirumalai, namely, Azhwaar’s experience (1-3), Azhwaar’s preaching based on his experience (4-14), and the favours graced by Him to Azhwaar (15-24), now Azhwaar sings that he did not have any good qualities but only bad qualities in the next 10 hymns (25-34), which is the fourth subsection, known as naichiyaanusandhaanam in our tradition.

Devoid of any good virtue

In Kulithu Moondru Analai (25), Azhwaar mentioned that he did not have any of the qualification that were needed to practice Karma, Gnana or Bakthi yogams (Actions, Knowledge or Devotion) and Azhwaar requested Periyaperumal to bless him with the needed qualifications and all and everything.

In Podhellam Podhu Kondu (26), Azhwaar mentioned that he did not do the normal poojas and singing slokas on Him, which anyone could have done, even if they were not qualified to practice, karma, gnana or bakthi yogams.

In “Kurangugal malaiyai nooka” (27), Azhwaar stated that he did not do any service similar to the ones done by squirrels and monkeys, with good intention during the Rama incarnation.

In Umbaraal ariyalaaha” (28), Azhwaar said that his mind did not think about Paramaatma as his saviour, like the elephant Gajendra, which was saved by Emperumaan. after a crocodile caught its legs.

  • In Kulithu moondru analai (25) Azhwaar, said that he did not do prayers, using all or any of the three actions, thinking through mind, offering flowers by hands and reciting holy chants from mouth, to Emperumaan. In Podhellam Podhu Kondu (26), Azhwaar mentioned that he did not chant prayers. In kurangugal malayai nooka, (27), Azhwaar mentioned that he did not do any service. In Umbaraal ariyalaaha” (28) Azhwaar mentioned that he did not think of Emperumaan.
  • Initially Azhwaar said that he did not use all the three actions together in his prayers, and said he had not done even one of them, in the subsequent hymns.

In Oorlien, kaani illai, (29) Azhwaar said that he did not have any association whatsoever, with any Divyadesams, as He is committed to protect all those who have any association with Divyadesams like chanting of Thirupallandu, or holding any piece of land for doing some service to Him.

Full of all bad qualities

The fourth part of Azhwaar’s Naichyanusandhanam, consists of ten verses 25 to 34, where Azhwaar says that he had no good qualities, in the five hymns from 25 to 29 and from 30 to 34, has all kinds of bad qualities.

In Manathilor thooymai illai (30), Azhwaar declared that he had all the bad qualities and there was no bad quality left in this world, which he did not have, as Emperumaan would have graced Azhwaar with moksham, as long as he did not have any bad qualities, even if AZHWAAR did not have any good quality.

In Thavathulaar thammil allen (31) Azhwaar said that he did not possess any of the means, that the Shastras meant for attaining salvation, like doing yagnas, or donating to others, instead he had wasted the birth, by drowning himself into the worldly pleasures, showing hatred towards everyone, thereby he became undesired even to his own relatives.

In the 32nd song Arthu Vandu Alambum Solai, Azhwaar states that he did not know or understand even a single way to reach Him. Azhwaar also stated about himself as a human being, who was unable to let go of what he liked, and behaved like a stupid, came in front of Emperumaan without knowing the reqiurements to reach Him and that was his stupidity.

In the 33rd hymn, Meiyellaam Poga Vittu, Azhwaar, sang about his lowly qualities and cried that he had nowhere else to go and came in front of Emperumaan, only due to Azhwaar’s desire for the Emperumaan’s mercy.

In the next hymn 34, Ullathey uraiyum Maalai, Azhwaar laughed at himself loudly, when he was trying to cheat Emperuman and his devotees, realised that he could never do that, as He knows everything directly by staying in the heart of everyone, which is the source of all the intelligence and origin of all thoughts. Azhwaar felt ashamed as he had also thought that he had moved away from Emperumaan.

Now let us move on to the next hymn.

Hymn 35 Thaavi Andru Ullagamellaam

Thaavi anru ulagamelaam, thalai vilaakkonda endhaai, seviyen unnai allaal, chikkena Sengan Maale ! Aaviye ! Amudhe ! endhan aaruyir anaiya endhaai ! Paaviyen unnai allaal paaviyen bhaaviyene ! (35)

Realizing that Azhwaar was leaving Him, Emperuman asked why he was leaving. Azhwaar told, with lies he approached Emperumaan, who knows everything and therefore decided that his presence in front of Emperumaan, was a disgrace to Emperumaan, and wanted to go with the ordinary people who did not know anything about Azhwaar, for many generation. Emperuman, in this song, says that He does not see any flaws in his devotees, whereas ordinary people will see all the flaws. Emperumaan said that He considers all the qualities of his devotees and says that it is always appropriate to approach Him. Azhwaar then asked were there any history or evidence for such instances. Emperumaan said as Thrivikarman, He crossed the three worlds with three giant steps, by placing His Holy feet (thiruvadi) on everyone’s heads, blessed them, and showed His limitless simplicity.

As mentioned in the previous verse, this song also reminds us of Nammaazhwaar’s Valavezhu ulagin in the first ten and fifth subsection of Thiruvaimozhi. Though Nammaazhvaar did a lot as mentioned in his paasurams, in the first Ten, from 1st to 4th subsections, Emperumaan did not show mercy on Nammazhwaar. Azhwaar thought that his faults were the reason for this and was trying to leave Emperumaan. In the third verse of the same subsection, Emperumaan showed Nammazhwaar His Trivikrama avathaaram , as “thisai ellaam Thiruvadiyal Thayon“, meaning that He spread His holy feet in all directions to bless one and all. In ““thanpaal manam vaikka thiruththi” (Thiruvaimozhi, 1.5.10), He made Azhwaar to stay with Him without leaving. Emperumaan showed Trivikrama Avataram to keep Nammazhwaar with him, and did the same to Thondaradipodi Azhwaar also, as mentioned in Thirumaalai (35).

Similarly, in the hymn Thiruvaimozhi (7.10.10), Swami Namazhwaar says, “sindhai matronrin thirathadhu allaa thanmai Theva Piraan ariyum, sindhaiyinaal seivathaan ariyaadhana maayangal onrum illai “ meaning that in his mind there is nothing other than the thoughts around Emperumaan and He knows that. Similarly Azhwaar says that whatever is done by the mind, there is nothing which is not known to Him. This is directly comparable to Thondaradipodi Azhwaar’s “vilavara sirithittene“. There, Nammazhwaar said that there is nothing other than Emperumaan in his mind and He alone knows that. Here Thondaradipodi Azhwaar said that his mind was occupied with many other things and there was NOT EVEN A single thought about Emperumaan and He alone knows that.

“Azhwaar praised Emperumaan , as his Lord, as He is the one who crossed all the worlds and placed His Holy feet (thiruvadi) on everyone’s head, when Mahabhali captured all the worlds, and Azhwaar would serve only Him and no other object. Azhwaar also praised Emperumaan with red eyes, Who is always on the side of His devotees, Who is like life to Azhwaar, is like nectar, and is the life of Azhwaar by staying as antharatma. Azhwaar said that he was a sinner and could never think of anyone else except Him”. The above is the direct explanation of the hymn.

Now let us see in more details in the following sections.

Thaavi

If announced in advance, the common people, called samsaris, with their egos for many years, would have refused and ordered not to have His Holy feet (His thiruvadis) on their heads. As told by Swami Nammazhwaar in Thiruvai Mozhi (10.10.2), “Thiruvaanai, nin aanai” meaning that the orders of Emperumaan are the instructions for the devotees indisputably, Emperumaan placed His Holy feet without asking anyone and grew very fast without anyone even knowing so there was not even a chance for anyone to refuse to have His Holy feet on their heads. Thaavi means ‘growing up fast’ so that He could touch everyone’s heads quickly and without anyone getting tired.

Anru

Azhwaar says “Anru”, to mean on that day, as the day, when Mahabhali captured the three worlds and thereby created a question on Emperumaan’s ability to protect His devotees and and when people also did not believe that Emperumaan would protect them.

Ulagamellaam

Emperumaan not only crossed the three worlds that were captured by Mahabhali, but also extended His holy feet the seven worlds including ‘Brahmaloka’, showing that He had grown up to touch all the living beings in every world, without any differences of superior(Vasishtar like) or inferior(chandaalargal). When Emperumaan went to Mahabhali as Vamanan, He requested for the land measured with His dwarfed three feet size. Mahabali agreed to give, considering the short size of Vamanan. However, Emperumaan grew while measuring, that His holy feet reached Satyalokham also, and covering everyone and everything under His holy feet. It shows that the desire of Emperumaan to protect everyone is immeasurable.

Thalaivilak Konda

Sahasra Seersha Purushaha, Sahasraksha : Sahasrapaad, Sa bhoomim, Visvato Vrutvaa, Atya Dishtad Dasaangulam (Purushasukta 1) means Narayana, known as Purusha, Who has innumerable heads, immeasurable eyes, and infinite feet, who surrounds the earth on all sides and extends over it to an infinite distance. So, it means He is all pervading the earth and also the ever-blooming all the upper worlds including Srivaikuntham. Here when Azhwaar says “Thalaivilaak konda’, that Emperumaan crossing all the seven upper worlds, when only crossing three worlds held by Mahabhali, was needed and that shows Emperumaan’s desire to protect one and all

Endhaai

It is worth noting here what Thirumangaiazhwaar, has said in Thirukurundandagam, Song 6, “Amarar Senni Poovinai“, which means the Holy Feet that are carried by the heads of Nityasoories. The reason behind Emperumaan placing His such glorified feet on all samsaaris who are not not interested in that glorified Holy feet , is the inseparable, inextricable relationship between Him and the jeevaathmaas. So Emperumaan touched the heads of every jeevathmaa of the above seven worlds without asking them so that they could all get Moksham. It is generally understood that there are nine types of relationships.

Azhwaar pays his debt of gratitude by calling Emperumaan as Endhaai, meaning My Mother, in stead of calling Him as my father, as this relationship with Emperumaan, which was unknown at That Time, when Emperumaan protected Azhwaar with His Thiruvadi, and it is only because of His efforts at That time, Now he knew the relationship with Him. In the 24th hymn of Thirupaavai “anru ivvulagam alandhaai adi potri, senru angu then Ilangai setraai thiral potri, ponra sagadam udhaithaai pugazh potri, kandru kunilaai erindhaai kazhal potri, kunru kudaiyaai eduthaai gunam potri, venru pagai kedukkum nin kaiyil vel potri, enrenrum un sevagame yethi parai kolvaan Inru yaam vandhom irangelor empaavaai” meaning, that

  • On that day, You measured all the worlds with your Holy feet,
  • went South to Lanka and won the war,
  • kicked the golden chariot,
  • threw away the maddened calf,
  • lifted the hill as an umbrella,
  • have the long sword in Your hand that conquers and destroys enmity

We are forever subservients to You, and for that we have come Today. Even though Aandal mentioned ‘on that day’ only once for the first incident, meant ‘on that day’ for each and every incident mentioned above. She recalled every incident which happened on different days and in different yugas, and came Today in front of Him as they wanted His grace.

It is not only for all these reasons, Azhwaar calls Emperuman as Endhaai, meaning that Emperumaan is His mother. Azhwaar was not knowing these relationships on his earlier days in this life or in his previous lives. Now he understood the relationship with Emperuman, Azhwaar paid gratitude by saying Enthai or my mother. Azhwaar goes on to say that it was because of the touching of his head by His holy feet on that day, Emperumaan protected him and because of this effort, Azhwaar realised his relationship with Emperumaan. It is the same kindness of a mother, who hugs her children and giving them comfort when they sleep, Emperumaan touched everyone’s heads, on that day, treating them as His own children. Hence Azhwaar called Him as endhaai.. Although even today the samsaris are not aware of their relationship with Him, Azhwaar remembered the same happily on their behalf.

Seviyen Unnai Allaal

Azhwaar, now knowing the simplicity of Emperumaan, declares that he would not leave Him and would not hold to another. He further said that if he had to leave Emperumaan, Azhwaar, should be either independent (swathanthran) without any favor from anyone, or dependent on another, ( bhaarathanthriyan) and he was certain that he would not suffer from these two defects.

The first part of Thirumanthiram, insists that we shall not be a slave to anyone and the second part of the Thirumanthiram, insists us not to assume being a master of our own. Azhwaar combined both the parts together “Seviyen Unnai Allal”, says that he will not serve external things as it has become a practice to serve Periyaperumaal.

Chikkena

The above word “chikkena” generally means ‘holding tightly’. Here Azhwaar uses this word “chikkena” to reinstate that whatever he has told earlier is applicable at all times, as long as his athma is alive, and for ever. Here we can recall Swami Nammazhwaar in Thiruvaaimozhi (2.6.1), “unnai pidithen kol chikkeneve”, which is on similar lines. Emperumaan who was worried about losing azhwaar also used the same word ‘çhikkene‘ to re-assure Azhwaar.

In Bhagavad Gita, Krishna says, Sarva dharman parityajya mam ekam charanam vraja, aham t va sarva paapebhyo mokshaishyami ma susa :”, which means, ‘Leaving everything completely to Me alone, the devotee attains Me and I absolve the devotees of all sins”. This is charama sloka in Bhagavad Gita, where Krishna gives assurance to all Jeevathmaa. In this hymn by using the word “chikkene”, Azhwaar is offering Abhayapradana, or giving an assurance, to Emperumaan, a guarantee from the danger of Azhwaar leaving Him.

Senkann Maale

These words do not refer to the natural red eyes of the Emperumaan. When Azhwaar said ‘Chikkena”, it refers to an unique redness appeared on the eyes of Emperumaan. In the previous hymn, (Thirumaalai 34), when Azhwaar mentioned ‘Velgi Poi’, meaning “shamefully”, Emperumaan was worried that Azhwaar might leave Him. But when Azhwaar said, “‘Seviyen Une Allal chikkena’“, in this hymn, Emperumaan’s fear was over and He could not contain His great love for Azhwar, which came through His eyes with bright shining light, that made His eyes Red. Due to His great love for Azhwaar, His eyes were stirred-up and they became big; hence when Azhwaar calls “senkann Maale, as big red eyed Perumaale.

In Kannum Sivandu, Periyavai Vayum Sivandu, (Thiruvaimozhi 8.8.1) Swami Nammazhwaar says that the eyes of Emperumaan are reddish, and this is not to articulate the natural color of His beautiful eyes, but refers to the exuberance after being with Nammazhwaar.

Here two incidents are taken as quotes from Ramayana. In Yuddha Kanta when Vibheeshna leaving Ravana and came in search of Rama, Sugreeva suggested that Vibheeshna should be killed as he was the brother of Ravana, and later when Hanuman requested Rama to allow Vibheeshna to to join them.

First is “Vadhyataamesha dheevrena dandena sasivais saha, ravanasya, nrushamsasya braatha hyesha vibheeshna (Yudtha Kantam, 17.29), in which, Sugreeva told Rama that he and his ministers would punish and kill this Vibheeshna as he was the brother of the cruel Ravana. These words of Sugreeva were taken equivalent to the words of Azhwaar, “velki poi‘ in the previous hymn. On both the occasions the holy heart of Emperumaan was hurt very badly.

Then when Rama heard the opinion of others, Hanuman, the son of Vayu, said that Rama may accept Vibheeshna as our own person (17.67). Atharama: prasannathma sruthva vayusuthasya ha, pratya bhaashata durthasha sruthavanatma nisditham (Yuddha Kantam, 18.1). In this sloka, the author says that the strong Rama’s heart was pleased with the words of Hanuman, which is very much similar to the feelings of Periyaperumaal when Thondaradipodi Azhwaar mentioned the words “Chikkene Sengan Maale”. According to the commentator these words of Hanuman and Thondaradipodi Azhwaar were like giving protection to Sri Rama and Periyaperumal respectively.

Combining Senganmaale and seviyen unnai allaal, we can interpret that as after getting Azhwaar by His side, Emperumaan felt very happy out of His love towards Azhwaar, and His holy face blossomed, and after having had the dharsan of such a blossomed face, Azhwaar wondered if he could go anywhere else.

Aaviye

Azhwaar said where he would go after leaving Emperumaan, who is very much like his life. Azhwaar did not consider prana (life) as a state of air. As Swami Nammazhwaar said in Tiruvaimozhi (7.2.9), “en Thirumagal Ser Marvane ennum ennudaya aaviye ennum”, to mean, that the Mahalakshmi united Sriman Narayanan Himself is his soul.

Amuthey

Azhwar thinks of Emperumaan, not only as his soul, just necessary for life, but also as an elixir for life that protects his very life from death.

Enthan Aaruyir anaiya Enthaai

He says that Emperumaan is his soul. The idea is that without the soul, that is the Emperumaan, he could not live outside with a mere body.

Azhwaar calls Emperumaan as His mother (Enthai), because he thought that Emperumaan was not approachable and wanted to leave Him, but He made sure that Azhwaar did not move away from Him and perish, by demonstratring that He was Swami by keeping Azhwaar with Him.

One of the virtues of Emperumaan, ‘Vatsalyam‘ is to accept His devotees despite their faults and defects. It is like the affection towards the newborn calf, shown by the mother cow, who licks it with desire and affection without disgust, Emperumaan showers His love and affection on his devotees.

Here, Azhwaar says that Emperumaan who demonstrates His virture, Vatsalyam, or compassion towards the devotees, is the red-eyed Lord, ‘Senkanmal’. Azhwaar also says that He is the life for him. Further Azhwaar says that He is like the sweetest elixir, Who is his soul and leads him on the right path like his mother. Azhwaar finally says that he could not go anywhere by leaving Emperumaan, who has such virtues and glories.

Paaviyen Unnai Allaal

Worrying that his words in the previous hymns, namely, ‘Iyane Arangane’ (33) and ‘Ennai Aaludaiya Kove” might be taken as untrue, Azhwaar declared that he would not think of anything else other than Emperumaan, by “‘Paaviyen unnai allaal“, meaning, ‘being a sinner, he will not look at anything other than Him’.

Paaviyen Bhaaviyene

Azhwaar explains that the reason why he wanted to walk away from Emperumaan, who had touched everyone’s head with his Holy Feet, rather than leaving sinful common people, (samsari), was because of his sins. The second ‘Paviyene’ given by Azhwaar, confirms what he said earlier that he would not think of anything but Emperumaan.

Azhwaar used the word ‘pavi’ twice, as in “Paviyen Paviyene” to refer to the high number of sins committed by him. It can also be said that the reason why he wanted to leave Emperuman was because of the amount of sins he had committed, in spite of the fact that Emperumaan who never look at the crimes done by His devotees or Who never hate even those who hate Him.

Out of these two sins, the first sin is that Azhwaar wanted to destroy himself by turning away from Emperumaan. Azhwaar felt that his leaving Emperumaan might even make Emperumaan disappear, resulting in all the jeevathmaas disappear, as Emperumaan is the soul for all jeevathmaas. So Azhwaar felt that his turning away from Emperumaan could result in destroying the whole world, which could be the second sin, the reason for the second “paaviyen”.

With this song, the fourth part, Naichanushantanam, ends with Thondaradippodi Azhwaar saying that he had no good qualities and possessed all bad qualities. The next part will take us to the most important and interesting part of the Thirumalai, blessed by Azhwaar. We can catch up on the experience of the next hymn of Azhwaar in our next weblog. Thanks.

078 திருகாட்கரை / Thirukaatkarai

பத்மபாணி நாச்சியார் ஸமேத காட்கரை அப்பன் திருவடிகள் போற்றி போற்றி

மலை நாட்டு திவ்ய தேசங்கள் பதின்மூன்று :

திருவனந்தபுரம், திருவண்பரிசாரம், திருகாட்கரை, திருமூழிக்களம், திருச்சிறு புலியூர், திருசெங்குன்றூர், திரு நாவாய், திரு வல்லவாழ், திரு வண்வண்டூர், திருவாட்டாறு, திருவித்துவக் கோடு, திருக்கடித்தானம் , திருவாறன் விளை (ஆரம்முளா).

திருக்காட்கரை

கேரளாவில் ஆலவாய் திருச்சூர் இரயில் மார்க்கத்தில் இருஞானக்கொடி புகை வண்டி நிலயத்தில் இருந்தும் அங்காமலி புகை வண்டி நிலையத்தில் இருந்தும், வடக்கே சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. ஆலவாய் போகும் வழியில் . 8 கிலோமீட்டர் சென்று அங்கிருந்து இன்னொரு பேருந்தில் செல்ல வேண்டும். அதிக வசதிகள் இல்லை.  இத்தலம் ஷோரனூர் – எர்ணாகுளம் ரயில் மார்க்கத்தில் உள்ள இடைப்பள்ளி என்னும் புகைவண்டி நிலையத்திலிருந்து கிழக்கே சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

இந்த க்ஷேத்திரத்தை வாமன க்ஷேத்திரம் என்று கூறுவார்கள். இக்கோயில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானது. இந்த எம்பெருமானை வாமன மூர்த்தி என்று சொல்லி வழிபடுவார்கள். இந்த வாமன மூர்த்தி திருக்கோயில் கொண்டுள்ள இடமே திருக்காக்கரா என்றும் திருக்காட்கரை என்றும் வழங்க படுகிறது. திருமால், வாமன அவதாரம் எடுத்து மகாபலிக்கு நற்கதி வழங்கிய திருவோணத் திருநாளை தீபாவளியைப் போல் புத்தாடை அணிந்து, குதூகலமாய் கொண்டாடுகின்றனர். மஹாவிஷ்ணு சங்கு, சக்கர, கதை, பத்ம (தாமரை) ஏந்தி கொண்டு இருக்கின்ற நான்கு திருக்கரங்களோடு மகாபலிக்கு காட்சி கொடுத்த திருக்கோலத்தில் இங்கு எழுந்தருளியுள்ளார்.

அழகிய சுற்றுப்புறங்களுடன் ஒரு பெரிய பகுதியில் சூழப்பட்டுள்ள கோயில் வளாகம், வாமனருக்கு அர்ப்பணிக்கப்பட்ட பிரதான சன்னதியைக் கொண்டுள்ளது. பிரதான சன்னதியின் கருவறையில் விஷ்ணு சிலை உள்ளது. பிராமண அசுர மன்னன் மகாபலியின் மீது கால் வைக்கத் தயாராகும் கடவுள், வாமனன் உருவில் சிலை உள்ளது. பரசுராமர் கோயிலை நிறுவியதாகக் கூறப்படுகிறது. இக்கோயில் திருவிதாங்கூர் நிர்வாகத்தின் கீழ் உள்ளது.

வாமனன் கோவிலின் உப தெய்வங்கள் பகவதி, சாஸ்தா, கோபாலகிருஷ்ணா, நாகா, பிரம்மராக்ஷசா மற்றும் யக்ஷி. பிரம்மராக்ஷஸ் சன்னதி வெளிப்புற வளாகத்தில் அமைந்துள்ளது, ஆலமரக் கடவுள் மற்றும் சர்ப்பம் ஆகியவற்றுடன் காணபடுகிறது. உள் வளாகச் சுவர்களைச் சுற்றிலும் சுட்டுவிளக்கு எனப்படும் ஆயிரக்கணக்கான விளக்குகளின் வரிசை ‘சுற்று விளக்குகள்’ என்று மொழி பெயர்க்கப் பட்டுள்ளது.

கோயிலுடன் தொடர்புடைய இரண்டு குளங்கள் உள்ளன, ஒன்று கருவறையின் வடக்குப் பகுதியில் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள கபிலதீர்த்தம், மேலும் இது அர்ச்சகர்களுக்கு மட்டுமே அணுகக்கூடியது. மற்றைய குளம் கோவில் சுவர்களுக்கு வெளியே வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது, மேலும் ஓணம் கொண்டாட்டங்களின் போது சிலையின் ஆராட்டு சடங்கு குளியல் போது வழக்கமாகப் பயன்படுத்தப்படுகிறது.

2014 இல் புதுப்பிக்கப்பட்ட பிரதான வாமனமூர்த்தி கோயிலுக்குப் பக்கத்தில் ஒரு சிவன் கோயிலும் உள்ளது. இதில் சிவன், விநாயகர், கார்த்திகேயர் மற்றும் துர்க்கை ஆகிய தெய்வங்களின் சிலைகள் உள்ளன. சிவன் கோவிலின் வயது மற்றும் தோற்றம் பற்றி அதிகம் அறியப்படவில்லை, இது சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டது. திருவிழாவின் போது ஓணம் விருந்து நடத்துவதற்கும் வழக்கமாக பயன்படுத்தப் படுகிறது.

ஓணம் பண்டிகை இங்கு சிறப்பாக கொண்டாடப் படுகிறது. சரஸ்வதி பூஜை, நவராத்திரி ஆகியவைகளும் கொண்டாடப் படுகின்றன.

ஒரு வணிகன், இங்கு வாழை தோட்டம், வைத்து இருந்தான். அங்கு ஒவ்வொரு முறையும் குலை தள்ளாமல் அழிந்து போய் கொண்டு இருந்தது. அதனால் அந்த வணிகன், இந்த திருத்தல திவ்ய தேச எம்பெருமானுக்கு பொன்னினால் செய்த ஒரு வாழை குலையை சமர்ப்பித்தார். அதற்கு பின் அவரின் வாழை தோட்டம் நன்றாக உயர்ந்து வளர்ந்து, செழித்து, நேந்திரம் பழம் என்று சிறப்படைந்து, வணிகனின் பிரச்சனை தீர்ந்தது.

ஒரு முறை பொன் வாழைபழம் தொலைந்து ஒரு யோகியை சரியாக விசாரிக்காமல் தண்டனை கொடுத்தாகவும் யோகி அவமானத்தல் சாபம் இட்டு, தற்கொலை செய்து கொண்டதாகவும், பின்பு கர்ப்பகிரகத்தில் அந்த பொன் வாழையை மீட்டதாகவும் சொல்கிறார்கள். அந்த யோகி அந்த ஊரில் திரிந்து மக்களுக்கு தொல்லை கொடுத்தகாவும், பிறகு மக்கள் ஒன்று சேர்ந்து அந்த யோகியிடம் வேண்டி, அவருக்கு ஒரு சன்னதி உருவாக்கி தினமும் நிவேத்தியம் கொடுத்து வருகிறார்கள்.

திருமால் மூவடிமண்வேண்டி ஈரடியால் மண்ணும், விண்ணும் அளந்து மூன்றாவது அடியை மாவலியின் தலையில் வைக்க நினத்த போது, வந்திருப்பது சாட்சாத் மஹாவிஷ்ணுவே என்பதை முன்பே அறிந்திருந்த மாவலி எம்பெருமானைத் துதித்து ஒரு வரம் கேட்டான். அதாவது தான் இந்த நாட்டினை நன்றாக ஆட்சி புரிந்ததாகவும், இந்த மக்களுக்கு நல்லது செய்தவைகளை சொல்லியும், ஆண்டுக்கு ஒரு முறை இந்த ஊறி, உலக மக்களைச் சந்திக்க விரும்புவதாகவும் . அதற்கு அருள்புரிய வேண்டுமெனக் கேட்டான். எம்பெருமான், அப்படி நடந்த அந்த தினத்தை மக்கள் விழாவாக எடுத்துக் கொண்டாடும் நாளில் அவனுக்கு அந்த நிலை உண்டாகுமென்றார். இத்தலத்தில் அந்த திருநாளான ஆவணி மாதம் திருவோணத்தன்று வாமன அவதாரத்தை நினைவு கூர்ந்து மக்கள் விழா எடுக்கின்றனர். இக்கோவிலில் நடைபெறும் மிகப் பெரும் திருவிழாவான இதை ஓணத் திருவிழா என்று அ ழைக்கின்றனர். இந்த தினத்தில் மகாபலியும் திருவிழாவிற்கு வருவதாக ஐதீஹம். கேரள தேசத்தின் மிகப் பெரும் திருவிழா இது ஒன்று தான். இந்தியாவில் வாமன மூர்த்திக்கு அமைந்துள்ள ஓரு சில கோவில்களில் இது சிறப்பான ஒன்று.

காட்கரை அப்பன் கபில முனிவருக்கு நேரடியாக காட்சி கொடுத்தார். கபில முனிவர் விஷ்ணுவின் ஹம்ஸம் என்று கூறப்படுகிறது. தன்னுடைய தாயாருக்கே ஞான தத்துவத்தை விளக்கினார். சமுத்திர ராஜன் அவர் தனது தினசரி தபஸ் செய்ய இடம் கொடுத்தார்.

நம்மாழ்வார் இந்த எம்பெருமானை பற்றி 11 பாடல்கள் பாடி உள்ளார். எம்பெருமான் கிடைக்காத அளவில் ஆழ்வார் நாமும் நம் வான நாடனோடு ஒன்றினோம் என்று எண்ணியதும், இப்போது விட்டால், ஆழ்வாரை இழந்து விடுவோம் என்று எம்பெருமான், ஹனுமான் சீதா பிராட்டியை இலங்கையில் சென்று தரிசித்த போது, எப்படி 12 ஆண்டுகள் ஸ்ரீராமன் திருமாளிகையில் உலக இன்பங்கள் அனைத்தையும் அனுபவித்தோம், எல்லா வித விருப்பங்களும் நிறைவேற பெற்றோம் என்று சீதை சொன்னதை போல, எம்பெருமானும் ஆழ்வாரை இந்த பதிகத்தில் அனுவிபவிக்க விரும்பியதை சொல்லும் பாடல்கள்.

சௌலப்பயம் முதலான குணங்களுக்கு உறைவிடமான திருக்காட்கரை எம்பெருமானுடைய ஆச்சரியமான பரிமாற்றங்களை (மாயங்களை) நினைக்கும் போதெல்லாம் நெஞ்சு நீர்ப் பண்டமாகின்றதே என்கிறார். அநுபவத்திற்கு முதன்மையான கருவியான நெஞ்சம் சிதிலமாகின்றது.  அநுபவிக்கைக்கும் அநுபவித்துக் களிக்கைக்கும் நெஞ்சுவேணுமே;  அது சிதில் ஆனால் என்ன செய்வது. ஆத்மாவால் தாங்க முடியாதபடி, ஆசை பெருகுகின்றதே. ஆற்றுப் பெருக்குப் போலே மேன்மேலும் பெருகி வருகின்ற காதல், அணுபரிமாணமான ஆத்ம வஸ்துவின் அளவு போல சிறியது இல்லை என்கிறார். நெஞ்சு உருகாதபடி செய்யவும் வேட்கை பெருகாதபடி செய்யவும் ஆழ்வார் தனக்கு ஒரு உபாயம் அறியவில்லை. மேல் தெருவெல்லாம் காவி கமழென்று தொடங்கி, குறுந் தெருவோடு நெடுந் தெருவோடு வித்யாசம் இன்றி, எங்கும் நெங்கழுநீரின் நறுமணம் கமழப் பெற்ற திருக்காட்கரை, வெளியே இந்த பரிமளமானால், உள்ளே ஸர்வகந்தா என்னும்படியானவனுடைய பரிமளம் இன்னும் சிறப்பு.

பரத்துவத்தின் மேன்மை, அர்ச்சையின் எளிமை இரண்டும் சேர்ந்து சொல்லப்படுகிறது. அவனோ மாயன், ஸெளந்தர்யம் ஸெளசீல்யம் முதலிய குணங்களினால் பிறரை பைத்தியம் பிடிக்க வைக்க வல்லவன். அப்படிப் பட்டவனுடைய மாயம், கிட்டின போது தாழ நின்று பரிமாறின சீல குணம்; அதனை நினைக்கும்தோறும் உருகுமால் நெஞ்சம் என்று முதலடியோடே சேர்ந்து அனுபவிப்பது விசேஷம். ஒரு குணத்தையே காலம் என்ற ஒரு தத்துவம் உள்ள வரையில் கணம் தோறும், புதுமை பிறந்து அனுபவிக்க வல்ல ஆழ்வார்; ‘அப்போதைக்கு அப்பொழுது என் ஆரா அமுதம் ‘, என்று அனுபவித்தவர் இந்த ஆழ்வார்.

திருக்காட்கரை எம்பெருமானை நோக்கி ‘உன்னோடு நான் கலந்து பரிமாறின பரிமாற்றத்தை நினைக்க சக்தி இல்லாதவனாக இருக்கிறேன் என்கிறார். உன்னுடைய குண சேஷ்டிதங்களை நினைக்க தொடங்கினால், அந்த நினைவு மாறாதே, சொல்ல முடியாதபடி. பலவீனம் அடைவார். ஆனாலும் மறக்கமாட்டார்;  மறுபடியும் நினைக்கத் தொடங்குவர்.  அந்த நினைவும் வெகு நேரம் சென்று முடியாது. இப்படி எத்தனை காலம் நினைக்க தொடங்குவது ? எத்தனை காலம் சென்றது. இதனை இது நினைதொறும் என்கிறார்.  நெஞ்சால் நினைக்கவே முடியாத விஷயம் வாயால் சொல்ல முடியாது என்பதை சொல்ல வேணுமோ?

இவர் பேசாமல் இருந்தாலும்,  இவருடைய வாக்கும் பேசிக் கொண்டே இருக்கும். அப்படி பேசும் போது அந்த பேச்சு செவி வழியாலே உள்ளே புகுந்து இருப்பது, பாவங்களை போக்குகின்ற, குணாதி விஷயமாகையாலே நெஞ்சை அழிக்கும்;  நெஞ்சு கட்டுக் குலைந்து நீராக நின்றது.  பாடும் போது, என் அரிய உயிரானது வெந்து போயிற்று. அதனால் நான் உனக்கு அடிமை செய்யும் தன்மையை நினைக்க முடிய வில்லை. எல்லாவற்றுக்கும் குளிர்ச்சியைப் பண்ணகூடிய பனி தாமரையை கருகப் பண்ணுவதைபோல சகலர்க்கும் ஆர்த்தியை அழிக்கும் குணங்கள், எனக்கு ஆர்த்தியை விளைவிக்கின்றன என்கிறார். நீ என்னிடம் தாழ நின்று ஆட்செய்து காட்டின சீல குணத்தை நெஞ்சாலும் நினைக்க முடியவில்லை என்கிறார்.

இருத்தும் வியந்து, (திருவாய்மொழி 8.7) என்ற பதிகத்தில் ஆழ்வார், ‘ எம்பெருமான் எல்லா விஷயங்களிலும் முறையாக செய்வதாகவும், ஆனால் ஆழ்வார் விஷயத்தில் மட்டும் முறைமாறி செய்வதாக கூறுகிறார். அதே போல, இந்த பதிகத்திலும் எம்பெருமான் ஆழ்வார் விஷயத்தில் முறை மாறி தாழ்ந்து ஆட் செய்கிறார். சீதா பிராட்டி தன்னுடைய மாமனாரான தசரத சக்ரவர்த்தியின் அரண்மனையில் 12 ஆண்டுகள் சந்தோஷமாக இருந்ததை சொல்லி, அதற்கு காரணம், இராமனின் திருகுணங்களின் பூர்த்தியே ஆகும் என்று சொன்னதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.

அதே போல, தசரதன் இராமருக்கு யுவராஜா அபிஷேகம் செய்ய நினத்தபோது, அதை பற்றி மக்களிடம் நேரடியாக கருத்து கேட்ட போது, அவர்கள் மிக்க மகிழ்ச்சியுடன் ஏற்று கொண்டனர். இருந்தாலும், மேலும் கேட்ட விரும்பி, தசரதன் அவர்களிடம், தானும் 60 ஆயிரம் ஆண்டுகளாக இந்த நாட்டிற்கு நல்ல விதமாகவே ஆட்சி செய்கிறேன், தான் ஏன் இப்போது போக வேண்டும், ராமன் ஏன் வர வேண்டும் என்று வினவினார். அதற்கு மக்கள், எல்லா நல்ல குணங்களும் நிரம்ப பெற்ற இராமனை பெற்றது தான் அவன் செய்த தவறு என்று எடுத்து உரைத்தனர். இங்கேயும் ஸ்ரீ ராமனின் குணங்கள் முழுமையாக சொல்ல பட்டன. அப்படிபட்ட குணங்களை கொண்ட எம்பெருமான், இன்று ஆழ்வாருக்காக தாழ வந்து காரியம் செய்வது சொல்லபட்டது.

சென்ற பாட்டின் கடைசி வரிக்கு வியாக்கியானமாக இந்த பாட்டு இருக்கிறது. அடிமை கொள்வதாக ஒரு காரணம் சொல்லி, உள்ளே புகுந்து தன் படிகளைக் காட்டி முழுவதுமாக ஆட் கொண்டான். ”வஞ்சித்து நெஞ்சம் புகுந்து என்னை நீர்மையால் ஈர்மை செய்து” என்று சேர்த்து பொருள் கொள்வது சுவை மிக்கது.  எம்பெருமான் சேஷியாகவும் ஆழ்வார் சேஷனுமானகவும் உள்ள முறை தவறாது பரிமாறுவதாகவே சொல்லி ஆழ்வாரின் நெஞ்சை இசையப் பண்ணிப் புகுந்து, முறை கேடாகப் பரிமாறப் போகிறேன் என்று முன்னமே சொன்னால் ஆழ்வார் இசைய மாட்டார் என்று எண்ணி, முறை கெடாது பரிமாறுவதாகப் பொய் சொல்லி உள்ளே புகுந்தானாயிற்று.  புகுந்தபின் நீர்மையைக் காட்டத் தொடங்கினான். அதாவது, எம்பெருமான் தாழ நின்று பரிமாறத் தொடங்கினான் என்கிறார். அதனால் ஆழ்வாரின் நெஞ்சை ஈடுபடுத்தினான். எம்பெருமான் ஆழ்வாரை உண்ணவும் செய்தான்.

இதே போல, இராமாயணத்தில், தாரை வாலியிடம் கூறுவது, பொன் முதலிய தாதுகளுக்கு இமய மலை போன்று, சௌலப்யம் முதலிய குணங்களுக்கு உறைவிடம், ஸ்ரீ ராமர் என்றும், நாட்டிலே சிலர் குணம் இல்லாதவர் என்றும், சிலர் குணம் நிரம்பியவர்கள் என்றும் கொண்டாடுவது, இந்த இடத்தில் உருவான பொன் என்று அதற்கு தகுந்த விலை போவது போல், இராமன் இருக்கிறான் என்று கூறுகிறார். இதே போல ராமன் பட்டாபிஷேகத்தின் போது, மக்கள் நிறைந்த நெடுஞ்சாலையில் நுழைந்தார், அதைத் தனது பிரகாசத்தால் ஒளிரச் செய்தார், மேலும் அவரது சிறந்த நற்பண்புகளால் அவர்களின் இதயங்களை நினைவுகள், தூண்டினார் என்று சொல்லி, சிறந்த குணம் உடையவர்கள் மக்களின் மனதை தூண்டுவார் என்று ராமாயணம் சொல்கிறது.

இப்படிச் செய்தவன் யார் என்றால், சீர்மல்கு சோலைத் தென்காட்கரை என்னப்பன் கார்முகில் வண்ணன், ஆழ்வாரோடு கலந்து ஆழ்வாருடைய நீர்மையையும் கொள்ளை கொண்டதனால், கடலைக் கழுத்தளவாகப் பருகின காளமேகம் போலே, புகர் படைத்து விளங்குகின்ற திருக்காட்கரையப்பன். அவனுடைய கள்ளத்தனம் அறிய முடியவில்லை. இப்படி தாழ நின்று பரிமாறுகை அஸம்பாவிதம்;  நான் மருண்டு பேசுகிறேனோ என்கிறார்.

தான் சேஷியாயும் ஜகத்தெல்லாம் சேஷபூதமாயும் முறை தப்பாமல் எல்லாருடன் கலக்கிறவன், நீசனேன் நிறையொன்றும் இலேன் என்று நின்ற எம்பெருமான், என் பக்கம் காட்டும் ஆசை / காதல் இன்னது என்று என்னால் சொல்ல முடியவில்லையே என்று தடுமாறுகிறார். “சிறிய என் ஆருயிர் உண்ட திருவருளை அறிகிலேன்” என்று அனுபவித்து பொருள் கொண்டு, “உகப்பாலே செய்தானோ? இந்த வஸ்துவை அழிக்கைக்குச் செய்தானோ? அறிய வில்லை” என்பார் நம்பிள்ளை. 

தன்னுள் அனைத்து உலகும் நிற்க, தானும் நெறியாமையால், உலகங்களெல்லாம் தன்னுடைய ஸங்கல்பத்தைப் பற்றிக் கிடக்க, தான் அவற்றினுள்ளே தன் சேஷித்வ முறை தப்பாதபடி நிற்குமவன்.  இப்படிப்பட்டவன் வெறி கமழ் சோலைத் தென்காட்கரை என்னப்பனாய் இருந்து கொண்டு சிறியேனான என்னுடைய அரிய உயிரை உண்ட ஆசையை என்ன சொல்வேன் என்கிறார். பிரளய காலத்தில் எல்லோரையும் காப்பாற்றியவன் தன்னை மட்டும் அழித்தான் என்கிறார். பகைவர்களை அம்பால் அழிப்பவன் அடியவர்களை குணத்தால் அழிப்பான். அம்புக்கு மருந்து உண்டு, அவனின் குணத்தால் வந்த புண்ணுக்கு மருந்து கிடையாது என்கிறார். அவனுடைய மேன்மைக்கு எல்லை இல்லாதது போல, தன்னுடைய சிறுமைக்கும் எல்லை இல்லை என்று ஆழ்வார் நினைக்கிறார். அவன் இவரை நித்யசூரிகளை விட அவன் அருகே உள்ளார் என்றும், ஆழ்வாரை பற்றி ஆழ்வார் அறியவில்லை என்றும், ஆழ்வார் மேல் விழுந்து கிடந்தார் என்கிறார். திருஅருள் அறிகிலேன் என்று சொன்னது, தன்னுடைய ஸ்வரூப ஞானத்தால் ஆழ்வாரை அழிக்க வில்லை என்றும், விரும்பியே ஏற்றுக்கொண்டதாகவும் சொல்கிறார்.

வெறி கமழ் சோலைத் தென்காட்கரை என்னப்பன் என்று சொன்னது, அந்த ஊரில் இருப்பவனுக்கு ஓரு பொருள் மேல் கண் என்றும், அது ஆழ்வாருடைய சிறு ஆருயிர் என்றும் கூறுகிறார்.

எம்பெருமான் என்னை அடிமை கொள்வான் போலே புகுந்து என் சரீரத்தையும் ஆத்மாவையும் ஒன்றாக எடுத்துக்கொண்டான். இது என்ன காதல் என்று வியக்கின்றார்.  கைங்கரியம் கொள்ளுகையையே திருவருள் செய்கையாக ஆழ்வார் திருவுள்ளம் பற்றியிருப்பது.  என்னிடத்தில் கைங்கர்ய வ்ருத்தி கொள்ளுகையாகிற திருவருளைச் செய்பவன் போல உள்ளே புகுந்து அருளைத் தான் செய்கை அன்றிக்கே தான் பெற்றான், வழுவிலாவடிமை செய்ய வேண்டும் நாம், என்று நான் பார்த்த அத்தனை; அவன் இங்ஙனே பாரித்துப் பேற்றினை அடைந்தான். 

திருவிருத்த முதல் பாட்டிலே “அழுக்குடம்பு ” என்று தாம் வெறுத்ததை அவன் விரும்பிப் புகுந்தான்.  இங்கே நம்பிள்ளை ஈடு வியக்கத் தக்கது; “அவன் அங்கீகாரத்துக்கு முன்பு இவர் தேஹத்தையே விரும்பி இருந்தார். அவன் இவரை அங்கீகரித்த பின்பு, இவர் தன் தேஹத்தை வெறுக்க, அவன் இவருடைய தேஹத்தை விரும்பி புகபார்த்தான் ; இவருக்கு அவனுடைய சகவாசம் ஸ்வரூப ஞானத்திருக்கு (மயர்வர மதிநலம் அளித்ததை சொல்கிறார்) காரணமாயிற்று. அவனுக்கு இவருடைய சகவாசம், இவர் உடலை உயிராக விரும்புவதற்கு (இவர் சிந்தையினுள் புகுந்து இருந்ததை சொல்கிறது) காரணம் ஆயிற்று. இந்த சரீரம் ஆத்மாவை விட்டு தனியாக இயங்காததால் இவர் ஆத்மா அளவும் சென்று உண்டான்.

கருவளர்மேனி என்றது, வளர்ந்த, வளரும், இன்னும் வளர போகும் என்று சொல்கிறது. எப்போதும் ஒரே தன்மையான உருவம் என்கிறது. இவவடிவில் கண்டிலோம் என்றபடி சொல்கிறார்.

அடியவர்களுக்கு எளியவனான கண்ணன், முதலில் அடிமை கொள்வாரை போல புகுந்து, தாழ நின்றதையும், விரோதியான சரீரத்தை கழிக்க என்று சொல்லி புகுந்து, உடலையும் உயிரையும் வேறுபடுத்தி, ஆழ்வார் வேண்டியதை உடலை ஒழித்தல் செய்யாமல், இனிய பொருளாக தான் புகுந்து அனுபவிக்கின்றான். இப்படி முதலில் ஒன்றும் முடிவில் வேறு ஒன்றுமாக இருந்ததை கள்வங்கள் என்கிறார். ஆழ்வார் தன் பேறு என்று நினைத்து இருக்கையில், அவன் பேறு என்று ஆழ்வாரை கொண்டான் என்கிறார். இத்தனையும் செய்தது, எப்போதும் வளர்கின்ற கருவளர்மேனியால், வடிவ வேறுபட்டால், என்கிறார். அடியார்கள் சொல்லுக்கு கட்டுபட்டு இருந்த கண்ணன், என்பதை ‘என் கண்ணன்‘ என்பதால் சொல்கிறார்.

ஆழ்வாரை புஜித்து அவன் செழிப்புக் கொண்டமை அவன் அளவிலே நில்லாமல், அவன் உறையும் திருக்காட்டக்காரை ஊரிலுள்ள சோலைகளிலும் ஏறிப் பாய்ந்தது போலும்.

ஒருவனைக் கள்ளன் என்று அறிந்தால் அவனுடைய சகவாசத்தை விட்டு விலகுதல் போல, எம்பெருமானுடைய வஞ்சகங்களை அறிந்த நீர் அவனை விட்டு அகல வேண்டாவோ என்று கேட்டுகொண்டு, அவனைக் கண்டவுடன் அவனது வஞ்சனைகளை மெய்யென்று கொள்ளும்படி நேர்ந்து விடுகிறதே என்கிறார்.  எனக்கு அடங்கினவனை போல தோன்றும் கண்ணனுடைய வஞ்சனைகள் எனக்கே செவ்வித்தாக தோன்றும். ஒருநாள் அவன் களவிலே அகப்பட்டால் பின்னை மீளமாட்டேன்;  அவன் முகத்திலே விழித்தவாறே அவன் செய்யுமவை எல்லாம் மெய்யாகவே தோன்றும் எனக்கு. “எனக்குச் செம்மாய் நிற்கும் என்றதை எனக்குச் சேமமாயிருக்கு மென்று ஒரு தமிழன் நிர்வஹித்தான்” என்பது ஈடு. 

இந்த என் ஆத்மாவானது, ஆசையின் எல்லையில் நின்று மிக்க காதலை உடையவனான அவனால் உண்ணப்பட்டு விட்டது என்கிறார்.   அங்கண்ணர் என்பதற்கு அதிக சபலம் உடையவன் என்றும் அதிக காதல் உடையவன் என்றும் சொல்லபடுகிறது. என் ஆத்மா கோது ஆகும் படி செய்தது. கோது ஆன போது மீளவும், பொல்லா நோக்கத்தை உடைய போது மீளவும், உயிர்ப்பித்து இருக்க வேண்டும். (ஆழ்வார் ஆத்மா என்ற) பொருளின் தன்மையால், தானே வரும் என்கிறார். முன்பு எனக்கு அடங்கி இருந்த கண்ணன் இரவு பகல் பாராது, கூப்பிட்டு, அவன் எழுந்தருளி இருக்கின்ற திருக்காட்கரை திருப்பதியை கொண்டாடியது. இராகவன் திருமாளிகையில் பன்னிரெண்டு ஆண்டுகள் உலக வாழ்க்கை இன்பங்களை மிக அதிமாக அனுபவித்ததாக சீதா பிராட்டி திருவடியிடம் சொன்னது போல இங்கே எழுந்து அருளி இருக்கிறார் என்று சொல்கிறார்.

என்னை அடிமை கொள்வாரைப் போலே வந்து புகுந்து, என்னுயிரை முழுவதுமாக உண்டு முடித்தப்பின் பின்னும் உண்ணாதது போலே கிடந்து நின்றான் என்கிறார். அவனைக் காட்டிலும் அவனிருக்கும் ஊரிலே ஆசை மிகுந்து, அவ்வூரையே ஏத்தி நின்றது இவருடைய ஆருயிர். ஊருக்கு அவனாலே ஏற்றமாய், அவனுக்கு ஊராலே ஏற்றமாக இருப்பதாலே ஊரையும் சொல்லி அவனையும் சொல்ல வேண்டி இருத்தலால் அதனுள் கண்ணாவென்னும் திருக்காட்கரைப் பெருமானே, என்று அவ்வூரின் ஸம்பந்தத்தை சொல்லி அவனையும் ஏற்றியது. பரமபதநாதனென்றால் ஏற்றமில்லையே, அந்த இடத்திலும் இந்த இடத்திலும் வாஸத்தாலே ஏற்றம் பெறுவோம் என்று வந்து இங்கே நின்று ஏற்றம் பெற்றான்.

அவ்வூரையும் அவ்வூர்ப் பெருமானையும், நினைத்த மாத்திரத்திலேயே காதல் நோய் அதிகரிக்கும்;  அதனால் உடலும் உள்ளமும் கரைந்து உருகும். இப்படி எல்லாம் ஆகைக்கு காரணம் என்ன என்றால், “சென்ற பாடல்களில், திருவருள் என்று மறைத்துச் சொன்னதை வெளியிடுகிறார்” என்பர் நம்பிள்ளை.  அடிமை கொள்வாரைப் போலே புகுந்து என்னை சூன்யமாக்கின ஆச்சர்ய பூதனாலே (மாயன்) என் ஆருயிர் உண்டு நிற்கிறார். அவன் கிடைத்த போது, தாழ நின்று, மின்மினி பறக்க செயல் புரிந்த ஆச்சரியம் சொல்லப் படுகிறது. ஆழ்வார் பக்கம், சிறிது அடிமை செய்து, ஆட்கொண்டது, இன்னமும் இருந்து கிலேசப்பட வேண்டியதால் இன்னும் சிறிது ஆட்கொள்ள வேண்டும். இப்படி ஆட்கொள்வதில் சிறிது குறை உண்டு என்றால், என் உயிர் திருக்காட்கரை அப்பனை துதிக்கும். ஒரு முற்று அறிவு இல்லாத தன் மேல் எம்பெருமான் இவ்வளவு காதல் செய்ய கூடாது என்று இவர் சொல்கிறார்.

இந்த பாசுரத்தில் அவனை முதலில் கூறாமல், ஊரை கூறுகிறார். அவனை விட ஊர் சிறப்பு என்கிறார். கண்ணா என்று சொல்லாமல், ‘அதனுள் கண்ணா; என்று சொன்னது, பரத்துவத்தை காட்டிலும் இந்த ஊரில் புகுந்த சிறப்பை சொல்கிறது. என் கண்ணா என்று சொல்லாமல், காட்கரை ஏத்தும் என்று சொன்னது ஊரை ஏத்தும். சென்ற பாசுரத்தில், கண்ணன் பிரதானம், இந்த பாசுரத்தில் ஊர் பிரதானம்.

எம்பெருமானை அநுபவிக்கும் ஆழ்வார்க்கு “எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி தொறும் அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதமே” என்னும்படி, தினமும் புது அனுபவம் போல, எம்பெருமான் தனக்கும் ஆழ்வாருடைய அநுபவம் தினமும் புதிய அனுபவமாக உள்ளது என்கிறார். நாள் தோறும் என்னை உண்டு கொண்டு இருந்தாலும், பெறாப் பேறு பெற்றாப்போலே, வந்து உண்ணும் இப்பெருமானுடைய குணத்தை என் என்பேன் என்கிறார்.

கோள் உண்டான் அன்றி வந்து என்னுயிர் தானுண்டான் என்பதற்கு மூன்று வகையாக பொருள் சொல்வார்கள். (1) என்னிடத்தில் ஓர் உபகாரமும் கொள்ளாமலே என் ஆத்ம வஸ்துவை அனுபவித்தான். (2) இதற்கு முன்பு இப்படிப்பட்ட ஓரு சரக்கு உண்டது அறியாதவன்போல் என் பக்கலிலே ஆசை கொண்டான் (3) என்னாலே தான் கொள்ளப்படாது இருக்க, தான் என்னைக் கைக் கொண்டான். 

ஒரு நாள் உண்டு ‘இது நாம் முன்பு உண்ட பொருள் தானே’ என்று பழமை தோன்றி ருசி இல்லை என்று இருப்பவன் அல்லன். தன்னை முற்றவும் தான் உண்டான், இங்கே தன்னை என்று சொன்னது ஆழ்வாரின் ஆத்மாவை.  அது அணு அளவில் உள்ளது, முழுவதும் என்று சொல்லுவதற்கு விஷயமில்லையே என்று கேட்டுகொண்டு, நம்பிள்ளை யருளிச் செய்வது, ஆழ்வாருடைய ஆத்மவஸ்து அணுவாயிருந்தாலும் கூட, அளவு கடந்த பாரிப்புக் கொண்ட ஸர்வேச்வரன் அநுபவிக்குமிடத்து, இந்த அணு அளவுள்ள வஸ்துவையும் பெரியதாக்கிக் கொண்டு அநுபவிப்பதாக ஆழ்வாருடைய திருவுள்ளம் என்பதாம்.  இதற்கு ஒரு உதாரணம், கண்ணபிரான் விதுரர் திரு மாளிகைக்கு எழுந்தருளின போது விதுரர், கண்ணனுக்கு அன்னம் இட்டார் என்பதை சொன்ன முனிவர், விதுரர் இட்ட அன்னத்தை ஏகவசனத்தாலே சொல்லி, கண்ணன் அமுது செய்த அந்த அன்னத்தையே வெகுவாக சொல்லியதில் இருந்து ஓரு விசேஷ அர்த்தம் தோன்றுமே, அது போலவே இதுவும் என்கிறார்.  

காள நீர் மேகத் தென் காட்கரை என்னப்பற்கு என்று சொன்னது, எம்பெருமானின் வடிவழகு ஆகும். என்னாருயிர் பட்டதே என்றது அந்த வடிவழகினால் என்றும், ஏ காரம், ஆச்சர்யத்தின் வெளிபாடாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்படி என்னை அநுபவிப்பவனான திருக்காட்கரையப்பனுக்கு, எம்பெருமானோடு எதிர் அம்பு கோப்பவர்கள் உடம்மை இழப்பதோ, புண்பட்டதுக்கு மருந்து வைத்து ஆற்றுவதோ செய்வார்கள்; உயிர் நோவு படுவது என்பது அவர்களுக்கு இல்லை; இது ஆழ்வார்க்கே.  அம்பு படுத்தும் பாட்டுக்கும் திருக்குணம் படுத்தும் பாட்டுக்கும் பெரிய வித்யாசம் உண்டு என்கிறார்.

சென்ற பாட்டில் “ஆளன்றே பட்டது என்னாருயில் பட்டது” என்றார் ; எம்பெருமானுடைய திருக்குணங்களில் ஈடுபட்டவர்களான எல்லார்க்குமே இது சகஜம் தான் ; இருந்தாலும், தான் பட்டது யாரும் பட்டு இருக்க மாட்டார்கள் என்கிறார். தான் பட்ட பாட்டை நித்யஸுரிகள் பட்டதுண்டோ? எப்போதும் எம்பெருமானின் திருகுணங்களை அனுபவிக்கும் நித்ய சூரிகளும் இப்படி பட்டது இல்லை என்கிறார்.  திருமணமான புது பெண்ணிற்கு கணவன் கை பட்டபின் வேர்த்து விடுவது போல், இவர் அனுபவத்தில் புதியவர் ஆதலால் தான் பட்டது யாரும் பட்டது இல்லை என்கிறார்.  “இங்கு எனதுயிர் பட்டது அங்கு ஆருயிர் பட்டது” என்று எம்பெருமானார் அருளிச் செய்வாராம்.  ஆழ்வாருடைய உயிர்அழிந்தற்கு பேரிதழ்த் தாமரைக்கண்கள், திருவதரமும் படுத்தினபாடு என்கிறார். வடிவழகு படுத்தின பாடும், கோயில் படுத்தின பாடும் நான்கு திவ்ய தோள்கள் படுத்தின பாடும் என்கிறார். வடிவழகையும் இந்த ஊரில் இருப்பையும் காட்டி தன்னை அழித்ததை சொல்கிறார்.

எம்பெருமானுக்கு ஆழ்வாரிட்ட திருநாமங்களுள் தெய்வ வாரி என்றும் ஒன்று. வாரி என்னும் வட சொல் ஜலத்தைச் சொல், கடலை குறிக்கும் இங்கு. தெய்வங்கள் எல்லாம் தோன்றுவதற்கு காரணமான கடலை சொல்கிறது. தெய்வங்களை எல்லாம் படைத்தவனுக்கு என்றும், தம்மை தாமே மதிக்கிற தெய்வங்களை படைத்தவன் கண்டீர், யான் எனது என்னும் செருக்கற்ற என்னை அழித்தான் என்கிறார்.

திருவாய்மொழி ஆயிரத்தினுள்ளும் இப்பாட்டு உயிரானது என்று சொல்லலாம். ஈச்வர லாபம் அடியார்களுக்கு புருஷார்த்தமா, அடியவர்கள் லாபம் ஈச்வரனுக்குப் புருஷார்த்தமா என்று விவாதம் செய்வது உண்டு.  சேதந லாபம் தான் ஈச்வரனுக்குப் புருஷார்த்தம் என்பதே ஸித்தாந்தம். எம்பெருமான் ஸ்ருஷ்டி அவதாரம் முதலியவற்றில் பண்ணுவதெல்லாம் ஒரு அடியவன் நமக்குக் கிடைப்பான் என்ற நப்பாசையினால் அன்றோ.   கீதையிலே அப்படிபட்ட மகாத்மா கிடைப்பது துர்லபம் அல்லது மிகக்கடினம் என்று கண்ணீர் பெருக நின்று சொல்லுகிற வார்த்தை அன்றோ. வாசுதேவனே எல்லாம் என்று இருக்கின்ற மஹாத்மா தனக்குக் கிடைக்க வில்லையே என்றன்றோ எம்பெருமான் சொல்லுகிறான்.  பாடுபட்டு, தேடிப்பார்த்தும் கிடைக்காததால் வருந்திச் சொல்லுகிற வார்த்தைகள் இவை என்று நன்கு தெரிகிறது.

இப்பாட்டில் “என்னில் முன்னம் பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான் ” என்றது ஸத் ஸம்ப்ரதாய ரஸிகர்களின் நெஞ்சை உருக்கும் வார்த்தை.  தன்னோடு கலந்த எம்பெருமானுக்கு தன்னை விட காதல் அதிகமாக இருந்ததாக கூறுகிறார். இந்த ஆழ்வார் வழுவு இலா அடிமை செய்ய வேண்டும் என்றும், திருவனந்தாழ்வான், திருவடி போன்றவர்கள் செய்த எல்லா கைங்கர்யங்களையும் தான் செய்ய வேண்டும் என்று ஆசைபட்டவர் அல்லவா. ‘வாரிக்கொண்டு‘ என்று சொன்னதால், இந்த பொருளில் யாருக்கும் சிறிதும் இல்லாதவாறு உண்போம் என்று சொல்லி, முன் சொன்ன எல்லா கைங்கர்யங்களையும் செய்வதை சொல்கிறார். இங்கு லக்ஷ்மணன் ஸ்ரீ ராமரிடம் சொன்ன வார்த்தைகள் நினைவு கூறபடுகின்றன. லக்ஷ்மணன் தான், ஸ்ரீராமன் சீதா பிராட்டியுடன் மலைகளில் நடந்து செல்லும் போதும், மற்றும் உறங்கும் போதும், முழித்து இருக்கும் போதும் வேண்டிய அனைத்து சேவைகளையும் செய்வதாக சொன்னது. (அயோத்தியா 31.25) உன்னை என்றது, எல்லோருக்கும் தலைவனான உன்னை என்று சொல்வதாக கொள்ளவேண்டும்.

‘உன்னைக் காணில் வாரிக் கொண்டு விழுங்குவேன் ‘ என்று தாம் ஆசைப்பட்டு இருந்தாகவும், தமக்கு முன்னே நெடுநாளாக எம்பெருமான் தம் விஷயத்தில் இப்படி பாரித்து இருந்து, தன்னுடைய மனோரதமே நிறைவேற்ற பெற்றான் என்ற அருளிச் செய்தார். கடியன் என்று சொன்னது இன்ப நிலையில் விரைவு உள்ளவன் என்று சொல்கிறார். இருவரால் செயல் என்று இருந்தால், இரண்டாவது மனிதற்கு இடம் கொடுக்க மாட்டான்.

சென்ற பாட்டுக்களில் “என்னுயிருண்ட மாயன் ” என்றும்,  “என்னுயிர்தானுண்டான் “என்றும்,  “என்னைமுற்றவுந் தானுண்டான் ” என்றும் எம்பெருமான் உண்டபடியைச் சொன்னார்; உண்டவனுக்குத் தண்ணீரும் வேண்டி இருக்குமே ;  தண்ணீர் குடித்தபடி சொல்லிற்று இப்பாட்டில். அவனுடைய குணங்களை செயல்களையும் காட்டி என்னை நீராக்கி, குறை சிறிதும் இல்லாதபடி பருகினான் என்று சொல்கிறார். தான் என்னை முற்றப் பருகினான் என்று சொல்கிறார். இவருடைய உண்ணும் சோறு பருகுநீர் அவன். அவனுடைய உண்ணுஞ்சோறு பருகுநீர் இவர்.

இந்தத் திருவாய்மொழி கற்றார்க்குப் பிறவி முடிந்து அதற்கு காரணமான ஸம்ஸாரமும் நசிக்கும் என்று பயனுரைத்து முடிக்கிறார். சென்ற பாட்டின் முடிவில் “காட்கரை யப்பன் கடியனே” என்றார்;  இப்பாட்டின் தொடக்கத்தில் “கடியனாய்” என்கிறார்; சொல் ஒன்றாயிருந்தாலும் பொருள் வேறுபட்டிருக்கும்.  “காட்கரையப்பன் கடியன்” என்ற முன்பு செய்தது, தம்மை அநுபவிப்பதில் விரைவு கொண்டவன் என்றும்  “காற்றை விட கடியனாய்” என்றது.   இங்கே சொன்னது, கோபத்தை ஏறிட்டுக் கொண்டவனாய்க் கம்ஸனை முடித்ததை சொல்கிறார். எம்பெருமானுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகள் யாவும் அழகாக அமையப் பெற்ற ஆயிரம் என்கிறார். இந்த பத்து பாடல்களை கற்பவர்கள், தொடர்ந்து வருகின்ற பிறவியானது முடிவு அடைந்து, ஸம்ஸாரமும் அழிந்து விடும் என்கிறார். அப்படிப்பட்டதான இந்த ஸம்ஸாரத்திற்குக் கானலெனும் பெயர் மிகப் பொருந்தும்.

கம்சன் தான் நினத்த நினைவினை அவன் தன்னோடு போகும்படி செய்ததை சொல்கிறார். கொண்ட சீற்றம் விரோதிகளை அழித்தது உபகாரம் என்கிறார். கம்சனை கொன்றதற்கு ஆழ்வார் திருநகரியில் கொடி ஏற்றுகிறார். ஸ்வாமியின் வெற்றிக்கு அடியவர்கள் இருந்த இடத்தில் கொடி ஏற்றுகிறார்.

மீண்டும் இன்னொரு திவ்ய தேச அனுபவத்தில் சந்திப்போம், நன்றி.

077 திருவித்துவக்கோடு / Thiruvithuvakod

பத்மபாணி நாச்சியார் ஸமேத உய்யவந்த பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி

மலை நாட்டு திவ்ய தேசங்கள் பதின்மூன்று :

திருவனந்தபுரம், திருவண்பரிசாரம், திருகாட்கரை, திருமூழிக்களம், திருச்சிறு புலியூர், திருசெங்குன்றூர், திரு நாவாய், திரு வல்லவாழ், திரு வண்வண்டூர், திருவாட்டாறு, திருவித்துவக் கோடு, திருக்கடித்தானம் , திருவாறன் விளை (ஆரம்முளா).

திருமித்தக்கோடு

கேரளாவில் பாலக்காட்டு மாவட்டத்தில் உள்ள பட்டாம்பி என்னும் நகருக்கு
அருகில் அமைந்துள்ளது. ஷோரனூர் கள்ளிக்கோட்டை மார்க்கத்தில் பட்டாம்பி ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 3.5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. ஷோரனூரிலிருந்து குருவாயூர் செல்லும் பாதையில் 16 கிலோமீட்டர் சென்று அங்கிருந்து குறுகிய பாதையில் சுமார் 1 கிலோ மீட்டர் நடந்தால் வரும். பட்டாம்பி ரயில் நிலையத்தில் இருந்து பாரதபுழாய் ஆற்றை கடந்து 1.5 கிலோமீட்டர் நடந்தால் கோவிலை அடையலாம். கோவிலை சுற்றி ஆகாரம் போன்றவைகளுக்கு வசதி இல்லை.

திருவித்துவக்கோடு என்னும் இத்தலம், திருமிற்றக்கோடு எனவும், திருவீக்கோடு, திருவீச்சிக்கோடு எனவும் திருமித்தக்கோடு என்றும் வழங்கப்படுகிறது. கோவிலின் சுவர்களில் அழகிய சுதைச் சிற்பங்களும், சிற்ப வேலைப்பாடுகளும், அர்ஜு னன் தவம் செய்த காட்சி, தசாவதாரக் காட்சிகள், கிருஷ்ண லீலா காட்சிகள் போன்றவை சிறந்த வண்ணங்களில் பேரழகு பொருந்தியதாக உள்ளன.

இந்த திவ்ய தேச கோவிலில் நுழைந்த உடன் சிவன் சந்நிதி உள்ளது. அதன் பின் எம்பெருமான் சந்நிதி உள்ளது; இங்குள்ள எல்லா நான்கு விஷ்ணு மூர்த்திகளும் நின்ற திருக்கோலத்தில், சங்கு, சக்கரம், கதை, தாமரை மலர் ஏந்தி காட்சி அளிக்கின்றனர். இந்த நான்கு மூர்த்திகளும், வாசுதேவ, சங்கர்ஷணன், பிரத்யூமன அனிருத்தர் என்று எம்பெருமான் வியூகத்தில் தன்னை பிரித்துக்கொண்டது போல உள்ள வடிவுகளாக காட்சி அளிக்கின்றன.

முன்னே இருக்கும் சிவனுடன் சேர்ந்து, இது ஐந்து மூர்த்தி தலம் என்றும், ஐந்து மூர்த்தி திருக்கோவில் என்றும் கூறபடுகிறது. இங்கு தீபம் ஏற்றி துளசி கொண்டு பூஜை செய்தால், மனதில் உள்ள கவலைகள் நீங்கும் என்றும், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகும் என்றும், வேலை தடை உள்ளவர்களுக்கு உத்தியோக தடைகள் நீங்கி வேலை கிடைக்கும் என்றும் நம்புகிறார்கள்.

மாதாமாதம் வரும் திருவோணம் நக்ஷத்திரம் மற்றும் வைகுந்த ஏகாதேசி ஆகியவை இங்கு நடைபெறும் திருவிழாக்கள் ஆகும். காசி விஸ்வநாதரே இங்கு எழுந்தருளி இருப்பதாலும் பத்து நதிகள் இணைந்து பாரத புழா நதிக்கரையில் உள்ளதாலும் இதுவும் பித்ரு தர்ப்பணம் கொடுக்கும் இடமாக கருதப் படுகிறது.

பல புராணங்களிலும் ஸ்தலவரலாறு பேசப்படுகிறது. துவாபர யுகத்தில்
தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பாண்டவர்கள் வனவாச காலத்தில்
தென்னிந்தியாவில் பயணம் செய்கையில் இங்குள்ள நீளா நதிக்கரையோரம்
ஒரு அழகான இடத்தைக் கண்டனர். அங்கு நிலவிய தெய்வீகம் கலந்த
அமைதியைக் கண்டதும் சில காலம் அங்கேயே தங்கி இருக்க எண்ணினர்.
நித்ய வழிபாட்டிற்காக விக்கிரகங்களையும், ஆலயத்தையும் நிர்மானித்தனர்.

முதலில் அர்ஜு னன் மஹாவிஷ்ணுவின் சிலையை பிரதிஷ்டை செய்தான்.
அதற்கு வடக்கே தருமர் ஒரு சிலையையும் தென்புறத்தில் பீமன் ஒரு
சிலையையும் அதற்கு பின்புறம் (தென்புறத்திலே) நகுலனும் சகாதேவனும் ஒரு
சிலையையும் பிரதிஷ்டை செய்தனர். அவர்களது வனவாசம் முடியும் வரை
இங்கேயே இருந்ததாகவும் கூறுவர். வெகு காலத்திற்குப் பின்னால்
பாண்டிய மன்னன் ஒருவனால் மிகப்பெரிய சுற்றுமதில் கட்டப்பட்டது.

இது பஞ்ச பாண்டவர்கள் தவம் செய்த இடம். அம்பரீஷன் பரதேவதையை தரிசிக்க வேண்டி வியூக அவதாரத்தை வேண்டியதால், இங்கு எம்பெருமான் நான்கு வடிவம் கொண்டு எழுந்தருளி உள்ளதாக ஐதீகம். நடுவில் உள்ள மூர்த்தியை தர்மன் பிரதிஷ்டை செய்ததாகவும், மேற்கில் இருக்கும் மூர்த்தியை அர்ஜுனன் பிரதிஷ்டை செய்ததாகவும் இடது பக்கத்தில் உள்ள மூர்த்தியை பீமன் பிரதிஷ்டை செய்ததாகவும் வலது பக்கம் உள்ள மூர்த்தியை நகுலன் பிரதிஷ்டை செய்ததாகவும் கூட சொல்வார்கள். அதே மூர்த்தியை சகாதேவன் பூஜை செய்ததாகவும் சொல்வார்கள். அம்பரிஷன் முக்தி அடைந்த ஸ்தலம்.

நெடுங்காலம் இந்த நான்கு மூர்த்திகளோடு இருந்த இந்த கோவில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஊரை சேர்ந்த முனிவர் ஒருவர் காசிக்குச் சென்று அங்கேயே வெகு காலம் தங்கி, பின்னர் அவரது அன்னையார் மரணத் தறுவாயில் இருப்பதாக செய்தி வந்ததை அடுத்து அவர் திரும்பி வரும் போது அவரது பக்தி ஈடுபாட்டினால் காசி
விஸ்வநாதரும் அம்முனிவரது குடையில் மறைந்து வந்ததாக கூறுவர். வரும் வழியில் இந்தச் சன்னதிக்கு வந்த முனிவர் நீளா நதியில் நீராடச் செல்லும் போது நான்கு மூர்த்திகளுக்கு முன்புறம் இருந்த ஒரு பலி பீடத்தில் தமது குடையை வைத்துவிட்டுச் சென்றார். திரும்பி வந்து பார்த்த போது அந்தப் பலி பீடம் நான்காக வெடித்து அதில் இருந்து சுயம்புவாக சிவலிங்கம் ஒன்றும் தோன்றியதாக சொல்வார்கள். காசி விஸ்வநாதரே இந்த நான்கு மூர்த்திகளோடு தங்குவதற்கு இங்கே வந்து விட்டதாகவும், பிற்காலத்தில் இந்த சிவலிங்கத்தைச் சுற்றிலும் தனியே ஒரு கோவில் கட்டப்பட்டு விட்டது.

குலசேகர ஆழ்வாரால் 10 பாசுரங்களால் மங்களா சாசனம், செய்யபட்ட பெருமாள். மூலவரின் திருநாமத்தை உய்ய வந்த பெருமாள் என்ற அர்தத்தில் உன்னைவிட்டால் எங்ஙனம் நான் உய்வேன் என்று குறிப்பிட்டது இந்த பெருமாளைத்தான். பத்து பாடல்களிலும் வித்துவக் கோட்டம்மானே, வித்துவக் கோட்டம்மானே என்று
இந்த பதிகத்தில், நாம் என் பரமாத்மாவை விடாது பற்றிக் கொண்டு இருக்க வேண்டும் என்பதை பற்பல உதாரணங்களால் சிறப்புடன் விளக்குகிறார்.

வைணவ சம்பிரதாயத்தில் உள்ள இரண்டு முக்கிய கோட்பாடுகளை விளக்குகிறது. ஒன்று அநன்ய கதித்துவம்,  மற்றொன்று ஆகிஞ்சன்யம்.   அநன்ய கதித்துவம் என்றால் உன்னை அல்லால்  எனக்கு வேறு ஒருவரும் இல்லை என்பது. ஆகிஞ்சன்யம் என்றால் மோட்சத்தை அடைய தனக்கு வேறு உபாயம் எதுவும் தெரியவில்லையே என்று கலங்குவது. இந்த இரண்டும் நமது முக்கிய கோட்பாடான சரணாகதியுடன் சேர்ந்தே இருப்பது.   இந்த கருத்துக்களையே ஆழ்வார் இந்த பதிகத்தில் “உன் சரண் அல்லால் சரண் இல்லை” என்ற சொற்தொடர்களோடு,  நமக்கு மனதில் பதியவைக்க சொல்கிறார்.

கோபத்தில், தாய் தனது குழந்தையை தள்ளி வைத்தாலும், குழந்தைக்கு வேறு எங்கும் செல்ல தெரியாமல், அது அழுது கொண்டே தன்னுடைய தாயினிடத்திலேயே சென்று, தாயின் கருணையினையே வேண்டுவது போல், தானும் திருவித்துவக்கோட்டு அம்மானிடம் சரண் அடைந்து அவன் வேண்டாம் என்று சொன்னாலும் அவனை விட்டு அகலாமல் இருப்பேன் என்று ஆழ்வார் சொல்கிறார்.

நீ கொடுக்கும் துக்கத்தை நீயே தான் மாற்ற வேண்டும் என்கிறார். குருவி கட்டிய கூட்டினை பிரிக்க தெரியாத மனிதன், இப்படி எலும்பு எலும்புகளாலான உடம்புகளில் இருந்து துயரங்களை எப்படி விடுவிக்க முடியும், அவன் காலை கட்டி கொண்டால் தான் முடியும் என்கிறார். எம்பெருமானே வந்து உரையுமிடம் கொண்ட வாசனை இருப்பது போல உள்ள சர்வகந்த மலர்களை உடைய சோலை சூழ்ந்த வித்துவக்கோடு என்கிறார். ஈன்ற தாய் என்றதால், இது வளர்ப்பு தாய் இல்லை என்றும், பிராப்தியை சொல்லியது. பெறுகைக்கு நோன்பு நோற்பதும் பத்து மாதம் சுமப்பதும், பிரசவ வேதனையை அனுபவிப்பதும் இவை எல்லாம் இருப்பவளை சொல்லியது; தன்னை தவிர மற்று வேறு ஒன்றை அறியாத பிள்ளையை அருளுடைய நாம் கோபிக்கலாமோ என்று கோபத்தினால் தள்ளினாலும் வேறு எங்கும் போகாததிற்கு ஒரு ஐதீகம் சொல்லபடுகிறது; நம்பி திருவழுதி வளநாடு தாசரை, முதலி ஆண்டான் கோபித்து திண்ணையிலே விட்டதும், அடுத்த நாள் தாசர் ஏன் எங்கும் செல்லவில்லை என்று கேட்டதற்கு, ஒரு நாள் சோறு போட்டவனை, அவன் எவ்வளவு கோபித்தாலும், திட்டினாலும், அடித்தாலும், ஒரு நாயே வேறு எங்கும் செல்லாத போது, நான் எங்கே போவது என்கிறார்.

கணவன், மற்றவர்கள் குறை சொல்லும்படி நடந்துகொண்டாலும், நல்ல குணமுடைய மனைவி, தனது கணவனை விட்டுக்கொடுக்காமல் நடந்து கொள்வதுபோல், ஆழ்வாரும் திருவித்துவக்கோட்டு அம்மானை விட்டு பிரியாமல் இருக்கிறார்.

கண்டார் இகழ்வனவே காதலன் என்று சொல்வது, தானும் அவனும் மட்டும் அறிந்த ஊடல்களும் அதற்கு அவன்/அவள் செய்த பரிகாரங்களும், ஒரு அவதியாக தோன்றதாத நிலையில், இவர்களிடம் காரியம் பெற்றவர்களும், இவர்களை உதாசீனம் செய்தவர்களும் வெறுத்து இகழும்படி அவன் செய்தாலும், அவன் அவளிடம் இருக்கும் காதலை நிரூபிக்க வேண்டிய நிலையில் உள்ளவன் என்கிறது.

விண்டோய் மதிள் புடைசூழ் விற்றுவக் கோட்டம்மா நீ என்று சொன்னது, ஸ்ரீசீதா பிராட்டி ஸ்வயம்வரத்திற்கு மிதிலையில் புற சோலையில் வீற்று இருந்தார் போல் இங்கே திருவித்துவகோட்டில் இருந்தார் என்கிறது.

கொண்டானை யல்லால் அறியாக் குலமகள் போல் என்று சொல்லியதில், கொண்டானை அல்லால் என்பது , அக்னிக்கு அந்தர்யாமியான சர்வேஸ்வரனை சாக்ஷியாக கொண்டவை அல்லது மற்று ஓருவனை அறியாதவளை போல, அவளது பதிவிரத குணம் சொல்லியது. குலமகளே என்று சொல்லியது.

நீ கொண்டாளாயாகிலும் என்று சொன்னது, உபகாரம் செய்பவன் என்றாலும், நீ வெளியே தலை காட்ட முடியாதபடி காரியங்கள் செய்தாலும் என்று சொல்வதாகும்

உன் குரை கழலே கூறுவனே என்று சொல்வது, உன் திருவடிகள் அல்லாது வேறு புகல் இடம் இல்லை என்று சொல்கிறார். உபகாரகனான நீ என்னை நிராகரித்தாலும் உன்னை விடமாட்டேன் என்பதை எனதாவியார் ஆனார் (திருவாய்மொழி, 2.3.4) என்பதை போல நீ செய்த உபகாரத்திற்கு தலை சாய்ந்து வணங்குபவன் என்கிறார்.

அரசாளும் மன்னன், பொதுவாக மக்களுக்கு செய்திடும் செய்கைகள் யாவும் தனி ஒரு பிரஜைக்கோ அல்லது எல்லாருக்குமோ துன்பம் தந்தாலும்,  குடிமக்கள் தொடர்ந்து அந்த மன்னனையே தங்களுக்கு நன்மை செய்வான் என்ற எதிர்பார்ப்போடு காத்து இருப்பதை போல், ஆழ்வாரும், வித்துவக்கோட்டு பெருமாள், ஆழ்வாரை கவனிக்காவிட்டாலும் எம்பெருமானை விடாமல் இருப்பேன் என்று இந்த மூன்றாம் பாட்டில் கூறுகிறார். மஸ்யம் என்று பெயர் வைத்த எல்லாவற்றையும் காப்பாற்றும் தேசம் என்று கூறுகிறார். கடலில் உள்ள மஸ்யம் கடல் வற்றினால் நம்மை காக்கும் தேசம் என்று இருக்கும் திருவித்துவகோடு என்கிறார்.

விற்றுவக்கோட்டு அம்மா என்று சொன்னது, பரம பதத்திலும் இருப்பவர்கள் கூட எம்பெருமானின் சீல குணத்தை அனுபவிக்க வரும் தேசம் ஆயிற்று என்கிறார். விற்றுவக்கோட்டு அம்மா என் பால் நோக்கா யாகிலும் என்று சொல்லும்போது, பரம பதத்தை ஒரு நாடாக நோக்கும் நீ, என்னை நோக்குவதற்காக இங்கே வந்தாலும், எனக்கு அருள் புரியாமல் இருந்தாலும், என்ற கருத்தை சொல்கிறது.

உன் பற்றல்லால் பற்றில்லேன் என்று சொன்னது, என்னுடைய பாதுகாப்பிற்கு பொறுப்பான உன்னை விட்டு எனக்கு பாதகமான மற்று ஒருவரை பற்றுவேனோ என்கிறார்.

நாம் ஒரு வியாதி என்று மருத்துவரிடம் செல்லும் போது, அவர் நம்மை கத்தி மற்றும் பிற உபகரணங்களை கொண்டு, கீறி, நம் உடம்புக்கு தற்காலிகமாக துன்பம் கொடுத்தாலும், நாம் அதை பொறுத்துக்கொண்டு, அந்த மருத்துவரிடம் தொடர்ந்து மரியாதையும், விருப்பதையும் கொண்டு உள்ளது போல், ஆழ்வார், வித்துவக்கோட்டு அம்மானிடம்  சொல்வது என்ன வென்றால், அவர் தனக்கு தொடர்ந்து துன்பங்கள் தந்து கொண்டு இருந்தாலும், அவருடைய அருளையே எதிர்பார்த்து கொண்டு இருப்பேன் என்பதே.   இது இந்த பதிகத்தின் மிக பிரசித்தி பெற்ற பாடலும்,  நான்காவது பாடலும்  ஆகும்.

மீளாத் துயர் தரினும் விற்றுவக் கோட்டம்மா நீ என்று சொன்னது, என்னுடைய பாதுகாப்பிற்கு என்று இங்கே வந்து இருக்கும் நீ, மீளா துயர் தரினும், நித்ய துயரம் கொடுத்ததாலும், பெற்ற தாய் தன்னுடைய குழந்தைக்கு கெட்டவைகளை செய்ய மாட்டாது போல் நீயும் எனக்கு என்கிறார்.

ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே என்று சொன்னது, ஸ்வரூபம் விருத்தி அடைவதற்காக, இப்போது தோன்றுகின்ற துயரங்களை பார்க்காமல், உன்னுடைய கருணையை எதிர்பார்த்து இருப்பேன் என்கிறார்.

சுற்றும் அலைகளை தூக்கி எறிந்து கொண்டு இருக்கிற கடலில் நான்கு திசைகளிலும் அலைந்து திரிந்து எங்கும் கரையை காண முடியாமல்,  தான் இருந்த இடமான கப்பலுக்கே, திரும்பி வரும்   பெரிய பறவைப் போன்று, தானும் வித்துவக்கோட்டு அம்மானின் பாதங்களில் சரண் அடைவதாக ஆழ்வார் இந்த பதிகத்தின் ஐந்தாவது பாசுரத்தில் தெரிவிக்கின்றார். சம்சார சாகரத்தை (சுமுத்திரத்தை) கடப்பதற்கு எம்பெருமான் உகந்து அருளின தேசமான திருவித்துவக்கோடு திவ்ய தேசத்தை அல்லால் வேறு ஒரு உபாயமும் இல்லை என்றும், இந்த திவ்ய தேசத்தை தவிர மற்றதெல்லாம் இந்த பறவைக்கு சமுத்திரம் போல ஆகும் என்கிறார்.

வெவ்விய கண்களும் வலிமையான தோள்களையும் உடைய எம்பெருமானே, குவாலாயபீடம் என்ற யானையை கொன்றவனே அவதார காலத்தில் எதிரிகளை அழித்து தீர்த்த பிரசாதம் சாதித்து பரமபதம் அடைந்தும், அதன் பிறகு பிறந்தவர்கள் இழந்தோம் என்று வருத்தபடா வண்ணம் திருவித்துவக்கோட்டினில் எழுந்து அருளி இருப்பவனே, பரம்பதம் இருக்க, மோக்ஷம் அளிக்க அல்லது சாம்யம் என்ற மோக்ஷத்தை நிர்வகிக்க இங்கே எழுந்தருளி இருப்பவனே என்கிறார்.

பசியோடு பிராப்தம் உடையவன் வீட்டு வாசலில் நின்று சோறு சோறு என்று வேண்டிய போதும், அந்நியர்களாய் மற்றவர்களை உண்ண அழைப்பவர்கள் போல இங்கு இருக்கும் உன்னை விட்டு, பரமபதத்தில் இருப்பவனிடம் போல கேட்க போகிறேனா என்று கேட்கிறார். உஜ்ஜீவனத்திற்கு போகும் இடம் இல்லை; நாசத்தை தேடி போக நிறைய இடம் உண்டு; உகந்து அருளின நிலங்களை விட்டு வேறு இடங்களுக்கு செல்வது நாசத்தை தேடி செல்வது போல ஆகும் என்கிறார்.

இந்த பதிகத்தில் இது வரையில், நீ என்ன செய்தாலும் உன்னை விட்டு அகலமாட்டேன் என்று உரைத்த ஆழ்வார், இனி வேறு யார் எதைச்செய்தாலும், அவர்களிடம் செல்ல மாட்டேன் என்றும்  சொல்வது போல் பாடல்களை அமைத்து உள்ளார். தாமரை, சூரியனை பாரத்தால் மட்டுமே மலரும், தீயோ அல்லது மற்ற எந்த விதமான வெப்பத்தைத் தருகின்ற உபாயத்திலும் மலராது, அது போல் உன்னுடைய உயர்ந்த குணங்களுக்கு மட்டுமே நெஞ்சு உருகுவேனே  தவிர, மற்றவைகளுக்கு நெஞ்சு உருக மாட்டேன் என்று வித்துவக்கோட்டு அம்மானிடம் தெரிவிக்கின்றார். தாமரைக்கு வெகு தூரத்தில் சூரியன் இருந்தாலும், அக்னியை வெகு அருகே கொண்டு வந்தாலும் அக்னியை சாதனமாக கொண்டு தாமரை அலராது என்பது போல பாவங்களை போக்கி மோக்ஷத்தை கொடுக்க கூடிய எம்பெருமான் துயர் கொடுத்தாலும் கல்யாண குண நலன்களை கொண்ட எம்பெருமானை தவிர வேறு எங்கும் தன் நெஞ்சு செல்லாது என்கிறார்.

மேகம், தொடர்ந்து பலகாலம் மழையை தராவிட்டாலும், பசுமையான பயிர்கள், தனக்கு வேண்டிய நீருக்காக, அந்த மேகத்தை எதிர்பார்த்து கொண்டு இருக்குமே தவிர வேறொன்றையும் எதிர்பார்க்காது இருப்பது போல், ஆழ்வாரும், பரமாத்மாவாகிய வித்துவக்கோட்டு அம்மான், தன்னுடைய துன்பங்களை போக்காமல் விட்டாலும், தான் தொடர்ந்து அந்த பெருமானையே வேண்டி இருப்பேன் என்று கூறுகிறார். பாவத்தை போக்கி சம்சார சாகரத்தில் இருந்து விடுதலை வாங்கி கொடுக்க வந்திருகின்ற நீ, அது செய்யவில்லை என்றாலும், என் பாதுகாப்பில் நெகிழ்ந்தாய் என்று உன்னிடம் தோற்று உன் பக்கம் நெஞ்சு நிலையாக இருக்கிறது என்று சொல்கிறார்.

கரை புரண்டு ஓடுகின்ற நதியானது, கண்டவிடமெல்லாம் ஓடி, கடைசியில் அது ஆழமான கடலிடத்தில் சென்று அடையுமே தவிர வேறு எங்கும் சென்று முடியாது என்பது போல், தானும் வித்துவக்கோட்டு அம்மானின் திவ்யகுண நலன்களில் மூழ்கி இருப்பேனே  தவிர வேறுஎங்கும் தனது  கவனத்தை திருப்ப மாட்டேன் என்று இந்த பதிகத்தின் எட்டாவது பாடலில் தெரிவிக்கின்றார். இந்த நதிகள் புகுந்தால் தான் கடல் நிறைந்து காணபடுகிறது என்றோ, இவை புகாவிட்டால் கடல் குறைந்துவிடும் என்றோ கிடையாது. இந்த நதிகளுக்கு வேறு வழியில்லாமல் கடலில் புகுகின்றன, அது போல, உன் கல்யாண குணங்களை தவிர வேறு எங்கும் புக எங்களுக்கு வழி இல்லை என்கிறார்.

இந்த பாடலில் வரும் உதாரணம் சிறிது கடினமானது. உலகத்தில் உள்ள செல்வங்களை  விரும்பாமல். பெருமானையே வேண்டி நிற்பவனை செல்வம் தானாக வந்தடையும் என்பது உலக நியதி. எவனொருவன் ஆண்டவனிடம் அன்பு கொண்டு அவனை மட்டுமே விரும்பி, இந்த உலக ஐஸ்வரியம் மற்றும் பிற பொருள்களை விரும்பாதவனுக்கு, பகவான் எப்படி தொடர்ந்து அன்பு காட்டி அவனுக்கு மேலும் மேலும் எல்லா செல்வங்களும் தருகிறார் என்பது உதாரணத்தின் ஒரு பகுதி.    இது, ஆழ்வார் தன்னுடைய வாழ்க்கையே சொல்வது போல் உள்ளது.   சிறந்த வீரரும், மன்னருமாய் விளங்கும் ஆழ்வார், இந்த உலக செல்வம் வேண்டாம், ராஜ்ஜியம் வேண்டாம் என்றும் மோட்சம்  தான் வேண்டும் என்ற போதும், அவருடைய ராஜ்ஜியம் சேர நாட்டில் இருந்து மேலும் மேலும் சோழ, பாண்டிய நாடுகளாக விரிவு அடைந்து கொண்டே இருந்தது.

இறைவனையே வேண்டி செல்வத்தை வேண்டாதிருப்பவருக்கு செல்வம் தானாக வந்து சேரும் என்கிற கருத்து சிந்திக்கத்தக்கது.   சில பெரியவர்கள், சென்ற வாக்கியத்தின் செல்வம் என்பது, மோட்சம் என்று பொருள் சொல்வதுண்டு.  ‘அண்ட சராசரங்களை வைகுந்தத்திற்கு ஏற்றிய” ஸ்ரீ ராமர், அனுமனுக்கு மோட்ச பலன் கொடுத்தும், அனுமன் அதனை தவிர்த்து, இந்த உலகத்தில் எங்கெல்லாம் ஸ்ரீ ராமர் பூஜை செய்யப்படுகிறாரோ அங்கெல்லாம் இருக்கவே ஆசைப்பட்டார். அதே போல், தொண்டரடிப்பொடி ஆழ்வார் மற்றும் திருப்பாணாழ்வார் இருவரும் தம் பாசுரங்களில் திருவரங்கத்தில் இருப்பதையே வேண்டுகின்றனர்.   “அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே” என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் சொன்னதையும், “என் அமுதினைக் கண்ட கண்கள்   மற்றொன்றினைக் காணாவே” என்று திருப்பாணாழ்வார் பாடியதையும் கருத்தில் கொண்டால், குலசேகர அழுவார் சொன்ன செல்வம் என்பது மோட்சத்தையே குறிக்கும். ஏனென்றால், அனுமனும், தொண்டரடிப்பொடி ஆழ்வாரும், திருப்பாணாழ்வாரும், மோட்சம் வேண்டாம் என்றாலும் அவர்களுக்கு பரமாத்மா மோட்சத்தைக் கொடுத்து இருக்க வேண்டும். அதே போல், பரமாத்மாவான வித்துவக்கோட்டு அம்மான், ஆழ்வாரை கவனிக்காமல், ஆழ்வாருக்கு அருளாமல் இருந்தாலும், ஆழ்வார் மீண்டும் மீண்டும் வித்துவக்கோட்டு அம்மானிடமே செல்வேன் என்று உறுதியாக சொல்கிறார்.

இந்தப் பத்துப் பாடல்களிலும் இதே தொனியில் எந்தத் துயரம் தந்தாலும் உன்னை விட மாட்டேன் என்பது பல வித படிமங்களில் விரிகிறது.  மேலே சொன்ன பாசுரங்களை படிப்பவர்களுக்கான பலனை இறுதி பாசுரத்தில் வெளியிட்டு, இந்த பதிகத்தினை  ஆழ்வார் முடிக்கிறார்.  வித்துவக்கோட்டு அம்மான் ஆழ்வாரை வேண்டாம் என்று ஒதுக்கி வைத்தாலும் தான் வேறு  யாரையும் சரண் அடைய மாட்டேன் என்றும்,  அந்த பெருமானின் திருவடிகளிலேயே பக்தி கொண்டு காத்து இருப்பேன் என்றும் சொல்லும் ஆழ்வார் இந்த பதிகத்தைப் படிப்பவர்கள் எத்தனை கொடிய பாவங்கள் செய்து இருந்தாலும் நரகத்தை அடைய மாட்டார்கள் என்றும்  இந்த சம்சார வாழ்க்கைக்கு திரும்ப வர மாட்டார்கள் என்றும் சொல்லி முடிக்கிறார்.

மீண்டும் இன்னொரு திவ்ய தேச அனுபவத்தில் சந்திப்போம், நன்றி.

திருப்பாவை – சிறு விளக்கம்

ஸம்ஸாரத்தில் தூங்கிக்கொண்டு இருந்த மற்ற ஆழ்வார்களை எழுப்பி, எம்பெருமான், தன்னை காட்டி கொண்டார், ஆனால் ஆண்டாள் உறங்கி கொண்டு இருக்கும் எம்பெருமானை எழுப்பி, தன் குறையை சொல்வதில் இருந்து, இவள் மற்ற ஆழ்வார்களிடம் இருந்து வேறுபடுகிறார். மார்கழி நோன்பு என்ற ஒரு காரணத்தை வைத்துக்கொண்டு, எம்பெருமானிடம் சென்று, இந்த பிறவியை அனர்த்தம் ஆகாதபடி, கைங்கரியங்கள் கொடுத்து, உஜ்ஜீவிக்கும் படி கேட்டு கொள்கிறாள்.

திருப்பாவையின் சிறப்புகள் இங்கே கொடுக்கப் பட்டுள்ளன. ஒவ்வொரு பாடலும் அதன் சிறிய விளக்கமும் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன. இங்கே அதில் இருந்து எடுக்கப் பட்ட ஒரு சிறு தொகுப்பு கொடுக்கபட்டு உள்ளது.

மார்கழி நோன்பு

மார்கழி

நாம் நோன்பு நோற்பதற்கு சரியான காலம் மார்கழி என்று அந்த மாதத்தினை கொண்டாடி, மார்கழி நீராட்டத்தில் விருப்பமுடைய பெண்களை அழைப்பது மார்கழி திங்கள் என்ற முதல் பாட்டு. நெடுநாளாகக் கண்ணனைப் பிரிந்து இருந்ததால் உண்டான தாபம் முழுவதும் அடங்க, நீராட விருப்பமுடையீர் வாருங்கள் என்று அழைக்கிறார். இங்கு, நீராட என்று கூறியது, “கண்ணனோடு சேர்ந்து இருக்க” எனக் கூறியதாகும். தங்களுடைய கைங்கரிய விருப்பத்தை தெரிவிக்கவே பறை என்று சொல்லிக் கொண்டு போவது. அந்த கைங்கரியத்தைத் தாமாகவே செய்ய இவர்களுக்கு பிராப்தி இருந்தாலும், எம்பெருமானின் நியமனம் கொண்டு செய்வதே தகும் என்பது அவர்கள் கருத்து. மீட்சியின்றி வைகுந்த மாநகர் புகுவதற்கு ஆசை மட்டும் இருந்தால் போதும், வேறு ஒருவகை அதிகாரமும் வேண்டாம் என்று சொல்கிறார். கண்ணனது திவ்விய சேஷ்டிதங்களைக் கண்ட களிப்பின் மிகுதியால் யசோதைக்குக் கண்கள் அழகு மிகுந்து தோன்றியதால் “ஏரார்ந்த கண்ணி” என்ற அடைமொழி கொடுக்கப் பட்டது. பகவத் கைங்கரியத்தில் ருசியுடைய பாகவதர்களை கைங்கரியத்திற்கு அழைத்தல் இதற்கு உள்ளுறைபொருள். 

வையத்து

பகவத் விஷயத்தில் எவற்றை செய்ய/பற்ற வேண்டும், எவற்றை விட வேண்டும் / செய்ய கூடாது என்பதை வையத்து வாழ்வீர்காள் என்ற இரண்டாவது பாட்டில் சொல்கிறார். மற்ற உலக விஷயங்களில் பற்ற வேண்டியவைகளும், விட வேண்டியவைகளும் அரிதாக இருக்கும், ஏனெனில் இது அவரவர் கர்மத்தை கொண்டு இருக்கும். இதே போல அவரவர் கருமத்தை பொருத்தே, மனமும் ஒரு சமயம் விடுவதை அடுத்த சமயம் பிடிக்கும் என்ற நிலையை எடுக்கும். இப்படி இல்லாமல் அல்பமாய் இருக்கிற விஷயங்களை விட்டு, சமஸ்த கல்யாண குணாத்மகனை பிடிப்பதால், இரண்டும் எளிது என்கிறார். சென்ற பாட்டில், ப்ராப்ய, ப்ராபக, அதிகாரி ஸ்வரூபங்களை சொன்ன ஆண்டாள், இங்கே அந்த அதிகாரிக்கான ஸ்வபாவங்களை இந்த பாடலில் சொல்கிறார். நோன்பு ஆகிற விசேஷ காரியத்தில் ஈடுபட்ட ஆயர் மங்கைகள் தாங்கள் விட வேண்டியவைகளையும், பற்ற வேண்டியவைகளையும் சொல்கிறார்.

ஓங்கி

ஆயர் மங்கைகள் எம்பெருமானையே எல்லா வகைப் பயனாகவும் உள்ளத்தில் கொண்டு உள்ளவர்கள், ஆதலால் அந்த எம்பெருமானை ஓழிய வேறொரு பயனையும் விரும்ப மாட்டார்கள்; ஆயினும் இவர்கள் நோன்பு நோற்குமாறு அநுமதி அளித்தவர்களுக்கு சில பலன்கள் தருமாறு வேண்டுகிறார்கள். இந்த மார்கழி நீராட்டத்தினால் ஊரோடு சம்பந்தபட்ட நாட்டுக்கும் வளம் விளையும் என்று கூறப்படுகின்றது.  பகவந் நாம ஸங்கீர்த்தநம் பண்ணிப் பகவத் அநுபவம் பண்ணினால் இந்த உலகமே தோஷங்கள் ஒன்றும் இன்றியே இருக்கும் என்று இந்த ஓங்கி உலகளந்த என்ற பாட்டில் சொல்கிறார். ‘தன் முடிமேல் அடி வைக்க வேண்டும் என்று ஒருவரும் வேண்டாதிருக்கச் செய்தேயும் அளப்பதையே ஒரு காரணமாக கொண்டு, அனைவர் முடியிலும் தீண்டி அருளின எம்பெருமான், இன்று இரந்து வேண்டும் நமது காரியத்தை முடிக்காமல் விடமாட்டான் என்று கருத்து தோன்ற ஆச்சியர்கள் ‘உலகளந்தான்‘ என்கிறார்.

ஆழி

ஆயர் சிறுமியர் தாம் மார்கழி நீராடினால் நாட்டுக்கு விளையும் நன்மைகளை இப்படி சிந்தித்து கொண்டு இருக்க, மழைக்கு நிர்வாகனனான பர்ஜயன் (மேகம்), பகவத் காரியம் செய்யும் அவர்களுக்கு சிறிது உதவி செய்தால் தனக்கும் ஸ்வரூப லாபம் கிடைக்கும் என்று எண்ணி, அவர்களிடம், ‘நான் உங்களுக்காக செய்ய வேண்டியவைகளை செய்ய அடியேன் என்னன்ன செய்ய வேண்டும் என்பதை நியமிக்க வேண்டும்’ என்று பிரார்த்தித்து நிற்க, ஆய்ச்சியர்கள், “ ‘பெண்கள் நோற்றது என்ன, மழை பெய்தது எப்படி’ என்று அனைவரும் நன்றாக கொண்டாடும்படி மழை பெய்ய வேண்டும்” என்று அவன் செய்யவேண்டிய கைங்கரியத்தை ஆழி மழைகண்ணா என்ற பாட்டினால் சொல்கிறார்.

மாயனை

‘நாராயணா’ என்று பரமபதம் முதல் பாட்டிலும், திரு அவதாரங்களுக்கு அர்த்தமான திருப்பாற்கடலில் கண்வளர்ந்து இருப்பது இரண்டாம் பாட்டிலும், இந்திரன் குறை தீர, ஸ்ரீ வாமனனாக திரு அவதாரம் செய்து, ஒரு நாடாக, யாரிடமும், எந்த வித்தியாசமும் பாராமல் திருவடிகளை கொண்டு தீண்டியது மூன்றாம் பாட்டிலும் சொல்லப் பட்டது. மாயனை என்ற பாட்டில் கிருஷ்ணனாய் திருஅவதாரம் செய்து, எளியவனாய், ஒரு அளவும் இல்லாமல், எல்லோருக்கும் கட்டவும், அடிக்கவும் இடம் கொடுத்து, ஒரு ஊருக்காக தன்னை முற்றுமாய் கொடுத்ததை சொல்கிறது. மன்னு வட மதுரை மைந்தனை என்று சொல்லியதால், அர்ச்சை சொல்லபட்டது.

திரிவிக்ரமனாக அவதரித்து எல்லோருடைய விரோதிகளையும் போக்கியதை நினைத்து, இதனை நாம் இழந்து விட்டோம் என்று வருந்தி, நமக்கு என்று கிடைத்த வாய்ப்பை கொண்டு பகவத் அனுபவத்தை செய்ய வேண்டும். ஆகையால் மாயனை, மன்னு வட மதுரை மைந்தனை, தூய பெருநீர் யமுனை துறைவனை, ஆயர் குலத்தில் தோன்றும் அணிவிளக்கை, தாயை கூடல் விளக்கம் செய்த தாமோதரனை, செப்பு, போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் என்கிறார்கள்.

ஆண்டாள் வரிசைக் கிரமமாக பரந்தாமனின் பர, வியூஹ,  விபவ,  அந்தர்யாமிஅர்ச்சை நிலைகளை முதல் 5 பாசுரங்களில் பாடி உள்ளார். (“நாராயணனே நமக்கே பறை தருவான், பாற்கடலுள் பையத்துயின்ற பரமன், ஓங்கி உலகளந்த உத்தமன், ஊழிமுதல்வன், வடமதுரை மைந்தனை” ). அது மட்டும் இல்லாமல் அடுத்த பாடலான புல்லும் சிலம்பின என்ற பாட்டில், உள்ளத்து கொண்டு முனிவர்களும், யோகிகளும் என்று மீண்டும் அந்தரயாமியில் சொல்கிறார்.

நோன்பிற்கு பெண்களை எழுப்புவது

புள்ளும்

புள்ளும் சிலம்பின என்ற பாட்டு முதல், “எல்லே இளங்கிளியே” என்ற 15ம் பாட்டு வரையில் பத்துப் பாசுரங்களாலே, பாவை நோன்பு நோற்க, மற்ற பெண்களை எழுப்ப, திருப்பள்ளியெழுச்சி பாடப்படுகின்றது.  ஆச்சியர்களின் கிருஷ்ண அநுபவத்திற்குப் பிரதான உபகரணமான, அவன் மீது ஆசையும், ஏகாந்தமான காலமும், ஆயர்குல பெரியவர்களின் இசைவும் பஞ்சலக்ஷங்குடியில் பெண்களுக்கும் ஒருங்கே வாய்த்த போதும், சுவைமிக்க பொருள் தனியே புஜிக்கத் தக்கது அல்லது என்பதால் தோழிமார்களுடன் கூடிப் புசிக்க ஆசை கொள்கின்றனர். பகவத் சம்பந்ததைவிட, பாகவதர் சம்பந்தம் சரியானது ஆனதாலும், பகவத் விஷயம் தனியே அனுபவிக்கும் விஷயம் இல்லாததாலும், உணராதவர்களை உணர்ந்தவர்கள் எழுப்புகிறார்கள்.

பெண் பிள்ளைகள், பொழுது விடிந்தமையை அறியாமல் கிடந்து உறங்குகின்ற பெண் ஓருத்தியின் மாளிகை வாசலில் நின்று பிள்ளாய், விடிந்த பின்பும் இப்படி உறங்கலாகுமோ’, என்று சொல்ல, அதனைக் கேட்ட அவள் ‘பொழுது விடிந்தமைக்கு அடையாளம் ஏது? என்று கேட்க, “புள்ளுஞ் சிலம்பினகாண்” என்று ஓர் அடையாளம் கூறுகின்றனர். திருப்பள்ளியெழுச்சிக்கு ஊதின சங்கின் ஒலியும் இன்னொரு அடையாளமாக சொன்னார்கள். இது பெரியாழ்வாரைத் திருப்பள்ளி யுணர்த்தும் பாசுரம் என்று சொல்வார் உண்டு.

கீசு கீசு

பகவத் விஷயத்தில் சுவடு அறிந்து மறந்து உறங்குகின்ற இன்னொருத்தியை ‘கீசு கீசு’ என்ற பாடலில் எழுப்புகின்றாள். ‘அடியார் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ’ என்றும், ‘அந்தமில் பேரின்பத்து அடியோவரோடு இருந்தமை’ என்று எல்லோருடன் இருப்பதால் இனிமை உண்டாவதை கீசு கீசு என்ற பாடலில் ஆச்சியர் சொல்கின்றனர். பேய்ப்பெண்ணே என்ற பெண்ணை எழுப்ப முயற்சிக்கையில் ஆனைச்சாத்தன் பேச்சரவம், மத்தினால் ஓசை படுத்த தயிர் அரவம் ஆகியவற்றை விடிந்ததற்கு அடையாளமாக கூறுகிறார். கேசி வத வ்ருத்தாந்தமும், சக்கரவர்த்தி திருமகனை, ஜனகனின் மகள் தழுவிகொண்ட சரித்திரமும் சொல்லப்பட்டது. குலசேகராழ்வாரை உணர்த்தும் பாசுரம் என்று சொல்வார்கள் உண்டு.

கீழ்வானம்

எல்லோரும் திரண்டு வந்து அழைக்க வேண்டும்பட, கண்ணனுக்கு மிகவும் அந்தரங்க வல்லபையாக இருப்பாளை, கோதுகலமுடை பாவாய் என்ற ஒருத்தியை உணர்த்தும் கீழ் வானம் வெள் என்று என்ற பாசுரம். கீழ்வானம் வெள்ளென்று என்றும் எருமை சிறுவீடு மேய்வான் என்ற அடையாளங்களை சொல்கிறது. உத்தேச்யமானதொரு ஸ்தலத்தைச் சென்று சேர்வதை காட்டிலும், அத்தலத்தை நோக்கிச் செல்லுகைதானே, அர்ச்சிராதி கதி போல், போக ரூபமாக இருக்கும் என்பதை இந்த பாடல் கூறுகிறது. ஸர்வசேஷியான எம்பெருமான், சேஷபூதர் இருக்குமிடத்தே வந்து அருள் புரியக் கடமை உடையனாய் இருந்து, அவன் அப்படி செய்யாது இருந்தால், நாம் நம் ஸ்வரூபத்தைக் குலைத்துக் கொண்டாகிலும் அவனிருக்கும் இடத்திற்கு சென்று சேவித்தால், அவன் நம் காரியத்தை நாம் செய்யத் தவறினோமே; அன்ன நடை அணங்குகளை கஷ்டப் படுத்தினோமே என்று நம் மீது இரக்கம் கொண்டு, நம் காரியத்தைச் செய்து முடிப்பான். எல்லாருமாகத் திரண்டு, எழுந்து வாருங்கள் என்று அழைக்கின்றனர். கிருஷ்ண திரு நாமங்களை வாயாரப்  பாடியதே ஒரு பலன் என்றும், பறை கொண்டு என்பதை, நாட்டிற்கு பறை கொண்டு என்றும், தங்களுக்கு கைங்கரியம் கொண்டும் என்பதை மற்றொரு பலன் என்றும் சொல்கிறது. நம்மாழ்வாரை உணர்த்தும் பாசுரமிது என்று சொல்வார்கள்.

தூமணி

கண்ணன் வந்த போது வருகிறான் என்று அநாதரித்து கிடக்கும், மைத்துனமை உறவை உடைய ஒருத்தியை, மாமன் மகளை, தூமணி மாடத்து என்ற இந்த பாடலில் எழுப்புகிறார்கள். இவள் நினைவு, தன்னுடைய ஸ்வரூபத்தை உணர்ந்து அனுபவிக்க வேண்டியதும் அவன் காரியம் ஆயிற்றே என்பது தான். சுற்றும் விளக்குகள் விளங்கப் பெற்றுத் தூபங்கள் என்பது சொன்ன அடையாளம் ஆகும். திருவாய்ப்பாடியிலே ஒரு அடியவரின் ஸம்பந்தம் தனக்கு மோக்ஷம் கொடுக்க உதவும் என்று ஆண்டாள் ஆசைப்பட்டபடி” என்று உரையாசிரியர் ஆறாயிரப்படி வியாக்கியானத்தில் கூறி உள்ளார். இது திருமழிசைப்பிரானை யுணர்த்தும் பாசுரம் என்று சொல்வார்கள்.

நோற்று

எல்லோரும் கிருஷ்ண அனுபவத்தில் தங்களை படுத்துவதாக சொல்லும் நேரத்தில், கிருஷ்ணன், ‘தண்ணீர், தண்ணீர் என்று கதறும்படியாக அவனைப் படுத்தும், நேரம் ஆவதற்கு அவனே காரணம் என்று, அவனிடம் சண்டை போடும், கிருஷ்ணன் திருமாளிகைக்கு அடுத்த திருமாளிகையாய், இடை சுவர் இன்றி, அவனுடன் ஒரே படுக்கையில், தண்ணீர் துரும்பு அற்று படுத்து இருக்கும் ஒருத்தியை, ஆற்ற அனந்தல் உடையாய் என்று இருக்கும் ஒருத்தியை, வெளியில் இருக்கும் மற்றவர்கள் எழுப்பும் நோற்று சுவர்க்கம் என்ற பாசுரம். நாராயணனே என்று அவனையே உபாயமாக அனுசந்தித்து விடிந்த பின் எழுந்து குளிக்க கடவது என்று இருக்கிறாள். கிருஷ்ணனே சுக சப்த வாக்கியன் ஆனதால் அவனையே சுவர்க்கம் என்கிறார்கள். நாற்ற துழாய் முடி நாராயணன் என்று சொன்னது, ஆசைபட்டவர்களை ரக்ஷிப்பதாக தோளில் மாலை இட்டு இருப்பவன் என்று சொல்கிறார். “ஸ்ரீ பரசுராமனை வென்று பெருமாள் (ராமபிரான்) அவன் கையில் வில்லை வாங்கினாற் போலே, நீயும் அவனை வென்று நித்திரையைக் கைக்கொண்டாயோ?” என்பது ஆராயிரப்படி விளக்கம். ஊற்றமுடைய மஹாநுபாவரை உணர்த்துதல் இப்பாட்டுக்கு உள்ளுறை பொருளாகும். பேயாழ்வாரை உணர்த்தும் பாசுரம் என்பார்கள்.

கற்று

கண்ணன் ஊருக்கான ஒரு பிள்ளையாய் அனைவராலும் கொண்டாடப்பட்டு, வளர்ந்து அருளுவதை போல, ஊருக்காக ஒரு பெண்பிள்ளையாய் இருப்பாளாய், கணவனோடு கலவி செய்கைக்குப் பாங்கான பருவம் உடையளாய் இருக்கும் கோவலர் தம் பொற்கொடி என்கிறவளை, அவனைப் பெறுதற்கு நானோ நோற்பேன், வேணுமாகில் அவன் தானே நோற்று வருகிறான் என்று கிடக்கிறாள் ஓருத்தியை உணர்த்தும் கற்று கறவை என்ற பாசுரம். உனது உறவு முறையார் தோழிமார் என்ற வர்க்கங்களில் ஒருவர் தப்பாமல் அனைவரும் திரண்டு வந்து எம்பெருமான் திருநாமங்களைப் பாடும் போது, நீ உடம்பிலும் அசைவின்றி, வாயிலும் அசைவின்றி, இப்படி கிடந்து உறங்குவது என்ன பயனைக் கருதியோ என்கின்றனர். கண்ணன் கன்றுகளை அன்றிப் பசுக்களைப் பெரும்பான்மையாகக் காண மாட்டாதவன் ஆதலால், இவன் தனது கர ஸ்பர்சத்தினால் பசுக்களையும் கன்றாக்கி அருள்வான் என்கிறார்கள். கணங்கள் பல என்றதால் கறவைகள் தனித்தனியே எண்ண முடியாதவை மட்டும் இல்லாமல், அவற்றின் திரள்களும் எண்ண முடியாதது எம்பெருமானது மேன்மையைப் பொறுக்க முடியாதவர்கள், எம்பெருமான் அடியார்களுக்கு பகைவர்கள்.  திறலழிய என்று சொன்னது, ருத்ரன், பிரம்மன், இந்திரன், ஈஸ்வரன் போன்றவர்களை தமக்கு எதிரி என்று நினைத்து இருந்த, கம்சனின் மிடுக்கை அழித்த என்ற பொருளில் வருகிறது. இது பூதத்தாரை யுணர்த்தும் பாசுரம் என்பர்.

கனைத்து

நாட்டில் இருந்த நாட்களோடு, காட்டில் இருந்த நாட்களோடும் ஒரு வித்தியாசமும் இல்லாமல் எம்பெருமான் இராமனை பின்தொடர்ந்து, நோக்கிக் கொண்டு திரியும், இளையபெருமாளை (லக்ஷ்மணன்) போன்று, கண்ணனை அன்றி மற்றொருவரையும் அறியாமல் என்று மொத்தமாக அவனையே பின் தொடர்ந்து அவன் பக்கம் மிகவும் பரிவு பூண்டிருப்பான் ஓருவனுடைய தங்கையாய்ச் சீர்மை பெற்றிருப்பாள் ஓரு ஆய்ப்பெண்ணை, நற்செல்வன் தங்காய் என்பவளை, உணர்த்தும், கனைத்து இளம் கற்றெருமை என்ற பாசுரம். கறவைகளைக் காலந் தவறாது கறப்பதில்லை ;  அந்த கறவைகள் வகுத்த காலத்தில் கறக்கப் படாததால், வாசலிலே நின்று குமுறி, தூரத்தில் கட்டப்பட்டு நின்றுள்ள கன்றின் மீது தனது பாசத்தை செலுத்தி அதனால், கன்று பால் குடிப்பதாக நினைத்துக்கொண்டு, முலை வழியே பால் சொரிந்து கொண்டே இருக்கும். அர்ஜுனன் கேளாதே இருந்த போதும், கண்ணன் கீதையை கூறத் தொடங்கினால் போல உள்ளது கரவைகள் பால் சுரப்பது என்கிறார். அந்தப் பால் பெருக்கால் வீடு முழுவதும் வெள்ளம் பெருகியது. அது ராவண வதம் முடிந்த பிறகு, திருவயோத்திக்கு மீண்டும் எழுந்து அருள, பெருமாளை (இராமன்) நோக்கி, பரத்வாஜ மஹர்ஷி, பரதாழ்வான் இரவும் பகலும் எப்போதும் அழுது அழுது, நனைத்தில்லம் சேறாக்கினன் என்பதற்கு ஒப்பு ஆகும். இங்கு பால் சேறு ஆனாலும் அதனைச் செல்வம் என்று சொல்லி, இப்படி செல்வம் உடையானுக்குத் தங்கையாகப் பிறந்தவளே! என்று அவளை அழைக்கின்றனர். தென் இலங்கை கோமானை, என்பதை பற்றி சொல்லும் போது, ஒரு அம்பாலே இராவணனின் தலை அறுக்காமல், படையை கொன்று, புத்திர, பௌத்திரர்களை கொன்று, ஆயுதங்களை முறித்து, அரக்கர் கோன் என்ற பெருமைகளை அழித்ததை சொல்கிறார். இராமன் இராவணனோடு போர் புரியும் போது அவன் ஆயுதங்களை இழந்து நிற்கும் போது, இரக்கமுற்று, “போரில் மிகவும் வருத்தமுற்றாய்; ஆதலின் இன்று இருப்பிடம் சென்று சிறிது தேறி நாளை போர்க்கு வா,” என்று அனுமதி தந்து, தானே போகவிட்டு அருளினது முதலிய பல குணங்களினால் “மனத்துக்கு இனியானை” என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது. 

பொய்கை யாழ்வாரை யுணர்த்தும் பாசுரமிது என்பார்கள். இந்த பாசுரத்தோடு ஆண்டாளுக்கு முந்தின ஆழ்வார்களை எல்லாம் சொல்லியாயிற்று. ஸ்ரீ மதுர கவி, ஆண்டாள் ஆகிய இவ்விருவரையும் உணர்த்துவதும் இப்பாட்டிலேயே இருக்கிறது என்றும் சொல்வார்கள்.

புள்ளின்

கண்ணன் பிறந்து வளரும் ஊரான திருவாய்ப்பாடியிலே அவனையே பாட வேண்டியிருக்க, அவனை விட்டுத் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற இராமனைப் பாடுவதும்,  அவனை மனத்துக்கினியான் என்று பாடியதையும் க்ருஷ்ண பக்தர்களுக்கு ஒரு பெரிய கிளர்ச்சி தோன்றியது.  உடனே சில பெரியார்கள் கண்ணனும் இராமனும் ஒரு திருமூர்த்தியே என்கிற தத்துவத்தை விளக்கி ஸமாதானம் பண்ண, பிறகு ஒருவாறு தேறி அவ்விரண்டு திருமூர்த்திகளையும் சேர்த்து ஆனந்தமாகப் பாடுகிறார்கள். தன் கண் அழகினில், பெருமை கொண்ட ஒருத்தி, தன் கண் அழகிற்கு எல்லோரும் தன்னை வந்து பார்க்கும் போது, தான் ஏன் கண்ணனை சென்று பார்க்கவேண்டும் என்று இருக்கும் ஒருத்தியை, போதரிக் கண்ணினாயை, மற்றவர்கள் எழுப்பும், புள்ளின் வாய் கீண்டாய் என்ற பாசுரம். விரோதியை போக்கி, தன்னை கொடுப்பது, அவன் பணி ஆகும். இவனுடைய அனுமதியும், அவனுடைய ரக்ஷகத்வமும் ஸ்வரூபத்தில் புகுமத்தனை, கர்ம ஞானங்களை துணையாக கொண்டு, பக்தியை உபாயம் என்று இருப்பவர்கள் அன்றோ இவர்கள். சென்ற பாட்டிலும் இந்த பாட்டிலும் இராமனை பற்றி பாடிய இவர்கள் இந்த பாட்டில் இராமனோடு சேர்ந்து, கண்ணனையும் பாடுகிறார்கள். கண்ணனோடு இராமன் ஏன் என்றால், இராமன் பிராட்டியை பிரிந்து வருந்துபவன், திருவினை பிரித்த குற்றத்திற்காகவும், பொல்லா அரக்கன் என்று சொன்னார்கள். “புள்ளுஞ் சிலம்பின காண்” என்று பறவைகளின் ஆரவாரங்களை அடையாளமாகக் கூறுகின்றனர். இது தொண்டரடிப்பொடி ஆழ்வாரை உணர்த்தும் பாசுரம் என்று சொல்வார்கள். ‘பிள்ளைகளெல்லாரும்’ என்று ஆண்டாள் சொன்னதால், தனக்கு முந்தின எல்லா ஆழ்வார்களையும் சொன்னபடியும் ஆகும்.

உங்கள்

ஆய்ச்சியர்களுக்கு எல்லாம் தலைவியாய், ‘நான் எல்லார்க்கும் முன்னே உணர்ந்து வந்து எல்லாரையும் உணர்த்தக் கடவேன்’ என்று சொல்லி வைத்து, அதனை மறந்து உறங்குவாள் ஓருத்தியை, நங்காய், நாணாதாய், நாவுடையாய் என்ற ஒருத்தியை, உணர்த்தும், உங்கள் புழக்கடைத் தோட்டத்து என்ற பாசுரம். செங்கழுநீர் அலர்ந்து ஆம்பல்வாய் கூம்பினது, புழக்கடை தோட்டத்துள் இருக்கும் ஆம்பல் பூ என்று அடையாளங்கள் சொல்கிறார்கள். செங்கற்பொடிக்கூறை என்று சொல்வதன் மூலம், திவ்யதேசங்களில் ஜீயர் ஸ்வாமிகள் எழுந்தருளித் திறவுகோல் கொடுத்துத் திருக்காப்பு நீக்குவிக்கிற ஸம்பிரதாயம் உண்டானதை சொல்கிறது. கண்ணபிரான் திருவவதரிக்கும் போது திருவாழியும் திருச்சங்குமாகத் தோன்ற, தேவகி அது கண்டு அஞ்சி, ‘இந்த ஆயுதங்களை மறைத்துக் கொள்’ என வேண்ட அவனும் அப்படியே அந்த ஆயுதங்களை உடனே மறைத்துக்கொண்டான் என்பது வரலாறு. ஆச்சியர்கள் கண்ணனைச் சங்கொடு சக்கரமேந்தும் தடக்கையனாகக் கூறுதல், கண்ணன் அவ்வாயுதங்களை மறைத்தது உகவாத பகைவர்களுக்காக அல்ல என்றும் அன்பர்களுக்காத்தான் என்பதை சொல்கிறார். இந்த பாசுரம், திருப்பாணாழ்வாரை உணர்த்தும் பாசுரம் என்று சொல்வார்கள்.

எல்லே

எல்லாப் பெண்களுடைய கூட்டத்தை காண கருதிக் கிடப்பாள் ஓருத்தியை, இளம் கிளியே என்ற ஒருத்தியை, உணர்த்தும் எல்லே இளம் கிளியே என்ற பாசுரம். இந்த பாடலே திருப்பாவை ஆகிறது என்று ஆராயிரப்படி விளக்கம் சொல்கிறது. பகவத் விஷயத்தில் சிற்றம் சிறு காலையில் என்ற பாடலில் இருக்கும்படி சொல்கிறது; பாகவத விஷயத்தில் இருக்கும்படி இந்த பாடல் சொல்கிறது; பங்கய கண்ணானை பாடு என்று அகத்தில் உறங்கும் பெண்ணை எழுப்பும் பாடல். இந்த பாடல் முழுவதும், ஒவ்வொரு சொற்தொடரும் வைணவத்தின் கருத்துக்களை அழுத்தம் திருத்தமாக சொல்கிறது. மாற்றாரை மாற்றழிக்க வல்லானை மாயனைப் பாட என்று சொன்னது, எம்பெருமான் தன் திறத்தில், மாறு செய்பவர்களது செருக்கை வெகு ஆச்சரியமாக அடக்குபவன் என்பதைக் காட்டுகின்ற சரித்திரங்களுக்குள் கோவர்த்தன கிரியை ஏந்தியது மிகச் சிறந்தது.  மாறு செய்த இந்திரனுக்கு ஒரு தீங்கும் இழைக்காமலே கண்ணன் அவனது கொழுப்பை அடக்கியது. திருமங்கையாழ்வாரை உணர்த்தும் பாசுரமிது என்று சொல்வார்கள்.

கண்ணன் திருமாளிகையில்

நாயகனாய்

சென்ற பத்து பாட்டுக்கள் பத்து பெண்களை உணர்த்தினதை கூறியது. பத்து பெண்களை சொன்னது, திருவாய்ப்பாடியிலுள்ள பஞ்சலட்சங் குடியில் உள்ள அத்தனை பெண்களையும் உணர்த்தியதை சொன்னதற்கு சமம். எல்லா பெண்களையும் உணர்த்தித் தம்முடன் கூட்டிக் கொண்டு எல்லோரும் பெரும் கூட்டமாக திரண்டு ஸ்ரீ நந்தகோபர் திருமாளிகை வாசலிற்கு சென்று, திருக் கோயில் காப்பானையும் திரு வாசல் காப்பானையும் நோக்கித் ‘திருவாசல் திருக்காப்பு நீக்கவேணும்’ என்று வேண்டியதை கூறும் நாயாகனாய் நின்ற என்ற பாசுரம். முதலடி, கோயில் காப்பானையும், இரண்டாவது அடி, வாசல் காப்பானையும் உணர்த்துகின்றது. உகந்து அருளின நிலங்களில் உள்ளே புகும் போது, க்ஷேத்திராதிபதிகளையும், துவார யக்ஷயர்களையும், அனுமதி பெற்று கொண்டு புக வேண்டும் என்று பகவத் சாஸ்திரங்களில் கூறியதுபோல, இந்த ஆச்சியர்களும் செய்கிறார்கள். அவன், (எம்பெருமான்) உணர்ந்தெழும் அழகுக்கு மங்களாசாஸநம் பாட வந்தோம் என்றார்கள். தோரணவாசலுக்குக் “கொடித்தோன்றும்” என்று சொன்னது, நடுநிசியில் ஆயர்மாதர் தடுமாறாமல் ‘இது நந்தகோபர் திருமாளிகை’ என்று உடனே உணர்ந்து வருதற்காகக் கொடி கட்டி வைக்கப்பட்டிருக்கும் என்பதாகும். ஏதாவது உபாயத்தை தேடியோ, வழியை தேடியோ வரவில்லை, எம்பெருமானுக்கு பல்லாண்டு பாடுவதே பரம புருஷார்த்தமாக நினைத்து வந்தோம், யாம் என்கிறார்கள்.

வாசல் காப்பான், “நான் உங்களை மறுக்கவில்லை’ கதவைத் தள்ளிக்கொண்டு புகுங்கள்” என்று சொல்ல, அது கேட்ட ஆய்ச்சியர்கள்,’ “நாயகனே! எம்பெருமான் திறத்து உனக்குள்ள பரிவினை காட்டிலும் மிக விஞ்சின பரிவு இந்த கதவிற்கு உள்ளது போலும்’ எங்களால் தள்ள முடியவில்லை” என்று சொல்கிறார்கள். வாயில் காப்பவன் இவர்களை விலக்குவது கண்ணன் மேல் உள்ள ஸ்னேகத்தாலே என்றால், இந்த நிலை கதவுகள் திறக்க முடியாமல் இருப்பதும் ஸ்னேகத்தாலே தான் என்கிறார். திறந்து கொள்வார் முகத்தில் அறைவது போல் கம்ஸனுடைய ஆட்களுக்கு உயிருள்ளவை, உயிரற்றவை என்று ஒரு வித்யாசமும் இன்றி எல்லாம் திருவாய்பாடியில் கண்ணனுக்கு துணை போகின்றன என்கிறார்.

நந்தகோபன், யசோதை, பலராமனை எழுப்புதல்

அம்பரமே

திருவாசல் காப்பவர்களின் அநுமதிகொண்டு உள்ளே புகுந்த ஆய்ச்சியர்கள் ஸ்ரீநந்தகோபரையும், யசோதைப் பிராட்டியையும், கண்ணனையும், நம்பி மூத்தபிரானையும் (பலராமன்) திருப்பள்ளி உணர்த்தும் அம்பரமே தண்ணீரே என்ற பாசுரம். கண்ணனை ஆய்ச்சியர்கள் களவு காண்பார்கள் என்ற அச்சத்தினால் நந்தகோபர் முன்கட்டில் கிடப்பாராம்.  முதல் கட்டில் நந்தகோபானும், இரண்டாம் கட்டில் யசோதையும், மூன்றாம் காட்டில் கண்ணனும், நான்காம் கட்டில் நம்பி மூத்தபிரானும் (பலராமனும்) பள்ளிக்கொள்வது முறையாதலால், அம்முறையை அடியொற்றி உணர்த்தியவாறு சொல்லப்பட்டது. ஸ்ரீ நந்தகோபரை எழுந்திராய் என்றும், யசோதையை ‘அறிவுறாய்’ என்று சொல்லியும் திருபள்ளி எழுப்புவது, இவளை நெஞ்சினால் உணர்த்தி எழுப்பினால் அது கண்ணனை பெறுவதற்கு உதவும் என்பதால் ஆகும். இப்படி வேண்டப்பட்ட நந்தகோபனையும், யசோதைப் பிராட்டியும் இவர்கள் உட்புகுவதற்கு இசைந்தமை தோன்ற, மூன்றாங்கட்டில் புகுந்து கண்ணனை உணர்த்துகின்றனர். இப்போது உலகளந்த வைபவத்தை எடுத்துக் கூறுகிறார். இவர்கள் இப்படி இரந்து எழுப்ப செய்தேயும், அவன் ‘இவர்கள் நம்பி மூத்த பிரானை எழுப்பாமல் நம்மை எழுப்புகின்றனர் ஆதலால் முறை கெடச் செய்தார்கள் என்று இவர்களுக்கு நாம் முகம் கொடுப்பது தகுதியன்று’ என்று பேசாதே கிடந்தான். செம்பொற் கழலடிச் செல்வா! என்று சொல்வதன் மூலம், தனக்குப் பின்பு ஸாக்ஷாத் ஸ்ரீகிருஷ்ணன் பின்னே பிறக்க, முன்னே பொற்கால் பொலிய விட்டுப் பிறந்த சீமானே!” என்ற ஆறாயிரப்படி அர்த்தம் கூறிய பலராமனை எழுப்புகிறார்கள். உம்பியும் நீயுமுறங்கேல் என்று சொல்வது, உனக்கு பவ்யனான தம்பியும் அவனுக்காக பவ்யனான நீயும், உறங்காது இருக்க வேண்டும் என்று வேண்டுகிறார்கள்.

எல்லாம் ஒன்றெயான வஸ்துவை தரலாகாதோ என்று, எல்லாம் கண்ணன் என்று இருப்பவர்கள் நாங்கள், என்று சொல்லி, எங்களுக்கு அம்பரமும் தண்ணீரும் சோறுமாயுள்ள கண்ணனை எமக்குத் தந்து எங்களை நன்றாக பார்த்து கொள்ளும் ஸ்வாமி நீயன்றோ என்கிறார்கள்.

தாயார் பாசுரம்
உந்துமத

இந்த பாடல், தாயாருக்கான பாசுரம். இந்த பாடலை தவிர, அங்கண் மாஞாலத்து என்ற இன்னும் ஒரே ஒரு  பாடலில் மட்டும்  தான் ஆண்டாள், எம்பெருமானின் பெயரை நேரடியாக குறிப்பிடவில்லை, ஆனால் நந்தகோபன் மருமகளே  நப்பின்னாய் என்று தாயாரை மட்டும் பெயர் சொல்லி கூப்பிடுகிறார், ஆகையால் கண்ணன் திருவுள்ளத்தில் கொண்டுள்ள நப்பின்னைப் பிராட்டியை உணர்த்தும் உந்து மதகளித்தன் என்ற இந்த பாசுரம், தாயார் பாசுரம் எனப்படும். கிருஷ்ணாவதாரத்திற்கு நப்பின்னை பிரதான மஹிஷி ஆதலால், எம்பெருமானைப் பற்றும் போது பிராட்டி முன்னாகப் பற்ற வேண்டும் என்ற பிரமாணம் இருப்பதால், இப்போது இவர்கள் நப்பின்னையைப் பற்றுவது.

பெருமிடுக்கைப் பெற்றுள்ள இவர் அஹங்காரம் சிறிதும் இன்றி, தாழ்ந்தார்க்கும் பரம சுலபராக இருக்கும் தன்மையைத் தெரிவிப்பது ‘நந்தகோபாலன், என்ற இவர் பெயர்.  நப்பின்னையை “கும்பர்மகளே!” என்று விளியாது “நந்தகோபலன் மருமகளே!” என விளித்தற்குக் காரணம், நப்பின்னை இளமையே தொடங்கி இங்கே வளர்வதினாலும், புக்ககத்தில் வாழ்வையே பெரிதாக மதித்து ஸ்ரீ நந்தகோபருடைய ஸம்பந்தத்தைத் தனக்குப் பெரும் பெறாக நினைத்து இருந்ததினாலும் இப்படி அழைக்கப்பட்டாள்.

நப்பின்னைக்கு அடையாளம் கூறும் போது, கோழி அழைத்தமையை அடையாளமாகக் கூறுகின்றனர். ’குருக்கத்திப் பந்தலின் மேற் கிடந்து உறங்கின குயிலினங்கள் பல்கால் கூவினமையையும் அடையாளமாகக் கூறுகின்றனர். உன் மைத்துனன் பேர்பாட என்று சொன்னது, எல்லையின்றி அவன் பெற்றுள்ள பல பெயர்களையும் சொல்லி வாயாரப் பாடுவதற்கு தாங்கள் வந்ததாக ஆச்சியர் கூறுகின்றனர்.

இந்த பாடலில் உள்ள எல்லா வரிகளும் தாயாரை பாடுகின்றன. அடுத்த பாசுரமான குத்து விளக்கு எரிய  பாடலில், ஆண்டாள், பெருமாளை பாட ஆரம்பித்து, பாதியில் திரும்ப தாயார் பக்கமே சென்று விடுகிறார்.  அதற்கு அடுத்த பாசுரத்திலும் (முப்பத்து மூவர்) பெருமாளிடம் ஆரம்பித்து, முக்கால் பாசுரம் முடிந்த பின்பு தாயாரிடம்  வந்து, தன்  கோரிக்கையை வைக்கிறார். இந்த பாடல்களுக்கு பின் ஏற்றகலங்கள் என்ற பாடல் முதல் திரும்பவும் எம்பெருமான் பற்றி பாடுகிறார்.

கண்ணன் திருபள்ளிஎழுச்சி

குத்துவிளக்கு

சென்ற பாட்டினால், நப்பின்னைப் பிராட்டியை உணர்த்திச் “சீரார் வளை ஓலிப்ப வந்து திறவாய்” என வேண்டிய பிறகு, அவள், கதவைத் திறப்போம் என்று எழுந்து புறப்பட, அடுத்த பாடலான குத்து விளக்கு என்ற பாடலில், அதனைக் கண்ட கண்ணன், “நம்மைப் பற்றினாரை, இவள் தன் அடியாராக அபிமானிப்பது போல, நாமும் இவளைப் பற்றினாரை நம்மடியாராக அபிமானிக்க வேண்டியது’ என்று ஆன பின்பு நம்முடையாரான இவ்வாய்ச்சியர்கட்கு இவளுக்கு முன் நாம் காரியம் செய்ய வேண்டும் ‘, எனக் கருதி, தான் சடக்கென எழுந்து நப்பின்னையைக் கதவு திறக்க வொட்டாமல், மற்கட்டாகக் கட்டிப் பிடித்து இழுத்துப் படுக்கையில் தள்ளித் தானும் அவள் மேல் விழுந்து, அவளுடைய திருமேனியின் ஸ்பர்சத்தினால் தானும் மயங்கி, ஆய்ச்சியர்கள் வந்த காரியத்தையும் மறந்து கிடக்க, இவர்கள் அவனை எழுப்பின அளவில், நப்பின்னை, ‘நம் முயற்சியைத் தடை செய்து ஆய்ச்சியர்களின் வெறுப்புக்கு நம்மை உறுப்பாக்கின இவனை வாய் திறக்க விடுவதில்லை,’ என்று அவனை சிக்கெனக் கட்டிக் கொண்டு, அவனை விடை சொல்ல வல்லமை இல்லாதபடி கிடக்க வைத்து, இப்படி மீண்டும் இவளை உணர்த்துவதும் கண்ணனை உணர்த்துவதும் என்று இருக்கிறார்கள். இவர்கள் இப்படி ஒருவருக்கு ஒருவர் அடியவர்களுக்காக மல்லு கட்டிக்கொண்டு ஒரு மிதுனமாக இருப்பது நமக்கு தஞ்சம் என்பது விளங்கும். இவர்கள் சேர்ந்து இருந்து நேரம் சென்றால் கூட, புருஷக்காரத்திற்கு உதவுவதாகவும், தனியே வந்தால் தாங்கள் கேட்டுக்கொண்ட காரியம் நிறைவேறும் என்றும் ஆச்சியர்கள் கருதுகிறார்கள். உனக்காகத் தானே அவன் புறப்படாமல் இருக்கிறான். அவன் பிரிந்தால் நீ தாங்க மாட்டாய். எங்கள் பக்கம் இருந்து நீ இப்படி செய்வது தருமமன்று என்றும் சொன்னார்கள்.

முப்பத்து

சென்ற பாட்டில் “தத்துவமன்று தகவு” என்று ஆய்ச்சியர்கள், தங்கள் ஆற்றாமையினால் வருத்தம் தோன்ற சில குற்றம் கூறினாலும், எம்பெருமானுடைய திருவுள்ளம் அறிந்து, ஏற்ற அவகாசத்தில் விண்ணப்பம் செய்வோம் என்று எண்ணி, நப்பின்னை பேசாதே பள்ளி கொண்டு இருந்தாள். அவளை பற்றினாலும் காரியம் செய்யும் அவன், இவள் தன்னையும் பேச விடாமல் இருந்ததை கண்டு, பேசாது கிடந்தான். அவளோடு பரவசப்பட்டுள்ள கண்ணனையும் “நப்பின்னைப் பிராட்டியை குறை கூறுகின்ற பெண்களுக்கு நாம் முகம் காட்ட வேண்டாம்” என்று சீற்றமுற்றிருக்கக் கூடும் என்று சந்தேகித்த ஆய்ச்சியர்கள், மீண்டும் கண்ணனை நோக்கி, அவனுடைய பெருமைகள் பலவற்றையும் பேசித் துயிலெழ வேண்டின போதும், அவன் வாய் திறவாது இருக்க, இந்த ஆய்ச்சியர்கள், நப்பின்னையின் பெருமைகளைப் பேசினோமாகில் இவனுடைய சீற்றம் ஒருவாறு தணியும் என நினைத்து அவளுடைய ஆத்ம குணங்களையும் தேஹ குணங்களையும் கூறி ஏத்தி, “நங்காய்! எங்கள் மனோரதத்தை முடித்து அருள வேண்டும் என்று முப்பத்து மூவர் என்ற இந்த பாடல் கூறுகிறது. திருவே துயிலெழாய் என்று சொன்னது, பிராட்டியின் திருநாமத்தை நீ வஹிப்பதற்கு இணங்க அவளுடைய குணங்களும் உனக்கு வர வேண்டாமா, பெண்களின் வருத்தம் அறியாதவனை போல உறங்கலமோ, அவன் அடியார்க்காகப் பத்து மாதம் பிரிந்து ஊண் உறக்கமற்றுச் சிறையில் அகப்பட்டுப் பட்ட பாடுகளை, நீ ராமாயணத்தில் கேட்டு அறிவாயோ, அவ்வளவு வருத்தமும் நீ படவேண்டா’ எங்களுக்காக இப்போது துயிலெழுந்தால் போதும் என்கிறார்கள். விசிறியும் கண்ணாடியும் தரும்படி வேண்டினது மற்ற வேண்டியவை எல்லாவற்றையும் கேட்டதற்கு சமமாகும். இப்போதே என்றது இந்த நொடி தப்பினால் பின்பு ஊராரும் இசைய மாட்டார்கள், நாங்களும் உயிர் வாழ்ந்திருக்க மாட்டோம் என்று கூறுகிறார்கள். எம்மை என்று விரஹம் தின்ற உடம்பைக் காட்டுகிறார்கள்.

ஏற்றகலங்கள்

சென்ற பாட்டில் நப்பின்னைப் பிராட்டியை எழுப்பின பின்னர், அவள் உணர்ந்து எழுந்து வந்து “தோழிகளே, நான் உங்களில் ஒருத்தியன்றோ? உங்கள் காரியத்தைக் குறையற முடிக்கிறேன்’ நீங்கள் இறையும் வருந்த வேண்டாம்’ நாமெல்லாரும் கூடி, கண்ணனின் குண நலன்களில் தோற்றார் தோற்றபடியே சொல்லி, இளையபெருமாளை போல, குணங்களுக்கு தோற்று வந்தோம் என்று சொல்லி, வேண்டி நப்பின்னைப் பிராட்டியுமும் உட்பட அனைவருமாகக் கூடிக் கண்ணன் வீரத்தைச் சொல்லி ஏத்தி, அவனை உணர்த்தும், ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி என்ற பாசுரம்.

கண்ணன் கடாக்ஷம்

சிறிது சிறிதாக கடாக்ஷிக்க வேண்டுதல்

அங்கண்

“நந்த கோபன் மகனே” என்று அழைத்ததற்கு காரணம், அவன் இன்னும் பரமபதத்தில் இருப்பதாகவும், திருபாற்கடலில் இருப்பதாகவும், சக்கரவர்த்தி திருமகனாகவும் இருப்பதாகவும், நந்தகோபர் மகனாக இருப்பதை உணரவில்லை என்கிறார்கள். நீ இந்த திருவாய்ப்பாடியில் நந்தகோபர்க்குப் பிள்ளையாய் பிறந்தது இப்படி கிடந்து உறங்கவோ, எங்கள் குறையைத் தீர்க்கவன்றோ, பிறந்த காரியத்தை நோக்க வேண்டாவோ என்று சொல்வதை கூறும். சத்ருக்கள் உன்னுடைய அம்புக்குத் தோற்று. அவை பிடரியைப் பிடித்துத் தள்ளத் தள்ள வந்தாற் போலே, நாங்கள் அவனுடைய ஸௌந்தரிய ஸௌசீல்யாதி குணங்களை பிடித்திழுக்க வந்தோம் என்று சொல்கிறார்கள். வலிதொலைந்து என்று சொன்னது, வணங்கா முடிகளாக இருப்பதற்கு காரணமான முரட்டுத்தனத்தை முடித்துக் கொள்ளுவது. ஆற்றாது வந்து என்று சொன்னது இராமபிரான் ப்ரஹமாஸ்த்ரம் தொடுத்து விடும்படி பிராட்டி விஷயத்தில் மஹா அபசாரப்பட்டு, எத்திசையும் உழன்றோடி, எங்கும் புகலற்று, இளைத்து விழுந்த காகம் போல் என்று கொள்ளலாம்.

சென்ற பாட்டில், “மாற்றாருனக்கு வலிதொலைந்து” என்று சொன்னதால் தாங்கள் போக்கற்று வந்ததை கூறினார்கள். அம்கண் மா ஞாலத்து அரசர் என்ற இந்த பாடலில் “இன்னமும் இவர்களுடைய உள் மனத்தில் உள்ளதை அறிய வேண்டும்” என்று கண்ணன் பேசாதே இருக்க, அது கண்ட ஆய்ச்சியர்கள், “பிரானே! இப்படியோ இன்னும் உன் திருவுள்ளத்தில் ஓடுவது? எங்களுக்கு நீ தான் புகல் ஆகாமல் போனாலும் வேறொரு புகலைத் தேடி ஓடாதபடி நின்ற எங்களை நீ கடாக்ஷித்து அருள வேண்டும் ” என்று பிரார்த்திக்கும் பாசுரம். தங்கள் அங்கீகாரம் பெற்றால் திரும்ப செல்ல வேண்டாம் என்று விபீஷணன் சொல்லியது போல, இந்த ஆச்சியர்களும் இவன் அங்கீகாரம் பெற்றால் பிறந்த வீட்டுக்கு செல்ல வேண்டாம் என்கிறார்கள். ஒரே காலத்தில் ஞாயிறும் திங்களும் உதித்தால் தாமரை மலர் பாதி மூடியும், பாதி திறந்தும் என்று கொண்டு, கண்ணனுடைய திருக்கண்களுக்கு அந்த நிலைமையை வேண்டுகின்றனர். கண்ணனுடைய திருக்கண்கள். சேதனருடைய குற்றம் குறைகளை நினைத்துப் பாதி மூடியும், அவர்களுடைய கூக்குரலைக் கேட்டுப் பாதி திறந்தும் இருக்கும் ஆதலால், அதற்கு இந்த உவமை கூறியது மிகப் பொருந்தும். முதலிலேயே பூர்ண கடாக்ஷம் செய்து அருளினால் தாங்கப் முடியாதென்று, சிறிது சிறிதாக கடாக்ஷிக்க வேணும் என்கிறார்கள்.

புறப்பாடு காண விழைதல்

மாரி மலை

மாரி மலை முழைஞ்சில் என்ற இந்த பாடலில் இந்த ஆய்ச்சியர்கள் நப்பின்னை பிராட்டி சம்பந்தமே நமக்கு ஏற்றமாகும் என்று நல்லவர்கள் சொன்னதை மனதில் வைத்து இருந்தும், “சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்” என்று வேறு புகலற்று வந்து விழுந்தோம் என்று நம்மை முன்னே இப்படி சொல்கிறார்கள் என்றதைக் கேட்டு, தனக்கு தானே வருந்தி, உடனே கண்ணன் வந்து, உணர்ந்தருளி, “பெண்களே மிகவும் வருந்தி இவ்வளவு வரை வந்தீர்களே, உங்கள் இருப்பிடம் தேடி வந்து உங்களை நோக்குகை அன்றோ எனக்குக் கடமை, என் ஸ்வரூபத்தை நீங்கள் நன்கு உணர்வீர்கள் அன்றோ, யாரேனும் பகைவர் கையில் அகப்பட்டு, வருத்தமுற்று, நம்மிடம் வந்து முறையிட்டால், நான் அவர்களின் வருத்த மிகுதியைக் கண்ணுற்று, உங்களுக்கு ஒரு வருத்தம் வருதற்கு முன்னமே வந்து உங்களை காப்பாற்ற வேண்டிய கடமையை உடைய நான் அப்படி முன்பே வரா விட்டாலும் வருத்தம் நேர்ந்தவுடனே ஆகிலும் வந்து உதவி இருக்கலாமே, அப்படியும் வந்து உதவி செய்ய வில்லையே, வருத்தமுற்ற நீங்களே உற்ற வருத்தத்தை என்னிடம் வந்து, முறையிட்டுக் கொள்ளும்வரை நான் இருந்தேனே’, என்று வருந்துகிறார்.

விபீஷணன், தான் ராவணன் தம்பி என்றும் ஆராயாமல் ஏற்றுக்கொள்வாயே என்று போற்றி பாடிய போது, இலங்கையில் ஏற்பட்ட துன்பங்களுக்கும் நாம் தானே காரணம், நீர் இருந்த இடத்திற்கு வந்து உனக்கு அருள் பாலிக்காமல் இருந்தது தன் குறை அன்றோ என்று இராமபிரான் சொன்னதை போலவே உள்ளது என்கிறார். மேலும் ஆண்கள் விஷயத்திலேயே இப்படி என்றால் பெண்கள் விஷயத்தில் உங்களை எப்படி இந்த இடம் வரை வைத்தேன் என்று வருந்துவதையும் சொல்கிறார். என்னுடைய இக்குற்றத்தை நீங்கள் பொறுத்தருள வேணும்’ என்று அஞ்சி நடுங்கிக் கூறும் முறையை உடைய என் ஸ்வரூப ஸ்வபாவங்கள் உங்களுக்குத் தெரிந்தவையே அன்றோ உங்களை நான் இவ்வளவு வருத்தம் உறுத்தியதைப் பற்றி வேண்டுகின்றேன். இனி உங்கள் காரியத்தைக் குறையறத் தலைகட்டித் தருகின்றேன்: உங்களுக்கு நான் செய்ய வேண்டியது என்ன ?” என்று சொல்ல, அதனைக் கேட்ட ஆய்ச்சியர்கள், “பிரானே! எங்களுடைய மனோரதம் இப்படி ரஹஸ்யமாக விண்ணப்பம் செய்யக் கூடியது அன்று, பெரிய கோஷ்டியாக எழுந்து அருளி இருந்து கேட்டருளவேணும்” என்று புறப்பாடு ஆக வேண்டிய கிரமத்தை விண்ணப்பம் செய்யும் மாரி மலை முழைஞ்சில் என்ற இந்த பாசுரம். சிங்கம் பிறக்கும்போதே, “மிருகராஜன்” என்றும் சிறப்புப் பெயரைப் பெற்றதால் சீரியசிங்கம் எனப்பட்டது. கண்ணனும் நரஸிம்ஹாவதாரத்தில் சில பாகம் சிங்கமாகவும் சில பாகம் மானிடராகவும் மட்டும் இன்றி “சிற்றாயர் சிங்கம்” “யசோதை இளம் சிங்கம்” என்றபடி பூர்ண ஸிம்ஹமாக இருப்பதால், சீரிய என்னும் அடைமொழி கொடுக்கபட்டது. இவர்கள் எம்பெருமானை வேறு ஒரு பயனுக்கும் இன்றி இவன் இருந்தபடியே அப்படியே ஏற்று கொண்டவர்கள் ஆதலால், தீவிழித்து, சீற்றம், சீரிய சிங்கம், அறிவுற்று என்று இந்த எல்லாவற்றையும் போக்கியமாக கொண்டவர்கள் இவர்கள். புறப்பட்டு என்று சொன்னதற்கு, உன்னுடைய மேன்மைக்கும், சௌரியத்திற்கும், காம்பீரியத்திற்கும் உதாரணமாக சிம்மத்தை சொன்னோம் அன்றி, இரண்ய, இராவணர்கள் முன்னே இருந்தபடி நின்ற சிங்கத்தை சொல்லவில்லை என்கிறார். பூவை பூவண்ணா என்று சொன்னது, பிரிந்தார்க்கு பிழைக்க முடியாத வடிவழகு என்று சொல்வது புரியும். “யாம்வந்த காரியம்” என்று சொன்னது, இப்போதே இவர்கள் வந்த காரியம் இன்னது என்று சொல்லாமல், சற்று நேரம் சென்று விண்ணப்பம் செய்வோம் என்று இருக்கிறார்கள். அதாவது “சிற்றஞ்சிறுகாலே” என்ற பாட்டில் விண்ணப்பம் செய்கிறார்கள். 

எம்பெருமானை போற்றி பாடுதல்

அன்று

பாரதப் போரில் அர்ஜுனன் ‘இரண்டு சேனைகளின் நடுவே தேரைக் கொண்டு போய் நிறுத்து’ என்று சொல்ல, அப்படியே செய்த கண்ணன், பெண்களின் வேண்டுகோளை மறுக்க மாட்டாதவன் ஆதலால் அவர்களின் பிரார்த்தனைக்கு இசைந்து, ‘பெண்களே, இதோ புறப்பட்டு வருகிறேன்’ என்று சொல்லித் திருப்பள்ளியறையில் இருந்தும், திவ்ய சிம்மாசனம் வரை வரத் தொடங்க, அதனைக் கண்ட ஆய்ச்சியர்கள், பல ஆண்டு காலமாக தண்டகாரணிய வாசிகளான முனிவர் ‘இராம பிரானைக் கண்டவுடனே ராக்ஷகசர்களால் நமக்கு நேரும் துன்பங்களைச் சொல்லி முறையிட வேணும்’ என்று காத்து கொண்டு இருந்தவர்கள், இராமபிரானைக் கண்டவுடன் ராக்ஷஸ துன்பங்களை மறந்து, மங்களா சாஸநம் பண்ணத் தொடங்கினாற் போல, இவர்களும் தங்கள் மனோரதங்களை எல்லாம் மறந்து ‘இந்த திருவடிகளைக் கொண்டோ இவனை நாம் நடக்கச் சொல்லுவது!’ என வருந்தி அந்த திருவடிகளை எடுத்து முடி மேல் புனைந்து கண்களில் ஒற்றிக் கொண்டு, முன்பு உலகளந்து அருளினவற்றையும், சகடம் உதைத்தவாற்றையும் நினைந்து, இந்த திருவடிகளுக்கு ஒரு தீங்கும் நேராது ஓழிய வேணும் என்று மங்களாசாஸனம் செய்வதாய்ச் செல்லும் பாசுரம், அன்று இவ்வுலகம் அளந்தாய் என்ற பாசுரம். “அடி போற்றி, திறல் போற்றி, புகழ் போற்றி, கழல் போற்றி, குணம் போற்றி, வேல் போற்றி!” என்று இவர்கள் நாக்குக்கு இடும் ஆறு வார்த்தைகள் / கட்டளைகள். உன்னுடைய வீர சரித்திரங்களை ஏற்றி பேசியே உன்னை அனுபவிப்போம் என்கிறார்கள்.

அன்று இவ் உலகம் அளந்தாய் அடிபோற்றி, சென்று அங்குத் தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி, பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி, கன்று குணிலாய் வெறிந்தாய் கழல் போற்றி, குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி, வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி, என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்,  இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.” என்று சொல்வதை இங்கே நினைவில் கொள்ளலாம். அன்று என்று அங்கு சொன்னது, முன்னொரு யுகத்தில், காலத்தில், என்று ஒவ்வொரு நிகழ்ச்சியையும் நினைவு கூர்ந்து, இன்று வந்ததை ஆச்சியர்கள் குறிப்பிடுகிறார்.

ஆச்சியர்களின் வேண்டுதல்

ஒருத்தி

சென்ற பாட்டில் மங்களாசாஸனம் (வாழ்த்தி பாடிய) பண்ணின பெண்களை நோக்கிக் கண்ணன், ஒருத்தி மகனாய் என்ற இந்த பாட்டில், ‘பெண்களே, நம்முடைய வெற்றிக்குப் பல்லாண்டு பாடுகை உங்களுக்கு ஸித்தம்; இது கிடக்க, நீங்கள் இந்த குளிரிலே உங்கள் உடலைப் பேணாமல் வருந்தி வந்தீர்களே. உங்களுடைய நெஞ்சில் ஓடுகிறது, வெறும் பறையேயோ, மற்று ஏதேனும் உண்டோ’ என வினவ, அது கேட்ட பெண்கள், பிரானே, உன்னுடைய குணங்களை நாங்கள் பாடிக் கொண்டு வருகையாலே ஒரு வருத்தமும் படாமல் சுகமாக வந்தோம்; பறை என்று ஒரு வ்யாஜத்தையிட்டு நாங்கள் உன்னையே காண்பதையே பேறாக நினைக்கின்றோம் என்று கூற, எம்பெருமான் நீங்கள் சொன்னபோது நாம் செய்தால், அதுவே சாதனமாக குற்றம் ஆகாதோ என்று கேட்க, அரிய தொழில்களையும் எளிதாகச் செய்து முடித்த உனக்கு எங்கள் வேண்டுகோளை முடித்து தருவது மிகவும் எளியதே என்றும் எங்களை போன்ற சிலர் நோன்பு நோற்று பெற்றது எங்கள் நோன்புக்கு கிடைத்த வெற்றி என்னும் கருத்து தோன்ற என்று விடை கூறுவதாய்ச் சொல்லும் பாசுரம். ‘எங்களுக்கு நீ பிறந்துகாட்டவும் வேண்டாம் ; வளர்ந்து காட்டவும் வேண்டாம் ; கொன்று காட்டவும் வேண்டாம், உன்னைக் காட்டினால் போதும்’ என்ற கூறுகிறார்கள். “என்னை ஆக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த கற்பகம்” என்றபடி அடியார்க்கு நீ வேறொன்றைக் கொடுக்காமல், உன்னையே கொடுக்கும் அவனாதலால், நாங்கள் உன்னையே வேண்டி வந்தோம்.

மாலே

‘பெண்களே “உன்னை அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்” என்கிறீர்கள், எம்மிடம் ஆசை / பிரியம் உடையவர்கள், என்னை தவிர வேறு ஒன்றுக்கும் ஆதரவாக இருக்க மாட்டார்கள், ஆகவே நீங்கள் வேண்டுவன எவை, இவற்றை விரியச் சொல்லுங்கள்’ என்று கண்ணன் நியமித்து அருள, அது கேட்ட ஆய்ச்சியர்கள், ‘உன் முகவொளியை வெளியிலே கண்டு உன் திருநாமங்களை வாயாரச் சொல்லுகைக்கு உதவியாக இருப்பதோரு நோன்பை இடையர் நடத்தும் போது அது உன்னோடு சேர்க்கைக்கு இடையூறாக இருந்ததை கருதி இடையர்கள் பக்கம் நன்றி ‘நினைவாலே’ அந்த நோன்பை மேற்கொண்டோம் ; முன்னோர்கள் செய்வது உண்டு, அதற்கு வேண்டிய உபகரணங்களான அங்கங்களும் தந்தருள வேணுமென்று வேண்டிக்கொள்ளும் மாலே மணிவண்ணா என்ற பாசுரம். நாராயணனே நமக்கே பறை தருவான் என்பது வேதங்களில் சொல்லபட்ட சரணாகதி விதிகள் போல அல்ல என்றும், பிரபல பிரமாணம் போல ஆகும் என்றும் மேலையார் செய்வனகள் என சொல்கிறார்கள். திருப்பள்ளி யெழுச்சிக்குச் சங்குகள் வேண்டும்; புறப்பாட்டுக்குப் பறைவேண்டும்; பறை கொட்டிக்கொண்டு புறப்படும்போது எதிரே நின்று திருப்பல்லாண்டு பாட அரையர் வேண்டும்; பாடுவார் எங்கள் முகத்திலே விழித்து நாங்கள் அவர்கள் முகத்திலே விழித்துக் கொண்டு போகும்படி மங்கள தீபம் வேண்டும்; நெடும் தூரத்திலேயே எங்கள் கூட்டங்களைக் கண்டு சிலர் வாழும்படி முன்னே பிடித்துக் கொண்டு போவதற்குக் கொடி வேண்டும்; புறப்பட்டுப் போகும் போது பனி தலை மேல் விழாதபடி காக்க ஒரு மேற்கட்டு வேண்டும்?  இந்த உபகரணங்களை எல்லாம் நீ தந்து அருள வேண்டும் என்கிறார்கள். உன்னுடைய சிறிய வயிற்றிலே பெரிய லோகங்கள் எல்லாவற்றையும் வைத்து ஒரு ஆலந்தளிரிலே கிடந்து செய்ய முடியாதவற்றையும் செய்யவல்ல உனக்கும் கூட அரியது என்ற ஒன்று உண்டோ என்று கேட்கிறார்கள்.

எம்பெருமான் அருள தொடங்குவது

கூடாரை

சென்ற பாட்டில், சங்குகளையும், பறைகளையும், பல்லாண்டு இசைப்பாரையும், கோல விளக்கையும், கொடியையும், விதானத்தையும், அருள வேண்டும் என்று கேட்டுக் கொண்ட ஆயர் மாதரை நோக்கிக் கண்ணன், “பெண்களே, நம்மோடு ஒத்த ஈச்வரன் இன்னொருவன் உண்டு என்றால் அன்றோ, நம் பாஞ்ச சன்னியத்தோடு ஒத்த ஓரு சங்கு உண்டாவது; அன்றியும் ‘சங்கங்கள்’ என்று பல சங்குகள் வேண்டும் என்று கேட்டீர்கள். ஒன்றினை தேடினாலும், பாஞ்ச சன்னியத்தோடு ஒத்த பல சங்குகள் கிடையவே கிடையாது. நம் பாஞ்ச ஜந்யத்தையும், புள்ளரையன் கோயில் வெள்ளை விளி சங்கையும், ஆநிரை இனம் மீளக் குறித்த சங்கத்தையும் தருகிறேன், எடுத்துக் கொள்ளுங்கள்;

இனி, ‘பறை’ என்றீர்களாகில், நாம் உலகளந்த போது ஜாம்பவான் நம் ஜயம் சாற்றின பறையைத் தருகிறேன்; ‘பெரும்பறை’ என்றீர்களாகில், நாம் இலங்கை பாழாளாகப் படை பொருதபோது நம் ஜயம் சாற்றினதொரு பறையுண்டு; அதனைத் தருகிறேன்; அதற்கு மேல் ‘சாலப்பெரும் பறை’ என்கிறீர்களாகில், மிகவும் பெரிதான பறையாவது, நாம் *பாரோர்கள் எல்லாம், மகிழப் பறை கறங்கக் குடமாடுகிற போது, நம் அரையிலே கட்டி ஆடின ஓரு பறை உண்டு; அதனைத் தருகிறேன்; எடுத்துக் கொள்ளுங்கள்;

பல்லாண்டு பாடுகைக்கு உங்களுக்குப் பெரியாழ்வாருண்டு; அவரைப் போலே ‘அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு’ என்று உங்களையும் நம்மையும் சேர்த்துக் காப்பிடுகை, அன்றியே “பொலிக பொலிக பொலிக!” என்று உங்களுக்கே காப்பிடும் நம்மாழ்வாரையும் கொண்டு போங்கள்;

இனி, கோல விளக்குக்காக உபயப் பிரகாசிகையான நப்பின்னையைக் கொள்ளுங்கள்;

அதற்கு மேல் கொடிவேணுமாகில் “கருடக்கொடி ஓன்றுடையீர்” என்று நீங்கள் சொல்லும் பெரிய திருவடியைக் கொண்டுபோங்கள்;

அதற்குமேல் விதானம் வேணுமாகில், நாம் மதுரையில் நின்றும் இந்த திருவாய்பாடிக்கு வரும் போது நம் மேல் மழைத்துளி விழாதபடி தொடுத்து மேல் விதானமாய் வந்த நம் அனந்தனைக் கொண்டு போங்கள்; இவ்வளவு தானே நான் உங்களுக்குச் செய்ய வேண்டுவது” என்று சொன்னார்.

இது கேட்ட பெண்கள், “பிரானே! மார்கழி நீராடப் போவதற்கு வேண்டியவை இவை; நோன்பு நோற்று முடிந்த பின்னர் நாங்கள் உன்னிடத்துப் பெறவேண்டிய பல விசேஷங்களுள் அவற்றையும் நாங்கள் பெற்று மகிழும்படி அருள்புரிய வேண்டும் என்று ப்ரார்த்திக்கும் கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா என்ற பாசுரம்.

“நெய்யுண்ணோம் பாலுண்ணோம்” என்று சத்தியம் பண்ணின இவர்கள் இன்று நோன்பு நோற்று முடிப்பதாலே “பாற் சோறு மூட நெய் பெய்து முழங்கை வழிவார” உணவை வேண்டுகிறார்கள். “கூடியிருந்து குளிர்ந்து” என்று சொல்வது, பசி தீருகைக்காக உண்ண வேண்டுவது அன்று, பிரிந்து பட்ட துயரம் எல்லாம் தீருமாறு எல்லாரும் கூடிக் களித்திருக்கை சிறந்தது என்று சொல்வதாகும்.

அடுத்த விண்ணப்பம்

கறவைகள்

மார்கழி நீராடுவான் என்று நோன்பை அறிவித்து, அந்த நோன்புக்கு உபகரணங்களான சங்கு முதலியவற்றையும், நோன்புதனை முடித்த பின்னர் அலங்கரித்துக் கொள்ளுதற்கு உபகரணமான ஆடை ஆபரணங்களையும் அன்புடன் சுற்றங்களுடன் கூடிக் குளிர்ந்து பால் சோறு உண்பதும் சென்ற இரண்டு பாடல்களால் பாடிய ஆய்ச்சியர்களை நோக்கிக் கண்ணன், பெண்களே, உங்களுடைய கருத்து இவ்வளவு என்று எனக்கு தோன்றவில்லை; நீங்கள் இப்போது சொன்னவற்றையும் இன்னும் சில கேட்டுக்கொண்டாலும், அவற்றையும் நான் தர வேண்டில், உங்களுடைய நிலைமையை அறிந்து தர வேண்டி உள்ளது.

பேறு உங்களது தான் என்று ஆன பின்பு நீங்களும் சிறிது முயற்சி உடையீர்களாக இருக்க வேண்டும். அதற்காக நீங்கள் அநுஷ்டித்த உபாயம் ஏதாவது உண்டோ என்று கேட்டருள அது கேட்ட ஆய்ச்சியர்கள்,  ‘எங்கள் நிலைமையை நீ தான் நேரே கண்ணால் காண்கிறாயே என்றும், அறிவு இல்லாத நாங்கள் எடுத்துக் கூற வேண்டும்படி நீ உணராதது ஒன்று உண்டோ என்றும் எங்கள் நிலைமையை நன்கு உணர்ந்த நீ எங்களிடம் வினவியது மிக அற்புதமாய் இருக்கிறது”  என்று தங்கள் ஸ்வரூபம் இருக்கும்படியை அறிவித்து, இந்த இடைப்பெண்கள் கேவலம் தயா விஷயம் என்று திருவுள்ளம் பற்றி நீ எங்கள் காரியம் செய்தருள வேணும் என்று விண்ணப்பம் செய்யும் கறவைகள் பின் சென்று பாசுரம் இது.

  • எம்பெருமானே சாதனம் என்று இருப்பவர்களுக்கு, பேற்றுக்கு தங்களிடம் சாதனமாக ஒரு நல்ல கருமமும் இல்லை என்பதும்,
  • தங்களுடைய இயலாமையை அனுஸந்திக்கையும்,
  • ஈச்வரனுடைய குணபூர்த்தியை அனுஸந்திக்கையும்,
  • ஸம்பந்தத்தை உணருகையும்,
  • பூர்வ அபராதங்களுக்கு மன்னிப்பு கோருவதும்
  • ஈச்வரன் பக்கம் அவனை அடைய வழியையும் வேண்டிக் கொள்வதும்

ஆகிய இந்த ஆறு அங்கங்களும் கைங்கர்யம் வேண்டும் அடியவர்களின் அதிகாரங்களாக இந்த பாட்டில் வெளியிடப்படுகின்றன. ஆச்சியர் இன்னது செய்தார்கள், இவன் இன்னது செய்தான், என்று நாட்டார்க்குச் சொல்லுகைக்கு ஒரு காரணம் வேண்டுமே’ என்று இவன் சொல்ல, ஆய்ச்சியர்கள், ‘ஒன்றையும் எதிர்பாராமல் நீ காரியம் செய்தால் உன்னை விலக்குகைக்கு உரியார் உண்டோ?’ என்கிறார்கள்.

எங்களை பார்த்தாலும் நீ காரியம் செய்ய வேண்டும்; எங்களையும் உன்னையும் பார்த்தாலும் நீ காரியம் செய்ய வேண்டும்; உன்னை பார்க்காமல் எங்களை மட்டும் பார்த்தால் நாங்கள் இழக்கிறோம். எங்களை பார்க்காமல் உன்னை மட்டும் பார்த்தாலும் நாங்கள் பெறுகிறோம். இப்படி ஆன பின் எங்கள் ரக்ஷணத்திற்கு உன்னை நாங்கள் விடலாமோ என்கிறார்கள். எங்களுக்கு அறிவில்லை என்பதால் நன்மை இல்லை என்றோம்; நீ நன்மைக்கு துணை என்றோம்; நீ பூர்ணன் என்றோம்; சுலபன் என்றோம்; உன்னோடு எங்களுக்கு என்றும் மாறாத சம்பந்தம் உண்டு என்றோம்; எங்கள் தப்புக்கு மன்னிப்பு கேட்டோம்; இனி நாங்கள் செய்ய வேண்டியது எதுவும் இல்லை. இனி நீ உன்னை இழவாமல் காரியம் செய்ய பார்; உன் ஞான சக்திகளுக்கு குறைவில்லாமல் இருந்தது; எங்களுக்கும் அறிவில்லாமை முழுமையாக இருந்தது. குற்றங்களை பார்த்து சீர முடியாதவனாக எல்லா விரோதிகளையும் போக்குகிறேன் என்றவனாக நீ இருந்தாய்; பிராப்தி விஷயமாக எங்களை சோதிக்காமல் ஏற்று கொள் என்ற எங்கள் வேண்டுகோளையும் ஏற்று கொள்ள கூடாதோ என்றும் உபாய பூர்த்தியையும் சொல்லி, புகுந்த எல்லா குறைகளையும் மன்னித்து எங்கள் பிராப்த சித்திக்கு நீயே உபாயம் ஆக வேண்டும் என்று வேண்டிக் கொள்ளும் பாடல்.

எம்பெருமான் அருள்வது

சிற்றம்

நமக்கே பறை தருவான் என்று முதல் பாட்டில் சுருக்கமாக சொல்லிய ஆச்சியர்கள் இந்த பாட்டில் பிராப்ய பிராபகங்களை விவரிக்கிறார். பறை என்று அடைய வேண்டியதை முதலில் சொல்லி, தருவான் என்று பிறகு சாதனத்தை சொல்கிறார்கள்.

சென்ற பாடல்களில் “பறை, பறை” என்று சொல்லி வந்த ஆய்ச்சியர்கள் அந்த பறையின் பொருளை விவரித்து விண்ணப்பம் செய்யும் பாசுரம், ‘நாட்டார் இசைகைக்காக ‘நோன்பு’ என்று ஒன்றை காரணமாகக் கொண்டு வந்து புகுந்தோம். இதனை தவிர, எங்களுக்கு மிகவும் சிறந்தது என்று நாங்கள் நினைப்பது, உன் திருவடிகளில் நித்திய கைங்கரியம் செய்வதுதான். இனி ஒரு நொடிப் பொழுதும் உன்னை விட்டு நாங்கள் பிரிய முடியாது; வேறு ஒருவகையான விருப்பமும் எங்களுக்கு பிறவாத வண்ணம் நீயே அருள் புரிய வேணும்’ என்று அவன் காலைக் கட்டி நிற்கிறார்கள். ‘உன்னை அல்லால்  எங்களுக்கு வேறு ஒருவரும் இல்லை’, ‘உன்னை அல்லால் வேறு ஒரு போக்கியமும் இல்லை’, ‘உன்னை அல்லால் வேறு ஒன்றும் உபாயம் ஆகபோவது இல்லை; என்று இருப்பவர்கள் நாங்கள் என்கிறார்கள். நித்ய ஸூரிகளின் நடுவே ஏழுலகும் தனிக்கோல் செல்ல வீற்றிருக்கும் இருப்பைத் தவிர்த்து, இந்த இடைக்குலத்தில் நீ வந்து பிறந்ததற்கு ஒரு பயன் வேண்டாமோ, எங்களிடத்தில் நீ கைங்கரியம் கொள்ளாது போனால் உன்னுடைய இந்த அவதாரம் / இந்த பிறவி பயனற்றதாகும் என்கிறார்கள். எம்பெருமானுடைய பிறவி தோறும் சேர்ந்து பிறக்கும் பிராட்டியைப் போலே, தாங்களும் சேர்ந்து பிறந்து கைங்கர்யம் செய்ய நினைக்கிறார்கள். எங்களை ஆட்கொள்ள தோன்றிய உனக்கு நாங்கள் கைங்கர்யம் செய்ய வேண்டாமா என்கிறார்கள்.

சரியான காலத்தில் உணர்வதும், பகவத் சந்நிதி ஏற வருகையும், சேவிக்கையும், விக்ரக அனுபவம் செய்வதும், அவதார பிரயோஜனங்களை விண்ணப்பம் செய்கையும், ஆர்த்தி (விருப்பம்) பிரகாசிப்பிக்கையும், ஸ்வரூப விரோதிகளை போக்கி தர விண்ணப்பம் செய்வதும், கைங்கர்ய ருசி உடையார்க்கு சில ஸ்வரூப லட்சணங்கள் ஆகும் என்கிறார். இவற்றை எல்லாம் கண்ணன் திருமுகத்தை பார்த்து விண்ணப்பம் செய்கிறார்கள்.

பலஸ்ருதி

வங்கக்கடல்

தங்களுடைய மநோரதம் நிறைவேற்ற பட்டதை பிற்காலத்திலே அந்த கருத்து நிலைமையோடே ஆண்டாள் அருளிச்செய்த இந்த பிரபந்தத்தை ஓதுவார் எம்பெருமானுடைய திருவருளுக்கு இலக்காகி மகிழப்பெறுவர் என்று சொல்லும் பாசுரம். ஆண்டாள் தான் கிருஷ்ணன் இருந்த காலத்தில் இருந்தது போல இந்த மார்கழி மாத நோன்பு நோற்றதாக இந்த பாடல்களை பாடினாலும், அவளுக்கு பலன் கிடைத்தது. “ஸம காலத்திலே அநுஷ்டித்தது ஒரு பாதியும், அநந்தர காலத்தில் அனுக்காரத்தாலே (செய்வதால்) ஒரு பாதியும், பிற்பட்ட காலத்தில் கற்றார்க்குப் பலிக்கும் என்று ஆறாயிரம் சொல்வது. திருவாய்பாடியிலும் பின்பு பரமபதம் சென்றால் அங்கும் எம்பெருமானின் திருவருள் பெற்று இன்புறுவர் என்று சொல்கிறார்.

விடியும் போதே எழுந்திருந்து முப்பது பாட்டையும் தப்பாமல் அநுஸந்தித்தல், சிறந்தது, முடியாதவர்கள் ‘சிற்றஞ்சிறுகாலை’ என்கிற பாட்டை அநுஸந்தித்தல் வேண்டும். அதுவும் முடியாதவர்கள் நாம் இருந்த இருப்பை நினைப்பது” என்று பட்டர் அருளிச்செய்வர்.  “நாம் இருந்த விருப்பை” என்றது அவர் இப்பிரபந்தத்தை அநுஸந்தித்து ஈடுபட்டிருந்த இருப்பை சொல்கிறது.இப்பாட்டில் இப்பிரபந்தம் கற்றார்க்குப் பலம் சொல்லி முடிக்கிறார். இந்த பிரபந்தத்தின் பயனைச் சொன்ன இந்தப் பாசுரம் திருநாமப் பாட்டென்றும், பல சுருதி என்றும் சொல்லப்பெறும். 

பெரியாழ்வார் திருமொழி – ஒரு பார்வை

நாலாயிர திவ்ய பிரபந்தத்தில், பெரியாழ்வார் திருமொழி என்பது 461 பாசுரங்களைக் கொண்ட ஒரு பிரபந்தமாகவும், திருப்பல்லாண்டு என்ற 12 பாசுரங்களையும் ஒரு பிரபந்தமாகவும் பெரியாழ்வார் அருளி பாசுரங்கள் 473 ஆகும். அதன் கண்ணோட்டமாக, உயர்நிலை சுருக்கமாக, இந்த பதிவினை காணலாம். இன்னும் ஒவ்வொரு பாடலின் விளக்கமும் பார்க்க விரும்பினால், இங்குள்ள பத்திகளின் தலைப்புகளை சொடுக்கி அங்கே சென்று அனுபவிக்கலாம்.

திருபல்லாண்டு

திருப்பல்லாண்டு தனியாக ஒரு பிரபந்தம் என்றாலும், இதனை பெரியாழ்வார் திருமொழியின் முதல் பதிகமாக (1.1) எடுத்துக் கொண்டு இங்கே காண்போம்.

எல்லா ஆழ்வார்களுமே பரமாத்மாவான ஸ்ரீ மகாவிஷ்ணுவிடம் அதிக பிரேமையும், பக்தியும் காதலும் மரியாதையும் கொண்டு உள்ளார்கள். பெரியாழ்வார், மற்ற எல்லா ஆழ்வார்களையும் விட, பெருமாளின் மேல், பக்தியும் காதலும் மரியாதையும் மட்டும் இல்லாமல், சிறிது அதிகமாகவே பொறுப்பையும், கூடவே அதிக பரிவையும் கொண்டு உள்ளார். இதனை நம் பெரியவர்கள், பொங்கும் பரிவு என்றும், ஒரு தாய், தன் குழந்தையிடம் காட்டுவதைவிட சற்று அதிகமான அன்பு என்றும் குறிப்பிடுகிறார்கள். இத்தகைய அன்பே, பெரியாழ்வாரை, “பல்லாண்டு பல்லாண்டு” என்று பாட வைத்தது. இந்த பல்லாண்டு பாசுரமே உலகில் உள்ள எல்லா விஷ்ணு கோவில்களிலும் காலையில் சொல்லும் முதல் ஸ்லோகம் ஆகும். அதே போல், பல்லாண்டு பாசுரமே, நாலாயிர திவ்ய பிரபந்த தொகுப்பின் முதல் பாடலும் ஆகும்.

12 பாசுரங்கள் உள்ள இந்த பல்லாண்டு தொகுப்பில், பெரியாழ்வார் எம்பெருமானை பற்பல ஆண்டுகள் நன்றாக வாழ மனமார வாழ்த்துகிறார்.  அதற்கு காரணம், எம்பெருமான் நன்றாக இருப்பதால்தான், நாம் எல்லோரும் நன்றாக இருக்க முடியம் என்று பெரியாழ்வார் நம்புகிறார்.   இதற்கு திருப்பல்லாண்டு என்று பெயரிட்டு நாலாயிர திவ்ய பிரபந்தத்தின்  முதலில்  வைத்து உள்ளார்கள். மணவாள மாமுனிகள் தமது உபதேசரத்தின மாலையில் வேதத்திற்கு ஓம் என்பது முதல் வார்த்தையாக இருப்பது போல், திவ்யப் பிரபந்தங்களுக்கு முதல், திருப்பல்லாண்டு என்பது என்கிறார்.

இந்த திருபல்லாண்டு பிரபந்தத்தில், ஆழ்வார், இங்குள்ள மூன்று வகையான (எல்லா) ஜீவாத்மாக்களையும்  கருத்தில் கொண்டு பாடி உள்ளார்.

  • இந்த உலகத்தில் உள்ள ஐஸ்வர்யங்களை வேண்டும் ஜீவாத்மாக்கள்,
  • பரமனையே வேண்டும் பகவன்லாபார்த்திகள் என்ற ஜீவாத்மாக்கள்
  • இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட கைவல்யார்த்திகள் என்ற ஜீவாத்மாக்கள்

முதல் இரண்டு பாடல்களால், பெரியாழ்வார், எம்பெருமானுக்கு பல்லாண்டு பாடுகிறார், அதன் பின் உள்ள பாடல்களால், பகவன்லாபார்த்தி, கைவல்யார்த்தி மற்றும் ஐஸ்வர்யார்த்திகள் என்ற மூன்று வகையாக மக்களையும் தனித்தனியே மூன்று பாடல்கள்(3,4,5) மூலம் வரவேற்றதையும், அடுத்த மூன்று பாடல்கள்(6,7,8) மூலம் அவர்கள் ஆழ்வார் குழுவுடன் சேர்ந்ததையும் , பின்பு அடுத்த மூன்று பாடல்கள் (9,10,11) மூலம் அவர்களுடன் சேர்ந்து எம்பெருமானுக்கு பல்லாண்டு பாடுவதையும் ஆழ்வார் பாடுகிறார். திருப்பல்லாண்டில் ஆழ்வார், தான் மோக்ஷம் பெற வேண்டுவதோடு, இந்த மூன்று வகையான ஜீவாத்மாக்களையும், பரமாத்மாவை வாழ்த்தி பாடி மோக்ஷம் பெற அழைக்கிறார். இந்த விதத்திலும், பெரியாழ்வார் மற்ற ஆழ்வார்களில் இருந்து சிறிது வேறு படுகிறார்.

கண்ணன்

ஆழ்வார்களும், ஆச்சர்யார்களும் ஸ்ரீ கிருஷ்ணரின் இளமைகால வாழ்க்கையையே அதிகம் ரசித்துள்ளனர், அதேயே அதிகம் பாடியும் உள்ளனர்.  ஸ்ரீ கிருஷ்ணர் துவாரகையில் ஆட்சி செய்ததைப் பற்றியோ, மகாபாரதத்தில் பண்டவர்களுக்காக செய்த காரியங்களை பற்றியோ, தூது சென்றதைப் பற்றியோ, எம்பெருமானுடய மிக முக்கியமான படைப்பான பகவத் கீதையைப் பற்றியோ அதிகம் பாடவில்லை. அவர்களின் முன்னுரிமை இறைவனின் இளமைக் காலமே.

குழந்தை கண்ணன்

வண்ண மாடங்கள் சூழ் என்ற பதிகம் (1.2) முழுவதும், கண்ணன் மேல் உள்ள பரிவால், அவனது வளர்த்த தாய் யசோதையாகவே தன்னை கருதி கண்ணன் அவதாரம் செய்ய முடிவு செய்யபட்டதில் இருந்து தொடங்கி பாடுகிறார். திருக்கோட்டியூரில் எழுந்தருளியிருக்கிற எம்பெருமான் திருவாய்ப்பாடியில் நந்தகோபர் திருமாளிகையில் ஸ்ரீகிருஷ்ணனாக தோன்றிய காலம் தொட்டு, அங்கு உள்ளவர்கள் எல்லோரும் ஆனந்தம் அடைந்தது என்பதில் தொடங்கி பாடுகிறார். தேவர்கள் கூட்டமாக ஆலோசித்த இடம் ஆதலால் இதற்கு கோஷ்டீபுரம் அல்லது கோஷ்ட்டியூர் அல்லது திருகோஷ்டியூர் என்று அழைக்கபடுகிறது.

பதிகம் 1.2 ல், கண்ணனின் தோற்றத்தை பாடிய ஆழ்வார், சீதக்கடல் (1.3) என்ற அடுத்த பதிகத்தில், யசோதை கண்ணனின் அழகினை திருவடிகளில் இருந்து திருமுடி வரை (பாதாதி கேசம் வரை) அனுபவித்ததை பரிவுடன் சொல்லி இருக்கிறார். ஆழ்வார் நன்றாக அனுபவித்து பாடியதால், இந்த பதிகம் மட்டும் தான் 21 பாசுரங்கள் உள்ள நீண்ட பதிகம்,

மாணிக்கம் கட்டி(1.4), என்ற அடுத்த பதிகத்தில் யசோதை, குழந்தையை தொட்டிலில் கிடத்தி, தாலாட்டிய அனுபவத்தை பாடுகிறார்.

தன் முகத்து சுட்டி (1.5) என்ற அடுத்த பதிகத்தில் கண்ணன் தவழ்ந்து விளையாடும் பருவதிற்கு வந்த பிறகு குழந்தை கண்ணனுக்காக, ‘சந்திரனை வா’ என்று கண்ணனின் மேன்மையும் எளிமையும் உணர்த்தும் வண்ணம், யசோதை கூப்பிடும் அனுபவத்தை ஆழ்வார் பாடுகிறார்.

உய்ய உலகு படைத்து உண்ட (1.6) என்ற அடுத்த பதிகத்தில், கண்ணன் அதே பருவத்தில் ஆடக்கூடிய செங்கீரை ஆடுவதை பார்க்க விரும்பும் யசோதையின் குரலாக, ஆழ்வார், எம்பெருமானின் இந்த திருஅவதாரத்தின் லீலைகளையும், மற்ற திருஅவதார குணநலங்களையும், எம்பெருமானின் ஐந்து நிலைகளின் பெருமைகளையும் சேர்த்து பாடுகிறார்.

மாணிக்க கிண்கிணி (1.7) என்ற அடுத்த பதிகத்தில் கண்ணனை சப்பாணி கொட்டுகிற சிறு வயது லீலைகளை காண யசோதை வேண்டியதை ஆழ்வார் பாடுகிறார்.

தொடர் சங்கலிகை (1.8) என்ற அடுத்த பதிகத்தில் அந்த கண்ணனின் தளர் நடை பயிலும் அழகினை யசோதை ரசித்ததை ஆழ்வார் விவரமாக சொல்கிறார்.

பொன்னியல் கிண்கிணி (1.9) என்ற அடுத்த பதிகத்தில், அவன் ஓடி வந்து தன்னை அணைத்து கொள்ளும் விதத்தை எப்படி யசோதை ஆசைப்பட்டு அனுபவித்தாள் என்று ஆழ்வார், இந்த அவதாரத்திலும் மற்ற அவதாரங்களில் செய்த லீலைகளையும் சேர்த்து அனுபவிக்கிறார்.

வட்டு நடுவே (1.10) என்ற அடுத்த பதிகத்தில் கண்ணன் யசோதையின் முதுகினை பின்னால் இருந்து எப்படி கட்டிக் கொள்கிறான் என்று பாடுகிறார்.

கண்ணன் விளையாட்டு

சென்ற பதிகங்களில் யசோதை தன் மகன் கண்ணன், தன்னை அச்சோ அச்சோ என்று முன் பக்கத்திலும் முதுகிலும் கட்டி கொள்ளும் அனுபவங்களை, தன்னையே யசோதையாக பாவித்து, ஆழ்வார் பாடிய பாடல்களை பார்த்தோம். இப்பொழுது சிறு பிள்ளைகள் அப்பூச்சி காட்டி விளையாடுவதை அனுபவிக்க வேண்டும் என்று அவதாரத்தின் மெய்ப்பாடு தோன்ற மெச்சூது சங்கம் இடத்தான் (2.1) என்ற அடுத்த பதிகத்தில் ஆழ்வார் பாடுகிறார். அப்பூச்சி காட்டுவது என்பது எதிரிகளுக்கு பயம் வரும் படி கண்களை இறுக்கி கொள்வது, முகத்தில் தலைமுடியை போட்டு மூடி கொள்வது போன்ற லீலைகளை செய்வது.

அரவணையாய் ஆயரேறே (2.2) என்ற அடுத்த பதிகத்தில், குழந்தை பால் உண்ணாமல், மறந்து அயர்ந்து தூங்குவதை கண்டு, கண்ணனை எழுப்பி, முலை உண்ண வருமாறு அழைத்து, அவன் வராமல் இருந்தும், விடாமல் அவன் மேல் உள்ள பாசத்தால் அவனுக்கு பால் ஊட்டிய விவரத்தை ஆழ்வார் தம் காலத்தில் நிகழ்ந்தது போல் பேசி அனுபவித்து இனியவன் ஆகிறார்.

போய் பாடுடைய (2.3) என்ற அடுத்த பதிகத்தில் அவனுக்கு காது குத்த, அதற்கு வேண்டிய பொருட்களை சேகரித்து, அந்த திருவிழாவிற்கு ஆயர்பாடியில் உள்ள பெண்களை எல்லாம் அழைத்து, கண்ணன், நோகும் என்று அஞ்சி, மாட்டேன் என்று மறுத்த போதும், அவன் அஞ்சாது இருக்க வார்த்தைகளை சொல்லியும், அவனுக்கு பிடித்த பொருட்களை காட்டியும், அவனை உடன்பட செய்தததை, தன்னுடைய காலத்தில் நிகழ்வது போல அனுபவித்து ஆழ்வார் பாடுகிறார்.

தாயான யசோதை, இந்த அவதாரத்தின் பெருமை அறிந்து, அனுசரித்து, காது துளைகளை பெரிதாக்கி, காதணிகள் அணிவித்து, அந்த குழந்தையை மஞ்சனம் செய்ய வேண்டும் என்று அதற்கு தேவையான பொருட்களை சேகரித்து, திருமஞ்சனதிற்கு பிறகு தேவையான அலங்கார பொருட்களையும் சேகரித்து, கண்ணனை மஞ்சனதிற்கு அழைக்க, அவன் மறுக்க, மஞ்சனத்திற்கான காரணங்களையும் ஆழ்வார் சொல்கிறார். தான், புழுதி பொருந்திய பொன் மேனியை பார்க்க ஆசைபட்டாலும், காண்பவர்கள் எப்படி வளர்த்து இருக்கிறார் என்று பழிப்பர் என்றும், முக்கியமாக அவனுக்கு அபிமானமான நற்பின்னை பிராட்டி சிரிப்பாள் என்றும் சொல்லி அவனை திருமஞ்சனம் செய்ய அழைக்கும் பாசுரங்கள் உள்ள வெண்ணைய் அளைந்த (2.4) என்பது அடுத்த பதிகம்.

எல்லாம் தெய்வ யசோதை பெற்றாளே என்று சொல்லும் வண்ணம், திருஅவதாரம் தொடங்கி எல்லா அனுபவங்களையும் அனுபவித்த யசோதை மஞ்சனமாட வாராய், என்று அவனை அழைத்து, கஷ்டப்பட்டு, அவனை நீராட வைத்து, இப்போது அவன் குழல் வார அழைக்கிறார். அதற்கும் அவன் மறுக்க, பாசத்துடனும் மிரட்டியும் அவனை குழல் வார நிற்க வைக்கும் பாடல்களை பின்னை மணாளணை (2.5) என்ற அடுத்த பதிகத்தில் பெரியாழ்வார் பாடுகிறார்.

திருமஞ்சனம் முடிந்த பிறகு, கண்ணனின் குழலை வாரிவிட்ட யசோதை அதற்கு பூக்கூடி அழகு பார்க்க நினைக்கிறார். ஆனால் கண்ணன் மற்ற சிறுவர்கள் போல, பசுக் கூட்டங்களை மேய்க்க செல்ல விருப்பபட்டு அதற்கான கோலினை கேட்கிறான். அவனிடம் நேரிடையாக கொடுக்காமல் கோல் கொண்டு வா (2.6) என்ற அடுத்த பதிகத்தில் யசோதாவாகவே பாவித்து, ஆழ்வார் பாடுகிறார்.

தன்னுடைய தாயார் யசோதை, தனக்கு குழல் வாரிய பின், பூச்சூட்ட நினைக்கும் போது, கண்ணன் மற்ற குழந்தைகள் போல பசுக்கூட்டங்களை மேய்க்க கிளம்ப, கண்ணனும் கோல் வேண்டும் என்று கேட்க அதனையும் பல காரணங்கள் சொல்லி சமாதானம் செய்து, கண்ணனுக்கு செண்பக பூ, மல்லிகை, செங்கழுநீர், இருவாட்சி என்று பலவித பூக்களை சூட்ட ஆநிரை மேய்க்க (2.7) என்ற அடுத்த பதிகத்தில் யசோதையாக ஆழ்வார் அழைக்கிறார்.

கண்ணனுக்கு திருமஞ்சனம் செய்துவித்து, குழல் வாரி, மலர்கள் சூடி அழகு பார்த்த யசோதை, இந்திரனோடு பிரமன் (2.8) என்ற அடுத்த பதிகத்தில் கண்ணனுக்கு திருவந்தி காப்பு இட்டு திருஷ்டி கழிக்க அழைக்கிறார். சாயங்காலத்தில் பல தேவதைகள் கண்ணனை தரிசிக்க காத்திருகின்றன என்றும் உக்கர தேவதைகள் உலாவும் நேரத்தில் அங்கு இருக்க வேண்டாம் என்று சொல்லி பாடுகிறார். திருவெள்ளறை திவ்ய தேச எம்பெருமானையும் ஒவ்வொரு பாடலிலும் சேர்த்து ஆழ்வார் இங்கு பாடுகிறார்.

யசோதை, கண்ணனுக்கு பூ சூட்டி, காப்பிட்டு தன் அருகே படுக்க வைத்து, தானும் உறங்கிய அளவில், பிறகு தானும் தன்னுடைய வீட்டு வேலைகளை செய்தவளாக இருக்க, கண்ணன், மற்ற வீடுகளில் புகுந்து, அங்குள்ள வெண்ணையை விழுங்கி, அந்த பாத்திரங்களை உருட்டி, உடைத்து, காய்ச்சிய பாலை சாய்த்து பருகி, மற்ற பணியாரங்களை சாப்பிட்டு, அந்த வீடுகளில் உள்ள சிறு பெண்களை அழைத்து அவளிடம் இருந்து வளையல்களை எடுத்து, அதனை கொண்டு நாவற்பழம் வாங்கி, இப்படி பல தீங்குகள் செய்கிறான், ஒவ்வொரு வீட்டில் இருந்தும் வந்து யசோதையிடம் முறையிட்டு கண்ணனை இங்கே அழைத்து கொள்வாய், என்று சொன்ன காரணத்தினால், அவளும், கண்ணனை பலவாறாக ஸ்தோஸ்திரம் செய்து, அவன் செய்த லீலைகளையும் சேர்த்து சொல்லி ‘வெண்ணைய் விழுங்கி(2.9) என்ற அடுத்த பதிகத்தில் ஆழ்வார் அழைத்து பாடுகிறார்.

சென்ற பதிகத்தில் மற்றைய வீட்டு பெண்கள், கண்ணன் வெண்ணைய், பால் இவற்றை எடுத்து தின்று செய்த தீம்புகளை சொல்லி, அவனை அழைத்துக் கொண்டு செல்ல யசோதையிடம் சொல்கிறார்கள். கண்ணன் ஊர் உலகங்களில் செய்த நவநீத லீலைகளை அனுபவித்த ஆழ்வார் ‘ஆற்றில் இருந்து’ (2.10) என்ற அடுத்த பதிகத்தில், அவன் இளமை காலத்தில் பெண்களுடன் செய்த குறும்புகளை அனுபவிக்கிறார். அவனோடு ஈடுபட்ட பெண்கள், யசோதையிடம் வந்து அவன் செய்த தீம்புகளை சொல்வதாக அமைந்த பதிகம். இங்கு, அவன் அடியவர்களை காப்பாற்றுபவனாக, எளியவனாக, அடியவர்களின் ஆசைகளை அறிந்து நிறைவேற்றுபவனாக, பூமி பிராட்டிக்காக பூமியை மீட்டுக் கொடுத்தவனாக, நற்குணங்கள் உடைய கண்ணனை, பூதனையின் கையில் அகப்படாமல் தங்களுக்கு விளையாட கொடுத்த கண்ணனின் பெருமைகளை சொல்லி, பின் தங்களிடம் குற்றம் செய்தான் என்றும் கூறினார்கள். அப்படி இருந்தும் அவன் இல்லாமல் தங்களால் ஜீவிக்க முடியாது என்றும், நாங்கள் முடிந்தோம் என்று சொல்லி பாடிய பாடல்களை ஆழ்வார் இங்கு அனுபவிக்கிறார்.

கண்ணன் குறும்புகள்

ஆயர்குல பெண்கள், கண்ணன் செய்த தீம்புகளை, யசோதையிடம் சொல்லி முறையிட்டதை, யசோதையை போலவே தானும் அனுபவித்து பாடிய ஆழ்வார், தன்னேராயிரம் பிள்ளைகளோடு (3.1) என்ற அடுத்த பதிகத்தில், யசோதை பல காலமும் அவனை அம்மம் உண்ண அழைத்து, அம்மம் ஊட்டியும், அவனுடைய மனிதர்களுக்கு அப்பாற்பட்ட லீலைகளையும் கண்டு, அவன் தன்னுடைய பிள்ளை என்ற எண்ணத்தை தவிர்த்து, அவன் ‘ஆயர் புத்திரன் அல்ல, அரும் தெய்வம்’, சர்வேஸ்வரன் என்று உணர்ந்து உனக்கு அம்மம் தர அஞ்சுவேன் என்று பலவாறு பாடிய பாடல்களை காணலாம்.

அம்மம் உண்ண துயில் எழாய் என்றும், மூலை உண்ண தருவன் என்றும் கண்ணனுக்கு கால காலத்தில் பால் உண்ண கொடுத்து, பின்னர் அவன் பலவித சேட்டைகள் செய்கிறான் என்று கேள்விபட்டு, இவன் உணவு உண்ண வேண்டும் என்று அழுத போதும், இவன் மீது புத்திர பக்திக்கு மேல், அவன் தேவதை என்ற பக்தி (தேவதா பக்தி) வளர்ந்து, இவனை அறிந்து கொண்டேன், இவனுக்கு அம்மம் தர அஞ்சுவேன் என்று பல சரித்திரங்களை சொல்லி அனுபவித்தவர், அஞ்சன வண்ணனை (3.2) என்ற பதிகத்தில் முன்பு சொன்னவைகளை உடனே மறந்து, புத்திர பக்தி தலையெடுக்க, பிராமணர்களுக்கு எப்படி பருவம் வந்தவுடன் பிரம்மசரியம் அனுஷிடிக்க கற்று கொடுப்பது போல், இடையர்களுக்கு பசு மேய்ப்பது தர்மம் என்று அவனை பசு கன்றுகள் மேய்க்க அனுப்பிய யசோதை, சற்று நேரத்திற்குள் ஐயோ, அவனை இப்படி கன்றுகளின் பின்னே அனுப்பி விட்டேனே, அவனுடைய சௌகர்யங்களுக்கு ஒரு குறையும் வர கூடாதே, குடையும் செருப்பும் கொடுக்காமல், கல்லும், முள்ளும், வெயிலும் உள்ள இடத்திற்கு போக செய்து விட்டேனே என்றும் சொல்லியவற்றை, தானும் சொல்லி ஆழ்வார் அனுபவிக்கிறார்.

ஆயர் குல வழக்கபடி கண்ணனை கன்றுகள் மேய்க்க அனுப்பிவிட்ட பிறகு, அவன் ஊரில் இருக்கும் போது செய்த விளையாட்டுகளையும் லீலைகளையும் சொல்லி, இப்படி அவனை திரியாமல் விட்டு, வெப்பமும் கடினமுமாக உள்ள காடுகளில் கன்றுகளை மேய்க்க விட்டோமே என்று தான் செய்த பாவங்களை நினைத்து வருந்தியதை பெரியாழ்வார் பாடல்களாக சொன்னார். சீலைக் குதம்பை ஒருகாது (3.3) என்ற அடுத்த பதிகத்தில் அவன் மேய்த்துவிட்டு திரும்பும்போது, அவனுடைய திருமேனியையும், அலங்காரத்தையும் பார்த்து வியந்து, அவன் மேல், மேலும் ஆசைகொண்டு, தன்னை போல பிள்ளையை பெற்றவர் யாராவது உண்டா என்று எல்லோருக்கும் சொல்லும் பாடல்களை, ‘கண்ணா, நாளை முதல் கன்றின் பின் போகேல், இங்கேயே இரு ‘ என்ற வண்ணம் அவன் செய்ய வேண்டியவைகளையும் தவிர்க்க வேண்டியவைகளையும் கூறுகிறார்.

நாளை தொட்டு எங்கும் போகேல், கோலம் செய்து இங்கேயே இரு’ என்று சொன்ன யசோதை, ஏழு நாட்கள் சென்று திருவோணம் கொண்டாடி விட்டு, பசுக்களையும் கன்றுகளையும் மேய்க்கச் சென்று, அவை நன்றாக மேய்ந்ததால் சந்தோஷம் அடைந்து, கண்ணன் பலவிதமாக தன்னை அலங்கரித்துக் கொண்டு, குழல் ஊதுவது சங்கீதம் பாடுவது என்று தன்னுடைய தோழர்களுடன் ஊர்வலமாக வருவது என்பதை திருவாய்பாடியில் உள்ள பெண்கள் மேல்மாடியில் இருந்து பார்த்து ரசிப்பதும், பார்த்து ரசித்தவர்கள் அங்கேயே நிற்பதும், அவன் அழகை காண்பதற்காக அவன் எதிரே வேறு வேலையாக வருவது போல வருவதும், அவன் அழகை பார்க்க வராதவர்களை அழைத்துக் கொண்டு வந்து காண்பிப்பதுவும் என்று அவன் பக்கம் காமம் கொண்ட பெண்களை பற்றி யசோதை ஆனந்தித்து பாடுவது போல அமைந்தது தழைகளும் தொங்கலும் (3.4) என்ற அடுத்த பதிகம்.

நாம் பிறந்து வளர்க்கிற ஊரில், ஒரு பொருளை இன்னொரு தேவதைக்கு கொடுப்பதா’ என்று கண்ணன், இந்திரனுக்கு இடுகிற சோற்றை விலக்கி, மலைக்கு இடுவித்து, அதனை அடைய, தான் அமுது செய்துவிடுவதால், இந்திரன் கோபம் கொண்டு மேகங்களை ஏவி பிருந்ததாவனத்தில் ஏழு நாட்கள் கல் மழை பொழிவித்தபோது, அதனை கோவர்தனகிரி என்ற கல் மலையை தாங்கி அங்குள்ள ஆயர்களையும், ஆநிரைகளையும் காப்பாற்றி, எதிரிகளை வீழ்த்தியும், அந்த மலையை தூக்கி நின்ற அழகையும், அதனால் அவனுடைய திருக்கரங்கள் நோகாததையும் அட்டுக் குவி சோற்று (3.5) என்ற பதிகத்தில், இப்படிபட்ட எம்பெருமானுடைய கல்யாண திருகுணமாக அடியவர்களை காப்பாற்றும்  ஆபத்சகத்வத்தை ஆழ்வார் அனுபவித்து பாடுகிறார்.

ஆழ்வார் நாவலம் பெரிய தீவினில் (3.6) என்ற அடுத்த பதிகத்தில் கண்ணன் குழல் ஊதிய போது நடந்த அதிசயங்களை அனுபவித்து பாடுகிறார். கண்ணன் பிருந்தாவனத்தில் திருக்குழல் ஊதும் போது, அந்த குழல் ஓசையின் வழியே, இளைய கோபிகள் சிலர் தங்களுக்கு வைத்த காவல்களையும் மீறி, இவன் நின்ற இடத்துக்கு வந்து இவனை சூழ்ந்து கொண்டு இருந்ததையும், இன்னும் சிலர் அவசரம் அவசரமாக ஓடி வந்து, இவன் அருகில் வந்ததும், நாணம் வந்துவிடவே, உடல் நெகிழ்ந்து தங்களுடைய உடைகள் தளரவே, அவற்றை ஒரு கையினால் பிடித்து அவனை கண்ணால் நோக்கி அங்கேயே இருந்ததையும், இன்னும் சிலர் இந்த குழல் ஓசையை கேட்டு, நெஞ்சு உருகி, திரண்டு, கண்கள் பனித்து, இதையே கேட்டு கொண்டு நின்றபடியையும், மேனகை, திலோத்தமை என்ற மேல் உலக நடனமாடும் பெண்கள், இவனுடைய குழல் ஓசையை மெய்மறந்து ரசித்து, தங்களுடைய நடனங்களை மாற்றியபடியையும், தும்பரு நாரதர், கின்னர மிதுனங்கள் முதலானோர், வீணையை மறப்பார், கின்னரம் தொடார், என்றபடி இவனுடைய குழலோசையின் ரசத்தில் ஈடுபட்டு இருப்பதையும், வான வீதியில் உலாவுபவர்கள் இவனின் அமிர்தமயமான நாத வெள்ளமாகிற வலையில் அகப்பட்டு செய்வது அறியாமல் இருப்பதையும், தேவர்கள் தங்களுக்கு அளிக்கப்படும் ஹவிஸ் என்ற உணவுகளை மறந்து, திருவாய்பாடிக்கு வந்து, இவனின் இசையாகிற உணவை உண்டு அவனையே பின் தொடர்ந்ததையும், பற்பல பறவைகள் தங்கள் கூட்டை விட்டு வெளியே வந்து, இவனின் ஓசையில் அங்கேயே திரிந்ததையும், பசுதிரள்கள் கால்களை நன்றாக வைத்துக்கொண்டு செவிகளை திருப்பி, எம்பெருமானின் குழலோசையில் லயித்து நின்றதையும், மான்கள் மேய்வதையும் மறந்து அங்கேயே திரிந்ததையும், உயிரற்றவையும் (அசேதனங்கள்) உயிருள்ளவைகளை காட்டிலும் மிகவும் ஈடுபாடுடன் இருந்ததையும் தனிதனியே பேசி அவனுடைய திருகுழல் ஓசையை ஆழ்வார் அனுபவிக்கிறார்.

போகத்தில் வழுவாத புதுவையர் கோன் என்ற ஆழ்வார் மற்ற ஆழ்வார்கள் போல எம்பெருமானுடைய சௌந்தர்ய குணா விசேஷத்தை பாட விரும்பி, தன்னிலை மறந்து, ஒரு கன்னி கோபிகையின் அவஸ்தையை அவள் தாயார் பேசுவதாக ஐய புழுதி உடம்பு அளைந்து (3.7) என்ற அடுத்த பதிகத்தில் விவரிக்கிறார். அதாவது, பருவம் நிரம்புவதற்கு முன்பே, கிருஷ்ண விஷயத்தில் அதிக ஆர்வம் உள்ளவளாகவும், இவள் இளமையிலேயே அவனுடன் சேர்ந்து வருகிறதையும் இவள் கண்ணனுடன் செய்யும் லீலைகளை பற்றி பேசும் போது, அவனுடைய சின்னங்களை மட்டுமே பேசி, மற்ற ஒன்றினையும் அறியாதவளாக இருப்பதையும், இவை எல்லாவற்றிக்கும் மூல காரணமாக அவளுடைய தோழிகள் அவளை கிருஷ்ணனிடம் அழைத்து சென்றதையும், இவள் இப்படி பேசும் போது, அவர்களுடைய சொந்தங்கள் பேசுவதையும், மற்றவர்கள் பேசும் வார்த்தைகளையும் இந்த பதிகத்தில் ஆழ்வார் விவரிக்கிறார்.

தன்னுடைய மகள், கண்ணனிடம் ஈடுபாடு கொண்டு அவன் மேல் ஆசையினை வளர்த்து, அவனுடன் சேர்ந்து விடவேண்டும் என்று துடிப்பினால், முதலில் தாயானவள் சந்தேகப்பட்டு, பின்பு பல வழிகளில் தானும் அதன் உண்மை தன்மையை அறிந்து, இதனை அறிந்த சொந்தங்களும், ‘இவள் தானாக எம்பெருமானை தேடி ஓடி விடுவதற்கு முன்னர், தாயே அவனிடம் கொண்டு சேர்த்து விட வேண்டும்’ என்று சொல்லியதை தாயார் உடனே அப்படி செய்யாமல் இருந்ததனால், எம்பெருமானே வந்து தன் மகளை முந்தானையால் மறைத்து தன்னுடைய திவ்ய தேசமான திருவாய்பாடிக்கு கொண்டு சென்றான் என்கிறார். தாயார், மகள் காத்து கொண்டு இருப்பதாக நினைத்து இருக்க, படுக்கையில் பெண் பிள்ளையை காணாததால், கண்ணனை தவிர இவளை தூக்கி சென்றவன் வேறு எவரும் இல்லை என்றும், அவன் நிச்சயமாக திருவாய்பாடிக்கு தான் அழைத்து சென்று இருப்பான் எனவும், தன் மகள் சென்றதால், தன் திருமாளிகை அழகு இழந்து, வெறிச்சோடி போனது என்றும், இவன் இப்படி அழைத்து கொண்டு சென்றது இந்த குடிக்கு திட்டு வருமோ அல்லது இது நல்லது தானோ, என்று தடுமாறியும், இவளுக்கு திருமணம் நடக்குமோ, மாமியாரான யசோதை பிராட்டி இவளை நல்ல மருமகள் என்று கொண்டாடுவாளோ, மாமனாரான நந்தகோபர், இவளை ஏற்றுக் கொண்டு, இவள் நல்லவள், இவளை பெற்ற தாய், இவள் இப்படி இங்கு வந்ததானால் உயிர் தரிப்பளோ என்று சொல்லுவாரோ என்றும், கண்ணன் ஒரு சிலரைபோல, தன் மகளை புணர்ந்து, உடன் போவதற்கு மட்டும் என்று வாழ்வானா, அல்லது நன்றாக திருமணம் செய்து கொண்டு நாடு நகரம் எல்லாம் போற்றும் படி வாழ்வானா, கண்ணன் இவளுக்கு தன்னுடைய பெருமையால் நல்லவை கெட்டவைகளை சொல்லிக் கொடுப்பவனாக இருப்பானோ அல்லது தனது பட்ட மகிஷியாக மற்றவர்கள் முன்னே பெருமை தோற்ற வைத்து வாழ்பவனோ, அல்லது தயிர் கடைவது போன்ற கடினமான தொழில்களை செய்து தன் மகள் வாழ வேண்டுமோ என்று மனம் கவலையுற்றும் அதே சமயம் சில நல்ல நினைவுகளால் மகிழ்ந்தும், தாயின் மனம் நிலை கொள்ளாமல் சென்ற விதத்தை நல்லதோர் தாமரைப் பொய்கை (3.8) என்ற பதிகம் சொல்கிறது.

கண்ணனும் இராமனும்

கிருஷ்ணாவதாரத்தில் அதிக பிரியம் உடையவராய் கண்ணனின் குணங்களில் ஆழ்வார் அனுபவித்ததை பார்த்தோம். என் நாதன் (3.9) என்ற பதிகத்தில் ஆழ்வார் இராம கிருஷ்ண அவதாரங்களின் குணா நலன்களை ஒரே சமயத்தில் அனுபவிக்க ஆசைப் படுகிறார். இரண்டு கோபிகா பெண்கள் ஒருவர் ராமர் பக்கதிலும் மற்றொருவர் கிருஷ்ணன் பக்கத்திலும் இருந்து இருவரும் ஒருவரை ஒருவர் எதிரிகளாகவே கருதி வாதம் செய்வதை, மற்ற அவதாரங்களையும் கொண்டு வர்ணிக்கிறார்.

இராமாவதார குணநலன்களை அனுபவித்தவர், அந்த அவதாரத்தில் அவருக்கு துணையாக வந்து அவதரித்த பிராட்டியான சீதா தேவியின் புருஷக்காரத்துடன், மற்ற குணங்களான, கிருபை, பாரதந்திரியம் (அவனுக்கே நாம் அடிமை), அனன்யகதித்துவம் (நீயே கதி) என்ற திருகுணங்களை அவனுடைய அடியார்கள் எல்லாம் அறிந்து, அவற்றை பின்பற்றி, அவனை அடையவேண்டும் என்ற காரணத்தினால் , தன்னுடைய அனுஷ்டானத்தின் மூலம் வெளிபடுத்துவோம் என்று பிராட்டியார் திருவுள்ளம் கொண்டார்.

அதில் முதலில் கிருபையை, தண்ட காரண்யத்தில், இராவணன் பிரித்தான் என்று ஒரு காரணம் கொண்டு, இலங்கையில் எழுந்தருளினாள். இந்த அவதாரத்தின் சிறப்பினாலே, எம்பெருமானாகிய இராமன், பிராட்டி இருக்கும் இடம் அறியாமல் இருந்த போது, திருவடி என்கிற ஹனுமானின் தோழமையை அங்கீகரித்து, திருவடி அல்லாமல் வேறு ஒருவரால் இந்த காரியம் நடக்காது என்று எம்பெருமான் திருவுள்ளம் கொண்டு, அதனால், பிராட்டியை கண்டால் சொல்லவேண்டிய அடையாளங்களை அனுமனுக்கு அருளி செய்து, திருவாழி மோதிரத்தையும் கொடுத்தார். தெற்கில் இலங்கை என்ற தீவினில் அசோகவனம் என்ற இடத்தில் பிரம்மாண்டமான ராக்க்ஷிகளின் நடுவே நோவு கண்டவர்களை போல இருந்த பிராட்டி இனி உயிருடன் இருப்பதில் பயன் இல்லை என்று முடிவு செய்து, ஒரு சிம்சுபா மரத்தின் கிளையை, பிடித்த போது, இராம நாமங்களை சொல்லி, தான் ராம தூதன் என்று சொல்லி, திருவாழி மோதிரத்தை சமர்ப்பித்து அது கண்டு தாயார் பிரீதி கொண்டு, பாரதந்திரியம் (அவனுக்கே நாம் அடிமை), அனன்யகதித்துவம் (நீயே கதி) என்ற திருகுணங்களை அனுமன் சீதை உரையாடலின் மூலம், பெரியாழ்வார் அனுபவித்து பாடும் பாடல்களை நெறிந்த கருங்குழல் (3.10) என்ற பதிகத்தில் அனுபவிக்கிறார்.

அவதாரங்களின் ஐக்கியம்

அடுத்த பதிகமான கதிராயிரம் (4.1) என்ற பதிகத்தில், ராம கிருஷ்ணா அவதாரங்களோடு மற்ற அவதாரங்களையும், அவற்றின் ஐக்கியத்தையும் மனதில் கொண்டு, அந்த அவதாரங்களை நேரில் காண ஆசைபட்டு, ‘நேரில் கண்டார் உண்டா’ என்று கேட்கும் ஒரு பிரிவினரும், மனதில் உண்டான அபரிமிதமான அனுபவங்களை கண்களின் மூலம் கண்டதாக சொல்லும் மற்றொரு பிரிவினரையும் கண்டு, ஆழ்வார் இந்த பதிகத்தில், ஒவ்வொரு பாடலிலும், இரு பிரிவினருக்கும் ஒரு வரலாறு சொல்லி அனுபவிக்கிறார். இந்த அவதாரங்களின் மூலமான, பரமாத்மாவை அனுபவிக்க ஆசைபட்டு, ஆழ்வார் இந்த பதிகத்தை பாடி உள்ளார்.

அவதாரங்களை கண்ணால் காண வேண்டும் என்று ஆசைபட்டாலும், அது அந்தந்த காலங்களில் உள்ளவர்களுக்கு மட்டுமே கிடைத்ததாலும், பிற்காலத்தில் உள்ளவர்களுக்கு கிடைக்காததாலும், பின்னானார் வணங்கும் சோதி, என்றபடி, அவதாரங்களுக்கு பின்னால் பிறந்தவர்களும் இழக்க வேண்டாதபடி, எம்பெருமானின் குணநலன்கள் பிரகாசிக்கும், எம்பெருமான் அர்ச்சாவதாரமாக உகந்து அருளின திவ்ய தேசங்களை அனுபவிக்க தொடங்கும் ஆழ்வார், முதலில் திருமாலிருஞ்சோலை என்ற தெற்கு திருப்பதியில் இராம, கிருஷ்ண அவதாரங்களின் லீலைகளையும் சேர்த்து அங்கிருக்கும் அழகரைக் காட்டிலும், அவர் உகந்து அருளின மலையை அடைந்தாலே அதுவே ஒரு அடியவன் சேர வேண்டிய இடம் என்பது போல இருக்கும்படியான பாசுரங்களை அலம்பா வெருட்டாக் கொன்று (4.2) என்ற பதிகத்தில் காணலாம்.

திருமாலிருஞ்சோலையில் எழுந்தருளி இருக்கும் எம்பெருமானின் குணநலன்களை அனுபவித்த ஆழ்வார், அவரை காட்டிலும், அவர் உகந்து எழுந்தருளி இருக்கும், தென்திருமலையே, மிகவும் ப்ராப்யம் அல்லது அடைய தகுந்தது என்று சொல்லி, தென் திருமலையை உயர்த்தி பாடினார். இப்படி பேசி அனுபவித்தும், ஆழ்வாருக்கு பிராப்தி கிடைக்கவில்லை, ஆதலால், மீண்டும் அவதார குண விசேஷங்களை எல்லாம், பிரகாசிக்கும்படி, உருப்பிணி நங்கை தன்னை(4.3) என்ற அடுத்த பதிகத்தில் அழகர் தென்திருமலையில் நிற்கின்ற நிலையை, முன்பு சொன்னதற்கு ஒரு குறையும் வராமல், தென்திருமலையின் விசேஷங்களையும், எம்பெருமானின் குணங்களையும் கூட சொல்லி அனுபவிக்கிறார். முதலில் கிருஷ்ணாவதாரத்தையும் பின் இராமவதாரத்தையும் அழகரிடம் தரிசித்து, அனுபவிக்கிறார்.

திருமாலரிஞ்சோலை எம்பெருமானை அனுபவித்த ஆழ்வார், எம்பெருமானையும் தென்திருமலையையும் பாடிய போது, எம்பெருமான் தன் திருநாமங்களை சொல்லியதற்காக தந்தை இரண்யகசிபுவிடம் கொடிய தண்டனைகள் பெற்ற பிரகலாதனை காப்பாற்றி, இரணியனை அழிக்கும் பொருட்டு, இரண்டு வடிவுகளை சேர்த்துக் கொண்டு தோன்றிய நரசிம்ம மூர்த்தி எம்பெருமானின், மகா குணம் பிரகாசிக்கும் வண்ணம் திருக்கோட்டியூரில் எழுந்தருளி இருப்பதை திருவுள்ளத்தில் கொண்டு அவன் உகந்து அருளிய அந்த திவ்ய தேசத்தை நாவகாரியம் சொல்லிலாதவர் (4.4) என்ற பதிகத்தில் அனுபவிக்கிறார். அவன் கொடுத்தருளிய மூன்று வித கரணங்களை கொண்டு அவனை அனுபவிப்பவர்களை உயர்வாக பாராட்டியும், அப்படி செய்யாமல் அவனோடு ஒரு சம்பந்தமும் இல்லை என்று திரிபவர்களை நிந்தித்தும் பாடுகிறார். ஆதியான் அடியவர்களையும், அடிமையின்றி திரிவாரையும், ஸம்ஸாரிகள் பொல்லாங்கும், ஸ்ரீ வைஷ்ணவர்களின் ஏற்றமும் சொன்னார்.

ஸம்ஸாரிகளுக்கும் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கும், பகவத் சம்பந்தம் ஒரே மாதிரி இருக்க, ஸம்ஸாரிகளை ஆழ்வார் தவிர்க்க காரணம், அவர்களுக்கு பாகவத சம்பந்தம் பற்றிய அறிவு குறைந்து இருப்பதே என்கிறார். இறுதி காலத்தில் பாகவத சம்பந்தம் மிகவும் நல்லது என்பதால், ஆசை வாய் சென்ற (4.5) என்ற பதிகத்தில் ஆழ்வார் ஸம்ஸாரிகளுக்கு உபதேசம் செய்கிறார். பொய் சொல்லுகையும், பகவத் காரியங்களில் இணக்கம் இல்லாதவர்களாய் இருக்கும் மனிதர்களை நினைத்தும் அவர்களையும் விட முடியாத, ஆழ்வார், அவர்களின் மேல் கருணை கொண்டு, அவர்களுக்கும் நல்லதை உபதேசிப்போம் என்ற கருத்தை திருஉள்ளத்தில் கொண்டு, தங்களுடைய கடைசி காலத்திலாவது பகவத் காரியங்களில் ஆசை கொண்டு, அவனை மனதில் நிறுத்தி, எம்பெருமானின் நாம ஸம்கீர்த்தனங்களை சொல்லி வாழ்ந்தால், அவர்கள் மேல் உலகத்தில் பெறும் பெற்றை சொல்லி மாளாது என்பதில் தொடங்கி, இறுதி காலத்தில் வரும் சிரமங்களையும் சொல்லி, அந்த காலம் வருவதற்கு முன்னால் எந்த ஒரு வகையிலாவது எம்பெருமானின் திருவடியை அணுகி இந்த உடலை பிரிந்தால், யம கிங்கரர்கள் கொடுக்கும் தண்டனைகளில் இருந்து தப்பி, அர்ச்சிராதி மார்க்கம் வழியாக பரமபதம் அடைந்து, நித்யசூரிகளுடன், கால தத்துவம் என்று ஒன்று உள்ளவரை எம்பெருமானின் புகழ் பாடி, அவனுக்கு தொண்டு செய்து, வாழலாம் என்று அவர்கள் நெஞ்சுக்கு படும்படியாக உபதேசம் செய்கிறார்.

காசும் கறை உடைக் கூறைக்கும் (4.6) என்ற அடுத்த பதிகத்தில், பகவத் விஷயத்தில் ஆசையோ நாட்டமோ இல்லாதவர்களையும், அவன் திருநாமங்களை சொல்ல இயலாதவர்களையும், ஏதாவது ஒரு வழியால், எம்பெருமான் திருநாமத்தில் ஈடுபடுத்தி, அவர்களையும் உஜ்ஜீவிக்க செய்ய வேண்டும் என்று திருவுள்ளம் கொண்டு, அவர்களுக்கு உபதேசம் செய்கிறார். உலக விஷயங்கள் மனதில் கொண்டு, அவர்கள் பிள்ளைகளுக்கு பெயர் வைத்தாலும், இந்த பிறவியில் அவர்கள் ஆசைப்படுகின்ற அந்த பலன்கள் அவர்களுக்கு கிடைப்பதில்லை என்றும், மறுமைக்கும் பயன் கிடைப்பதில்லை என்றும் சொல்லி, அதனை தவிர்த்து, பிச்சை எடுத்தாலும், சர்வேசவரனுடைய திரு நாமங்களை தங்கள் பிள்ளைகளுக்கு இட்டு, அவனை வாழ்த்தி, அவனுக்கு பிடித்தவர்கள் ஆகுங்கள் என்கிறார். இப்படி செய்பவர்கள் நரகதிற்கு போகாமல், உஜ்ஜீவிப்பார்கள் என்று அவர்கள் நெஞ்சங்களுக்கு இனிமையான வார்த்தைகளை தெரிவிக்கிறார்.

அதனை செய்த பிறகு, முன்பு, திருமாலிருஞ்சோலை, திருக்கோட்டியூர் என்று எம்பெருமான் உகந்து அருளின திவ்ய தேசங்களை அனுபவித்ததை போல, மேலும் வடமதுரை, ஸாளக்ராமம் போன்ற சில திவ்ய தேசங்களை அனுபவிக்க ஆசைகொண்டு, எம்பெருமான் உலகம் அளந்தபோது, தன்னுடைய திருவடிகளின் ஏற்றத்தாலே, எப்போதும் கரை புரண்டு ஓடுகின்ற, கங்கை நதியின் கரையில் உள்ள கண்டம் என்னும் கடி நகர் என்று சொல்லபடுகின்ற (தேவபிரயாகை) திருத்தலத்தில் அநேக அவதாரங்கள் பிரகாசமாக விளங்கும்படி, புருஷோத்தமன் என்ற திருநாமம் உடையவனான திவ்ய தேச எம்பெருமானையும், திவ்ய தேசத்தின் பெருமைகளையும் சேர்த்து தங்கையை’ (4.7) என்ற பதிகத்தில் பாடுகிறார்.

இந்த திவ்ய தேசங்கள் போல் இல்லாமல், ‘வடிவுடை வானவர் தலைவனே’ என்றும், ‘கடலிடம் கொண்ட கடல்வண்ணா’ என்றும், ‘கட்கிலி’ என்றும், ‘காகுத்தா, கண்ணனே’ என்றும் சொல்லும்படியான பரத்துவ குணங்கள் எல்லாம் பிரகாசிக்கும்படியாக இருக்கும் திவ்ய தேசமான, ‘பொங்கோதம் சூழ்ந்த புவனியும்’, என்கிறபடியும், இந்த பூமியை இங்கே இருந்தே நிர்வகின்றது போல தோன்றும், ‘மாலிருஞ்சோலை மணாளர் பள்ளிகொள்ளும் இடம்’ என்றும், ‘ஆராமம் சூழ்ந்த அரங்கம்’ என்கிறபடியும், அவன் உகந்து அருளின நிலங்கள் எல்லாம் ‘பகல் இருக்கை’ போல என்றும், அடியவர்களை காப்பதற்கு ஏகாந்தமான இடம் என்று எப்போதும் வாசம் செய்கின்ற திருவரங்கம் திவ்ய தேசத்திலே வாசம் செய்கின்ற, ‘வன் பெரு வானகம் உய்ய’ என்று சொல்வதைப் போல, எல்லா உலகில் உள்ளவர்களும் உஜஜீவிக்கின்றதாகவும், ‘தென் நாடும் வட நாடும் தொழ நின்ற’ என்று எல்லோரும் அனுபவித்து வணங்குகின்றதாகவும், ‘அன்போடு தென்திசை நோக்கி’, ராம கிருஷ்ண மற்றும் எல்லா அவதாரங்களும் பிரகாசிக்கும்படி, திருவுள்ளத்தில் உகப்புடன் கண் வளர்ந்து இருக்கின்ற இந்த திருவரங்க திருப்பதியை மாதவத்தோன் புத்திரன் (4.8) என்ற அடுத்த பதிகத்தில் ஆழ்வார் அனுபவித்து பாடுகிறார்.

இராமாவதார, கிருஷ்ணாவதார, மற்றும் அவதார குணநலங்கள் பெரியபெருமாள் இடத்தில் பிரகாசிப்பதாலே, அவற்றை அனுபவித்து, அவன் உகந்து அருளிய திவ்ய தேசமான திருவரங்க திருப்பதியின் வைபவத்தையும் சேர்த்து, பாடியதில் திருப்தி அடையாமல், மீண்டும் இந்த திவ்ய தேசத்தின் சிறப்புகளையும், பெரியபெருமாளின் குணவிசேஷங்களையும் பாடி, மரவடியைத் தம்பிக்கு (4.9) என்ற அடுத்த பதிகத்திலும் திருவரங்க திருப்பதியை அனுபவிக்கிறார்.

பெரியபெருமாளின் திவ்ய வைபவங்களையும், திருவரங்க திருப்பதியின் வைபவங்களையும் பாடி அனுபவித்த ஆழ்வார், ‘தன்னடியார் திறத்தகத்தே’ என்ற பாடலில் எம்பெருமான் அடியார்களை விடாமல் பிடித்து கொண்டு உள்ளதையும், ‘இருளகற்று எறி கதிரோன் ‘ என்ற பாடலில், திருவடிகளை போற்றி, எம்பெருமானை ஏற்றுக் கொண்டவர்களை, அர்ச்சிராதி மார்க்கத்திலே பரமபதம் கொண்டு சேர்த்து, அவர்களுக்கு அருள் கொடுத்து, அடிமை கொள்ளும், பெரியபெருமாளுடைய திவ்ய குணங்களை அனுபவித்தவர் என்பதால், எம்பெருமான் தனக்கும் , திருந்திய அடியவர்களுக்கும் பரமபதத்தை அருளும் திருவுள்ளம் கொண்டவர் ஆதலால், ஆழ்வாருக்கு அங்கு சென்று கைங்கர்யம் செய்ய வேண்டும் என்ற ஆசை பெருக, அதற்கு இந்த தேக சம்பந்தம் அறுந்து போகும்படி, வேண்டி துப்புடையாரை அடைவது(4.10) என்ற அடுத்த பதிகத்தில் பாடுகிறார். இப்படி தேக சம்பந்தம் அறுபடும் போது, யம கிங்கரர்களால் வருத்தப்பட நேரிடும் என்று எம பயம் வந்து, துன்பம் நேரிடும் போது , அப்படிபட்ட துன்பங்களில் இருந்து, எம்பெருமான் விடுவிக்க வேண்டும் என்றும் வேண்டுகிறார். அது தன்னை எம்பெருமான் திருவடிகளில் விழுந்து பாடி, தெரிவித்துக் கொள்வோம் என்ற நிலையில், இறுதி காலத்தில் கர்ம வினை பயன்களால் யம கிங்கரர்களால் துன்பம் நேர்கையில், அத்தகைய கவலைகளால் எம்பெருமானின் திருவடிகளை நினைக்க மறந்து விடவும், அவனது கீர்த்திகளை பாடவும் சக்தி இல்லாதவனாக இருப்பேன் ஆதலால், அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன், என்று சொல்லி, எம்பெருமான் தன்னை காப்பாற்ற வேண்டும் என்று அவன் திருவடிகளில் சரணாகதி அடையும் பொருட்டு விண்ணப்பம் செய்கிறார்.

விஷ்ணுவை ஹ்ருதயத்தில் அமையப் பெற்றவர்

‘தன்னால் சொல்ல முடியும்போதே. உன் நாமம் எல்லாம் சொல்கிறேன்’ என்று திருநாமத்தின் போக்கியதையை அனுபவித்து, முன்பு ‘ஆவியே அமுதே’ என்று இதர விஷயங்களில் அலைந்து திரிந்ததை எண்ணி, திருநாம இனிமையை பல காலம் இழந்தேன் என்று வருந்தி, இனி, ‘ஆவியை அரங்க மாலை’ என்றும், ‘ஆவியே அமுதே என் ஆருயிர் அனைய எந்தாய்’, என்றும், தன் தப்பினை பொறுத்த அருள வேண்டும், என்றும் பெரியபெருமாள் இனிமையில் தன்னுடைய கரணங்களை (உறுப்புகளை) லயிக்கவிட்டு பாடுவதை வாக்கு தூய்மை (5.1) என்ற அடுத்த பதிகத்தில் சொல்கிறார்.

அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்‘ என்று ‘இறுதி காலத்தில் எம கிங்கரர்கள் வருத்தும் போது, உன்னை புகழ்ந்து பாட முடியாதோ என்று ஏற்கனவே சொல்லி வைத்தேன்’ என்று சொன்ன ஆழ்வார், ‘சழுக்கு நாக்கொடு புன் கவி சொன்னேன்‘ என்று சொன்ன ஆழ்வார், ‘நெய் குடத்தை’ (5.2) என்ற அடுத்த பதிகத்தில் எம்பெருமான் கரணங்கள் இவர் மேல் விழுந்தது கண்டு, இது அவர் மேல், அவன் விழுந்து, புகுந்து கிடந்தபடி இருந்ததை கூறுகிறார். இந்த பதிகத்தை சேவித்தால் எந்த நோய்களும் நம்மை அண்டாமல் இருக்கும் என்பது நம் பெரியவர்கள் கூற்று.

முன்பு சொன்ன பதிகங்களில், நம்மாழ்வார் திருவாய்மொழியில், ‘திருமாலிருஞ்சோலை மலை என்றே என்ன‘ என்ற பாடலிலும், ‘சூழ் விசும்பு அணி முகில்‘ என்ற பாடலிலும் சொன்ன அர்த்தங்களை சொன்னார். ‘முனியே நான்முகனே‘ என்ற பதிகத்தில், ‘முதல் தனி வித்தேயோ. முழு மூவுலகாதிக்கு எல்லாம்‘ சொன்ன அர்த்தத்தை துக்கச் சுழலையைச் சூழ்ந்து(5.3) என்ற அடுத்த பதிகத்தில் சொல்கிறார். “சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவில் பெரும் பாழேயோ” என்ற பத்தாம் பாட்டின் அர்த்தத்தை சென்னியோங்கு(5.4) என்ற அடுத்த பதிகத்தில் சொல்கிறார். பரவுகின்றான் விட்டுசித்தன் என்று சொல்வதன் மூலம், சக்தைக்கும், போகத்திற்கு மட்டுமின்றி ரக்க்ஷய்க்கும் (காப்பாற்றுவதற்கும்) என்கிறார். அரவத்து அமளியோடும் என்று நம்முடைய உடம்பினில் வந்து புகுந்த பின்னர், இனி போகவிடமாட்டேன் (இனி நான் போகலொட்டேன் ) என்கிறார். கீழ் பதிகத்தில் நெய் குடத்தை பற்றி, என்றும் நோய்க்காள் என்றும் அநிஷ்ட நிவருத்தியை சொன்ன ஆழ்வார் இந்த பதிகத்தில் இஷ்ட பிரார்த்தியை செய்து தர வேண்டும் என்று திருவாணை இட்டு தடுக்கிறார்.

பர, வியூக, விபவ, அந்தர்யாமி, மற்றும் அர்ச்சாவதாரங்களில் எழுந்தருளி இருப்பது, அடியவர்களை திருத்துவதற்கும், அப்படி திருத்தியவர்களிடம் கைங்கர்யங்களை பெற்று கொள்வதற்கும் தான் என்று சென்னியோங்கு (5.4) பதிகம் சொல்கிறது. இதனை முழுவதுமாக காண்கின்ற இடம் திருமலையில் எழுந்தருளி நிற்கிற நிலையில் என்பதை அருளி செய்கிறார். ‘திருமாலிருஞ்சோலை மலைமென்றேன் என்ன, திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்’, என்று திருவாய்மொழி (10.8.1) சொல்வது போலவும், “வெற்பென்று வேங்கடம் பாடினேன், வீடாக்கி நிற்கின்றேன்” என்று நான்முகன் திருவந்தாதி (4.10) சொல்வது போலவும், திருவேங்கடம் எம்பெருமான் வந்து புகுந்து, சௌகார்த்தம் (எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் வருவது) போன்ற ஆத்ம குணங்களை பிறப்பித்து, ஆச்சாரியனோடு சேர்ந்து, விரோதிகளில் அருசியையும், பிராப்யத்தில் ருசியையும் பிறப்பித்து, காரியம் செய்யும். இப்படி திருந்திய ஆழ்வாரை கண்டு அவன் உகக்க, அவன் உகப்பை கண்டு இவர் உகக்க, இந்த உகப்புக்கு மேல் வேறு ஒரு பேறு இல்லை என்று இவர் இருக்க, இவர் காரியத்தில் நாம் முதலடி எடுத்து வைக்க வில்லை என்று அவன் பதற, அவன் பதற்றத்தை தணிக்க ஆழ்வார் பார்க்கிறார். இந்த பதிகம் கற்றவர்கள், விஷ்ணுசித்தர் என்கிற பெரியஆழ்வார் போலவே அனன்யார்க சேஷ பூதர்கள் ஆவார்கள் என்கிறார்.

‘விஷ்ணுவை ஹ்ருதயத்தில் அமையப் பெற்றுள்ளவர்’ என்பது விஷ்ணுசித்தர் என்ற திருநாமத்தின் பொருள். இப்படிபட்ட ஆழ்வார் பாடிய பெரியாழ்வார் திருமொழி என்ற பிரபந்தத்தின் ஒரு சுருக்கத்தை இங்கே கண்டோம். பாசுரங்களும், ஒவ்வொரு பாசுரத்தின அர்த்தங்களையும் இங்கே எனக்கு புரிந்த அளவில் சொல்லி உள்ளேன். அதில் தவறுகள் இருந்தால், அடியேனிடம் தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி

076 திருநாவாய் / Thirunaavaai

மலர்மங்கை நாச்சியார் ஸமேத நாராயணப் பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி.

மலைநாட்டு திவ்ய தேசங்களை பற்றிய ஒரு முன்னுரையை இங்கே காண்போம்.

மலையாள திவ்ய தேசங்கள் யாவும் அழகான சூழ்நிலையிலேயே அமைந்து உள்ளன. கோவில்கள் மிகவும் தூய்மை. இங்கு கோவில்களை தமிழ் சொல்லான அம்பலம் என்றே அழைக்கின்றனர். தமிழ்நாட்டில் எத்தனையோ சிவஸ்தலங்கள் அம்பலம் என்ற சொல் கொண்டே முடிகிறது. வைணவ திவ்ய தேசங்களிலும், திருத்தெற்றியம்பலம் என்று ஒரு திவ்ய தேசத்திற்கு அம்பலம் என்ற பெயரில் முடிகிறது.  

மலையாள நாட்டையே, பரசுராம க்ஷேத்திரம் என்று அழைக்கிறார்கள். இங்கு விமானங்களும் கோபுரங்களும் தமிழ்நாட்டில் உள்ளது போல இல்லை. அதே போல அங்கு உள்ள சிற்பங்களும் சித்திரங்களும் தமிழ் நாட்டில் உள்ளது போல இல்லை. மலை நாட்டு திவ்ய தேசங்கள் செவ்வக வடிவில் அமைந்தவை. நான்கு வாசல்கள் கொண்டதாக
நாற்புரம் சூழ்ந்த சுற்றுச் சுவர்களால் அமைக்கப்பட்டவை. இதற்குள் வட்ட வடிவமான மூலஸ்தானம். மூலஸ்தானத்தின் மேல் கூம்பு வடிவில் தொப்பியைக் கவிழ்த்து வைத்தது போன்ற கூரைகள் உள்ளன. வேறு சில வடிவில் மூலஸ்தானங்களும் உண்டு.  தூய்மை நிறைந்த சுற்றுப்புற நடைபாதைகள் உள்ளன. தமிழ்நாட்டில் உள்ளது போல பெரிய கொடி மரங்கள் (துவஜஸ்தம்பங்கள்) கோவிலின் முகப்பில் உள்ளது.  இந்த கொடி மரங்களில் கருடாழ்வார் திருஉருவம் உள்ள விளக்குகள் உள்ளன. திருவல்லாவில் உள்ள கொடிமரம் மிகப் பெரியதாகும்.

இங்குள்ள கோவில்களில், மூலஸ்தானத்திற்கு முன்புறம் சதுர வடிவிலான ஒரு மேடை உள்ளது. பொதுவாக இதை பலிபீடம் என்று கூறுவர். இந்த மேடையின் முன்பு நின்றுகொண்டு தான் நாம் எம்பெருமானை வழிபட வேண்டும். மேடையில் மேல் யாரும் ஏற கூடாது. எம்பெருமானுக்கு பூஜை செய்யும் போத்திகள் மட்டும் இந்த மேடையின் மீது ஏறி எம்பெருமானுக்கு சாஷ்டங்கமாய் நமஸ்காரம் செய்து விட்டு பூஜையில் ஈடுபடுவர்.

இங்கு கோவிலுக்குள் மேல் சட்டை அல்லது பனியன் அணிந்து செல்லக் கூடாது. கைலிகளும் கட்டிக் கொண்டு போகக் கூடாது. பாரம்பரிய உடைகளில் தான் ஆண்களும் பெண்களும் செல்ல வேண்டும்.

இங்கு தமிழ் நாட்டைப் போல் ஸ்ரீவைஷ்ணவர்களால் எம்பெருமான் ஆராதிக்கப் படுவதில்லை. இங்கு பூஜை செய்பவர்கள் போத்திகள் அல்லது நம்பூதிரிகள் எனப்படுவர். இவர்கள் மலையாள பிராம்மணர்கள், இவர்கள் தூய்மையான பக்தியோடு விடியர் காலையில் எழுந்து நீராடி ஈரத்துணியோடு பூஜை செய்ய வருவார்கள். இவர்கள் எம்பெருமானை ஆழ்வார்கள் இட்ட பெயரால் சொல்வதில்லை, அவர்கள் எம்பெருமானை நாமாவளி சொல்லி ஆதாரிப்பதும் வெளியில் இருக்கும் நம் காதுகளில் விழுவது இல்லை. ஆனால் நமது பெருமாளும் நமது பிராட்டியும் நமது கருடாழ்வாரும் தான் இங்கு எழுந்தருளி இருக்கின்றனர்.

பெரும்பாலும் தனி தாயார் சன்னதி கிடையாது, சிறிய தாயார் விக்ரகம் பெருமாள் சந்நிதியில் இருக்கும். திருநாவாய் என்ற திவ்ய தேசத்தில் மட்டும் தனி தாயார் சன்னதி உண்டு. திருவல்லவாழ் என்ற திவ்ய தேசத்தில் விபூதி பிரசாதம் கொடுக்கிறார்கள்.

இங்கு தீர்த்தம், துளசி சடாரி முதலியவை பிரசாதமாக கொடுக்கப் படுவதில்லை. மாறாக
துளசி, புஷ்பம், சந்தனம் போன்றவற்றை ஒரு சிறிய வாழை இலையில் வைத்து தருகிறார்கள். தினந்தோறும் எம்பெருமானுக்கு திருமஞ்சனம் உண்டு. அதே போல தினமும் பிரகார புறப்பாடும் உண்டு, அதற்கு ஸ்ரீவளி என்று பெயர்.

மலையாள திவ்யதேசங்கள் பதிமூன்றில் பஞ்ச பாண்டவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட, ஐந்து திவ்ய தேசங்கள் உண்டு. இவைகளைப் பாண்டவர் கோயில் என்றே அழைக்கின்றனர். அவைகள், திருச்சிற்றாறு, (தர்மன்) திருஆரம்முளா (அர்ஜு னன்), திருப்புலியூர் (பீமன்), திருவன்வண்டூர்(நகுலன்), மற்றும் திருக்கடித்தானம் (சகாதேவன்).

கேரளத்தில் கோவில்களைக் காப்பதிலும், புனருத்தாரணம் செய்வதிலும் கைங்கர்யங்களில் ஈடுபடுதலிலும் இளைஞர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். இங்குள்ள பதின்மூன்று திவ்ய தேசங்கள் :

திருவனந்தபுரம், திருவண்பரிசாரம், திருகாட்கரை, திருமூழிக்களம், திருச்சிறு புலியூர், திருசெங்குன்றூர், திரு நாவாய், திரு வல்லவாழ், திரு வண்வண்டூர், திருவாட்டாறு, திருவித்துவக் கோடு, திருக்கடித்தானம் , திருவாறன் விளை (ஆரம்முளா)

இவற்றை தவிர, மலைநாட்டு திவ்ய தேச பயணத்தின் போது, நாம் தரிசிக்க வேண்டிய இன்னோர் முக்கியமான இடம் திருவஞ்சிகுளம். இங்கு தான் குலசேகர ஆழ்வார் அவதரித்தார். கேரளாவில் உள்ள பல கோவில்களை போல இதுவும், காலை 430 மணிக்கே திறந்து காலை பத்து மணிக்கு மூடி விடுகிறார்கள். மாலையிலும் 4 முதல் 8 மணி வரை தான் திறந்திருக்கும். இதனையும் வரைபடம் 3 ல் காண்பித்து உள்ளேன்.

சென்னை கள்ளிக்கோட்டை ரயில் மார்க்கத்தில் உள்ள திருநாவாய் ரயில் நிலையத்திலிருந்து சுமார் ஒரு மைல் தூரத்தில் உள்ளது. ஷோரனூரிலிருந்து பேருந்து வசதிகள் உண்டு. திருவாங்கூர் சமஸ்தானத்தைச் சார்ந்த இடக்குளம் என்ற ஊரிலிருந்து சுமார் அரை மைல் தூரம் உள்ளது.

இந்த திருத்தலம் பாரத புழா என்ற ஆற்றின் கரையில் உள்ளஅது. கேரளாவில் இத்தலம்
மிகவும் முக்கியத்துவமும், புராதனமும் வாய்ந்ததாகும். இந்த திருத்தலத்தை காசிக்கு சமமாக கருதி, அங்கு நடைபெறுவதைப் போன்று இங்கு முன்னோர்களுக்கு செய்யும் காரியங்கள் (சிரார்த்தங்களும், தர்ப்பணங்களும்) செய்யப்படுகின்றன. தை மற்றும் ஆடி அமாவாசைகளில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு ஆற்றின் கரைகளில் புராதன முறைபடி செய்யபடுகிறது. இந்த திருத்தலத்தின் எதிர்புறம் சிவன் கோவிலும், பிரம்மன் கோவிலும் உள்ளதால், இது மும்மூர்த்திகள் ஸ்தலம் என்றும் கூறப்படுகிறது.

மலையாள திவ்ய தேசங்களில், இங்கு மட்டும் தான் மஹாலக்ஷ்மி தாயாருக்கு என்று தனி சன்னதி உள்ளது.

எம்பெருமானைக் குறித்து ஒன்பது (நவ) யோகிகள் தவம் செய்ததாகவும் அதனால் இந்த ஸ்தலம் நவ யோகிஸ்தலம் என்று அழைக்கப்பட்டு, காலப் போக்கில் மருவி நாவாய் ஸ்தலம் என்றாகி தற்போது திருநாவாய் என்று அழைக்கப்படுகிறது.

ஒரு முறை மகாலட்சுமியும், கஜேந்திரனும் தாமரைப் பூக்களைப் பறித்து பகவானை அர்ச்சித்து வர கஜேந்திரனுக்குப் பூ கிடைக்காமல் போயிற்று. இதனால் பகவானிடம் கஜேந்திரன் தனது நிலையை விளக்கி முறையிட பகவான் லட்சுமி தேவியைப் பூப்பறிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார். இதனால் மகிழ்ந்த கஜேந்திரன் ஏராளமான பூக்களைப் பறித்துப் பகவானை அர்ச்சிக்கலானான். பூஜையின்போது லட்சுமி தேவியுடன் சேர்ந்து எம்பெருமான் கஜேந்தரனின் பூஜையை ஏற்று கொண்டார்.

மலை நாட்டு திவ்ய தேசங்களில் வழிபாட்டு முறையை மாற்றி தமிழ் நாட்டில் உள்ள
வைணவ நெறியிலான வழிபாட்டு முறையை இங்கும் ஏற்படுத்த வேண்டும் என்று
ஸ்ரீஇராமானுஜர் திருவுள்ளம் கொண்டு மலையாளத்தின் எல்லைக்குள் பிரவேசம்
செய்ததாகவும், இதையறிந்த போத்திகள் எம்பெருமானிடம் வேண்டி தாங்கள் செய்து வரும் வழிபாட்டு முறைகளையே எம்பெருமான் தொடர்ந்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பிரார்த்திக்கவும், பக்தர்களின் ஆசையை நிறைவேற்றி வைக்கும் பக்தவத்சலனான எம்பெருமான், மலையாள நாட்டின் எல்லையில் ஓரிடத்தில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த இராமானுஜரை அப்படியே எடுத்து வந்து திருக்குறுங்குடிக்கு அருகில் ஒரு பாறையில் படுக்க வைத்ததாக வரலாறு.

இராமானுஜருக்கு வடுக நம்பி என்பவரே தினமும் திருமண் இட்டு அலங்கரிப்பர். இராமானுஜர் பாறையில் இருந்து துயில் நீத்து எழுந்து வடுகநம்பியே வாரும் என்று கூற, திருக்குறுங்குடி எம்பெருமானே வடுக நம்பியாக வந்து இராமானுஜருக்குத் திருமண் இட்டு அலங்கரித்தார். இராமனுஜரூடன் சென்ற வடுகநம்பி இராமானுஜரைக் காணாததால் வடுகநம்பி, திருக்குறுங்குடி அடைய, இவரின் வருகையைக் கண்ட இராமானுஜர் மிகவும் அதிர்ந்து போனார். வடுக நம்பியின் வடிவில் இராமானுஜருக்குத் திருமண் இட்டவர் திருக்குறுங்குடி பெருமாளேயாவார்.

இராமானுஜர் தாம் தமிழகத்தில் இருப்பதை அறிந்ததும், எம்பெருமானின் திருவுள்ளக்
கருத்தை அறிந்து மீண்டும் தமது திருப்பணிகளைத் தமிழகத்திலேயே தொடர்ந்ததாகவும் வரலாறு. இந்த வரலாற்றை இராமானுஜரின் வரலாற்றில் காணலாம்.

திருமங்கையாழ்வாரால் 2 பாசுரங்களாலும், நம்மாழ்வாரால் 11 பாசுரங்களாலும் மங்களாசாசனம் செய்யப் பட்ட ஸ்தலம். திருமங்கையாழ்வார் தமது பாசுரங்களில் இத்தலத்தை திருக்கோட்டியூருக்கும் திருநறையூருக்கும் ஒப்பிட்டு மங்களாசாசனம் செய்துள்ளார்.

பரிசுத்தமான வாயை உடைய பெரிய திருவடியை (கருடனை) வாகனமாகக் கொண்டு, நதிக்கரைக்கு வந்து சேர்ந்து, ஸ்ரீ கஜேந்திராழ்வான் துன்பம் அடையாதபடி அருள்புரிந்து, முதலையை இரு துண்டமாக்கி ஓழித்தவனும், நித்யஸூரிகளுக்குத் தலைவனும், செந்தாமரைப் பூப்போன்ற திருக்கண்களை உடையவனும் திருநாவாய் என்னும் திருத்தலத்தில் இருப்பவனுமான எம்பெருமானை திருநரையூரில் கண்டனே என்று பாடுகிறார்.

கண்டவர்களுக்கு நடுக்கத்தை விளைவிக்க கூடியதாய் பெரிய வடிவு கொண்ட, குவலயாபீடம் என்ற யானை அஞ்சி, கலங்கி, முடியுமாறு, அதன் கொம்பினை முறித்தவனும் ஒலிக்கின்ற வீரக்கழலை உடையவனும், வீசித்திரமானவனை, அவன் அடியவர்கள் நம்பிக்கையுடன் அணுக தகுந்தவனை, கிளைகள் விளங்குகின்ற சோலைகளை கொண்ட திருக்கோட்டியூரில் சென்று ஸேவித்து, திருநாவாயில் போய் ஸேவிப்போம் என்று கூறுகிறார்.

கீழ் வரும் பாடல்கள் எல்லாம், திருவடி (ஹனுமான்) சீதா பிராட்டியை இலங்கையில் சந்தித்து, மீண்டும் இராமன் இருக்கும் இடத்திற்கு ஹனுமான் வருவதற்கு முன்னால், சீதையின் மனத்தில் ஓடிய எண்ணங்களை சொல்வது போல ஆழ்வாரின் எண்ண ஓட்டங்களை சொல்வதாக அமைந்த பாடல்கள். திருவாய்மொழி 6.10 ல் நம்மாழ்வார் திருவேங்கடமுடையான தமக்கு மோக்ஷம் அருளிய போதும், அது எப்போது கிடைக்கும் என்பதை சொல்ல வில்லை. அதே போல, திருவடியை கண்ட சீதா பிராட்டி, இராமபிரான் வந்து தன்னை காப்பாற்றுவான் என்று உறுதியாக நம்பியபோதும், அது எப்போது என்று தெரியாத நிலையில் இருப்பது இங்கே உதாரணமாக சொல்லபடுகிறது.

உள்ளத்தில் எம்பெருமானை நிலைநிறுத்தி வைத்துக்கொள்ள வேணும் என்கிற கருத்திலே ஒருமைப்பாடுடைய, எண்ணங்களை உடைய பக்தர்களுக்கு விரோதிகளை எல்லாம் போக்கக் கூடிய குளிர்ந்த புஷ்பங்களை கொண்ட சோலைகளாலே சூழப்பட்டதான திருநாவாய் திருப்பதியை, கொடியேனான எனக்கு கிடைக்குமா என்று ஆழ்வார் கேட்கிறார். திருநாவாய் திவ்ய தேசம், விரோதிகளைப் போக்குவது மாத்திரமன்றிக்கே பரம போக்யமுமானது என்கிறார்.

மூன்று விரோதிகளை சொல்கிறார்; ருசிவிரோதி, அதாவது, பகவத் விஷயத்தில் ஆசை பிறக்க விடாதபடி தடுக்கிற விரோதிகள்; அதாவது வேறு பயன்கள் தேடி போவது, வேறு தேவதைகளை தேடி செல்வது போன்றவை; இரண்டாவது, உபாய விரோதி, அதாவது அவனே என்று ருசி பிறந்தாலும், அவனே உபாயமாக கொள்ளாமல், வேறு உபாயங்களை தேடுவது; மூன்றாவது பேற்றினை பெறும் இடத்தில் வரும் விரோதிகள்; அவன் திருவடிகளை அடையும் இடத்தில் வரும் கர்ம வாசனா ருசிகள், பாகவத அபச்சாரம் போன்ற விரோதிகள்.

எம்பெருமானார் மலைநாட்டுத் திருப்பதி யாத்திரையாக எழுந்தருளும் போது, திருநாவாய் ஸமீபத்திலே இருக்கும் போது, எதிரே வந்து கொண்டிருந்த மலையாள பாஷை பேசும் சிலரை நோக்கி ‘திருநாவாய் எவ்வளவு தூரம்’ என்று கேட்க, அவர்கள் ‘குறுக்கும்’ என்றார்களாம். தமிழில் குறுகும் என்பது, மலையாளத்தில் குறுக்கும் என்று இருக்கிறது. அதாவது ஸமீபத்தில் தானுள்ளது என்று பொருள். எம்பெருமானார் அது கேட்டு ‘இப்பாஷையாலே அருளிச் செய்வதே ஆழ்வார்’ என்று ஈடுபட்டாராம். (குறுக்கும் வகை உண்டு)

பெரிய பிராட்டியாரோடும் நப்பின்னைப் பிராட்டியாரோடும் கூட அவன் எழுந்தருளி இருக்கிற திருநாவாயிலே போய் புகுவது என்றைக்கோ என்கிறார்.  கொடி போன்ற அழகிய இடையை உடையளாய், தாமரைப் பூவில் பிராட்டிக்கு வல்லபன், கூரிய வேல் போன்று அழகிய கண்ணை உடையளான நப்பின்னை பிராட்டிக்கு மணவாளன்.  இவ்விரண்டு விசேஷங்களின் கருத்து, புருஷகாரம் செய்து சேர்ப்பிக்க வல்லவர்கள் இருவர் அருகே இருக்கச் செய்தேயும் நான் இழக்கலாமோ என்பதாகும்.

அடியேன் என்று ஆழ்வார் சொல்வது, வனவாசத்திற்கு பெருமாள் (ஸ்ரீராமன்), பிராட்டி (சீதை) புறப்படும் முன்னர் எல்லா சேவைகளையும் அவர்களுக்கு செய்ய இளைய பெருமாள் (லட்சுமணன்) புறப்பட்டது போல, இங்கே (திருநாவாயில்) இவனுக்கு சேவை செய்ய ஆழ்வார் உள்ளார் என்பதை தெரிவிக்கவே என்கிறார்.

திருநாவாயில் மஹா கோஷ்டியிலே சென்று சேர்ந்து அநுபவிக்கும் நாள் எதுவோ, அறிய முடியவில்லை என்று அலமருகின்றார்.  நான் வந்து கிட்டப் பெறும் நாள் எதுவோ என்று இதையே எப்போதும் சொல்லிக் கண்ணீர் சோர இருக்கின்றேன்.ஒரு வேளை இதனை சொல்லும் போது ஒன்றும், மற்ற நேரங்களில் வேறு ஏதாவது எண்ணங்களோடு இருக்கின்றேனோ என்று தன்னையே கேட்டுகொள்கிறார்.   திருநாவாயிலே வந்து இருக்கின்ற, சுலபனான, ஸ்ரீமந் நாராயணன் இருக்க, அத்திரளிலே சென்று அவனுடன் கூடாமல் இருக்க முடியுமோ என்கிறார். அடியார்கள் குழாங்களுடன் கூடுவது என்று கொலோ என்று ஆசைப்பட்ட நான் அத்திரளிலே சென்று கூடாமல் இருப்பது தகுமோ என்கிறார்.

ஆத்மா உள்ள வரையில் தேவரீருக்கு கைங்கரியம் பண்ணும்படி தேவரீரால் ஏற்று கொள்ளப்பட்ட அடியேன், திருநாவாயில் நப்பின்னைப் பிராட்டியோடு கூட இருக்கிற இருப்பிலே அடிமை செய்யப் பெறும் நாள் என்றோ, அறியவில்லையே என்கிறார். இப்படி பிரிந்து தூக்க பட வேண்டிய நாள் இன்னும் எத்தனை நாள் உண்டு என்று அறியவில்லையே என்றும், அனுபவிக்கப் பெறும் நாள் என்றைக்கு என்று அறியவில்லை என்றும் இரண்டு வகையிலும் பொருள் கொள்ளலாம். 

நித்ய ஸுரிகள் பண்ணும் இடைவிடாத கைங்கரியத்தில் அன்றோ, நானும் ஆசைப்படுவது. ஒரு வேளை கைங்கரியத்தின் வாசனையின் இனிமையாய் அறியாதவனாக இருக்கிறேனோ என்று கவலை பாடுகிறார்.

கைங்கர்யம் பண்ணுகைக்குப் புஷ்பம் முதலியவைகளுக்கு குறையொன்றும் இல்லாது இருக்கிற திவ்ய தேசம் என்கிறார். இந்த பதிகத்தில் பிராட்டி ஸம்பந்தம் அடிக்கடி சொல்லபடுகிறது, வேறு தேசத்திற்கு சென்று இருந்த குழந்தை, ஒவ்வொரு ஊர் சென்று அடையும் போதும், தாயினை நினைப்பதை போல், அடைய தக்க இடம் ஸ்ரீவைகுந்தம் (தெளிவீசும்பு திருநாடு) என்றபின் தனித் தனியே பிராட்டிமார்களிடம் வேண்டி கொள்கிறார்.

என் கண்களின் ஆசை தீரத் திருநாவாயைக் கண்டு அநுபவிக்கப் பெறுவது என்றைக்கோ என்கிறார்.  பெரிய பிராட்டியார்க்கும் (ஸ்ரீதேவி தாயார்) பூமிப் பிராட்டியாருக்கும் வல்லபனானாவன்.  ஒருத்தி புருஷகாரத்திலே ஊன்றியிருப்பள்  மற்றொருத்தி பொறுமையே வடிவெடுத்தவளாக இருப்பவள். இப்படிப்பட்ட இருவரும் அருகே இருக்க, நான் இழக்கத் தகுமோ என்பது போல கேட்கிறார். மண்ணுலகிலுள்ள மனிசர்களென்ன, விண்ணுலகிலுள்ள தேவர்களென்ன ஆகிய அனைவர்க்கும் நிர்வாஹகன்.  உபயவிபூதி (இந்த பூவுலகதிற்கு) நாதனான அவனுக்கு நான் ஒருவன் தள்ளபட்டேனோ /ஒதுக்கபட்டேனா என்பது கருத்து.   பிராட்டிமாரும் தானும் தனக்குத் தகுதியான பரமபதத்தில் இருந்து நித்ய சூரிகளை நிர்வஹிக்கிறவன் பெறாப் பேறாக ஆதரித்து உறைகின்ற திவ்ய தேசம் அன்றோ திருநாவாய்; இது எம்பெருமான் உகந்து பெற பேராக நினைக்கின்ற திவ்யதேசம் ஆகையால் கண்ணார காண விரும்புகிறார்.  இதனைக் காண்பதற்கு ஆசைபட்ட கண்கள் வயிறு நிறையக் கண்டு களிப்பது எந்நாளோ என்கிறார்.

இங்கே களிப்பது ‘காண்பது நிச்சயம்” என்ற எதிர்கால நம்பிக்கையால் அல்ல, கண்டே களிக்கின்றது என்று நிகழ்காலத்தில், தற்போது நடக்கிற சம்பவதை சொல்கிறார்.

இந்த பாடலில், ஊரை இல்லாமல், ஊரில் எழுந்தருளி இருக்கிற உன்னை எப்போது கண்டு களிப்பேன் என்கிறார். எனக்காகத் திருநாவாயைக் கோயிலாகக் கொண்டு உறைகின்ற கோவலர் கோவே! வேறு ஒன்றில் பற்று இல்லாமல் உன் திருவடிகளுக்கே காதலன் ஆனேன். அரைக்கணம் இழக்க மாட்டாதபடி அன்றோ இருக்கிறது என் ஆசை என்கிறார். உன்னைத் தவிர வேறு யாரும் பயன் இல்லை என்று, (அநந்ய ப்ரயோஜனமான) உனது திருவடி அருகிலே என்னுடைய கண்களின் ஆசை சொல்லி முடிக்க முடியாது. என் பசி தீரா விட்டாலும் என் கண்களின் பசி தீர்ந்தால்  போதுமே என்கிறார். உலகில் யாசிப்பவர்களே ‘என் பசி கிடக்கட்டும்; என் குழந்தை படுகிற பாடு பாருங்கள் ; அதன் பசியை முன்னம் தீர்த்தால் போதும்’ என்பார்களே ; அது போல உள்ளே ஒரு எண்ணமும் (நீயே வேண்டும் என்பது) வெளியே மற்றோறு எண்ணமுமாக (உலக விஷயங்களில் ஈடுபடுவது) இருக்கும் இருப்பு, துரிசு எனப்படும் ; அப்படி துரிசு எதுவும் இல்லமால், உனக்கே தொண்டாய் ஓழிந்தேன் என்கிறார். நமக்கும், நமக்கு உகந்தாருக்கும் நினத்தபடி அனுபவிக்கலாம் என்று திருவுள்ளத்திலே ஆதரிக்கின்ற திவ்ய தேசம் ஆயிற்றே என்கிறார். கிருஷ்ணனாய் வந்து அவதரித்து, ஆயர் குல மக்களுக்கு சுலபன் ஆனதைபோல், திருநாவாய் தனில் வந்து எனக்காக சுலபன் ஆனாயே என்கிறார்.

திருநாவாயிலே நித்யவாஸம் பண்ணி அருள்கின்ற தேவரீர் அடியேனுடைய, அநந்யகதித்வத்தைக் (உன்னை விட்டால் எனக்கு வேறு புகலிடம் கிடையாது) கண்டு அருள் செய்ய வேண்டும் என்கிறார்.

எம்பெருமான் இந்திரனை த்ரிலோகாதிபதியாக்கி வைத்தான்; அவனைத் தள்ளி அந்தப் பதவியைத் தான் கொள்ளை கொண்டு ‘நானே அரசு’ என்று மாவலி இருந்தான். ஔதார்யம் என்று ஒரு மஹாகுணம் உடையவனாக இருந்த படியால், தான் இரப்பாளனாய் நின்று வெகு சாதுரியமாகக் காரியத்தை முடித்தான். எம்பெருமான் தேவர்கள் அசுரர்களுக்கு இடைய நடந்த யுத்தத்திலே, அநுகூலரான தேவர்களுக்காக அஸுரரை அழியச் செய்தவனே! என்கிறார். விரோதிகளை அழித்து அடியார்களைக் காத்தருள்வதற்கு காரணம் பிராட்டியோடு உண்டான சேர்த்தி என்று தெரிவிக்கிறார். வாறு.  இப்படிப்பட்ட திருக்குணங்கள் திருநாவாயிலே வெளிப்படும்படி இருக்கின்றார்.

பொன் என்பது, எல்லை இல்லாத இனிமை தருகிற என்ற பொருளில் வருகிறது. தெருளே தரு என்பதை திரு நாவாய்க்கு அடைமொழி ஆக்கி பொருள் சொல்வதும் உண்டு. அறிவில்லாத பொருள் போன்று இருக்கின்ற என்னை ‘உள்ளவன் ஆகிறான்’ என்கிறபடி ஒரு பொருளாக்கி என்கிறார்.

ஆழ்வார் இப்படிச் சொல்லும் போதும் ஒரு விசேஷ கடாக்ஷம்/பார்வை செய்து அருளாமையால், ‘நான் இந்த ஆசையோடு நிற்க போவது இல்லை,   என்னுடைய ஆசைகளின் / பக்தியின் வெளிப்பாட்டை பெற்றுக் களிக்கப் போகிற பாக்யவான்கள் யாரோ என்கிறார்.  தேவர் முனிவர்க்கு என்றும் காண்டற்கு அரியன் என்று சொல்வதால், பிரமன் முதலிய தேவர்களுக்கும், சனக சனந்த நாதிகளான யோகிகளுக்கும் கூட தாமாகக் காண நினைக்கையில், காண்பதற்கு அரியவன அவன்.   மூவர் முதல்வன் என்று சொன்னது, அரி, அயன், அரன் என்று சொல்லப்படுகிற மூவர்களுக்குள்ளே முதன்மை பெற்றிருப்பவன் என்றும், பிரமன், சிவன் இந்திரன் என்றும் மூவர்க்கும் நிர்வாஹகன் அல்லது காரணமானவன் என்றும் உரைப்பர்.  ஒரு மூவுலகாளி என்று சொல்வதால், மூவுலகங்களையும் தன் ஸங்கல்பத்தாலே நிர்வஹிப்பவன் இவன். ஆக இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த தேவன் அடிவர்களை காப்பாற்றுவதற்ககு பாங்கான (சௌகரிமாக) உறையும் தேசம் இது என்று விரும்பி உறையும் இடமான திருநாவாய் என்ற இந்த திவ்ய தேசத்தை நான் அணுக பெறாமல் இருக்கிறேனே,   இனி பெறுவார் யாரோ, அவர்கள் புண்ணியம் செய்தவர்களாக இருக்க வேண்டும் என்று சொல்லி இராமாயணத்தில் தசரதன் ராமன் 14 ஆண்டுகள் காட்டிற்கு செல்ல முடிவு செய்யபட்டபின், அது முடிந்து வரும்போது தான் இருக்க மாட்டேன் என்றும், அப்போது யார் ராமனை தரிசிப்பார்களோ அவர்கள் புண்ணியம் செய்தவர்கள் என்று சொல்வது போல முடிக்கிறார்.

திருநாவாயில் சென்று ஸேவிக்க வேண்டும் என்று ஆழ்வார்க்கு நினைவாகில் இதில் அருமை ஒன்றும் இல்லையே, அவர் புறப்பட்டுச் சென்று சேவிக்க தடை ஏது என்று சிலர் சங்தேகிக்க கூடும்.  திருநாவாயை அணுகப் பெற வேண்டும் என்பதே ஆழ்வாரின் எண்ணம் அன்று, அவ்விடத்தில் உறையும் எம்பெருமானுக்கு அஸாதாரணமான திருநாடு தான் இது என்று உத்தேசம்.

உன்னைக் காணமுடியாததால் நெஞ்சு அழிந்து கூப்பிடாமல் நின்றேன் என்கிறார்.   தொடங்கும் போதே அந்தோ என்கிறார், உன்னை எப்போதும் திருவோடு கூடிய மால் என்றே அழைப்பேன் என்கிறார்.

எம் மா மணிவண்ணா என்று சொன்னது, ஒரு தேச விசேஷத்தாலே, அதாவது, திருநாட்டிலே வந்து காண வேண்டிய வடிவை இங்கே காட்டுவதாகக் கொண்டு, திருநாவாயிலே வந்து நித்யவாஸம் பண்ணுகின்றவனே என்கிறார். அந்த வடிவினை எனக்கு காட்டாத போது, உன் வரவு வாராமல் இருப்பதற்கு சமம் என்கிறார்.

இத்திருவாய்மொழி வல்லார் இந்த பிறவியிலும் மறுமையிலும் ஸகல போகங்களையும் பெறுவர் என்று பயன் உரைத்து இந்த பதிகத்தை முடிக்கிறார். மண்ணாண்டு என்று சொன்னதால், இவ்வுலக, இப்பிறப்பில் போகம் பெறுவது சொல்லப்பட்டது. மல்லிகை மணங்கமழ்வர் என்பதனால் மறுமையில் போகம் பெறுவது சொல்லப்பட்டது. மல்லிகை மணமென்று ஒரு வாசனையை சொன்னது, உபலக்ஷணமாய் ஸகல பரிமளங்களையும் சொன்னபடியாகி, வேதாந்தங்களிலே  ஸர்வ கந்த என்று சொல்லப்படும் ஸகல பரிமளங்களும் வடிவெடுத்தவனாகக்ச சொல்லப்படுகிற எம்பெருமானை பெறுவர் என்று பொருள்.

மீண்டும் இன்னொரு திவ்ய தேச அனுபவத்தில் சந்திப்போம், நன்றி.

075 திருவேங்கடம் – நான்காம் பகுதி

ஸ்ரீ பத்மாவதி நாயிகா ஸமேத திருவேங்கடமுடையான் திருவடிகள் போற்றி போற்றி

திவ்யதேசம் திருவேங்கடம்
மூலவர் திருமலையில், திருவேங்கடமுடையான். ஸ்ரீநிவாசன் வெங்கடாசலபதி. பாலாஜி,
ஏழுமலையான் திருவேங்கடத்தான்

திருப்பதியில், கோவிந்தராஜன்
உத்சவர் திருமலையில் கல்யாண வெங்கடேஸ்வரன் மலையப்ப சுவாமி
தாயார் அலர்மேல்மங்காபுரத்தில் பத்மாவதி தாயார்
கீழ்திருப்பதியில் புண்டரீகவல்லி தாயார்
திருக்கோலம் திருமலையில், திருப்பதியில் கிழக்கு நோக்கி திருமுகமண்டலம்
திருமுகமண்டலம் கிழக்கு
பாசுரங்கள் 202க்கும் மேல் ஆழ்வார்கள் என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டு உள்ளது.
மங்களாசாசனம் பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், குலசேகர ஆழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார்
தீர்த்தம் 1. ஸ்வாமி புஷ்கரிணி, 2. பாபவிநாசம், 3. ஆகாசகங்கை, 4. கோனேரி,  5. வைகுண்ட தீர்த்தம், 6. சக்ரதீர்த்தம், 7. ஜபாலி தீர்த்தம், 8. வகுள தீர்த்தம், 9. பாண்டவ தீர்த்தம், 10. இராமகிருஷ்ண தீர்த்தம், 11. தும்புரு தீர்த்தம், 12. சேஷ தீர்த்தம், 13. சுகஸந்தன தீர்த்தம்  14. மொர தீர்த்தம்.
திருச்சானூரில்  பத்ம ஸரோவரம்
கோபுரம் ஆனந்த நிலைய விமானம்
ஸ்தல வ்ருக்ஷம் புளியமரம் (சேஷ அம்சம்)

வடநாட்டு திவ்யதேசங்கள் பற்றிய ஒரு முன்னுரையை இங்கே காணலாம். நன்றி

திருத்தலம் பற்றி

திருவேங்கடம் எனப்படும் திருப்பதி, ஆந்திர பிரதேசத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து பம்பாய் செல்லும் பாதையில் உள்ள ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தூரத்தில் உள்ளது. இந்த பகுதியில் திருப்பதி வேங்கடாசலபதி கோவில் உள்ள திருமலையும், அருள்மிகு பத்மாவதி தாயார், கோவில் கொண்டுள்ள அலர்மேல்மங்காபுரம் என்ற திருப்பதியும், இரு நகரங்களாக விளங்கினாலும் பொதுவாக சேர்ந்து திருவேங்கடம் என்று அழைக்கப்படுகிறது. இந்த திருத்தலம் பற்றி எழுத ஆரம்பித்தால் கிடைக்கின்ற விவரங்கள் ஏராளம் ஏராளம். எல்லாவற்றையும் சொல்லி முடிக்க முடியாது என்ற முகவுரையுடன் இந்த திவ்யதேச அனுபவத்தை முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது பகுதி என்று முன்பு அனுபவித்தோம். இங்கே வேறு சில தலைப்புகளில் சிலவற்றை காண்போம்.

  1. திருத்தல பெயர்
  2. திருத்தல பெருமைகள்
  3. சில சொற்தொடர்களும் அதன் அர்த்தங்களும்
  4. ஆதிவராக பெருமாள்
  5. திருமலை நடைவழி
  6. திருவேங்கடத்தின் ஏழு மலைகள்
  7. திருமலையின் ஐந்து மூர்த்திகள்
  8. திருமலையின் தீர்த்தங்கள்
  9. கீழ் திருப்பதி
  10. திருமலை
  11. அலர்மேல்மங்காபுரம்
  12. திருமலை நிகழ்ச்சிகள்
  13. திருவிழாக்கள்
  14. மற்ற திருக்கோவில்கள்
  15. ஸ்தல வரலாறு
  16. ராமானுஜர் திருமலை விஜயங்கள்
  17. ஆழ்வார்கள்
  18. ஆச்சார்யர்கள்

Google Map

திருவேங்கடம் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

தினம் ஒரு திவ்யதேசம் திருவேங்கடத்தை பற்றி சொல்வது

ராமாநுஜரின் திருமலை விஜயங்கள்

பாத மண்டபம்

இராமானுஜர் மூன்று முறை திருமலைக்கு எழுந்தருளி உள்ளார். இராமானுஜருக்கு இருந்த ஐந்து ஆச்சார்யார்களில் ஒருவரான திருமலை நம்பிகள் திருமலையில் தீர்த்த கைங்கர்யம் செய்து கொண்டு இருந்தார். முதல் முறை, தனது இளம் வயதில் இம்மலையைச் சேவிக்க வந்த போது, ஆழ்வார்கள் திருமலையில் ஏறுவதால் அந்த மலையின் தூய்மை கெடும் என்று அஞ்சி, மலை அடிவாரத்திலேயே நின்று, திருவேங்கடவனுக்கு மங்களாசாஸனம் செய்து நலம் பெற்றனர் என்பதை அறிந்து, தானும் அதன் மேல் நடந்து வர விருப்பம் இல்லை என்று தெரிவித்ததாகவும், இவருக்காகவே இவரது தாய் மாமனும், ஒரு ஆச்சார்யராகவும் இருந்த திருமலை நம்பிகள் மலையில் இருந்து தினமும் இறங்கி வந்து, ஒவ்வொரு நாளும், இராமானுஜருக்கு திருமலை அடிவாரத்தில் உள்ள புளிய மரத்தடியில் ராமாயண பாடம் கற்றுத் தந்தார்.

அப்படி பாடம் சொல்லி கொடுக்கும் போது, தான் திருமலையில் மதிய பூஜை சமயம் திருவேங்கட தரிசனம் கிடைக்கவில்லையே என்று உணர்ந்து வருந்தியபடி உறக்கத்தில், எம்பெருமானே திருமலை நம்பிகளுக்கு கனவினில் காட்சி தந்து, மலையடிவாரத்தில் நின்று காட்சி கொடுத்ததாகவும், அவரும் திருமஞ்சன கைங்கர்யம் செய்து உறக்கத்தில் இருந்து எழுந்தார். அப்போது அங்கு ராமானுஜரும் எழுந்தருள, இருவரும் என்றும் இல்லாதபடி, கற்பூர, கஸ்தூரி பரிமளங்கள் வீச, என்ன ஒரு ஆச்சரியம் என்று திகைத்து சுற்றி திரும்பி பார்க்க, என்றும் இராமாயணம் கற்று தரும் அந்த புளிய மரத்தடியில் திருவேங்கடமுடையானின் திருவடிகள் இரண்டும் இருந்தன. ஸ்வயம்வக்தமான அந்த திருவடிகளை சேவித்து, அவற்றின் கீழாக ஆழ்வார்கள் பதின்மரையும் திருவடிகளோடு ஒரு திருமேனியாக ஏறி அருள செய்து, அதற்கு திருவாலயமும் அமைத்து வைகானச ஆகம முறைப்படி ஸ்தாபித்து, அந்த புளிய மரத்தையும் ஆதிசேஷனின் அம்சம் என்று நிச்சயித்து “கலௌ வேங்கட நாயக” என்று பல்லாண்டு பாடியதாக வரலாறு. அந்த இடத்தில், இன்றும் திருவேங்கடவனின் திருவடிகள் உள்ளன, அதற்கு பாத மண்டபம் என்று பெயரிட்டு பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

அப்பனுக்கு சங்காழி தந்தது

இரண்டாம் முறை சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் இடையே திருவேங்கடவன் தங்கள் தெய்வம் என்ற வாதத்தை தீர்த்து வைக்க வந்தது. இந்த முறை வந்தபோது இராமானுஜர் மூன்று நாட்கள் எதையும் உட்கொள்ளாமல் உபவாசம் இருந்து, மலை ஏறினார் என்றும், அப்படி அவர் ஏறும் போதும், தன் முழங்கால்களையே படிகளில் வைத்து ஏறினார் என்றும், அப்படி ஒரு இடத்தில் ஏறும் போது அவர் முழங்கால் எலும்பு முறிந்தது என்றும் அப்போது திருவேங்கடவன் தோன்றி அவருடைய இடர்களை போக்கி, கால்களுக்கு உரமூட்டி, மலை ஏறுவதற்கு தகுந்தவைகளாக செய்து திருவருள் காட்டி மறைந்தான் என்றும் ஒரு செவி வழி செய்தி உள்ளது. அதனால் தான் இந்த பகுதிக்கு முழங்கால் முறிச்சான் என்று இறந்த காலத்தில் பெயர் உள்ளதாக சொல்கிறார்கள்.

இராமானுஜர் திருமலைக்கு வந்த போது இப்பெருமானின் கைகளில் சங்கு சக்கரங்கள் இல்லாததாலும் திருக்கரங்களில் நாகாபரணம் என்ற நகை அணிந்து இருந்ததாலும், இந்த தெய்வத்தைச் சிவன் என்றும், இந்து மதத்தின் வேறு பிரிவுகளின் தெய்வம் என்றும் பலவாறு கூற, திருமலையில் ராமானுஜர் மூன்று நாட்கள் தங்கி இருந்து, வேதம், புராணங்களில் இருந்து வாக்கியங்கள் எடுத்து அருளி, அவைகளையும் வேறு பிரிவினர்கள் ஏற்காததால், இறுதியில், எம்பெருமானின் சந்நிதியில், சங்கு, சக்கரம், மற்றும் சிவன், பிற தெய்வங்களின் ஆயுதங்களையும் வைத்து, எம்பெருமானிடம் அவனுக்கு உகந்த ஆயுதங்களை தரித்து அடுத்த நாள் காட்சி அளிக்க வேண்டும் என்று வேண்டி கதவுகளை மூடி பூட்டி வைத்து வந்து வந்தார். அடுத்த நாள் கதவு திறந்ததும் எம்பெருமான் சங்கு சக்கரங்களை தரித்து காட்சி அளித்து, இராமானுஜரின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து எல்லோருக்கும் அப்போதும், மறுபடி எப்போதும் விவாதங்கள் வராதபடி, தான் வைணவ தெய்வமே என்று சேவை சாதித்தார். . இப்படி இராமானுஜர் திருவேங்கடத்தில் சங்கு சக்கரங்கள் தோன்றக் காரணமாயிருந்தார். அதனால் இராமானுஜருக்கு ‘அப்பனுக்கு சங்கு ஆழி தந்தவன்’ என்ற பெருமை உண்டு.

தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால், திருவேங்கடத்தான், வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார். திருப்புகழ் பாடிய அருணகிரி நாதரும் இந்த திவ்யதேசத்திற்கு வந்திருந்து,

“உபசாந்த சித்த குருகுல      பவபாண்டவர்க்கு வரதன் மையுருவோன்ப்ர சித்த நெடியவன் …… ரிஷிகேசன்

உலகீன்ற பச்சை யுமையணன்      வடவேங்க டத்தி லுறைபவ           னுயர்சார்ங்க சக்ர கரதலன் …… மருகோனே” (திருப்புகழ் 75)

என்று இந்த எம்பெருமான் திருமாலே என்று பாடி உள்ளார்.

இந்த முறை தான் இராமானுஜர் கோவிந்தராஜரை திருப்பதியில் நிறுவி கோவிலையும் பெரிதாக்கி, வழிபாட்டு முறைகளையும் சீர் செய்தார்.

திருமலை திருப்பதி நிர்வாக கட்டளைகள்

மூன்றாம் முறை இராமானுஜர் திருமலையில் ஒரு வருடம் இருந்து தானே அதன் நிர்வாக பொறுப்புகளை ஏற்று திருக்கோவிலின் செல்வம் அழியாமல் காத்து, அது மேலும் வளர்ந்து திருக்கோவில் திருப்பணிகள் தொடர்ந்து நடத்திட வழிகள் செய்தார்.

ரிஷிகளும், முனிவர்களும், பரம பாகவதர்களும் வேதம், புராணங்களில் சொன்னபடி திருமலா யாத்திரையின் போது அனுசரிக்க வேண்டிய நியமங்களை தொகுத்து விதிகளாக வழங்கினார். இவைகளை அனுஷ்டிப்பவர்கள் தனக்கும் வேதங்களுக்கும் உகந்தவர்கள் என்றும் அதனை அனுஷ்டிக்காதவர்கள் தனக்கும் வேதங்களுக்கும் வெளிப்பட்டவர்கள் என்றும் தன்னுடைய குரலாக ஒரு அர்ச்சகரின் மேல் ஆவிர்பவித்து திருவேங்கடவனே சொன்னதாக திருமலையொழுகு கூறுகிறது.

ஒரு மடத்தை சன்னதிக்கு எதிரில் இருக்கும் ஆஞ்சநேயர் பக்கத்தில் கட்டி அங்கேயே தங்கி இருந்து ஜீயர், ஏகாங்கி நால்வர் என்று ஏற்பாடு செய்து திருவேங்கடமுடையானின் திருப்பணிகள் தடையின்றி நடத்த ஏற்பாடு செய்து பிறகு திருவரங்கம் திரும்பினார். தினமும் திருக்கோவில் நடைசாத்தும் போது கதவுகளில் திருவடி (ஆஞ்சநேயர்) முத்திரையுடன் பூட்டி ஜீயரிடம் சமர்ப்பித்து, மீண்டும் அடுத்த நாள் காலையில் அங்கிருந்தே பெறுவதற்கும் ஏற்பாடு செய்தார். ஏகாங்கி ஸ்ரீவைஷ்ணவருக்கு சேனாதிபதி ஜீயர் என்று பெயர் வழங்கினார்.

திருமலையில் கட்டியம் யாதவ நாராயணன் அல்லது கட்டியத்தேவன் என்பவன் இராமானுஜரின் திருவடிகளை பற்றி, அவர் சீடனாகி, திருமலையிலும் திருப்பதியிலும் இராமானுஜர் கோவில் திருப்பணிகள் அனைத்தும் செய்வதற்கு துணையாக இருந்தான் என்று திருமலை ஒழுகு என்ற நூல் சொல்கிறது.

மார்கழியில் கிருஷ்ணர் சயனம்

திருவேங்கடவன் சன்னதியில் தினமும் ஸ்நபன பேரரான அழகப்பிரானார் இரவில் சயனம் கொள்வது வைகானச ஆகமம் ஆகும். ஆழ்வார் திருமகளான ஆண்டாள் கிருஷ்ணருடன் அனுபவத்தை ஆசைப்பட்டு, தினமும் ஒரு பாடலாய் மார்கழியில் முப்பது பாடல்கள் பாடியதாலும், ‘வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே ‘ என்று இதர அர்ச்சாவதாரங்களை விட்டு, திருவேங்கடவனையே விரும்புவதாலும், விபவ அர்ச்சைகளுக்கு ஒரு பாலமாக இருப்பதாலும், வைகானச ஆகமத்தில் ஒரு ஸம்ஹிதையில் கிருஷ்ணரே மார்கழியில் சயன பேரராக இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டு இருப்பதாலும், மூன்று விக்ரகங்கள் இருக்கும் போது, கிருஷ்ணரே என்ற விதி இருப்பதாலும், இராமானுஜர், திருவேங்கடத்தில், கிருஷ்ணரே மார்கழி மாதத்தில் சயன பேரராக இருந்து உலகை காத்தருள ஏற்பாடு செய்தார்.

தீர்த்த நயினார்

தொண்டைமான் சக்ரவர்த்தி, போரில் தோற்று ஸ்வாமியின் மீது உள்ள பக்தியினால் அவர் காட்டிய குகை வழியாக அகாலத்திலே, திருவேங்கடவன் சந்நிதியை அடைய அப்போது அந்தரங்கத்தில் இருந்த ஸ்ரீ, பூமா தேவிகள், அந்நிய புருஷன் வந்ததினால் உடனே மறைந்து, ஸ்ரீதேவி தன்னுடைய இருப்பிடமான எம்பெருமானின் திருமார்பில் மறைந்து கொள்ள, பூமாதேவி, அருகில் கைங்கர்யத்திற்காக கட்டியிருந்த கிணற்றில் மறைந்தாள் என்று ஒரு செவி வழி செய்தியினை கேள்வியுற்ற இராமானுஜர், பூதேவியை அர்ச்சா ரூபமாக எழுந்தருள செய்து, ஒரு தீர்த்த நயினாரையும் அந்த கிணற்றிலே சேர்த்தியாக கிணற்றில் எழுந்தருள செய்து அவர்களுக்கு நித்திய தளிகைகள் அமுது செய்யும்படி செய்தார்.

புஷ்ப கைங்கர்ய ஏற்பாடுகள்

ராமானுஜர் திருமலையில் நிறைய நந்தவனங்கள் அமைக்க ஏற்பாடு செய்து எம்பெருமானுக்கு புதிய புஷ்பங்கள் கிடைக்க செய்தார். ராமானுஜர் தன்னுடைய சிஷ்யர்களில் ஒருவரான அனந்தாழ்வான் என்பவரை திருவரங்கத்தில் இருந்து இங்கு அனுப்பினார். அவர் திருமலையில் தங்கி, பல நந்தவனங்கள் அமைத்து இந்த திருமலையை தன்னுடைய கடின உழைப்பினால் புஷ்பமண்டபம் என்பதற்கு ஏற்ப அதிக புஷ்பங்களை ஸ்வாமிக்கு தொடர்ந்து கிடைக்க செய்தார். இன்றும் அனந்தாழ்வான் பெயரில் திருமலையில் நந்தவனம் உள்ளது, அவர் பெயரில் ஒரு உற்சவமும் நடைபெறுகிறது. திருவேங்கடத்தானும் அனந்தாழ்வானுடன் செய்த திருவிளையாடல்களும் இந்த உற்சவத்தில் இடம் பெறுகின்றன.

கட்டியம் யாதவராயன் அனந்தாழ்வான் கேட்டுக்கொண்டபடி யமுனைத்துறை என்ற பெயரில் எம்பெருமானுக்கு திரு மாலைகள் கட்டுவதற்கு திருமலை திருக்கோவிலில் ஒரு மண்டபம் கட்டி கொடுத்தான். இன்றும் அங்கு தான் பூக்கள் தொடுக்க படுகின்றன.

அனந்தாழ்வான் இராமானுஜரின் விருப்பப்படி திருமலையில் பூங்காவனம் அமைந்து தினமும் எம்பெருமானுக்கு புஷ்பகைங்கர்யம் செய்து வந்தார். அந்த திருப்பணியில் திருவேங்கடவனும் உகந்து இருந்ததார். ஒருமுறை புரட்டாசி ப்ரம்மோத்ஸவம் காலத்தில், 7 ம் நாள் திருநாள் அன்று திருவேங்கடவனும் அலர்மேல்மங்கை தாயாரும், ராஜா, ராணி என்று வேடம் தரித்து, அனந்தாழ்வான் புஷ்பதோட்டத்தில் புகுந்து புஷ்பங்களை பறித்து செல்வதை பார்த்த அனந்தாழ்வான் அவர்களை தொடர்ந்து சென்று அவர்களை பிடிக்க பார்த்தார். அவர்கள் திருக்கோவிலை அப்பிரதக்ஷிணமாக (தலைகீழாக அல்லது மாற்றி சுற்றுவது) சுற்றி வந்து மீண்டும் அனந்தாழ்வான் தோட்டத்தில் சென்று மறைந்து விட்டனர். இந்த ஐதீகம் ப்ரம்மோத்ஸவத்தில் அனுஷ்டிக்க தக்கது என்று ராமானுஜர் கருதி ப்ரம்மோத்ஸவத்தில் ஒரு நாள் பூந்தோட்ட உலா செல்லும்படி செய்து, திரும்பும்போது அப்பிரதக்ஷிணமாக சுற்ற கட்டளை பிறப்பித்தார். அந்த உத்சவம் இன்றும் நடக்கிறது.

ஞான முத்திரை

திருமலையில் நிறுவப்பெற்றுள்ள இராமானுஜர் திருவுருவத்தை செய்து அவரிடம் கொடுத்த போது, அதனை அவர் தழுவி அனந்தாழ்வானிடம் கொடுத்ததாகவும் அவர் யாதவராயன் துணை கொண்டு அவருக்கு கோவில் எழுப்பி அங்கு நிறுவினார் என்று திருமலை ஒழுகு கூறுகிறது. இந்த இராமானுஜர் திருவுருவம் அவரது 40 வது ஆண்டில் வடித்தது, அவரது வலது திருக்கரம் ஞான முத்திரை குறிக்கும் வண்ணம் உள்ளது. திருமலை திருப்பதிக்கு பலவற்றை திருத்தி புதியவைகளை புகுத்தி, பிறருக்கு தெரியாதிருந்த பல உண்மைகளை வெளிப்படுத்தியும், வேங்கடவனுக்கு சங்கும் சக்ரமும் கொடுத்ததை அவன் ஏற்றுக்கொண்டதையும் மனதில் கொண்டு இராமானுஜரை ஆச்சார்யார் போல் கருதத்தக்க ஞானமுத்திரையுடன் கூடிய திருவுருவுடன் செய்திருப்பர் என்பது ஆன்றோர் கருத்து. திருப்பதியில் கோவிந்தராஜன் சன்னதியிலும், பெரிய ரகுநாதன் சந்நிதியிலும் இருக்கும் இராமானுஜர் திருவுருவங்களும் ஞான முத்திரையுடன் தான் இருக்கிறன.

நாகாபரணம்

திருமலையின் ஸ்தல வ்ருக்ஷம் நித்யசூரியான அனந்தனின் அம்சமான புளிய மரம். முன்பொரு நாள், கஜபதி என்று ஒரு பக்தன் திருவேங்கடவனுக்கு திருமலையில் ஒரு கோபுரமும் கட்ட ஆசை கொண்டு அதற்குரிய செல்வமும் மக்களையும் கொடுத்து கோபுர வேலையை தொடங்க சொல்லி, அவர் மற்ற திவ்யதேச யாத்திரை சென்று கட்டப்பட்டுள்ள கோபுரத்தை தரிசிக்க திருமலைக்கு திரும்பினான். திருமலையை அடையும் முன்பு, அவனுடைய கனவில், ஒரு சர்ப்பம் தோன்றி, இந்த மலைத்தொடர், தான், தான் என்றும், வாமன, வராக புராணங்களில் சொன்னது போல், திருப்பதியில் தலையாகவும், அஹோபிலத்தில் உடம்பாகவும், ஸ்ரீசைலத்தில் வாலாகவும் இருப்பதாகவும், இப்படி இங்கே மலையை வெட்டுவதாலும், கற்களை கொண்டு குவிப்பதாலும், கோபுரம் கட்டுவதாலும், தன் மேல் பாரம் அதிகமானதாகவும் அதனால் தன்னுடைய சுத்தம் குறைந்து வருவதாகவும், அது திருவேங்கடவனை தரிசித்தால் தான் அவை தீரும் என்று சொல்லி திருவேங்கடவனை வலம் வந்து, அவன் வைகுண்ட ஹஸ்தத்தில் சுற்றிக் கொண்டதை கண்டான்.

ஆதிசேஷனிடம் அபசார படவேண்டாம் என்று அடுத்த நாளே, கோபுர திருப்பணிகளை நிறுத்தி, இந்த கனவிற்கு என்ன பலன் பரிகாரம் என்று விசாரிக்க, வேங்கடவனுக்கு நாகாபரணம் அணிவிக்கலாம் என்று ஆன்றோர்கள் யோசனை கூற, அப்படியே அவர் தங்கத்திலே செய்து எங்கு அணிவிக்கலாம் என்று சந்தேகம் பிறந்த்து. அப்போது ஒரு பக்தன் மேல் எம்பெருமான் ஆவேசித்து, முன்பு ஒரு நாள் வாயுவுக்கும், ஆதிசேஷனுக்கும் வாக்கு வாதம் வந்ததாகவும் எம்பெருமான் வாயு பக்கம் நின்றதாகவும், அதனால் வருத்தமுற்ற ஆதிசேஷன், நாகதீர்த்தம் என்ற இடத்தில் தவம் செய்ய, எம்பெருமான் மனம் உகந்து, ஆதிசேஷனை ஏற்றுக்கொண்டார். எப்படி ஒரு தகப்பன் தன்னுடைய குழந்தையை தன்னுடைய கரங்களில் ஏந்தி கொள்வாரோ அப்படியே இந்த நாகபரணத்தையும் தனது வலது கரத்தில் தோள்வளைகளோடே சூடி கொள்வேன் என்று கூற, எம்பெருமானுக்கு வலது திருக்கரத்தில் நாகாபரணம் சேர்ந்தது. பின்னாளில் இந்த நாகாபரணமே அவர் வைணவ கடவுள் அல்ல என்ற பிறர் சொல்ல ஒரு காரணமாக அமைந்தது என்பதை முன்பு பார்த்தோம். . பின்னாளில் ராமானுஜர் எம்பெருமானின் இன்னொரு திருக்கரத்திற்கும் நாகாபரணம் அணிவிக்க ஏற்பாடு செய்தார்.

வேங்கடத்தரி

ஸ்கந்த புராணத்தில் ஸ்வர்ணமுகரீ மஹாத்மியத்திலும், வாமன, வராஹ புராணங்களில் சொன்னது போல், திருமலையில் சிவனுக்காக ஸ்வாமி புஷ்கரிணியின் மேற்கு கரையில் ஆவிர்ப்பவித்த அழகியசிங்கரான வேங்கடத்தரியை ஒரு காலத்தில், சில சைவ பக்தர்கள், இது சிவனுக்காக தோன்றிய அழகிய சிங்கர், ஆகையால் ஒரு சிவனையும் இங்கே பிரதிஷ்டை செய்து கொள்கிறோம் என்ற கோரிக்கையை வைக்க, ஸ்ரீவைஷ்ணவர்களும் அர்ச்சகர்களும் வாமன, வராஹ, மார்க்கண்டேய, ப்ரஹ்மாண்டாதி புராணங்களில் கூறியது போல் இது கருடாத்ரி, விஷ்ணு க்ஷேத்ரம், இங்கே சிவப்ரதிஷ்டி உசிதம் இல்லை என்று சொல்ல, அரசனும் அதை ஏற்று, சிவபக்தர்களுக்கு செய்தி அனுப்ப அவர்களும் சென்று விட்டனர். அதை தொடர்ந்து அந்த பகுதியில் இருந்தவர்கள், இப்படி இந்த அழகிய சிங்கர் ப்ரசித்தராய், தினமும் ஆராதனம் கண்டு அருளி இருந்தால், எல்லோரும் இந்த ஸ்தலத்தை தங்களுது என்று சொல்வார்கள் என்பதால், தின திருவாராதனத்தை குறைத்துக்கொண்டு அவரை பிரசித்தம் இல்லாமல் செய்ய பார்த்தார்கள்.

இதனை கேள்வியுற்ற ராமானுஜர், இவருக்கு நித்ய ஆராதனம் இல்லாமல் இருந்தால் அது இந்த ஸ்தலத்திற்கு நல்லது அல்ல என்று, இந்த வேங்கடத்தரி என்ற உக்கிர நரசிம்மரை, திருமலை திருக்கோவிலில் ஈசான மூலையில் இந்த உக்ரம் குறையும்படி, விமானாபி முகமாய் பிரதிஷ்டை செய்து, தினமும் திருவாராதனம் தவறாமல் நடக்க ஏற்பாடு செய்தார்.

கோவிந்தராஜர்

தில்லையில் கோவிந்தராஜன் சயன திருக்கோலத்தில் அருள் பாலித்து கொண்டு இருந்தார். அப்போது சோழ தேசத்தை ஆண்டு கொண்டு இருந்த முதல் குலோத்துங்கன் என்ற அரசன் தன்னுடைய சமய பற்றின் காரணமாக இந்த கோவிந்தராஜனை அவர் இடம் கடல் ஆனதால் அங்கேயே இருக்கட்டும் என்று வைணவர்கள் மனம் புண்படும்படியும் அந்த திவ்யதேச பெருமைகள் முழுவதுமாக அழியும்படியும், கடலில் எறிந்தான், தில்லையில் இருந்த வைணவர்களை துன்புறுத்தியும் வந்தான். தான் செய்த அடாவடி செயல்களினால், தன்னுடைய இறுதி காலத்தில் ராஜபிளவை என்ற நோய் வந்து உடம்பில் நிறைய புழுக்கள் வந்து கிருமி கண்ட சோழன் என்று பெயர் பெற்று இறந்தான்.

இவற்றைப்பற்றி கேள்விப்பட்ட இராமானுஜர், குலசேகர ஆழ்வாரும் திருமங்கை ஆழ்வாரும் ஈடுபாடு கொண்ட திவ்யதேசமான தில்லைநகர் திருச்சித்ரகூடம் அழிந்துவிட கூடாது என்ற சிரத்தையுடன், மீண்டும் அந்த திவ்யதேசத்திற்கு பாகவத பற்று வர வேண்டும் என்ற காரணத்துடனும், கோவிந்தராஜர், திருவேங்கடமுடையானின் அன்புக்கு பாத்திரமானவராய் கீழ் திருப்பதியில் எழுந்தருளி இருப்பதை மனதில் கொண்டு, ஒவ்வொரு இரவும், திருவேங்கடமுடையான் அர்த்தஜாம பூஜை பிரசாதம் அமுது செய்த பிறகு, சடகோபனை போர்த்தி, கையில் எழுந்தருளி கொண்டு, குடை, சாமரம் போன்ற உபசாரங்களோடு, வென்று கொண்டான் மண்டபத்தில் கோவில் அர்ச்சகர், தெற்கு முகமாக நின்று கொள்ள, கட்டியம் சொல்பவர் “அருளப்பாடு, திருச்சித்ரக்கூட கைங்கர்ய துரந்தரராய், திருவேங்கடமுடையான் செங்கோல் முத்ரா நிர்வாஹரான சேனை முதலியார்” என்று சொல்லி, கோவிலுக்கு பாரபத்யம் செய்யும் ஸ்ரீ வைஷ்ணவருக்கு பரிவட்டம், ஸ்ரீசடகோபன் (சடாரி) பிராசாதிக்கும்படி இராமானுஜர் கட்டளை செய்தார். யாதவராயன் திருப்பதி கோவிந்தராஜர் சன்னதிக்கு எதிரே ஒரு மண்டபம் கட்டினான். அதற்கு தில்லைக்கு வாய்த்தான் மண்டபம் என்றும் திருச்சித்ரகூட மண்டபம் என்றும் பெயர்.

இரண்டாம் முறை இராமானுசர் திருமலை எழுந்தருளி இருந்த போது, தில்லையில் இருந்து வந்த சில அந்தணர்கள் தில்லை எம்பெருமானின் உற்சவ மூர்த்தியின் விக்ரகத்தை கொண்டு வந்து அங்கே நடந்த கொடுமைகளை விவரித்தனர். திருவேங்கடத்தானுக்கும் கோவிந்தராஜனுக்கும் உள்ள ஒற்றுமை தோன்ற, திருமங்கை ஆழ்வார் அருளி செய்த “தென்தில்லைச் சித்திர கூடத்தென் செல்வனை, மின்னி மழை தவழும் வேங்கடத்தெம் வித்தகனை” (பெரிய திருமடல் 67-68) எனபதை மனதில் கொண்டு, அதனை செயல் படுத்துதல் தக்க செயல் என்று திருப்பதியில் பார்த்தசாரதி சன்னதிக்கு அடுத்து கோவிந்தராஜனுக்கு கர்ப்பக்கிரகம் மற்றும் சன்னதி ஏற்பாடு செய்து தில்லைநகர் கோவிந்தராஜனைப் பிரதிஷ்டை செய்தார். அப்போது பார்த்தசாரதி திருவுருவமும் சிதிலடைந்து இருந்ததால் பூஜை நைவேத்தியம் இல்லாமல் இருந்ததும் கோவிந்தராஜனுக்கு இவை ஏற்பாடு செய்வதற்கும் ஏதுவாக இருந்தது.

இராமானுஜர், திருவேங்கடமுடையானும் கோவிந்தராஜனும் ஒருவரே என்பதற்கு ஏற்ப திருவேங்கடமுடையான் வேத பாராயணம் செவி சாய்க்கும் போது, வெங்கடேச மஹாத்மியத்துடன் திருச்சித்ரகூட மஹாத்மியத்தையும் கேட்டருளும்படி செய்தார். அதே போல் கோவிந்தராஜனும் வெங்கடேச மஹாத்மியத்தையும், திருச்சித்ரகூட மஹாத்மியத்துடன் செவிசாய்க்க செய்தார். அதே போல் திருவேங்கடவன் மாலைப் பொழுதில் நித்யாநுஸந்தானம் கேட்டருளும் போது, ‘ஊன் வாட உண்ணாது ‘ மற்றும் ‘வாட மருதிடை போகி ‘ என்ற திருமொழிகளையும் சேவித்து, கோவிந்தராஜனுக்கு ‘ஒழிவில் காலம் எல்லாம் ‘ மற்றும் ‘உலகமுண்ட பெருவாயா’ என்ற திருவாய்மொழி பதிகங்களையம் சேவிக்க செய்தார். இப்படி இரண்டு ஸ்தலங்களும் ஒன்றே என்பதற்கு ஏற்ப ஸ்ரீவைஷ்ணவர்கள் திருமாளிகைகளில் உத்சவ காலங்களில், திருவேங்கட முடையான், கோவிந்தராஜன், அலர்மேல்மங்கை நாச்சியார், திருமகளார் சம்பாவனை என்று இரண்டு ஸ்தலங்களிலும் ஒரே மாதிரியாக நடைபெற ஏற்பாடு செய்தார்.

அத்யயன உத்ஸ்தவம்

திருவேங்கடமுடையான் ஆழ்வார் திருவரங்க பெருமாள் அரையருக்காக மற்ற ஸ்தலங்கள் போல் இல்லாமல், அத்யயன உத்ஸவத்திலே இயற்பா முதல் நாலாயிரமும் கேட்டுஅருளும்படி ஒவ்வொரு ஆண்டும், இருபத்துமூன்று நாட்களாகவும், பிறகு ஞானப்பிரான் ஒரு நாளும், கோவிந்தராஜர் ஒரு நாளும் கட்டளை பிறப்பித்து இப்படி சில உத்ஸவங்கள், திருவேங்கடமுடையானுடன் ஒரே காலத்தில் நடைபெறாமல் பக்தர்கள் எல்லாவற்றையும் தரிசிக்க வழி செய்தார்.

மார்க்கண்டேய அழகியசிங்கர்

மார்க்கண்டேய மகரிஷி, திருமலை யாத்திரையின் போது வரும் வழியில், அழகியசிங்கர் மார்கண்டேயருக்கு பிரத்யக்ஷம் ஆனார் என்று மார்க்கண்டேய புராணத்தில் குறிப்பிட்டது போல், இராமானுஜர், அவருக்கு பிரத்யக்ஷம் ஆன குகை அருகில் ஒரு கோவில் அமைத்து, அழகியசிங்கரை வைகானச ஆகம முறைப்படி நிறுவி அவருக்கும் நித்திய ஆராதனம் நடக்கும்படி ஏற்பாடு செய்தார்.

கோவிந்தராஜர் தீர்த்தவாரி

கபில தீர்த்தக்கரையில் 13ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நம்மாழ்வார் என்று கருதப்படுபவருக்கு திருக்கோவிலை கட்டி அவரை அதில் நிறுவியவர் பல்லவராயன் என்ற சிற்றரசன் ஆவான். அச்சுத ராயன் என்பவன் 1513ல் இந்த துறைக்கு படிகள் நிறுவி மண்டபம் கட்டி நான்கு புறங்களிலும் திருவாழி வைத்து சக்கர தீர்த்தம் என பெயரிட்டு இது திருவேங்கடமுடையானுக்கு உரியது என்னும்படி செய்தான். கோவிந்தராஜர் ஸ்ரீதேவி, பூமாதேவிகளுடன் உபகர்மா நாளில் எழுந்தருளி தீர்த்தவாரி காண்கிறார். இன்றும் நடைபெறும் இந்த நிகழ்வு 1467ல் இராமானுஜர் ஏற்பாடு செய்தது என்று ஒரு கல்வெட்டு கூறுகிறது. இந்த தீர்த்தத்தை விட தூய தீர்த்தம் திருப்பதியில் இல்லை. கந்தாடை ராமானுஜ அய்ங்கார் என்பவர் இந்த தீர்த்தத்தின் மேற்கு கரையில், தொண்டைமான் சக்ரவர்த்தி திருமலைக்கு செல்லும் வழியாக இருந்த குகையில் நரசிம்மரையும் தெற்கு கரையில் லக்ஷ்மிநாராயணனையும் பிரதிஷ்டை செய்து பிற மதத்தினரால் தொல்லை வாராது செய்தார் என்று திருமலை ஒழுகு கூறுகிறது.

இப்படி பல உத்சவ காலங்களில், கோவிந்தராஜருடன் ஆழ்வார் திருமகளான ஆண்டாளும் எழுந்தருளும்படி செய்தார். திருவாடி பூரத்தன்று திருமலை அடிவாரத்தில் ஸ்வயம்வக்தமான திருவடிகள் (ஆஞ்சநேயர்) சன்னதியில் ‘கூடல் வளைச்சு’ கொண்டாடும்படி ஏற்பாடு செய்தார். கணு நாள் அன்று, ஆண்டாளும் கிருஷ்ணரும் மாலை மாற்றி இந்த உலக நலத்திற்காக சேவை சாதிக்கும்படி செய்தார்.

கோவிந்தா கோவிந்தா

நைமிசாரண்ய ரிஷிகள், திருவேங்கட மஹாத்மியத்தை கேள்வியுற்று மற்ற நாமங்களை தவிர்த்து, கோவிந்தா என்ற திருநாமத்தை மட்டுமே ஒலித்துக்கொண்டு, இந்த க்ஷேத்திரத்தில் திருமாலை தவிர வேறு எந்த தெய்வத்தையும் உச்சரிக்காது, திருமலை ஏறினார்கள் என்று வராஹ புராணத்தில் உள்ள அர்த்த விசேஷத்தை மனதில் கொண்டு, திருமலை ஏறும் யாத்ரிகர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா ‘ என்றே பரம பாகவதர்களும் பரம ரிஷிகளைப் போல், திருமலை ஏற குரல் கொடுத்தார்.

திருவேங்கடவன் சந்நிதியில் சக்ரவர்த்தி திருமகன்

தென் மதுரையில் வைகைக்கரையின் மேற்கு கரையில், குருவித்துறை என்னும் ஊரில், விஸ்வம்பரன் என்ற முனிவர், இராமபிரான் லக்ஷ்மணனுடன் கடற்கரையில் இருக்கும் போது, விபீஷணன் வானத்தில் வந்து சக்கரவர்த்தி திருமகனிடம் சரணாகதி என்று வந்த காட்சியை காட்டியருள வேண்டும் என்று தவம் புரிந்தான். எம்பெருமானும் அந்த முனிவனின் கனவில் விபீஷ்ண சரணாகதி காட்சியை, இளையபெருமான் அருகே நிற்க, சக்ரவர்த்தி திருமகன் அமர்ந்திருக்க, அனுமன் எம்பெருமான் சந்நிதியில் விபீஷணனுக்கு அனுகூலமாக வார்த்தைகளை சொல்லி, எம்பெருமான் திருவுள்ளப்படி முடிவு எடுக்க வேணும் என்று கேட்டு அஞ்சலி முத்திரையுடன் நின்று கொண்டு இருந்தததையும், அங்கதன் வானில் விபீஷணன் இருக்கிறான் என்று தன்னுடைய விரல்களால் பவ்யமாக காட்டி கொண்டிருந்தததையும் முனிவர்க்கு சாதித்து அருளினார். முனிவர் மனம் மகிழ்ந்து, இந்த விபவத்தை அர்ச்சையில் என்னென்றும் தானும் மற்றவர்களும் அனுபவிக்கும் வண்ணம் விக்ரகங்கள் செய்து அந்த குருவித்துறையில் பல காலம் நித்ய திருவாராதனம் கண்டு வந்தார். ஒரு நாள் ஒரு பக்தனின் வாக்கினால் தன்னை திருமலைக்கு எழுந்தருள கேட்டு கொள்ள அவனும் அந்த விக்ரகங்களை திருமலைக்கு எடுத்து சென்றான்.

அப்போது அங்கே ராமானுஜர், திருமலை நம்பிகளிடம் இராமாயண பாடம் கற்று வந்தார். இந்த பக்தர் கொண்டு வந்த தினம், விபீஷண சரணாகதி என்று பகுதி நடக்கவே, இருவரும் இது தெய்வ சங்கல்பம் என்று திருமலையில், திருவேங்கடமுடையான் சந்நிதியில் இந்த எம்பெருமானுடன் சீதா தேவியும் சேர்ந்து இருக்க வேண்டும் என்று சங்கல்பித்து, சீதா கல்யாணமும் செய்து வைத்து நித்ய ஆராதனம் செய்துவிக்க ஏற்பாடு செய்தனர்.

திருமலை நம்பியும் திருவேங்கடவனும்

திருமலை நம்பி, திருவேங்கடவனுக்கு பாபவிநாச தீர்த்தத்தில் இருந்து தினசரி திருமஞ்சன மற்றும் திருவாராதன தீர்த்த கைங்கர்யம் செய்து வரும் சமயம், திருவேங்கடவன் அவரின் கைங்கர்யத்தில் திருப்தி கொண்டவராய், ஒரு நாள் அவர் வரும் வழியில் வேடன் உருவில் வந்து, திருமலை நம்பிகளை பார்த்து தனக்கு தாகமாக உள்ளது என்றும் தீர்த்தம் தரவும் கேட்டான். திருமலை நம்பிகள் இது திருவேங்கடவனுக்கு, மனிதர்களுக்கு அல்ல என்று கூறி தரமறுத்து திருமலைக்கு செல்ல ஆரம்பித்தார். வேடன் அந்த தீர்த்த பாத்திரத்தை சேதம் செய்து தண்ணீர் கீழே விழச்செய்து, அதை பருகியபடி இருந்தான். தீர்த்த பாத்திரத்தில் பளு குறைந்ததை உணர்ந்த திருமலைநம்பி திரும்பி பார்த்து நடந்ததை அறிந்து மீண்டும் தீர்த்தம் எடுத்து வர திரும்பியபோது, வேடன் ஆகாய கங்கை இடத்தை காண்பித்து அங்கு ஒரு அம்பு விட்டு, ஒரு ஊற்று பெருக செய்து அந்த தீர்த்தத்தை எடுத்து கொள்ள சொல்லி தன்னையும் யார் என்று காட்சி அளித்து மறைந்தார். திருமலை நம்பிகள் தனக்கு காட்சி கொடுத்த எம்பெருமானின் கருணையை மகிழ்ந்து அதே ஆகாய கங்கை தீர்த்தத்தில் திருமஞ்சனம் செய்ய அன்று முதல் தொடங்கினார். சில நாட்களில் திருமலைநம்பிகள் பரமபதம் அடைந்தார். இதனை கேள்வியுற்ற இராமானுஜர் திருமலை நம்பிக்கு திருவேங்கடவன் காட்சி அளித்து ஆகாய கங்கை தீர்த்தத்தை கொண்டு முதலில் திருமஞ்சன நாளை கொண்டாடும் வண்ணம், அது அத்யயன உற்சவநாட்களுக்கு இடையில் வருவதால், அந்த உத்சவம் முடிந்த அடுத்த நாளில் அந்த திருமஞ்சனத்தை நடத்த உத்தரவு இட்டார். இந்த நிகழ்விற்கு தண்ணீர் அமுது வழி திருத்துதல் என்று பெயர்.

குருவை கிராமத்தில் திருவேங்கடவன்

குரும்பறுத்த நம்பியை பற்றி முன் பார்த்தோம். இங்கே இன்னும் சிறிது விளக்கமாக காண்போம். தொண்டைமான் சக்கரவர்த்தி திருவேங்கடவனிடத்தில் மண்ணினால் புஷ்பம் செய்த பக்தனை பற்றி கேட்டபோது, திருவேங்கடவன் அந்த பக்தனுக்கு முக்தி அளிக்க முடிவு செய்து அவன் குரும்பறுத்த நம்பி என்றும் அவன் திருமலைக்கு ஈசானமுலை திசையில் உள்ள குருவை என்ற கிராமம் என்றும் அவனை தனியே சென்று சந்திக்க வேண்டும் என்றும் தொண்டைமான் சக்ரவர்த்திக்கு திருவேங்கடவன் தெரிவித்தான். தொண்டைமான் சக்ரவர்த்தி குறும்பறுத்த நம்பியை புகழ்ந்து எம்பெருமானிடம் விடை பெற்று நம்பியை சந்திக்க செல்கிறான்.

தொண்டைமான் சக்கரவர்த்தி குருவை கிராமத்திற்கு ஒரு வெள்ளிக்கிழமை சென்ற போது, எம்பெருமானின் நோக்கத்தை அறிந்த நம்பி, தன்னுடைய தொழில் செய்யும் சட்டியால் (தட்டுமரத்தினால்) தன் தலையில் அடித்துக்கொண்டு உடன், திருவேங்கடவன் தன்னுடைய வெள்ளிக்கிழமை திருமஞ்சன நேரம் என்றும் கருதாமல் உடனே அதே தோற்றத்துடன் நம்பிக்கு அங்கேயே காட்சி அளித்து உடனே மோக்ஷம் அளித்தார். இதனை அறிந்த இராமானுஜர், திருவேங்கடவன் தன்னை சேர்ந்தவர்களுக்கு வசப்பட்டவன் என்பதையும் துன்பத்தில் இருப்பவர்களுக்கு துணை இருப்பவன் என்று தெரியும்படி அப்படியே நம்பியின் முன் நேரில் வந்து அவனை அங்கீகரித்ததனை உலகில் அனைவரும் அறிந்து அவன் திருவடி பற்றவேண்டும் என்பதற்காக, குருவை கிராமத்தில், திருவேங்கடவனின் திருமஞ்சன கோலத்துடன், குறும்பறுத்த நம்பியின் தட்டுமர காட்சியோடு ஒரு கோவில் கட்டி நித்திய திருவாராதனம் செய்ய ஏற்பாடு செய்தார்.

சீரமைப்புக்களின் தொகுப்பு

இராமானுஜர் திருப்பதி மற்றும் திருமலையில் செய்த சில சிறப்பான புதியவை மற்றும் திருத்தங்கள் கீழே:

  • திருவேங்கடத்தானை சங்கு சக்கரம் தரிக்க செய்தது
  • கோபுரங்களில் வராக, நரசிம்ம, வைகுந்தநாத, வெங்கடேச தேவதைகளை வைகானச ஆகம முறைப்படி அமைத்து இந்த கோவில் திருமாலுக்கே என்று உலகறிய ஸம்ப்ரோக்ஷணம் செய்தது
  • வைகாசன ஆகமப்படி, சேஷ, விஷ்வேக்ஸேனா, கருட, ஜெய விஜய துவார பாலகர்களை அவர்களுக்குரிய இடங்களில் பிரதிஷ்டை செய்தது.
  • வெள்ளி கிழமைகளில் எம்பெருமானின் திருமார்பில் இருக்கும் அலர்மேல்மங்கை நாச்சியாரை எடுத்து தனியே திருமஞ்சனம் செய்யும் முன்பு, எம்பெருமானுக்கு திருமஞ்சனம் செய்ய வேண்டும் என்று கட்டளை பிறப்பித்தது
  • திருமாலின் திருமார்பில் திருமகளை இரு திருக்கரங்களுடன் அமைத்து ஒரு நன்னாளில் நிறுவியது
  • திருவேங்கடத்தானின் திருமஞ்சனத்தின் போது தாயார் எம்பெருமானின் திருமார்பை விட்டு இழிந்திருந்தபோது நாச்சியார் திருமொழி ஓதும்படி செய்தது
  • திருமஞ்சனத்திற்கு பிறகு எம்பெருமான் திரு நெற்றியில் மெல்லிய இரு கோடுகளாக கற்பூரத்தினால் ஆன திருமண் அணிவித்து அது 3 நாள் இருக்கும்படியும் மற்ற 4 நாட்கள் முத்துபோட்டிகளால் ஆன திருமண் அணிவித்தது
  • திருக்கண்களுக்கு குளிர்ச்சிக்காக அஞ்சன காப்பு அணிவிக்க ஏற்பாடு செய்தது
  • புரட்டாசி விழாவை (புரட்டாசி ப்ரமோஸ்தவம்) சிறப்பாக செய்வதற்காக திருமலை திருவீதிகளை திருத்தி அமைத்தது
  • ஞான பிரானுக்கு ஐப்பசி மாத சரவண நக்ஷத்திரந்தன்று வராக ஜெயந்தி சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்தது
  • ஞான பிரானுக்கு மற்ற விழாக்கள் (பலி பீடார்ச்சனை, நித்திய ஹோம பூஜைகள்) என்று இல்லாமல் செய்தது
  • மலைகுனியநின்ற பெருமாளை (மலையப்ப ஸ்வாமியை) உத்சவ மூர்த்தி ஆக்கி, அதற்கு முன் உற்சவ மூர்த்தியாய் இருந்த போக ஸ்ரீனிவாச மூர்த்தியை (வேங்கடத்துறைவாரை) நிலைத்துள்ள மூர்த்தியாய் ஆக்கியது
  • தண்ணீர் அமுது வழி திருத்துதல்
  • பூந்தோட்டத்தில் எம்பெருமான் பூ பறிக்கும் விழா ஏற்பாடு செய்தது
  • அழகியசிங்கரான வேங்கடத்தரியை திருவேங்கடமுடையான் கோவிலிலே பிரதிஷ்டை செய்தது
  • திருவேங்கடமுடையானின் இடது திருக்கரத்திலும் (வைகுண்ட ஹஸ்தம்) வலது திருக்கரத்தில் உள்ளது போல் நாகாபரணம் (அரவப்பணி)அணிவித்தது
  • திருமலையில் இருப்பவர்கள் பின்பற்ற வேண்டிய நியதிகளை ஏற்படுத்தியது
  • அத்யயன உத்சவம் திருமலையில் 23 நாட்களும், ஆதிவராகப்பெருமாளுக்கும், கோவிந்தரராஜருக்கும் ஒரு நாள் உத்சவமாகவும் கொண்டாடும் படி செய்து அடியவர்கள் எல்லா உத்ஸ்தவங்களையும் காண வழி செய்தது.
  • திருவேங்கடமுடியானின் செல்வம் தொடர்ந்து வளர ஒரு எந்திரத்தை மந்திர பூர்வமாக அமைத்து திருக்கோவிலின் செல்வம் குறைபடாமல் வளர செய்தது.
  • திருப்பதியில் பார்த்தசாரதி ஸ்வாமி திருக்கோவிலில் கோவிந்தராஜரை திருப்பிரதிஷ்டை செய்தது
  • அவர் பக்கத்தில் செங்கழுநீர் பூவினை ஏந்திய ஆண்டாளை பிரதிஷ்டை செய்தது
  • இந்த இருவருக்கும் திருவிழா காண்பதற்கு ஏற்பாடு செய்தது, மண்டபம் கோபுரம் போன்றவை யாதவ ராயனுடன் துணை கொண்டு செய்வித்தது
  • திருவேங்கடமுடையானும் கோவிந்தராஜனும் வேறல்ல இருவரும் ஒருவரே என்பதற்கு ஏற்ப, திருமலை திருக்கோவிலில் பஞ்ச பேரரர்கள் இருப்பது போல், இவரும் ஐக்கியம் தோன்றும்படி பல கட்டளைகள் ஏற்படுத்தினார்.
  • 10ம் நூற்றாணடில் திருமலை திருவேங்கடமுடையானுக்கு கொடி ஏற்றும் வைபவம் திருச்சுகாரனூரில் நடைபெற்றதாக தகவல்கள் உள்ளன. அதனை மாற்றி திருமலையிலேயே நடத்த இராமானுஜர் ஏற்பாடுகள் செய்தார். கோபுரமும் கட்டி திருக்கோவிலினையும் திருவீதிகளையும் பெரிதாக்கினார்.
  • பூமாதேவியை அர்ச்சா ரூபமாக எழுந்தருள செய்து, ஒரு தீர்த்த நயினாரையும் கிணற்றிலே சேர்த்தியாக கிணற்றில் எழுந்தருள செய்து அவர்களுக்கு நித்திய தளிகைகள் அமுது செய்யும்படி செய்தது.
  • ஆளவந்தார் என்ற ஆச்சாரியார் ஒருமுறை மங்களாசாசனம் செய்ய திருவேங்கட யாத்திரை வந்திருந்த போது, எம்பெருமானுக்கு திருமஞ்சனம் செய்ய ஆகாய கங்கையில் இருந்து தீர்த்த எடுத்த வர நேரம் ஆனதால், மேற்சொன்ன கிணற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து அந்த கிணற்றிற்கு அழகப்பிரானார் என்று திருநாமம் சாற்றியதாக செவி வழி செய்தி இராமானுஜர் நினைவு கூர்ந்து அந்த கிணற்றை அப்படியே அழைக்கவேண்டும் என்று கட்டளை இட்டார்.
  • திருமலை படி ஏறும்போது, கோவிந்தா கோவிந்தா என்று கூவி மலை ஏற ஊக்கிவித்தது.
  • திருமலையில் திருமலைக்கு நித்திய கைங்கர்யம் செய்பவர்கள் மட்டுமே தங்க முடியும் என்றும், மற்றவர்கள் கீழ் திருப்பதிக்கு திரும்பி விட வேண்டும் என்பதை விதியாக செய்தார். அதே போல் திருமலையில் எம்பெருமானுக்கு செய்யப்படும் நைவேத்தியம் கோவிலேயே திருமலையில் கைங்கர்யம் செய்பவர்களுக்கு பங்கீடு செய்வதோடு மட்டுமின்றி அதனை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்ற வரைமுறைகளையும் வகுத்தார். (வீடுகளில் திருவாராதனம் செய்ய, பிள்ளை பிறத்தல், இறத்தல், ஈமக்கடன்கள் செய்தல்)
  • திருமலையில் எம்பெருமானுக்கு தரித்த எந்த புஷ்பமோ அல்லது மாலையோ யாரும் தவறாகவோ அல்லது மரியாதை இல்லாமாலோ பயன்படுத்த முடியாதபடி எவருக்கும் ப்ரஸாதமாய் கொடுப்பது இல்லை என்ற விதியை ஏற்படுத்தினார்.
  • மலை அடிவாரத்தில் இருந்து மலை ஏறும் போது, காலில் பாதணிகள் அணியாமல் ஏறுவது என்ற விதியை ஏற்படுத்தியது
  • திருமலை மற்றும் கோவிந்தராஜர் சன்னதிகளில் எந்த பாசுரங்கள், எந்த பிரபந்தங்கள், எப்பொழுது, எப்படி சேவிக்க வேண்டும், தனியன் சேர்த்தா அல்லது தனியன் இல்லாமலா, எத்தனை முறை சேவிக்க வேண்டும், எப்பொழுது அரையர் சேவை என்று நேரம், மாதம், காலம் இவற்றுடன் விரிவாக ஏற்படுத்தியது.

ஆழ்வார்கள்

திருவரங்கம், மதுரகவி ஆழ்வார் தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திருத்தலம் என்று முன்பு பார்த்தோம். இந்த திருவேங்கடம், தொண்டரடிப்பொடி ஆழ்வார், மதுரகவி ஆழ்வார் தவிர மற்ற பத்து ஆழ்வார்களாலும் பாடல் பெற்ற திருத்தலம். ஆழ்வார்கள் இந்த திருமலையைப் பற்றியும், வேங்கடவனைப் பற்றியும், பாசுரங்கள் சமர்ப்பித்துள்ளனர். ஒவ்வொரு ஆழ்வாரும் ஒவ்வொரு வகையில் வேங்கடவனின் மகிமைகளைக் கூறி இருப்பதை நிற்பதை அடியேனுடைய எழுத்துக்களில் அடக்கிவிட முடியாது.

திருவில்லிப்புத்தூர் கோவிலில் இருந்து ஸ்ரீ ஆண்டாள் அணிந்த மாலைகள் திருப்பதி கொண்டு வரப்பட்டு திருவேங்கடவனுக்கு மார்கழி மாதத்தில் சாத்தப்படுகிறது.  ஆண்டாள் மங்களாசாசனம் செய்த திவ்யதேசங்களில் திருவேங்கடமும் ஒன்று.

மொத்தம் 202 பாக்களுக்கு மேல் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளன. வேங்கடவனுக்கு ஆழ்வார்கள் அருளிய மங்களாசாசன பாக்களை கீழே உள்ளவாறு காணலாம்.

1பொய்கையாழ்வார் – முதல் திருவந்தாதி 10
2பூதத்தாழ்வார் – இரண்டாம் திருவந்தாதி 11
3பேயாழ்வார் – மூன்றாம் திருவந்தாதி 19
4திருமழிசையாழ்வார் – நான்முகன் திருவந்தாதி திருச்சந்தவிருத்தம் 16
5நம்மாழ்வார் 49
திருவிருத்தம் 8
திருவாய்மொழி – துவய மஹாமந்திரத்தின் முதல் பகுதி 11
திருவாய்மொழி – துவய மஹாமந்திரத்தின் இறுதி பகுதி 11
திருவாய்மொழி – மற்ற பாசுரங்கள் 18
பெரிய திருவந்தாதி 1
6குலசேகர ஆழ்வார் – பெருமாள் திருமொழி 11
7பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி 7
8ஆண்டாள் 16
9திருப்பாணாழ்வார் – அமலனாதிபிரான் 2
10திருமங்கையாழ்வார் 61
10,1பெரிய திருமொழி 1.8 கொங்கு அலர்ந்த 10
10.2 பெரிய திருமொழி 1.9 தாயே தந்தையே 10
10.3 பெரிய திருமொழி 1.10 கண்ணார் கடல்சூழ் 10
10,4பெரிய திருமொழி 2,1 வானவர் தங்கள் சிந்தை 10
10.5 5. 1 பெரிய திருமொழி மற்றைய பாடல்கள் மற்றும் மற்ற பிரபந்தங்கள்
5.2 திருகுறுந்தாண்டகம்
5.3 திருநெடுந்தாண்டகம்
5.4 பெரிய திருமடல்
5.5 சிறிய திருமடல்
15
1
2
2
1

ராமனுச நூற்றந்தாதி

ஆழ்வார்கள் திருவேங்கடமுடையான் மேல் பாடிய பாடல்களை பார்த்தது போல, திவ்ய பிரபந்ததத்தில் உள்ள இராமனுஜச நூற்று அந்ததாதியில் திருவேங்கடமுடையான் மேல் உள்ள இரண்டு பாடல்களை பார்க்கலாம்.

எம்பெருமானரே, நிலை நின்ற பெரும் புகழும், அதிகமான நீர்பெருக்கும் நிறைந்துள்ள, திருவேங்கடம் என்ற பொற்குன்றமும், ஸ்ரீவைகுந்தமாகிய திருநாடும், கொண்டாடத்தக்க திருபாற்கடலும், தேவரீருக்கு எவ்வளவு ஆனந்தத்தை கொடுக்குமோ, அத்தனை இன்பங்களை தங்களுடைய ஒன்றுக்கு ஒன்று இணையான திருப் பாதங்கள், அடியேனுக்கும் விளைவிக்கும். அப்படிபட்ட திருவடிகளை அடியேனுக்கு தந்து அருள வேண்டும் என்று திருவரங்கத்து அமுதனார் வேண்டுகிறார்.

சர்வேஸ்வரனுக்கு வாசஸ்தலம், பரமபதமும், திருவேங்கட மலையும், திருமாலரின்சோலையும் என்று சொல்வார்கள், இவைகளை இருப்பிடமாகக் கொண்ட சர்வேஸ்வரன் அந்த ஸ்ரீவைகுந்தம், திருமலை, மாலரின்சோலை முதலியவற்றோடு எழுந்தருளி இருப்பது, எம்பெருமானின் திருவுள்ளத்தில் ஆகும். அந்த எம்பெருமானார் இப்போது ஆனந்தமாக வந்து எழுந்து அருளி இருப்பது, அடியேனுடைய உள்ளத்தில் ஆகும் என்று திருவரத்து அமுதனார் சொல்கிறார்.

அடியவர்கள்

அனந்தாழ்வான் ஸ்வாமி இராமானுஜரின் சிஷ்யர்; அவர் இராமானுஜரின் வார்த்தைகளை ஏற்று, அவரிடம் “அங்கிருந்த அனைவரில் அனந்தாழ்வானே ஆண்பிள்ளை’ என்று பாராட்டினை பெற்று, திருவேங்கடமுடையானுக்கு நந்தவனம் அமைத்து புஷ்ப கைங்கர்யம் செய்யும் பொருட்டு ஸ்ரீரங்கத்தில் இருந்து திருமலைக்கு வந்து சேர்ந்தவர். திருவேங்கடமுடையானும் அவரது கைங்கர்யத்தில் உவந்தவராய் அவரிடம் அன்பும் பரிவும் காட்டி வந்தார்.

ராமானுஜர் பரமபதம் அடைந்ததை (அவதார ஸமாப்த்தி ) ஒரு பக்தர் அனந்தாழ்வாரிடம் பகிர்ந்து கொண்டபோது, அனந்தாழ்வார் மிகவும் சோகம் அடைந்து சுமார் ஒரு வருட காலம் திருவேங்கடமுடையானுக்கும் கைங்கர்யம் எதுவும் செய்யாமல் வேதனையில் தவித்து வந்தார். திருவேங்கடமுடையான் அனந்தாழ்வாரிடம் தாமன்றோ தன்னுடைய இராமானுஜரை இழந்தது, அதற்காக தான் தான் வருத்தப்பட வேண்டும். அனந்தாழ்வாருக்கு எந்த குறையும் வராது என்று ஆறுதல் கூறி அவரை கைங்கர்யம் செய்ய அழைத்தார். அனந்தாழ்வாரும் திருவேங்கடமுடையானின் அழைப்பை ஏற்று அவரிடம் ஒரு வேண்டுகோளை வைத்தார். அதாவது அத்யயனோத்சவத்தில் ஒரு நாள், ராமானுஜ நூற்றுஅந்தாதியை செவி சாய்த்திட வேண்டும் என்பதாகும். திருவேங்கடமுடையானும் உகந்து, சடகோபன், கலியன் சொன்ன வார்தைகளை கேட்பதை போல், இராமானுஜரை பற்றிய வார்த்தைகளை நூற்று அந்தாதியில் கேட்போம் என்று அருள, கண்ணினும் சிறு தாம்பு சொல்லி முடித்த பிறகு அடுத்த நாள் இராமானுஜ நூற்று அந்தாதியும் வாசிக்க ஏற்பாடு செய்தார். அதற்கு அடுத்த நாள் இராமானுஜர் ஏற்படுத்திய தண்ணீரஅமுது வழி கைங்கர்யமும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

ஸ்ரீ தூப்புல் வேதாந்த தேசிகன் என்ற ஆச்சாரியார் ஸ்ரீ அனந்த சூரியார் என்பவருக்கும் தோதாத்திரி அம்மையார் என்பவருக்கும் திவ்ய குமாரராய் காஞ்சி மாநகரில் தூப்புல் என்ற திருத்தலத்தில், திருவேங்கடவன் திருக்கோவிலின் திருமணியின் அம்சமாக கி பி 1268 ஆண்டு புரட்டாசி மாதம் சரவண நக்ஷத்திரத்தில் ஒரு புதன் கிழமையில் அவதரித்தார். வேதாந்த தேசிகன் வேதங்களை, வேத நாதம் என கணீர் என்று எங்கும் ஒலிக்க செய்தார்.

மணவாள மாமுனிகளும் இங்கு பலமுறை எழுந்தருளியுள்ளார். அவரின் ஆணையின்படி அவரது சிஷ்யர் பிரதிவாதி பயங்கரம் அண்ணா எம்பெருமானுக்கு மங்களாசாசனம் செய்யும் பொருட்டு ஸ்ரீ வேங்கடஸ்வர சுப்ரபாதத்தை அருளி செய்தார்.

இந்த சுப்ரபாதத்தினை அருளி செய்தவர் ஸ்ரீ அண்ணங்கராச்சார்யார் அல்லது பிரதிவாதி பயங்கரம் அண்ணா சுவாமி அவர்கள். இவர் சுவாமி தேசிகனின் திருக்குமாரரிடம் கற்று பின் மணவாள மா முனிகளின் முக்கிய சீடர்களில் ஒருவராக இருந்தவர். ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதத்தில் நான்கு பகுதிகள் உள்ளன. அவை சுப்ரபாதம் (29 பாடல்கள்), ஸ்ரீ வெங்கடேச ஸ்தோத்திரம் (11 பாடல்கள்), பிரபத்தி (16 பாடல்கள்), மங்களாசாசனம் (14 பாடல்கள்) ஆகும்.

ஸ்ரீ வேங்கடேச சுப்ரபாதத்தின் மங்கள ச்லோகம் : “ஸ்ரீவைகுண்ட விரக்தாய ஸ்வாமி புஷ்கரிணீ  தடே | ரமயா ரமமாணாய வேங்கடேசாய மங்களம் ||”

அதாவது ஸ்ரீவைகுண்டத்தில் நித்யனாக இருக்கும் எம்பெருமான், அவ்விருப்பிடத்தை வெறுத்து, தான் வானோர்க்கு மட்டும் தெய்வமில்லை; இந்தப் பூமியில் வாழ்பவர்க்கும் தெய்வம் என்பதை உணர்த்தும் வண்ணம்,  விண்ணோர்க்கும் மண்ணோர்க்கும் நடுநாயகமாக இருக்கும் உயர்ந்த மலைகளையும், வராஹ புஷ்கரிணியையும் உடைய இடத்தை இருப்பிடமாகக் கொண்டான்.   வேங்கடேசன் என்ற திருநாமத்தையும் சார்த்திக்கொண்டான்.  இதனால் இந்த மலையானது  திருவேங்கடமலை என்று பிரசித்திபெற்று திகழ்கிறது.  இப்படிப்பட்ட தயை உடைய திவ்யமான திருவேங்கடத்து எம்பெருமானுக்குப் பல்லாண்டு (வாழ்ச்சி) என்பது இந்த ச்லோகத்தின் அர்த்தம்.  

தாளப்பாக்கம் அன்னமய்யா, ஏழுமலையானை பரப்பிரம்மமாகவும், சிவாம்சம் பொருந்திய ஈஸ்வரனாகவும், சக்தி ஸ்வரூபமாகவும் பாடி, அந்த பாடல்களை செப்பேடுகளில் எழுதி வைத்துள்ளார். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமான் திருமலை கோயிலுக்கு வந்திருக்கிறார்.அவரும் அன்னமய்யாவும் சம காலத்தவர்கள். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் சிறந்த வித்யா உபாசகர், மந்திர சாஸ்திரம் தெரிந்தவர், பல தெய்வங்கள் மீது பாடியுள்ளார். ஏழுமயைான் மீது சேஷசல நாமம் வராளி ராகத்தில் பாடியுள்ளார்.

இந்த சுப்ரபாதத்தை தன்னுடைய இனிய குரலால் பாடி இந்த உலகின் எல்லா பகுதிகளுக்கும் கொண்டு சென்றவர் MS சுப்புலக்ஷ்மி. அவரை கவுரவிக்கும் வகையில் அவருக்கு ஒரு சிலை திருப்பதியில் இருந்து அலிபிரி வரும் வழியில் வைக்கப்பட்டுள்ளது.

மேலே சொன்ன திருவேங்கட விஷயங்களை சொல்லியபின் அடியேன் உறுதியாக புரிந்து கொண்டது, திருவேங்கட அனுபவத்தை சொல்லி முடிக்க முடியாது. மேலும் திருவேங்கடமுடையான் பற்றிய விஷயங்களை அடியேன் அறிய முடிந்தால், இன்னொரு வலைப்பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்வேன். தற்போது, திருவேங்கட அனுபவத்தை சற்று இங்கே நிறுத்திவிட்டு, இனி இன்னொரு திவ்யதேச அனுபவத்தில் சந்திப்போம், நன்றி.

===================================================================================

திருமாலை 35 – தாவி அன்று உலகம் எல்லாம்

Please click here to view the English Version, thanks

திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்றொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும்,  தொண்டரடிப்பொடிஆழ்வார்   எழுதிய  திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும்.

முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார்,  அடுத்த  பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து பலர், பல காரணங்களை சொல்லிய நழுவியபோது ஆழ்வார், “சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்” என்று சொல்லி இராமபிரானையும் கற்றினம் மேய்த்த கழலிணை பணிமின்” என்று எளிமையான கண்ணனையும், “உய்பவர்க்கு உய்யும் வண்ணம் திருவரங்கம் காட்டினான் என்று சொல்லி நம்மை திருவரங்கனிடம் அழைத்து செல்கிறார்.

அப்படியும் மக்கள் எல்லோரும் எம்பெருமான் பக்கம் செல்லாமையால், ஆழ்வார் அவர்களை விட்டுவிட்டு, எம்பெருமான் திருவரங்கனாக, தனக்குச் செய்த மிகப் பெரிய உதவிகளை அடுத்த பத்து பாசுரங்களில் விவரிக்கிறார். எம்பெருமான், பரமாத்மாவில் உள்ள சந்தேகங்களை ஆழ்வாருக்கு தீர்த்து, அவரின் நெஞ்சில் வந்து புகுந்து, தனது கடினமான நெஞ்சத்தை கரைத்து, அவனது சேவையையும் அருளையும் கொடுத்து, பலகாலங்களாக சேவிக்காத இழப்பை சரி செய்து, கண்களில் ஆனந்த கண்ணீர் பெருக வைத்து, நான்கு திசைகளை படைத்து, அவற்றில் தன்னுடைய அங்கங்களை வைத்து, அவற்றைக் கொண்டு நாம் உய்வதற்கு வழிசெய்து கொடுத்து, அவனின் திரு அவயவங்களின் அழகும், தேஜஸும், அடியவர்களுக்காகவே என்று மகிழ வைத்து, அவனிடம் மஹாவிஸ்வாசம் இல்லாததால், இத்தனை நாள் இழந்த பகவதனுபவத்தை எண்ணி கலங்கி, நாம் சிரமப்பட்டு புதிதாகக் கண்டு பிடித்து எம்பெருமானின் பெருமைகளைப் பேச வேண்டியது இல்லை என்று அவரை பாட வைத்து, அவன் அழகினை திருவரங்கத்தில் காண்பித்து, அதனை மறந்து ஆழ்வாரை வாழமுடியாதபடி செய்து, சரணாகதிக்கு தேவையான தகுதி ஒன்றும் தனக்கு இல்லை என்று ஆழ்வாரை உணரச் செய்து, அதற்கு அவரை தயார் செய்த உதவிகளை சொல்கிறார்.

எம்பெருமான் தனக்கு கொடுத்த அனுபவத்தை சொல்வது (1-3), தன்னுடைய அனுபவத்தை கொண்டு உபதேசம் செய்வது (4-14), மற்றும் எம்பெருமான் தனக்கு செய்த நன்மைகளை நினைத்துக் கொள்ளுதல்(15-24) என்ற முதல் மூன்று உட்பிரிவுகளை பார்த்த பின் தன்னிடம் ஒரு நல்ல குணமும் இல்லை என்று ஒரு ஐந்து பாடல்களிலும், எல்லா கெட்ட குணங்களும் உள்ளன என்று அடுத்த ஐந்து பாடல்களிலும் ஆழ்வார் சொல்லும் 25 முதல் 34 வரை உள்ள பத்து பாசுரங்கள் கொண்ட ஆழ்வாரின் நைச்சானுசந்தானம் என்ற இந்த நான்காவது பகுதியை அனுபவித்தோம்.

ஒரு நல்ல குணமும் இல்லை என்ற தலைப்பில் 25 முதல் 29 வரை உள்ள பாடல்கள்:

  • 25வது பாடலில்  (குளித்து மூன்று அனலை) ஆழ்வார் தனக்கு கர்ம, ஞான, பக்தி யோகங்கள் செய்வதற்கான தகுதி இல்லை என்றும் தகுதி முதல் எல்லாவற்றையும் அருள வேண்டும் என வேண்டுகிறார்.
  • அர்ச்சனை, துதி போன்றவற்றையும் தான் செய்வதில்லை என்று ஆழ்வார் சொல்வதாக அமைந்த போதெல்லாம் போது கொண்டு ( 26) பாசுரம்.
  • இராமாயண காலத்தில் குரங்குகளும், அணில்களும், நல்ல நெஞ்சத்தோடு செய்த கைங்கர்யம் போல் தான் எந்த கைங்கர்யமும் செய்தது இல்லை என்று குரங்குகள் மலையை நூக்க (27) வது பாசுரத்தில் சொல்கிறார்.
  • உம்பரால் அறியலாகா (28) என்ற பாடலில், எம்பெருமான் தன்னை காத்தருள வேண்டும் என்று கதறிய யானையின் சிந்தனையும் தனக்கு இல்லை என்று ஆழ்வார் வருந்துகிறார்.
  • ஊரிலேன் காணியில்லை (29) பாசுரத்தில், எம்பெருமான் உகந்து அருளின திவ்ய தேசங்களுடனும் தனக்கு சம்பந்தங்கள் இல்லை என்று ஆழ்வார் மறுக்கிறார்.

அடுத்த ஐந்து பாடல்களில், தன்னிடம் எல்லாவிதமான தீமைகளும் உண்டு அல்லது எல்லா கெட்ட குணங்களும் உண்டு என்று சொல்வதை பார்த்தோம்.

  • தன்னிடத்தில் இல்லாத தீமை, உலகத்திலேயே இல்லை என்றும், மற்றவர்கள் ஏற்றம் பெறுவதை பொறுக்காத தீயகுணம் தன்னிடம் உள்ளது என்றும் சொல்வது மனத்திலோர் தூய்மையில்லை (30) என்ற பாடல்.
  • தான், தவம் செய்பவர்கள் கூட்டத்திலும், அடியவர்களுக்கு நல்லது செய்ய பொருள் சேர்ப்பவர்களின் கூட்டத்திலும் இல்லை, தன்னால் சொந்தங்களுக்கு ஒரு பயனும் இல்லை, கூடி இருந்த பெண்களுக்கும் கள்வனாக மாறி தன்னுடைய இந்த பிறவி வீணானதை நினைத்து தவத்துளார் தம்மில் அல்லேன் என்ற 31வது பாடலில் வருந்துகிறார்.
  • எம்பெருமானை அடைவதற்கு ஒரு வழியும் அறியாதவனாய், மனிதரில் கள்வனாய், மனதிற்கு பிடித்தவற்றை விட முடியாதவனாக, மூடனாக, எம்பெருமான் முன் வந்து நின்றதை ஆழ்வார் ஆர்த்து வண்டு அலம்பும் சோலை என்ற 32வது பாடலில் தன்னுடைய மூடத்தனம் சொல்கிறார்.
  • தம்முடைய தாழ்வுகளைச் சொல்லி தனக்கு போக்கிடம் வேறு எதுவும் இல்லை என்று கதறி எம்பெருமானின் கருணையின் மேல் உள்ள ஆசையினால், அவன் முன் வந்ததாக ஆழ்வார் மெய் எல்லாம் போக விட்டு என்ற 33வது பாடலில் சொல்கிறார்.
  • உள்ளத்தே உறையும் மாலை என்ற 34 வது பாடலில், எம்பெருமானுக்கு அடிமை செய்பவன் போல வேஷங்களைப் போட்டு, அவன் எல்லோருடைய நெஞ்சத்தில் இருந்து, எல்லா நினைவுகளையும் அறிகின்றான் என்ற அவனது குணத்தை புகழும்போது, தன்னுடைய கள்ளவேஷம் கலைந்ததே என்று வெட்கமடைந்து தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டதை சொல்கிறார்.

இனி திருமாலையின் அடுத்த பகுதி.

இப்படி ஆழ்வார் தன்னை விட்டு விலகுவதை அறிந்த எம்பெருமான், ஆழ்வாரை தம்மிடமே இருக்க செய்ய, தான் எல்லோருக்கும் அவர்கள் கேட்காமலே செய்த நன்மைகளை விளக்கும் பகுதி.

இனி, இந்த பகுதியில் உள்ள முதல் பாசுரத்தைப் பார்ப்போம். நன்றி.

பாசுரம் 35

தாவி அன்று உலகம் எல்லாம் தலை விளாக் கொண்ட எந்தாய், சேவியேன் உன்னை அல்லால், சிக்கென செங்கண் மாலே ! ஆவியே ! அமுதே ! எந்தன் ஆருயிர் அனைய எந்தாய் ! பாவியேன் உன்னை அல்லால் பாவியேன் பாவியேனே (35)

ஆழ்வார் எம்பெருமானை விட்டு விலகுவதை உணர்ந்த எம்பெருமான், அவர் ஏன் விலகுகிறார் என்று வினவ, ஆழ்வார், எல்லாம் அறிந்த எம்பெருமான் முன் பொய்களை சொல்லி அணுகினதாகவும் அதனால் அவனுக்கு சிறுமை என்று முடிவு செய்து, பற்பல ஜென்மங்களாக, ஆழ்வாரைப் பற்றி ஒன்றும் அறியாத சாதாரண மக்களுடன் சேர்ந்து இருப்பதற்கு செல்வதாக பதில் உரைக்கிறார். எம்பெருமான், இந்த பாடலில், தாம் அடியவர்களின் எந்த குறையும் பார்ப்பதில்லை என்றும், சாதாரண மக்கள் எல்லா குறைகளையும் ஒன்று விடாமல் பார்ப்பார்கள் என்றும், தாம் அடியவர்களின் எல்லா குணங்களையும் ஒன்று விடாமல் கவனித்து கருத்தில் கொள்வதாகவும் கூறி, அவனை அணுகுவதே சரியானது என்கிறார். அதற்கு ஆழ்வார், அப்படி செய்ததற்கு ஏதாவது சரித்திரம் உண்டா என்று வினவ, த்ரிவிக்ரமனாக, மூவுலங்களையும் அளந்து, எல்லாருடைய தலைகளிலும் தன்னுடைய திருவடிகளை சாத்தி, அருள் செய்து, எல்லை இல்லாத நீர்மையை (எளிமையை) காட்டியதைச் சொல்லி, ஆழ்வார் இல்லாவிட்டால், தன்னால் இருக்க முடியாது என்று உரைக்கிறார்.

சென்ற பாசுரத்தில் சொன்னது போல், இந்த பாட்டும் நம்மாழ்வாரின், வளவெழு உலகின் என்ற திருவாய்மொழி முதல் பத்து, ஐந்தாம் பதிகத்தில் சொன்னதை நினைவு படுத்தும். நம்மாழ்வார் முதல் பத்து முதல் நான்கு பதிகங்களில் நிறைய செய்தும் எம்பெருமான் மனம் இரங்கவில்லை, அதற்கு ஆழ்வார் தன்னுடைய குற்றங்களே காரணம் என்று எண்ணி விலகப்பார்த்தார். இந்த பதிகத்தில் மூன்றாம் பாட்டில் “திசைகள் எல்லாம் திருவடியால் தாயோன்“என்று த்ரிவிக்ரம அவதாரத்தை காட்டி, தன் பால் மனம் வைக்கத் திருத்தி (திருவாய்மொழி, 1.5.10) அவரை விலகாமல் அவருடனே இருக்கும்படி செய்கிறார்.   இங்கும் அதே போல், தொண்டரடி பொடி ஆழ்வாருக்கும் த்ரிவிக்ரம அவதாரத்தை காட்டி அவரையும் அவனை விட்டு விலகாமல் பார்த்து கொள்கிறார்.

அதே போல், திருவாய்மொழி (7.10.10) என்ற பாசுரத்தில், ஆழ்வார், “சிந்தை மற்றொன்றின் திறத்தது அல்லாத் தன்மை தேவ பிரான் அறியும், சிந்தையினால் செய்வ தான் அறியாதன மாயங்கள் ஒன்றுமில்லை“என்று சொல்வதில் “தன் சிந்தையில் அவனை தவிர வேறு ஒன்றும் இல்லை என்பதை தேவபிரான் அறிவான் என்றும், சிந்தையினால் செய்யப்படுவனவற்றுள் அவன் அறியாதன ஒன்றும் இல்லையே” என்றும் சொல்வது தொண்டரடிப்பொடி ஆழ்வார் விலவர சிரித்திட்டேனே என்று சொல்லும் போது சொல்வதுடன் ஒப்பிட்டு கொள்ளலாம். அங்கே நம்மாழ்வார் எம்பெருமானை தவிர வேறு ஒன்றும் தன் சிந்தையில் இல்லை என்றும் அதனை அவனே அறிவான் என்றும் சொல்வதும், இங்கே தொண்டரடிப்பொடி ஆழ்வார், தன் சிந்தையில் அவனை தவிர மற்ற விஷயங்களே உள்ளன என்றும் அதனை அவரே அறிவார் என்றும் சொல்வதும் நினைவில் கொள்ளத்தக்கது.

“மஹாபலி எல்லா உலகங்களையும் அபகரித்த போது, எல்லா உலகங்களையும் கடந்து, எல்லாருடைய தலைகளிலும் தன்னுடைய திருவடி படும்படி வியாபித்த, என் ஸ்வாமியே, உன்னைத் தவிர, வேறு ஒரு பொருளையும் சேவிக்க மாட்டேன், சிவந்த திருக்கண்களை உடையவனே, அடியவர்களின் பக்கம் இருப்பவனே, எனக்கு உயிர் போன்றவனே, அமிர்தம் போன்றவேனே, என்னுடைய அருமருந்து போன்ற உயிர்க்கு அந்தராத்மாவாக இருக்கும் என் ஸ்வாமியே, பாவியாகிய நான், உன்னைத் தவிர, பிறரை நினைக்க மாட்டேன், நான் மிக்க பாவத்தை செய்தவனே’ என்று ஆழ்வார் சொல்வது இந்த பாடலின் பொழிப்புரை.

இனி சற்று விளக்கமாக,

தாவி

முன்கூட்டியே அறிவித்துவிட்டால், பல காலங்களாக மனதில் உள்ள அகங்காரம் உள்ள சம்சாரிகள், அவன் திருவடிகளை தங்கள் தலைமீது வைக்க மறுத்து ஆணை இடுவார்கள். எப்படி திருவாய்மொழியில் (10.10.2) நம்மாழ்வார், அவன் மறுக்க முடியாதபடி, “திருவாணை, நின் ஆணை ” என்று சொன்னபடி அடியவர்கள், அவன் மறுக்க முடியாதபடி திருவடிகளை தலையில் ஏந்தி கொள்வார்களோ, அதே போல் இவர்கள் இவனது திருவடிகளை ஏற்க மறுப்பார்கள் என்று எம்பெருமான் யாரும் அறியாதபடி, யாருக்கும் களைப்பு ஏற்படாதபடி எல்லோர் தலைகளிலும் தன் திருவடி தீண்டும்படி தாவி வளர்ந்தான் என்கிறார்.

அன்று

க்ருத யுகத்தில் மஹாபலியால் மூன்று உலகங்களும் அபகரிக்கப்பட்டு, எம்பெருமானுடைய சேஷித்வமும், மக்களுடைய சேஷத்வமும் அழிந்து கிடந்த அன்று என்கிறார்.

உலகமெல்லாம்

மஹாபலியால் கவரப்பட்ட மூன்று உலகங்களை அளந்தது மட்டும் இல்லாமல், பிரம்மாவின் சத்ய லோகம் வரையில் உள்ள ஏழு உலகங்களையும் அளந்து, எல்லாவற்றிலும் உள்ள எல்லா ஜீவராசிகள் மீதும், உயர்ந்தவர்(வசிஷ்டர்), தாழ்ந்தவர் (சண்டாளர்கள்) என்ற பேதமில்லாமல், தன்னுடைய திருவடிகள் தீண்டும்படி வளர்ந்ததை காட்டுகிறார்.

தலைவிளாகக் கொண்ட

ஸஹஸ்ர ஸீர்ஷா புருஷ: ஸஹஸ்ராக்ஷ : ஸஹஸ்ரபாத் , ஸ பூமிம், விஸ்வதோ வ்ருத்வா , அத்யதிஷ்டத் தசாங்குலம் (புருஷஸூக்தம் 1) என்றதன் படி, புருஷன் எனப்படும் நாராயணன், கணக்கற்ற தலைகளையும், அளவற்ற கண்களையும், அனந்தமான கால்களையும் உடையவர், அவர் பூமியை எல்லாப்புறமும் சூழ்ந்து, அதற்கு மேலும் எல்லையற்ற தூரம் வியாபிக்கிறார் என்று பொருள் ஆகும். அதனால், பூமியையும் மற்றும் நித்ய விபூதியான மேல் உலகங்களையும் வியாபிக்கிறார் என்று பொருள் வருவது போல், தலைவிளாக்கொண்ட என்பது, அளக்க வேண்டியதற்கு மேலே அளந்ததை காட்டுகிறது. அதே போல், காக்க வேண்டிய (ரக்ஷிக்க வேண்டிய) பொருட்களின் அளவினை விட எம்பெருமானின் காக்க வேண்டிய ஆசை (பாரிப்பு) மிக அதிகமா இருப்பதை காட்டுகிறது.

எந்தாய்

திருமங்கையாழ்வார், திருகுறுந்தாண்டகம், பாடல் 6ல் “அமரர் சென்னி பூவினை‘ என்று சொன்னபடி, நித்யஸூரிகள் தங்கள் தலையினால் தாங்கும் எம்பெருமானின் திருவடிகளை, அவற்றில் ஈடுபாடற்ற சம்சாரிகள் தலைகளிலும் எம்பெருமான் வைப்பதற்கு என்ன காரணம் என்றால், அது எம்பெருமானனுக்கு ஜீவாத்மாக்களுடன் உடன் உள்ள, விட முடியாத உறவே என்று சொல்வது கவனிக்கத்தக்கது. நம் சம்பிரதாயத்தில் நவவித சம்பந்தம் என்று பரமாத்மாவிற்கும் ஜீவாத்மாவிற்கும் உள்ள ஒன்பது விதமான சம்பந்தங்களை கூறுவார்கள். 

எம்பெருமானுடன் இருந்த இந்த உறவு, அன்று தெரியாமல் இருந்த குறை தீர, இப்போது, அவ்வுறவை அறிந்தபின்னர், ஆழ்வார் என்தந்தை என்று சொல்லாமல் எந்தாய் என்று சொல்லி, தன்னுடைய நன்றி கடனை செலுத்துகிறார். அன்று எம்பெருமான் தன் திருவடிகளால் தடவி காத்ததினால், அவனுடைய அந்த முயற்சியால் தான், இப்பொழுது திருந்தியது என்று உணர்ந்து எந்தாய் என்று அழைக்கிறார். திருப்பாவை 24ம் பாட்டில், “அன்று இவ் உலகம் அளந்தாய் அடிபோற்றி, சென்று அங்குத் தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி, பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி, கன்று குணிலாய் வெறிந்தாய் கழல் போற்றி, குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி, வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி, என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான், இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.” என்று சொல்வதை இங்கே நினைவில் கொள்ளலாம். அன்று என்று அங்கு சொன்னது, முன்னொரு யுகத்தில், காலத்தில், என்று ஒவ்வொரு நிகழ்ச்சியையும் நினைவு கூர்ந்து, இன்று வந்ததை குறிப்பிடுகிறார்.

தாய் தன்னுடைய குழந்தையை கட்டி கொண்டு உறங்குவது போல், எம்பெருமான், எல்லோருடைய தலைகளையும், தான் பெற்ற பேறாக கருதி, தீண்டினான். சம்சாரிகள் இன்றும் அவனுடனான உறவை அறிந்து இருக்கவில்லை என்றாலும் அவர்களுக்கும் சேர்த்து ஆழ்வார் உகக்கிறார்.

சேவியேன் உன்னை அல்லால்

ஆழ்வார், இப்பொழுது எம்பெருமானின் எளிமையை அறிந்து, அவனை விட்டு அகன்று மற்றொன்றை பற்ற மாட்டேன் என்கிறார். எம்பெருமானை விட்டால், ஆழ்வார், தான், எவர் தயவும் இன்றி, சுதந்திரமாக இருக்க வேண்டும் (சுதந்திரன்), அல்லது இன்னொருவரை சார்ந்து அவருக்கு அடிமையாக இருக்க வேண்டும்(பாரதந்திரியன்), இந்த இரண்டு குறையும் தனக்கு வராது என்கிறார்.

திருமந்திரத்தின் முதல் பதத்தில், பாரதந்த்ரியம் எனப்படும் எவருக்கும் அடிமையாக இருப்பதை தவிர்ப்பதையும், இரண்டாவது பதத்தில், ஸ்வாதந்த்ரியம் எனப்படும், தனக்கு தானே ராஜாவாக இருக்கும் தன்மையை தவிர்ப்பதையும், ஆழ்வார் சேவியேன் உன்னை அல்லால் என்கிறார். எம்பெருமானை சேவிப்பது வழக்கம் ஆகிவிட்டதால், வெளிவிஷயங்களையும் சேவிக்க மாட்டேன் என்ற வார்த்தைகளையே உபயோகிக்கிறார்.

சிக்கென

மேலே சொன்ன விஷயம் எல்லா காலங்களிலும் இருக்கும், தன்னுடைய ஆத்மா உள்ளவரையிலும் இருக்கும், எப்பொழுதும் இருக்கும் என்பதை சிக்கென என்றதால் சொல்கிறார். நம்மாழ்வார் “உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கெனவே.” திருவாய்மொழி (2.6.1) சொல்வதை இங்கே நினைவில் கொள்ளலாம். அதே போல் தொண்டரடிப்பொடி ஆழ்வாரை இழந்து விடுவோமோ என்று கவலையுற்ற எம்பெருமானுக்கு ஆழ்வார் இந்த வார்த்தையால் உறுதி அளிக்கிறார்.

ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ, அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச: என்பது, பகவத் கீதையில், எம்பெருமான், ‘எல்லாவற்றையும் முழுமையாக விட்டுவிட்டு என்னை மட்டுமே கதியாக அடைவாய். நான் உன்னை எல்லா பாவங்களிலிருந்தும் விடுதலை செய்கிறேன். வருத்தம் வேண்டாம்’ என்று சரமச்லோகத்தில் ஜீவனை கவலைப்படாதே என்று சொன்ன எம்பெருமானுக்கு, இங்கே ஆழ்வார் அபயப்ரதானம் செய்கிறார்.

செங்கண்மாலே

இந்த வார்த்தைகள், எம்பெருமானுக்கு இயற்கையில் உள்ள சிவந்த திருக்கண்களை பற்றி சொல்வது அல்ல. ஆழ்வார் சிக்கென என்று சொன்னவுடன் எம்பெருமானின் திருக்கண்களில் பிறந்த ஒரு தனிச் சிவப்பினைக் குறிக்கிறது. சென்ற பாட்டில் (திருமாலை 34), ‘வெள்கிப் போய் ‘ என்றவுடன் கவலையுற்ற எம்பெருமான், இந்த பாட்டில், “‘சேவியேன் உன்னை அல்லால் சிக்கென “ என்று சொன்னதால் உண்டான பயம் தீர்ந்து, ஆழ்வாரின் மேல் உண்டான பெரும் காதல் உள் அடங்காமல் கண் வழியே புறப்பட்டு ஒளி வீசுவதை சொல்கிறார். செங்கண்மாலே என்பதால், பெருங்காதலால் இப்படி குதறி சிவந்த கண்களை உடையவனே என்று பொருள் கொள்ளலாம்.

கண்ணும் சிவந்து , பெரியவாய் வாயும் சிவந்து, (திருவாய்மொழி 8.8.1) என்ற பாடலிலும் ஸ்வாமி நம்மாழ்வார் கண்கள் சிவந்து என்று சொன்னது, எம்பெருமானது இயற்யான கண்ணழகை சொல்வது அன்று, ஆழ்வாரோடு சேர்ந்தபின் உண்டான பூரிப்பை சொல்கிறது.

இராமாயணம், யுத்த காண்டத்தில், விபீஷணன் இராவணனை பிரிந்து இராமனை தேடி வந்த போது, சுக்ரீவன், விபீஷணன் இராவணன் தம்பி என்பதால் அவனை கொல்ல வேண்டும் என்று சொன்னதும், பிறகு அனுமன் அவனை தங்களுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று சொன்னதும் இங்கே மேற்கோள் காட்டப்படுகிறது.

“வத்யதாமேஷ தீவ்ரேண தண்டேந ஸசிவைஸ் ஸஹ, ராவணஸ்ய, ந்ருஶம்ஸஸ்ய ப்ராதா ஹ்யேஷ விபீஷண(யுத்த காண்டம், 17.29) என்பது, இந்த விபீஷணன் கொடூரமான ராவணனின் சகோதரன் என்பதால் அவனது மந்திரிகளுடன் சேர்ந்து தண்டனை கொடுத்துக் கொல்வோம் என்று சுக்ரீவன் ராமனிடம் சொன்னான். எம்பெருமானுக்கு ஆழ்வார் கூறிய ‘வெள்கி போய் ‘என்ற வார்த்தை, சுக்ரீவன் இராமனிடம் கூறிய வார்த்தைக்கு ஒப்புமை கூறி எம்பெருமான் திருவுள்ளம் பட்ட பாட்டை காண்பிக்கின்றது. பின்னர் இராமன் மற்றவர்கள் கருத்தினை கேட்ட போது, வாயுவின் புத்திரனான அனுமன் விபீஷணனை நம் சொந்த நபராக ஏற்றுக்கொள்ளலாம் (17.67) என்று சொன்ன வார்த்தைகள், வலிமை மிக்க இராமன் இதயத்தில் மிகவும் மகிழ்ச்சியடைய செய்து, தனது கருத்தைச் சொல்லத் தொடங்கினான் என்பது கீழ் வரும் ஸ்லோகத்தில் வருகிறது. அதராமःப்ரஸந்நாத்மா ஶ்ருத்வா வாயுஸுதஸ்ய ஹ, ப்ரத்ய பாஷத துர்த்தஷ ஶ்ருதவாநாத்ம நிஸ்திதம் (யுத்த காண்டம், 18.1). ராமாவதாரத்தில் அனுமன், ஸ்ரீராமனுக்கு வருந்தாதீர் என்று அபயம் அளித்ததாகவும், இங்கே தொண்டரடிப்பொடி ஆழ்வார் அர்ச்சாவதாரத்தில் உள்ள பெரியபெருமாளுக்கு அபயம் அளித்ததாகவும் உரையாசிரியர் சொல்கிறார். ஆழ்வார் சிக்கென என்று சொன்னபோது, எம்பெருமானுக்கு அவ்வாறே இருந்தது என்கிறார்.

செங்கண்மாலே, உன்னை அல்லால் சேவியேனே என்று சேர்த்து பார்த்தால், தன்னை பெற்றதால், பெரும் காதலால் முகம் மலரும்படி இருக்கும் எம்பெருமானத் தவிர வேறு எங்கு போவார் என்ற கருத்தை சொல்கிறது.

ஆவியே

தன்னுடைய உயிரை போன்று இருக்கும் எம்பெருமானை விட்டு எங்கே போவேன் என்கிறார் ஆழ்வார். ஆழ்வார் பிராணனை (உயிரினை), வாயுவின் ஒரு நிலையாக கருதவில்லை. திருவாய்மொழி (7.2.9) யில் சொன்னது போல், இந்த ஆழ்வார், ‘என் திருமகள் சேர் மார்வனே. என்னும் என்னுடைய ஆவியே என்னும்’ என்று ஸ்ரீமன் நாராயணனையே தன்னுடைய உயிராக நினைத்து இருப்பவர்.

அமுதே

ஆழ்வார் எம்பெருமானை வாழ்விற்கு தேவையான உயிர் போல் மட்டும் எண்ணாமல், மிகவும் இனிமையான தன்னுடைய உயிரினை சாவாமல் காக்கும் அருமருந்தமான அமுதம் என்று நினைக்கிறார்.

எந்தன் ஆருயிர் அனைய எந்தாய்

எம்பெருமான் தன்னுடைய ஆத்மாவாகவே இருக்கிறார் என்கிறார். ஆத்மாவான எம்பெருமானை விட்டு, வெறும் சரீரத்தை மட்டும் கொண்டு தான் வெளியில் வாழ முடியாது என்பது கருத்து.

அணுகத்தகாதவன் என்று எண்ணி எம்பெருமானை விட்டு அகல செல்ல நினைத்த ஆழ்வாரை, அகன்று, அழிந்து விடாதபடி, சேர்த்துக்கொண்ட சுவாமி என்பதை, இங்கே எந்தாய் என்பதால் தெரிவிக்கிறார்.

வாத்ஸல்யம் என்ற எம்பெருமானின் திருக்குணம் என்பது, குற்றம், குறைகளுடன் தம் அடியார்கள் இருந்த போதிலும் அவர்களை அப்படியே ஏற்றுக் கொள்வது, அதாவது, பிறந்த கன்றை, தாய்ப் பசு, அருவருப்பு இல்லாமல், ஆசையுடனும் பாசத்துடனும் நக்கிக் கொடுக்கும் அன்பையும் பாசத்தையும் போல எம்பெருமான் அடியவர்களிடம் அன்பையும் பாசத்தையும் பொழிபவர்.

இங்கே, எம்பெருமானின் வாத்ஸல்யம் அல்லது அடியவர்களிடம் பரிவு என்ற திருக்குணத்தை காட்டும் சிவந்த கண்களை உடைய செங்கண்மால் என்கிறார். ஆழ்வாருக்கு உயிராக இருப்பவனே, இத்துடன் மிக இனிமையான அமுதம் போன்றவனே, தனக்கு ஆத்மாவாக இருந்து அவரை நல்வழியில் நடத்தி செல்லும் ஆருயிர் அனைய எந்தாய் என்கிறார், இப்படி உள்ள பல பெருமைகளையும் கொண்ட எம்பெருமானை விட்டு எங்கேயும் வெளியே செல்ல இயலாது என்று ஆழ்வார் கூறுகிறார்.

பாவியேன் உன்னை அல்லால்

கீழ் பாசுரங்களில் ஐயனே அரங்கனே (33) என்றும், ‘என்னை ஆளுடைய கோவே ‘ என்றும் சொன்ன வார்த்தைகளும் பொய் தானோ என்று எம்பெருமானின் திருவுள்ளமாகுமோ என்று கவலையுற்று, எம்பெருமானை தவிர வேறு ஒன்றையும் நினைக்க மாட்டேன் என்பதை, ‘பாவியேன் உன்னை அல்லால் ‘ என்ற வார்த்தைகளால் சொல்கிறார்.

பாவியேன் பாவியேனே

பாபம் மிகுந்த சம்சாரிகளை விடாமல், எல்லோர் தலையிலும் தன்னுடைய திருவடிகளால் தீண்டிய எம்பெருமானை விட்டு ஆழ்வார் விலகி செல்ல நினைத்ததற்கு காரணம் அவரின் பாவங்களே என்று தன்னிலை விளக்கம் கொடுக்கிறார். இரண்டாவதாக சொன்ன ‘பாவியேனே ‘என்றது, உன்னை தவிர வேறு எதையும் நினைக்க மாட்டேன் என்று முன்பு சொன்னதை உறுதி செய்கிறார்.

பாவியேன் பாவியேனே என்று இரண்டு வார்த்தைகளிலும் பாவி என்ற சொல் வருவது, தான் செய்த அதிக அளவு பாவங்களை குறிப்பதற்காக என்றும் எடுத்துக் கொள்ளலாம். அடியார்களின் குற்றங்களை காண மாட்டாத அளவோடு இல்லாமல், எம்பெருமானை வெறுக்கும் சம்சாரிகளையும் வெறுக்காத எம்பெருமானை தான் அகல நினைத்ததற்கு காரணம், தான் செய்த மிக அதிக அளவிலான பாவங்களே என்ற கருத்தையும் சொல்வதாக கொள்ளலாம்.

இந்த இரண்டு பாவங்களில், முதல் பாவம், ஆழ்வார் எம்பெருமானை விட்டு விலகி தன்னை தானே அழித்து கொள்ள நினைத்தது. இரண்டாவது பாவமாவது, அனைவரும் வாழ்வதற்கு காரணமாக ஆவியாயிருக்கும் எம்பெருமானையும் தான் அகல்வதின் மூலம் அழித்து, அனைவரையும் அழிக்க முற்பட்ட பாவத்தை குறிப்பதாக அமையும் என்றும் கொள்ளலாம்.

தொண்டரடிப்பொடி ஆழ்வார் தன்னிடம் நல்ல குணங்கள் இல்லை என்றும் தீய குணங்கள் அனைத்தையும் தன்னகத்தே கொண்டவன் என்றும் இப்பாடலுடன் நைச்சாநுசந்தானம் என்ற நான்காம் பாகம் முடிகிறது. அடுத்த பகுதி ஆழ்வார் அருளிய திருமாலையின் மிக முக்கியமான மற்றும் சுவாரஸ்யமான பகுதிக்கு நம்மை அழைத்துச் செல்லும். எங்களின் வரும் வலைப்பதிவில் நாம் அனுபவித்து மகிழலாம். நன்றி.

இனி அடுத்த பாசுர அனுபவத்தில் சந்திக்கலாம், நன்றி.

075 திருவேங்கடம் – மூன்றாம் பகுதி

ஸ்ரீ பத்மாவதி நாயிகா ஸமேத திருவேங்கடமுடையான் திருவடிகள் போற்றி போற்றி

திவ்யதேசம் திருவேங்கடம்
மூலவர் திருமலையில், திருவேங்கடமுடையான். ஸ்ரீனிவாசன் வெங்கடாசலபதி. பாலாஜி,
ஏழுமலையான் திருவேங்கடத்தான்

திருப்பதியில், கோவிந்தராஜன்
உத்சவர் திருமலையில் கல்யாண வெங்கடேஸ்வரன் மலையப்ப சுவாமி
தாயார் அலர்மேல்மங்காபுரத்தில் பத்மாவதி தாயார்
கீழ்திருப்பதியில் புண்டரீகவல்லி தாயார்
திருக்கோலம் திருமலையில், திருப்பதியில் கிழக்கு நோக்கி திருமுகமண்டலம்
திருமுகமண்டலம் கிழக்கு
பாசுரங்கள் 202க்கும் மேல் ஆழ்வார்கள் என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டு உள்ளது.
மங்களாசாசனம் பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், குலசேகர ஆழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார்
தீர்த்தம் 1. ஸ்வாமி புஷ்கரிணி, 2. பாபவிநாசம், 3. ஆகாசகங்கை, 4. கோனேரி,  5. வைகுண்ட தீர்த்தம், 6. சக்ரதீர்த்தம், 7. ஜபாலி தீர்த்தம், 8. வகுள தீர்த்தம், 9. பாண்டவ தீர்த்தம், 10. இராமகிருஷ்ண தீர்த்தம், 11. தும்புரு தீர்த்தம், 12. சேஷ தீர்த்தம், 13. சுகஸந்தன தீர்த்தம்  14. மொர தீர்த்தம்.
திருச்சானூரில்  பத்ம ஸரோவரம்
கோபுரம் ஆனந்த நிலைய விமானம்
ஸ்தல வ்ருக்ஷம் புளியமரம் (சேஷ அம்சம்)

வடநாட்டு திவ்யதேசங்கள் பற்றிய ஒரு முன்னுரையை இங்கே காணலாம். நன்றி

திருத்தலம் பற்றி

திருவேங்கடம் எனப்படும் திருப்பதி, ஆந்திர பிரதேசத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து பம்பாய் செல்லும் பாதையில் உள்ள ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தூரத்தில் உள்ளது. இந்த திருத்தலம் பற்றி எழுத ஆரம்பித்தபோது கிடைக்கின்ற விவரங்கள் ஏராளம் ஏராளம். எல்லாவற்றையும் சொல்லி முடிக்க முடியாது என்ற முகவுரையுடன் இந்த திவ்யதேச அனுபவத்தை முதல் மூன்று தலைப்புகளை முதல் பகுதியாகவும், அடுத்த சில தலைப்புகளை இரண்டாவது பகுதியாகவும் முன்பு பதிவு செய்து இருந்தோம். இப்போது அடுத்த சில தலைப்புகளை உள்ளடக்கிய மூன்றாவது பகுதியை இங்கே காணலாம்.

  1. திருத்தல பெயர்
  2. திருத்தல பெருமைகள்
  3. சில சொற்தொடர்களும் அதன் அர்த்தங்களும்
  4. ஆதிவராக பெருமாள்
  5. திருமலை நடைவழி
  6. திருவேங்கடத்தின் ஏழு மலைகள்
  7. திருமலையின் ஐந்து மூர்த்திகள்
  8. திருமலையின் தீர்த்தங்கள்
  9. கீழ் திருப்பதி
  10. திருமலை
  11. அலர்மேல்மங்காபுரம்
  12. திருமலை நிகழ்ச்சிகள்
  13. திருவிழாக்கள்
  14. மற்ற திருக்கோவில்கள்
  15. ஸ்தல வரலாறு
  16. ராமானுஜர் திருமலை விஜயங்கள்
  17. ஆழ்வார்கள்
  18. ஆச்சார்யர்கள்

திருமலை நிகழ்ச்சிகள்

சுப்ரபாத சேவை : தினசரி காலையில் 3 மணி முதல் 330 வரை சுப்ரபாத சேவை நடக்கும். இதற்கு 2 அர்ச்சகர்கள், 2 ஊழியர்கள், ஒரு வீணை வாசிப்பவர், ஒரு தீபம் ஏந்துபவர் என்று ஆறு பேர் உள்ளே செல்வார்கள். துவார பாலகர்களுக்கு நமஸ்காரம் செய்து ஊழியரிடம் இருந்து சாவி வாங்கி, கதவை திறப்பார்கள். ஸ்வாமியை வணங்கி விட்டு, கதவை சாத்திவிட்டு, உள்ளே செல்வார்கள்; கெஸல்யா சுப்ரஜா ராமா என்று ஸ்ரீ வெங்கடேஸ்வர சுப்ரபாதம் இன்னொரு குழு வாசிக்க ஆரம்பிபார்கள். இது சுப்ரபாத சேவா என்று பெயர். விளக்குகள் ஏற்றப்பட, வீணை வாசிக்க, சயன திருக்கோலத்தில் இருக்கும் போக ஸ்ரீனிவாச மூர்த்தியை, மூல மூர்த்திக்கு அருகில் நின்ற திருக்கோலத்தில் ஏளச் செய்வார்கள். இந்த போக ஸ்ரீனிவாசமூர்த்தியை இரவில் சயன திருக்கோலத்தில் ஒரு தொட்டிலில் ஏளச் செய்து இருப்பார்கள். சுப்ரபாதம் முடிந்தவுடன் கதவு திறக்கப்பட்டு, எம்பெருமானுக்கு பாலும் வெண்ணையும் அமுது செய்து தீபாராதனை நடக்கும்.

தினமும் ஆகாய கங்கையில் இருந்து மூன்று வெள்ளி குடங்களில் தீர்த்தம் எடுத்து வருவார்கள். அவைகள், ஒவ்வொன்றும், காலை, மாலை, இரவு பூஜைகளுக்கு எடுத்து வைக்கப்படும். மூல மூர்த்திக்கு திருமஞ்சனம் செய்வதற்கு ஒப்பாக, போக மூர்த்திக்கு நடத்தப்படும். முழு மூர்த்திக்கும் நடக்காமல், திருவடிகளுக்கு மட்டுமே தீர்த்தம் சேர்க்கப்படுகிறது. எம்பெருமானுக்கு வாசனை தைலம் சாத்திய பின் மஞ்சள் நீர், பால், தேன், சந்தனம் , மீண்டும் மஞ்சள் நீர் என்று திருமஞ்சனம் செய்து, புதிய வஸ்திரம் அணிவித்து, திருமண் இட்டு, கண்ணாடி காட்டி, குடை பிடித்து, சாமரசம் வீசி சுப்ரபாத சேவையை முடிப்பார்கள்.

3.30 முதல் 3.45 வரை சன்னதி சுத்தம் செய்யப்படும். திரைபோட்டு, பழைய மாலைகளை களைந்து திருக்கோவிலுக்கு முன்னால் உள்ள பூக்கிணற்றில் சேர்க்கப்பட்டு, புது மாலைகள் அணிவிக்க படும். கோவிலுக்குகள் இருக்கும் யமுனாத்துறை என்ற இடத்தில கட்டப்பட்ட, புது மாலைகளை ஜீயர் ஸ்வாமிகள் பொறுப்பில், ஏகாங்கி என்பவரால் கொண்டு வரப்படும். ஜீயருடன், ஏகாங்கி, ஒரு வாத்தியக்காரர், திருப்பள்ளியெழுச்சி பாட இருவர், திருப்பாவை பாட இருவர், புருஷஸுக்தம் பாட இருவர் என்பவர்கள் செல்வர்.

தோமாலை சேவை : 3 45 மணிக்கு இந்த சேவை ஆரம்பம் ஆகும். இது தோள் மாலை சேவை என்று முதலில் அழைக்கப்பது, பின்னாளில் மருவி தோமால சேவை என்று ஆனது. சுமார் 25 நிமிடம் ஆகும் இந்த சேவையின் போது, முதலில், எம்பெருமானின் திருமார்பில் எழுந்தருளி இருக்கும், மஹாலக்ஷ்மிக்கு, மாலை சார்த்தி, பிறகு எம்பெருமானுக்கு சாத்துவார்கள். திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை ஆகியவை சேவிக்கப்படும். இது சுமார் 430க்கு முடிவடையும்.

கொலுவு நிகழ்ச்சி : இதற்கு பக்தர்கள் அனுமதி கிடையாது. மூலவர் சன்னதியில் இருந்து கொலுவு ஸ்ரீனிவாச மூர்த்தியை வெள்ளிப் பல்லக்கில் ஏளப் பண்ணி, ஒரு தனி இடத்தில, எள்ளுப் பொடி வெல்லம் வெண்ணெய் அமுது செய்து, ஆராதனை செய்வார்கள். அன்றைய பஞ்சாங்கம் படித்து (நாள், கிழமை, திதி போன்றவை) அதற்கு முந்தய நாள் உண்டியல் வரவு இவற்றை சொல்லி, இந்த நிகழ்ச்சியை நிறைவு செய்வார்கள். மூலவரே வந்து கணக்கு வழக்குகளை கேட்டு இந்த நிகழ்வை நடத்தி வைப்பதாக ஐதீகம்.

இது முடிந்தவுடன் இரண்டு மணி அடித்து மூலவருக்கு தயிர் சாதம், முதல் நைவைத்தியம் செய்யப்படும். இதில் மூலவருடன், விஷ்வக்சேனர், கருடன் மற்றும் நித்யஸூரிகளுக்கும் நைவேத்தியம் செய்யப்படும். இதையடுத்து மீண்டும் மணி அடிக்கப்பட்டு பணியாரங்கள் இரண்டாவது நைவைத்யம் செய்யப்படும். இதன் போது வராக ஸ்வாமியின் 108 திருநாமங்கள் வாசிக்கப்படும். இதன் போதும் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.

ஸஹஸ்ரநாம அர்ச்சனை : அடுத்து 4:45 முதல், 5:30 வரை திருவேங்கடத்தானின் 1008 திருநாமங்களை சொல்லி இந்த சேவை நடக்கும். ஸஹஸ்ரநாம அர்ச்சனை முடிந்தவுடன், அர்ச்சனாந்திர தரிசனம் நடக்கும்.

மற்றவை : மதியம் 1200 மணி அளவில் தினமும் மலையப்ப ஸ்வாமிக்கும் ஸ்ரீதேவி தாயார், பூ தேவி தாயார் ஆகியவர்களுக்கு திவ்ய திருமண நிகழ்ச்சி நடைபெறும். சுமார் ஒரு மணி நேரம் நடக்கும் இந்த வைபவம் பதினைந்தாம் நூற்றாண்டில் இருந்து நடைபெற்று வருவதாக தெரிகிறது.

Google Map

திருவேங்கடம் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

தினம் ஒரு திவ்யதேசம் திருவேங்கடத்தை பற்றி சொல்வது

கீழ்க்கண்ட காணொளி மற்றும் படங்களை கொடுத்து உதவிய whatsapp குழு நண்பர்களுக்கு நன்றி

மாலை நான்கு மணிக்கு டோலஸ்தவம் எனப்படும் வைபவம் நடைபெறும், இதில் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூ தேவி ஆகியோர் ஊஞ்சல் மண்டபத்தில், ஊஞ்சலில் ஆடும் போது, வேத பாராயணம், மற்றும் மங்கள வாத்தியங்கள் ஒலிக்கும். 530 மணி அளவில் இது முடிவடையும்.

மாலை 5:30 மணிக்கு ஆயிரம் விளக்குகள் ஏற்றப்பட்டு, ஊஞ்சல் மண்டபத்தில், சஹஸ்ர தீப அலங்காரம் நடைபெறும். வியாழக் கிழமைகளில், முக்கிய ஆபரணங்கள் இன்றி, வேட்டி அங்கவஸ்திரத்துடன் எம்பெருமான் காட்சி அளிப்பார். வழக்கமாக அணியும் திருமண் இல்லாமல், மெல்லிய திருமண் இடப்படும்.

இரவு 1 30 அளவில் திருக்கோவில் நடை சாத்தப்படும். அதற்காக எம்பெருமானுக்கு சயன தரிசனம் அல்லது ஏகாந்த தரிசனம் நடத்தப்படும். மூல மூர்த்தி பக்கத்தில் எழுந்தருளி இருக்கும் போக ஸ்ரீனிவாசமூர்த்தியை மாலைகளை களைந்துவிட்டு, வெல்வெட் மெத்தை உள்ள வெள்ளி கட்டிலில் ஏளச் செய்வார்கள். அதற்கு முன், காய்ச்சிய பால், திராட்சை, முந்திரி, பாதாம் ஆகியவற்றை நைவேத்தியம் செய்து விளக்கு திரியை சிறியதாக வைப்பார்கள்; அன்னமாச்சார்யா பரம்பரையில் வந்தவர்கள் தம்புராவுடன் அவர் கீர்த்தனைகளை எம்பெருமானுக்கு பாடுவார்கள். எம்பெருமானுக்கு திரை சேர்த்து அன்றைய நிகழ்ச்சிகளை முடித்து, மறுநாள் காலையில் சுப்ரபாத சேவையுடன் தான் துவங்கும்.

திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் வலைத்தளத்தில், நடைபெறும் நிகழ்வுகளையும் Sevas என்ற தலைப்பின் கீழ் இங்கே காணலாம். இதன்படி, தினசரி சேவைகளாக, சுப்ரபாதம், அர்ச்சனா, தோமாலை சேவை மற்றும் ஏகாந்த சேவைகள் உள்ளன.

வாராந்திர சிறப்பு பூஜைகள் : திங்கள் அன்று 14 கலச விஷேச பூஜையும் (அர்ச்சித சேவா) செவ்வாய் கிழமைகளில் பாத பத்ம பூஜையும் (108 தங்க தாமரைகளை 108 நாமங்களை உச்சரித்து எம்பெருமான் திருவடிகளில் சமர்ப்பிக்கும் பூஜை), புதன் கிழமைகளில் மூலவருடன் பட்டு நூலால் இணைத்த போக ஸ்ரீனிவாச மூர்த்திக்கு சஹஸ்ர கலச அபிஷேகமும், வியாழ கிழமைகளில் திருப்பாவாடை சேவை என்ற எம்பெருமானுக்கு முன் பெரிய அளவில் சமைத்த உணவு பரிமாறப்பட்டு நைவேத்தியம் செய்யப்படும் பூஜையும், (இந்த சமயத்தில் எம்பெருமானுக்கு மெல்லிய திருமண் சாத்தி இருப்பதால் எம்பெருமானின் திருக்கண்களை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கும்), இதன் பிறகு எம்பெருமானுக்கு பூக்களால் அலங்காரம் செய்யப்படும், சிலப்பதிகாரம் காலம் தொட்டு இருக்கின்ற, அதில் சொல்லப்பட்ட பூலாங்கி சேவையும், வெள்ளிக் கிழமைகளில் திருமஞ்சனமும் நடைபெறுகின்றன.

திருவிழாக்கள்

வைகுண்ட ஏகாதசி, ஜென்மாஷ்டமி, ஸ்ரீ ராமநவமி, புரட்டாசி ப்ரஹ்மோத்ஸ வம், ரதசப்தமி ஆகியவை முக்கியமான திருவிழாக்கள் ஆகும். மார்கழியில் திருப்பாவை சேவை இங்கு பிரசித்தம்.

திருச்சானூரில் கார்த்திகை மாதம் சுக்லபட்ச பஞ்சமியில் பிரம்மோத்ஸவம். இந்த உற்சவத்தின் கடைசி நாளன்று வேங்கடவன் கூரைச் சேலை, ஆபரணங்கள் மலர் மாலைகள் ஆகியவற்றுடன் யானை மேல் மேளதாளத்துடன் வருவார். அவர் கொண்டு வந்த ஆடை அணிகலன்களை பிராட்டி அணிந்து கடைசி நாள் உற்சவம் நடைபெறுகிறது.

வைகாசி தெப்ப திருவிழா சுவாமி புஷ்கரணியில் நடக்கும். புரட்டாசி மாத ப்ரஹ்மோத் ஸவத்தின் கடைசி நாள் நிகழ்ச்சியான சுதர்சன சக்ர தீர்த்தவாரியும் சுவாமி புஷ்கரணியில் நடைபெறும். தை மாத இராம கிருஷ்ண தீர்த்த திருவிழாவும், மாசி பௌர்ணமியில் நடைபெறும் குமாரதாரா தீர்த்த திருவிழா, பங்குனி தும்புரு தீர்த்தத் திருவிழாவும், கார்த்திகை மாத க்ஷீராப்தி துவாதசியில் நடக்கும் சக்ர தீர்த்த திருவிழாவும் இதே சுவாமி புஷ்கரணியில் நடைபெறும்.

ப்ரம்மோத்ஸவம் : திருமலையில் புரட்டாசி மாதம் நடைபெறும் பிரம்மோத்ஸவம் காணக் கிடைப்பது மிக அரிது. பிரம்மனே இங்கு வந்து இந்த உற்சவத்தை நடத்தி வைப்பதாக ஐதீஹம். இதனை தரிசிப்பவர்களுக்கு சகல பாவங்களும் தொலைகின்றன என்று புராணங்கள் கூறுகின்றன. இந்த ப்ரம்மோத்ஸவத்தின் ஐந்தாம் நாள் திருவிழாவில் எம்பெருமான் கருடசேவை நடக்கும் போது, மூலவரே வந்து புறப்பாடு காண்பதாக ஐதீகம். இதை குறிக்கும் வண்ணம் இன்றும் இந்த புறப்பாட்டின் போது, மூலவர் கதவு சிறிது நேரம் சாத்தப்பட்டு இருக்கும்.

புரட்டாசி ப்ரமோத்ஸவத்தின் முந்தய நாள் எல்லா தேவதைகளையும், தேவர்களையும், முனிவர்களையும் பக்தர்களையும் அழைக்கும் அங்குரார்ப்பணம் என்ற விழா நடக்கும். முப்பத்து முக்கோடி தேவர்களையும் அழைக்கும் விழா இது. ப்ரஹ்மாவே ப்ரம்ம லோகத்தில் இருந்து வந்து நேரடியாக நடத்தி வைக்கும் உத்சவம் ஆகும்.

முதல் நாள் மாலை கொடி ஏற்று விழா நடக்கும். பின்னர் இரவு பெரிய சேஷ வாஹனத்தில் எம்பெருமான் புறப்பாடு காண்பார். இரண்டாம் நாள் காலை சிறிய சேஷ வாகனத்திலும், இரவு ஹம்ச வாகன புறப்பாடும் நடக்கும். மூன்றாம் நாள் காலை சிம்ம வாகன பவனியும் இரவு முத்து பந்தல் வாகன பவனியும் நடக்கும். நான்காம் நாள் காலை கற்பக விருட்ச வாகனத்திலும் இரவு சர்வ பூபால வாகனத்திலும் புறப்பாடு காண்பார். ஐந்தாம் நாள் காலை மோஹினி அலங்காரத்திலும், இரவில் கருட வாகனத்திலும் எம்பெருமான் வலம் வருவார். இந்த கருட வாகன தரிசனம் மிகவும் விசேஷமானது. இது கிடைப்பதற்கே கொடுத்து வைக்க வேண்டும் என்பார்கள். கூட்டமும் அலை மோதும். மூலவருக்கு அணியும் லட்சுமி ஹாரத்தை அணிந்து மலையப்ப சுவாமி கருட வாகனத்தில் புறப்பாடு காண்பார். அதனால் இது மூலவரே வருவதாக ஐதீகம். ஆறாம் நாள் காலையில் அனுமந்த வாகனமும், மாலையில் தங்கத்தேர் உலாவும், இரவில் சந்திர பிரபை வாகனத்திலும் எம்பெருமான் எழுந்து அருளுவார். எட்டாம் நாள் காலையில் தேரோட்டமும் இரவில் குதிரை வாகனமும் நடக்கும். ஒன்பதாம் திருநாளன்று காலையில் பல்லக்கில் பவனியும் தொடர்ந்து சுவாமி புஷ்கரணியில் சுதர்சன் சக்ர தீர்த்தவாரியும் நடைபெறும்.

ப்ரம்மோஸ்த்வம் பற்றி திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரபூர்வ வலைத்தளத்தில் சொல்வதை இங்கே காணலாம்.

தெப்போத்ஸவம் : பங்குனி மாத சுக்ல பக்ஷ (பௌர்ணமிக்கு முன்) வரும் ஐந்து நாட்கள் இங்கு தெப்போத்சவம் நடைபெறுகிறது. ஏகாதசி அன்று ஸ்ரீ ராமர், சீதா, லக்ஷ்மணர் ஆகியோர் வலம் வருவார்கள். துவாதசி அன்று ருக்மிணி, சத்தியபாமாவுடன் ஸ்ரீ கிருஷ்ணர் வலம் வருவார்கள். கடைசி மூன்று நாட்களில் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவிமார்களுடன் வலம் வருவார்.

வசந்தோத்ஸவம் : சித்திரை மாதம் சுக்ல பக்ஷ த்ரியோதசி, சதுர்த்தசி மற்றும் பௌர்ணமி நாட்களில் மலையப்ப சுவாமி பரிவார தேவதைகளுடன் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளி திருமஞ்சனம் கண்டு அருளுவார். பௌர்ணமி அன்று ஸ்ரீ சீதா, ராமன், லக்ஷ்மணன், ஆஞ்சநேயர் மற்றும், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஸ்ரீ கிருஷ்ணர் ஆகியோரும் சேர்ந்து வருவார்கள். மதியம் 1 மணி சுமாருக்கு இந்த சேவை தொடங்கும்.

பத்மாவதி பரிணயம் : வைகாசி மாதம், தசமி, நவமி மற்றும் ஏகாதசி ஆகிய நாட்களில் நாராயணகிரி தோட்டத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறும். இந்த நாட்களில் தான் ஸ்ரீனிவாசன் பத்மாவதி தாயாரைத் திருமணம் செய்து கொண்டார். மலையப்ப ஸ்வாமி யானை, குதிரை, கருட வாகனங்களில் ஸ்ரீ தேவி பூமாதேவி தாயார்களுடன் தனித்தனியாக எழுந்து அருளுவார்கள். இவர்களுக்கு இங்கு திருமணம் நடைபெறும். அதன் பிறகு கொலுவு நிகழ்ச்சி நடைபெறும். மாலை 4 மணி முதல் இவை தொடங்கும்.

ஜேஷ்டாபிஷேகம் : ஆனி மாதம் கேட்டை நக்ஷத்திரம் தொடங்கி மூன்று நாட்கள் இந்த நிகழ்ச்சி நடைபெறும். எம்பெருமான், தாயார் திருவுருவங்கள் சிதிலடையாமல் இருப்பதற்காக அவர்களுக்கு இங்கு திருமஞ்சனம் நடைபெறும். இதனை அபிதேயக திருமஞ்சனம் என்றும் கூறுவார்கள். திருமஞ்சனம் முடிந்தவுடன் எம்பெருமானுக்கு வைரம் பொதித்த வஜ்ர கவசம் அணியப்படும். மலையப்ப ஸ்வாமி தேவிமார்களுடன் திருவீதி உலா வருவார். இரண்டாம் நாள் முத்தங்கி சேவையும், மூன்றாம் நாள் தங்க கவச சேவையும் நடைபெறும்.

புஷ்பப் பல்லக்கு : திருக்கோவில்களில் தக்ஷிணாயண புண்ணிய காலத்தில் இருந்து ஆண்டுக்கான கணக்குகள் தொடங்கப்படும். அநேகமாக இது ஜூலை மாதம் 16ம் நடக்கும். திருமலையில் எம்பெருமானிடம் வருட கணக்கு ஒப்படைக்கப்படும். மாலை ஆறு மணிக்கு எம்பெருமான் புஷ்பப்பல்லக்கில் புறப்பாடு கண்டு, திருக்கோவிலின் முக்கிய அதிகாரிகளுடன் பவனி வருவார். அதிகாரிகள் சரியாக கணக்கு பார்ப்பதை எம்பெருமான் உறுதி செய்வதாக ஐதீகம்.

ரதசப்தமி : தை மாதத்தில் வரும் வளர்பிறை சப்தமி திதி ஆகிய ஏழாம் நாள் ரத சப்தமி (சூரிய ஜெயந்தி) திருவிழா திருமலையில் கொண்டாடப்படுகின்றது. மலையப்ப சுவாமி, அதிகாலை சூரிய உதயம் தொடங்கி, சூரிய அஸ்தமனம் வரை ஏழு வெவ்வேறு வாகனங்களில் சேவை சாதிக்கும் நாள். சூரியன் தனது வடக்கு நோக்கிய பயணத்தை துவக்கும் நாளில் சூரியன் எம்பெருமானை வணங்கி தன் பயணத்தை தொடங்க பெருமாள் சேவை சாதிப்பதாக ஐதீகம்.

ரத சப்தமி அன்று திருமலையில் “ஒரு நாள் பிரம்மோத்ஸவம்” நடைபெறுகிறது. இந்நாளில் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் திருமலையில் உள்ள திருமாட வீதிகளில் ஊர்வலம் வருகிறார். ஏழு வாகனங்களில் ஒரே நாள், வருவதால் இந்த ரதசப்தமி தினத்தை திருமலையில் “அர்த்த -பிரம்மோத்ஸவம்” என்று அழைக்கிறார்கள். அதிகாலை 5.30 மணிக்கு ‘சூர்ய பிரபா வாகனம்’ தொடங்கி, 9 மணிக்கு சின்ன சேஷ வாகனம், 11 மணிக்கு கருட வாகனம், மதியம் 1 மணிக்கு அனுமன் வாகனம், மாலை 4 மணிக்கு கல்பவ்ருக்ஷ வாகனம், 6 மணிக்கு சர்வபூபால வாகனம். முறையே மாலை 8 மணிக்கு சந்திர பிரபா வாகனத்துடன் நாள் நிறைவு பெறுகிறது. மதியம் 2 மணிக்கு சுவாமி புஷ்கரணியில் சக்ரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி நடைபெறும். திருமலை திருக்கோவில் திருமாட வீதிகளில் ஒவ்வொரு வாகனத்திலும் சுமார் 1 மணிநேரம் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் வெங்கடேஸ்வரர்.

புஷ்பயாகம் : கார்த்திகை மாத ஸ்ரவணத்தின் போது, புஷ்ப யாகம் என்று ஒரு திருவிழாவும் கொண்டப்படுகிறது. மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூமாதேவி ஆகியோர் தங்க பல்லக்கில் எழுந்தருளி, திருமஞ்சனம் கண்டருளி, பலவித அளவற்ற புஷ்பங்களால் அலங்கரிக்க பட்டு திருவீதி வலம் வருவார்.

அத்யயனோத்ஸவம் : இயற்பா முதல் நூற்றந்தாதி வரை 23 நாட்கள் திவ்யப்ரபந்தம் ஓதப்பட்டு, இறுதியில் தண்ணீரமுது வழி திருத்து விழாவும் நடைபெறுகின்றன.

தண்ணீரமுது வழி திருத்துகை : இந்த விழா ஆண்டுக்கு ஒரு முறை திருஅத்யயன உற்சவத்தின் முடிவில், திருமலைநம்பியிடம் இருந்து திருமஞ்சனத்திற்காக எடுத்து வரும் தீர்த்தத்தை எம்பெருமான் வரும் வழியிலேயே எடுத்து அமுது செய்த காட்சியை இந்த திருத்தலத்தில் உள்ள பெரியவர்களும், ஜீயர்களும், ஸ்ரீ வைணவர்களும்,கண்டுகளித்து திருவேங்கடவன் மற்றும் இராமானுஜர் திருவருளை பெறுவதற்கான திருவிழாவாக கொண்டப்படுகிறது. இந்த சமயம் திருவேங்கடவனுமும், இராமானுஜரும் ஆகாயகங்கை தீர்த்தத்திற்கு செல்லும் வழிக்கு எழுந்தருள கொண்டுபோய், எதிரே திருமொழி அனுசந்தானத்தோடு திருமஞ்சன தீர்த்தம் ஆகாய கங்கையில் இருந்து எடுத்து வரப்பட, அவர்களோடு திருவேங்கடவனும் ராமானுஜரும் சேர்ந்து திருவீதிகளில் திரு உலா வரும் போது, வீதியில் உள்ளவர்களும் தங்களுடைய இல்லத்தில் இருந்து, திருமஞ்சனத்திற்கு உரிய பொருட்களையும் எடுத்து திரு உலாவில் சேர்ந்து கொண்டு திருக்கோவிலை அடைவார்கள். அங்கு திருவேங்கடவனுக்கும் இராமானுஜருக்கும் புருஷஸூக்தத்தோடு திருமஞ்சனம் செய்து அவர்களின் திருவருளை வேண்டுவார்கள்.

கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் : இவைகளைத் தவிர, கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் என்று ஆண்டுக்கு நான்கு முறை மூலவர் சன்னதியிலும் கோவில் முழுவதும் அடியவர்களால் ஆகம முறைப்படி சுத்தம் செய்யும் திருவிழா நடைபெறும். நடைபெறும். பொதுவாக இது உகாதி, அணிவார ஆஸ்தானம், வைகுண்ட ஏகாதேசி, பிரம்மோத்சவம் முன்னிட்டு நான்கு முறை நடைபெறும்.

சிவராத்திரி அன்று க்ஷேத்ர பாலிகா என்ற உற்சவம் நடைபெறுகிறது. அன்று மலையப்ப ஸ்வாமி வைரத்தில் விபூதி நெற்றிப்பட்டை அணிந்து திருவீதி உலா காண்கிறார்.  

மற்ற திருக்கோவில்கள்

ஆதிவராஹ சுவாமி திருக்கோவில் : இது சுவாமி புஷ்கரணி கரையில் உள்ளது.

கோதண்டராமஸ்வாமி திருக்கோவில் : இது திருப்பதி நகரத்தில் உள்ளது. இந்த இடம் முன்பு ரகுநாதபுரம் என்று கூறப்பட்டது. இங்கே ஸ்ரீ ராமர், சீதா, லக்ஷ்மணர் ஆகியோர் காட்சி தருகின்றனர். இந்த கோவிலுக்கு எதிரே இதனுடன் சேர்ந்த ஸ்ரீ அனுமான் கோவிலும் உள்ளது. உகாதி, ஸ்ரீ ராம நவமி இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

ரங்கபூபாலன் என்ற பாண்டிய மன்னன் பல அரசர்களை வெற்றி பெற்று அந்த வெற்றிகளுக்கு அறிகுறியாக திருமலையில் கொடி நாட்டினான். அவன் ராமபிரானுடன் சீதா தேவி, மற்றும் லக்ஷ்மணன் இவர்களை நிறுவி இந்த திருக்கோவிலையும் கட்டினான் என்று திருமலையொழுகு கூறுகிறது. இவனே கோவிந்த ராஜர் சன்னதிக்கு அருகில் குலசேகர ஆழ்வாருக்கு ஒரு சன்னதியும் கட்டினான். குமார ராமானுஜ அய்யங்கார் என்பவர் இந்த கோவிலுக்கு ஒரு திருத்தேர் சம்பர்ப்பித்து, 1530ம் ஆண்டு பங்குனி 8ம் நாளில் எம்பெருமானைத் திருவீதி வலம் காண செய்தார்.

கல்யாண வெங்கடேஸ்வரா சுவாமி திருக்கோவில் : இது திருப்பதியில் இருந்து வடக்கே சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் மலை அடிவாரத்தில் ஸ்ரீனிவாசமங்காபுரம் என்ற இடத்தில இருக்கிறது. கபில தீர்த்தம் இங்கு தான் உள்ளது

பிரசன்ன வெங்கடேஸ்வரா சுவாமி திருக்கோவில் : இது திருப்பதியில் இருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் அப்பாலயகுண்டா என்ற ஊரில் உள்ளது. இங்கே சுவாமி அபய ஹஸ்த முத்திரையுடன் காட்சி அளிக்கிறார்.

திருமங்கை ஆழ்வார், நாதமுனிகள், திருக்கச்சி நம்பி, வரதராஜர், பெரியாழ்வார், திருமலை நம்பி, கூரத்தாழ்வான், மதுரகவி ஆழ்வார், இராமானுஜர் ஆகியோருக்கு பல்வேறு காலங்களில் சன்னதிகள் கட்டப்பட்டு உள்ளன.

திருமலா திருப்பதி தேவஸ்தானத்தில் வலைத்தளத்தில் எல்லா விவரங்களும் உள்ளன. மற்ற கோவில்கள் பற்றி இங்கே காணலாம்.

ஸ்தல வரலாறு

கலியுகம் பிறந்த பின்னர் எங்கும் கலியின் கொடுமை தாங்க முடியாததாக இருந்தது. முனிவர்கள் கலியின் கொடுமை குறையவும், உலக நன்மைக்காகவும், காஷ்யப மகரிஷியின் தலைமையில் ஒரு பெரிய யாகம் நடத்திக்கொண்டிருந்த போது, அங்கு வந்த நாரதர், இந்த மகா யக்ஞத்தின் பயனை கலியுகத்தில் மானிடர்களிடம் காணப்படும் சகல பாவங்களையும் பொறுமையுடன் தீர்த்து வைக்கும் மூர்த்திக்கே தரவேண்டும் என்கிறார்.

மும்மூர்த்திகளில் மிகப் பொறுமைசாலி யார் என்பதைக் கண்டுபிடிக்கும் பொறுப்பினை பிருகு மஹரிஷிக்கு கொடுத்து அவரை மூவுலகுக்கும் அனுப்பினர். பிருகு முதலில் பிரம்மாவின் சத்திய லோகத்திற்கு வந்தார். அங்கு பிரம்மன் கண்டும் காணாதது போல் இருக்கிறான் என்று, அங்கிருந்து புறப்பட்டு கைலாயத்திற்கு வந்தார். கைலாயத்தில் சிவன் உமையவளோடு அந்தப்புரத்தில் ஏகாந்தத்தில் தனித்திருந்து இவரை கவனிக்காமல் இருக்க, பிருகு இவ்விருவரும் பொறுமைசாலிகள் இல்லை என்று வைகுண்டம் அடைந்தார். அங்கே திருமகள் பாதம் வருட திருமால் துயில் கொண்டு இவரை பார்க்கவில்லை. மூம்மூர்த்திகளில் யாருக்கும் பொறுமை இல்லை என்று கோபம் கொண்டு திருமால் அருகில் சென்று, தனது காலால் திருமாலின் நெஞ்சில் எட்டி உதைத்தார்.

உடனே, திருமால் அம்முனிவரின் பாதத்தைப் பிடித்துக்கொண்டு, பாறை போன்ற என் மார்பில் உதைத்த முனிவரின் பாதங்கள் எப்படி நோகிறதோ என்று முனிவரின் பாதங்களை தாங்கி, பிடித்து விடத் தொடங்கினார். தன் தவற்றை உணர்ந்த பிருகு, மன்னிப்புக் கேட்டு, தான் வந்த காரியத்தை தெரிவித்து விட்டு அவருக்கே யாக பலன்களை தருவது என்று யாகபூமிக்கு திரும்பினார்.

எம்பெருமானின் திருமார்பு, மஹாலக்ஷ்மியின் உறைவிடம் ஆகையால், அங்கு ஒருவர் உதைத்ததை பொறுக்க முடியாத மகாலட்சுமி வைகுண்டத்தை விட்டு நீங்கி, பூவுலகுக்கு வந்து தவம் செய்ய ஆரம்பித்தார். மஹாலக்ஷ்மி இல்லாததால், திருமால் துயர் கொண்டு தாமும் பூலோகம் வந்து திருமலையில் ஒரு புற்றில் எழுந்தருளி, திருமகளை அடைய தவம் செய்யலானார்.

திருமலையில் ஒரு புற்றில் எம்பெருமான் நெடுநாள் ஆகாரமின்றி இருந்த நிலை கண்டு பிரம்மனும் சிவனும் தாங்களே பசுவும் கன்றுமாக தோன்ற, பூமாதேவி ஒரு இடைக்குல பெண்ணாக அவதரித்து அந்த பசுவினையும் கன்றினையும் மன்னனிடம் விற்க, மன்னனின் பசுக்கூட்டம் மேய்ச்சலுக்குச் செல்லும் போது அந்த தெய்வப் பசு மட்டும் மந்தையிலிருந்து விலகி, ஸ்ரீனிவாசன் எழுந்தருளி இருந்த புற்றுக்கு சென்று பாலைச் சொரிய, தெய்வப்பசு மட்டும் மன்னருக்கு பால் கொடுக்காமல் இருப்பதை அறிந்த மன்னன் இதன் காரணத்தைக் கண்டுபிடிக்குமாறு சொல்ல, தெய்வப்பசு புற்றருகே
சென்று பால் சொரிவதைக் கண்டு, ஆத்திரமுற்று தன் கையிலிருந்த கோடாலியால் மாடு மேய்ப்பவன் பசுவை அடிக்க முயற்சிக்க, புற்றின் உள்ளே இருந்த எம்பெருமான் லேசாக எழுந்திருக்க, கோடாலி அவர் தலையில் பட்டு ரத்தம் கசிய ஆரம்பிக்க, அதைப் பார்த்த மேய்ப்பவன் மூர்ச்சையாகி கீழே விழுந்தான்.

தெய்வப்பசு கண்ணீர் சிந்திய கோலத்துடன் மன்னனின் மாளிகையை அடைய, மன்னன் பசுவினைப் பின் தொடர்ந்து புற்றுக்கு அருகே வந்து பசு மேய்ப்பவன் கீழே விழுந்து கிடப்பதையும், ரத்தம் சிந்தி இருப்பதையும் புற்றுக்குள் யாரோ இருப்பதையும் அறிந்து
தனது உடைவாளால் வெட்ட முயற்சிக்கும் வேளையில் எம்பெருமான் புற்றில் இருந்து முழுவதுமாக வெளிப்பட்டு பசுவைக் காப்பாற்றி, அந்த மன்னனிடம் பின் ஒரு காலத்தில், அந்த மன்னன், ஆகாசராஜன் என்னும் பெயரில் மன்னனாகத் திகழ்வான் என்றும், அப்போது திருமகளே அவனுக்கு மகளாக பிறந்து வர, எம்பெருமானே வந்து அவளை மணம் புரிவதாக கூறி பசுமேய்ப்பவனைக்கும் மீண்டும் உயிர் கொடுத்தார்.

குசத்துவசர் என்னும் மகரிஷியின் தபோ வலிமையால் திருமகள் அவருக்கு புத்திரியாக அவதரித்து வேதவல்லி (வேதவதி) என்ற பெயருடன் வளர்ந்து, தான் ஸ்ரீவிஷ்ணுவை மணம் முடிக்க வேண்டும் என்று எண்ணி, அவனை குறித்து தவம் செய்ய தொடர்ந்தார். அக்கினிதேவன், இந்த வேதவதியைத் தான் சீதையாக இலங்கையில் இருக்க வைத்ததை தொடர்ந்து, இராவண வதம் முடிந்தபின், அவளின் தவத்தை மெச்சி, இராமன், அந்த அவதாரத்தில் தான் ஏகபத்தினி விரதன் என்றும் கலியுகத்தில் அவளை அடைவோம் என்று வரம் கொடுத்து இருந்தார். அந்த வேதவதியே, கலியுகத்தில் சந்திர வம்சத்தைச் சார்ந்த ஆகாசராஜன் என்னும் மன்னனுக்கு ஒரு பெண்ணாக பிறந்து பத்மாவதி என்னும் பெயரில் கலியுகத்தில் வளர்ந்து வந்தாள்.

துவாபர யுகத்தில் ஸ்ரீகிருஷ்ணவதாரத்தில் கண்ணனை யசோதை வளர்த்தாள். இருந்தாலும், கண்ணன் ருக்குமணியையும், சத்தியபாமாவையும் திருமணம் செய்து கொண்டதை யசோதை காணவில்லை என்ற அவளுடைய மனக்குறையை, கலியுகத்தில் தீர்த்து வைப்பதாக கண்ணன் யசோதைக்கு வரம் தந்திருந்தார். இந்த யசோதையே வகுளமாலிகை என்ற பெயரில் திருமலையில் இருந்த ஸ்ரீ வராக மூர்த்திக்குக் கைங்கர்யம் செய்து கொண்டிருந்தார்.

திருமலையில் புற்றில் நடந்த அதிசயத்தைச் செவியுற்ற வகுளமாலிகை, ஸ்ரீனிவாசனை, யசோதை எப்படி கண்ணனை வளர்த்தாளோ அதன்படி தன் மகனாகவே வளர்த்து வர,
ஒரு நாள் ஸ்ரீனிவாசன் வேட்டைக்குச் செல்லும் போது தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த பத்மாவதியைக் கண்டு, தனது வளர்ப்புத் தாயான வகுளமாலிகையை ஆகாசராஜனிடம் சென்று பெண் கேட்க அனுப்பி வைத்தார்.

எம்பெருமான் ஸ்ரீனிவாசனே குறத்தி வேடம் பூண்டு, ஆகாசராஜன் மனைவியிடம் வகுளமாலிகை வருவதை பற்றியும் அவள் பத்மாவதியை பெண் கேட்பது பற்றியும் சொல்லி, அது அவர்களுக்கு நல்லது என்றும் குறி சொல்லி சென்றார். அதன்படியே வகுளமாலிகை வந்ததும், பத்மாவதியை பெண் கேட்டதும் அது அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்ததாலும் ஆகாச ராஜனும் அதற்கு இசைந்து, அது எம்பெருமான் திருமகள் திருமணம் என்பதை உணர்ந்து, அதற்கு ஒப்புதல் கொடுத்தான். இதுவரை யாரும் செய்யாத வண்ணம் இந்த திருமணத்தை நடத்த எண்ணி எம்பெருமான் அதற்கான விரிவான ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தார். அக்னி பகவான் வந்தவர்களுக்கு உணவு தயார் செய்து பரிமாறும் சேவையை செய்ய இங்கே வருகிறார். வாயு, ப்ரஹ்மா ருத்ரன் என்று எல்லோரும் ஆளுக்கு ஒரு சேவையாக எல்லாவற்றையும் நடத்தி தர வருகிறார்கள். மஹாலட்சுமி எம்பெருமானிடம் இல்லாததால், அவர், குபேரனிடம் கடன் வாங்கி, எம்பெருமான் திருமலையில் திருமணம் நடத்தி வைத்ததாக வரலாறு. அந்த கடனுக்கான வட்டியை பக்தர்கள் காணிக்கையில் இருந்து இப்போதும் குபேரனுக்கு கட்டுவதாக கூறுவதுண்டு.

திருவேங்கடம் ஸ்ரீனிவாச பெருமாள், பத்மாவதி தாயார் திருக்கல்யாணத்தின் போது தயாரிக்கப்பட்ட உணவினை அஹோபில நரஸிம்ஹருக்கு திருவாராதனம் செய்யப்பட்டது.

வேதவதியான பத்மாவதியினை ஏற்று, யசோதையான வகுளமாலிகையின் குறை தீர்த்த ஸ்ரீனிவாசன், மனக்கிலேசம் உள்ளவர் போலவே இருக்க, எம்பெருமானின் திருவுள்ளம் அறிந்த பத்மாவதி, தாங்கள் வைகுண்டத்திலிருந்து வந்த திருமகளைத்தானே நினைத்துக்
கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்க ஸ்ரீனிவாசன், ஆம் என்று சொல்ல, பத்மாவதி, மகாலெட்சுமியை அழைத்து வர சொல்ல, திருமகள் கோலாப்பூரில், லட்சுமி தேவி என்ற பெயரில் வளர்ந்து வருவதை அறிந்து, அங்கு சென்று, அவர் இல்லாதை அறிந்த போது எம்பெருமான் மேலும் வருத்தமுற்றார். மஹாராஷ்டிராவில் கோலப்பூரில் இன்றும் லட்சுமி சேத்திரம் என்பது உண்டு. அப்போது அங்கு ஒலித்த அசரீரி, மகாலக்ஷ்மி இருக்கும் இடத்தை தெரிவிக்க, எம்பெருமான் நித்யஸூரிகள் மற்றும் வாயு போன்ற பஞ்ச பூதங்களை கொண்டு மஹாலக்ஷ்மியை திருமலாவிற்கு அழைத்து வர செய்தார். வகுளமாலிகையும் பத்மாவதி தாயாரும் அவரை மனமார வரவேற்க, நித்யஸூரிகள் பிருகு முனிவர் அப்படி செய்ததற்கான காரணத்தை விளக்க மகாலட்சுமியும் மனம் உகந்து, திருமாலை அடைய, அவரும் மகிழ்ச்சியுடன் திருமகளை ஏற்க மகாலட்சுமியும் அகலகிலேன் இறையும் என்று திருவேங்கடத்தானின் திருமார்பில் ஏறி அமர்ந்து கொண்டார்.

பிரம்மாண்ட புராணத்தில், பத்தாவது அத்தியாயமான திருவேங்கட மஹாத்மியத்திலே நாரதர், திருப்பாற்கடலில் எம்பெருமானை தரிசித்த போது, அவரிடம் அவருக்கு உகந்த தேசம் எது என்று கேட்க, நாரதரும் திருமலை என்று குறிப்பிட, எம்பெருமானும் நித்யசூரியான அனந்தனை மலையாக இருக்க சொல்ல, தானும், பிராட்டிமார்களோடு சேனை முதலியார் மற்றும் நித்யஸூரிகளோடு, அங்கே அவதரிக்க வேண்டும் என்று திருவுள்ளமாக, திருப்பாற்கடல் நாதனே சங்கல்பித்து திருமலையில் தேவிமார்களுடன் எழுந்தருளி உள்ளான் என்று இருப்பதாலும், கிருமிகண்ட சோழன் மூலமாக தில்லைநகர் திருச்சித்திரகூடம் என்ற திவ்யதேச எம்பெருமான் கரும்கடலுள் புகுந்ததையும் மனதில் கொண்டு, அந்த எம்பெருமானையே ஆவாகனம் செய்து, உத்சவ பேரராய் எழுந்தருளி இருக்கும் தேவாதிதேவனுக்கு மூல விக்ரகமாய் திருப்பாற்கடல் நாதனை மது கைடபர்கள் சேவித்துக்குக் கொண்டு இருக்கும் விதமாக திருமலை அடிவாரத்தில் திருப்பிரதிஷ்டை செய்ததாக திருமலையொழுகு சொல்கிறது.

காசி ராஜன் சந்தான பிராப்தி வேண்டி குடும்ப சகிதமாக திருவேங்கடமுடையானை பக்தியுடன் தரிசித்து அன்று இரவு உறங்கிக்கொண்டு இருக்கும்போது, அவனது மனைவியின் கனவில் திருவேங்கடமுடையான் தோன்றி அவளுக்கு சந்தான ப்ராப்தி கொடுப்பதாகவும் அவளின் நகை ஒன்றினை தருமாறும் கேட்டார்; அதற்கு அந்த மனைவி தன் கணவனிடம் கேட்டு தருகிறேன் என்று சொல்ல, திருவேங்கடமுடையானும், தன் அண்ணனான கோவிந்தராஜனிடம் கேட்டு சொல்வதாக சொல்லி மறைந்தார். இதனால் திருமலை அடிவாரத்தில் இருக்கும் கோவிந்தராஜன், திருவேங்கடமுடையானின் அண்ணா என்று சொல்வார்கள்.

தொண்டைமான் சக்கரவர்த்தி இப்பெருமானிடம் மிக்க ஈடுபாட்டுடன் திகழ்ந்து சிறந்த பக்தி கொண்டிருந்தான். எம்பெருமானுடன் தொண்டைமான் சக்கரவர்த்தி பேசியதாகவும் வரலாறு கூறுகின்றது. இவனைப் பகைவர்கள் சூழ்ந்து போது, போரில் தோல்வி ஏற்படக்கூடிய சூழ்நிலையில், வேங்கடவனை வேண்ட, வேங்கடவன், அவன் பகைவர்களை அழிப்பதற்கு தனது சங்கு சக்கரங்களைத் தொண்டைமானுக்கு அளித்து போரில் அவனை வெற்றி பெற செய்ததாக, ப்ரம்ம புராணத்தில் ஏழாம் அத்தியாயத்திலும், இந்த கோவிலின் வரலாற்றில், இராமானுஜர் அப்பனுக்கு சங்காழி கொடுத்த வரலாற்றின் போது சொல்லப்பட்டு உள்ளது.

தொண்டைமான் சக்ரவர்த்தி கபில தீர்த்த (ஆழ்வார் தீர்த்தம்) கரையில் உள்ள ஒரு துவாரத்தின் மூலம் சென்று திருவேங்கடவனை வணங்கி வந்தார் என்றும், அந்த வழியினை எம்பெருமானே அவனுக்கு காட்டி கொடுத்தார் என்றும் திருமலையொழுகு என்ற நூல் சொல்கிறது.

சாளுவ நரசிம்ம ராயன் காலத்தில் நாட்டில் முகலாய கலகங்கள் காரணமாக, திருவேங்கடமுடையான், கோவிந்தரராஜர், ஆழ்வார் மற்றும் எம்பெருமான் பாபவிநாசத்திற்கு அருகில் உள்ள குகையில் பாதுகாத்து, திருவாராதனம் கொண்டு சுமார் ஒரு வருடம் இருந்தனர் என்று திருமலையொழுகு கூறுகிறது.

சாளுவ நரசிம்ம ராயனும், கிருஷ்ணதேவ ராயரும், பல கிராமங்களை வரியில்லாமல் தானமாக விட்டு திருவேங்கடமுடையானுக்கும், கோவிந்தராஜனுக்கும் ஆழ்வாருக்கும் பல கைங்கர்யம் செய்து திருவேங்கடமுடையானின் பெருமைகளை உலகுக்கு எடுத்துக் காட்டினார்கள்.

திருவேங்கடமுடையானைப் பற்றி மீண்டும் வேறு சில தலைப்புகளில் காண்போம். நன்றி.

Thirumaalai – Ullathey Uraiyum Maalai (34)

இந்த பதிவின் தமிழ் பதிவை இங்கே காணலாம், நன்றி.

Thirumalai Till Now

As the saying goes “Thirumaalai (the prabandham) ariyaadhaar, Thirumaalaye (Perumalai) ariyaadhaar”, we all need to learn and understand Thirumaalai , sung by Thondaradipodi Azhwaar, to know more and more about Perumal/Emperumaan. .

Azhwaar’s Experience and Preaching

In the first three hymns (1-3) of this Divyaprabandham, Azhwaar enjoyed the experiences, graced by Emperumaan on him and in the subsequent eleven hymns, (4-14) Azhwaar was preaching us his experiences with Emperumaan or Paramathmaa. When people raised many objections, Azhwaar responded to them to follow Sri Rama, by silaiyinaal ilangai setra devane devan aavaan”; and asked them to follow Sri Krishna, who is simple and easy to approach, as ‘katrinam meytha kazhalinai panimin; and finally Aranganathan, by mentioning ‘uybavarku uyyum vannam Thiruvarangam kaatinaan”. 

Favours of Emperuman to Azhwaar

Azhwar moved on to describe the great favours he received from Periyaperumal in the next ten hymns, 15 to 24.

  • Emperumaan clarified Azhwaar’s doubts on the concept of Paramatma, the supreme most concept among the twentysix concepts of our tradition (sampradhayam) in Meyyerke meyyanaagum.
  • Emperumaan entered the heart of Azhwaar in Soodhanaai Kalvanaai, and made Azhwaar’s devotion and affection towards Periyaperumal to swell.
  • Emperumaan melted the hardened heart of Azhwaar and graced Azhwaar with His dharsan and blessings, in spite of Azhwaar’s belief that he was not worth to receive any favours from Periyaperumal, Virumbi ninru.
  • Emperumaan nullified Azhwaar’s long time loss of not seeking Emperumaan’s dharsan and made Azhwaar to worship Him, which made Azhwaar’s eyes to pour out tears of joy, in ini thirai thivalai modha.
  • Emperumaan created the four directions and kept His holy parts of His form in each of these directions so that He can be worshipped to get abode / Moksham in Kuda Thisai mudiyai.
  • Emperumaan made Azhwaar happy by making him realise that His lustrous and effulgent Holy form and parts are only for the happiness of His devotees in Paayum Neer Arangam.
  • Emperumaan made Azhwaar realise, that he missed experiencing Him for a such a long time, mainly because Azhwaar did not surrender to Him completely, which shattered Azhwaar, Panivinal manamadhu onri.
  • Emperumaan made Azhwaar sing that we can simply follow what the Vedas had already said about Him and we need not toil to create anything new to speak about Him in, Pesitre pesal allaal.
  • Emperumaan showed the beauty of His reclining posture to Azhwaar in Thiruvarangam, that made Azhwaar to realise that he would not live without His dharsan, in Gangaiyil punidhamaaya.
  • Emperumaan made Azhwaar realise and sing that he did not have any pre-requisites for total surrender, and that helped Azhwaar to get prepared for total surrender to Him in Vella Neer parandhu paayum.
Naichyaanusandhaanam

After the first three subtopics of Thirumalai, namely, Azhwaar’s experience (1-3), Azhwaar’s preaching based on his experience (4-14), and the favours graced by Him to Azhwaar (15-24), now Azhwaar sings that he did not have any good qualities but only bad qualities in the next 10 hymns (25-34), which is the fourth subsection, known as naichiyaanusandhaanam in our tradition.

Devoid of any good virtue

In Kulithu Moondru Analai (25), Azhwaar mentioned that he did not have any of the qualification that were needed to practice Karma, Gnana or Bakthi yogams (Actions, Knowledge or Devotion) and Azhwaar requested Periyaperumal to bless him with everything including the qualifications onward.

In Podhellam Podhu Kondu (26), Azhwaar mentioned that he did not do the normal poojas and singing slokas on Him, which anyone could have done, even if they were not qualified to practice, karma, gnana or bakthi yogams.

In “kurangugal malaiyai nooka” (27), Azhwaar stated that he did not do any service similar to the ones done by squirrels and monkeys, with good intention during the Rama incarnation.

In Umbaraal ariyalaaha” (28), Azhwaar said that his mind did not think about Paramaatma as his saviour, like the elephant Gajendra, which was saved by Emperumaan. after a crocodile caught its legs.

  • In Kulithu moondru analai (25) Azhwaar, said that he did not do prayers using all the three elements, thinking through mind, offering flowers by hands and reciting holy chants from mouth. In Podhellam Podhu Kondu (26), Azhwaar mentioned that he did not chant prayers. In kurangugal malayai nooka, (27), Azhwaar mentioned that he did not do any service. In Umbaraal ariyalaaha” (28) Azhwaar mentioned that he did not think.
  • So, initially Azhwaar said that he did not use all the three elements together in his prayers, and subsequently Azhwaar said no to each one of them in the subsequent hymns.

In Oorlien, kaani illai, (29) Azhwaar said that he did not have any association whatsoever, with Divyadesams, as He is committed to protect all those who have any association with Divyadesams like chanting of Tirupallandu, or holding any piece of land for doing some service to Him.

Full of all bad qualities

The fourth part of Azhwaar’s Naichyanusandhanam, consists of ten verses 25 to 34, where Azhwaar says that he had no good qualities, in the five hymns from 25 to 29 and from 30 to 34, says that he has all kinds of bad qualities.

In Manathilor thooymai illai (30), Azhwaar declared that he had all the bad qualities and there was no bad quality left in this world, which he did not have, as Emperumaan would have graced Azhwaar with moksham, as long as he did not have any bad qualities, even if AZHWAAR did not have any good quality.

In Thavathulaar thammil allen (31) Azhwaar said that he did not possess any of the means, that the Shastras meant for attaining salvation, like doing yagnas, or donating to others, instead he had wasted the birth, by drowning himself into the worldly pleasures, showing hatred towards everyone, thereby he became undesired even to his own relatives.

In the 32nd song Arthu Vandu Alambum Solai, Azhwaar states that he did not know or understand even one single way to reach Him. Azhwaar also stated about himself as a human being, who was unable to let go of what he liked, and behaved like a stupid, came in front of Emperumaan without knowing the criteria and that was his stupidity.

In the 33rd hymn, Meiyellaam Poga Vittu, Azhwaar, sang about his lowly qualities and cried that he had nowhere else to go and came in front of Emperumaan, only due to Azhwaar’s desire for the Emperumaan’s mercy.

Now let us move on to the next hymn.

Hymn 34 Ullathey uraiyum Maalai

Ullathe uraiyum Maalai, ulluvaan unarvu ondru illaa, kallathey naanum thondaai, thondukke kolam poondu, ulluvaar ullitru ellaam udan irundhu aridhi enru velgi poi ennule naan vilavara sirithittene (33)

Azhwaar laughed at himself, when he was trying to cheat Emperuman and his devotees by wearing appropriate costumes and speaking untrue words, realised that he could never cheat emperumaan, as He stays in the heart of everyone, from where all the thoughts are generated. Azhwaar considered himself a thief, as he believed the soul as his own. Azhwaar realised that his false guise was exposed and he laughed loudly, all by himself, to the extent of breaking his ribs. Azhwaar says that :

  • We need not run around and search for Him, as Emperuman, is always close in our hearts.
  • Residing always in the heart, Emperuman never goes out of the heart, knows everything.
  • Azhwaar describes himself as a person, who does not have any brain to do the right thinking.
  • Azhwaar acted as if he was a supreme devotee of Emperumaan and His devotees and sang “thodaiyotha thuvalamum, koodaiyum, polindhu, thonriya thol Thondaradipodi ” (Thirupalliyezhuchi,10), meaning that Azhwaar’s shoulders were shining with the basket with sacred basil garland that extended till his thighs”.
  • Azhwaar laughed boundlessly

Azhwaar, knowing that he, as a benefactor, was wearing the guise of a great devotee of Emperumaan, knowing that He, who knows all the thoughts of all thinkers by staying close to the heart of every individual, Azhwaar felt ashamed and laughed loudly within himself as Azhwaar also thought that he had moved away from Emperumaan, to the extent of breaking his ribs, is the direct meaning of this hymn.

Emperumaan always stays in the heart of everyone, the source for all the intelligence that come out of everyone’s mind, and known as “Sarvagyan’, meaning that He knows everything about everything, including all the mistakes committed by each and every one of us. So Azhwaar felt ashamed of coming in front of Emperumaan with disguise and untrue words, and thereby caused blemishes on Emperumaan . Azhwaar felt, as the brightness of the Sun, and darkness cannot be together, Azhwaar with all his shortcomings (darkness) could not go near Emperumaan ( brightness). Azhwaar felt that he brought disgrace to Him and tried to move away from his desire towards the Holy feet of Emperumaan and join all other jeevathmaas who did not have the knowledge to know about Azhwaar’s faults.

Here as a comparison, we can recall the hymn by Swami Nammazhwaar in Valavezh Ulagin (Thiruvaaimozhi 5.1), where Nammazhwaar wanted to move away from Emperumaan considering His Supreme Qualities and Azhwaar’s own lowliness.

Now let us go through in some details.

Ullathe Uraiyum Maalai

By “ullathe”, Azhwaar says that the Emperumaan, resides in the heart of every individual, which is the source from where the thoughts are generated. Outsiders can not see anything other than what is seen and since He resides in the heart, no one could ever cheat Him. By “uraiyum“, Azhwaar means that Emperumaan stays in the heart for ever and does not go out anywhere anytime. Further Azhwaar meant that if He goes out of the heart for sometime, during that time, the individuals could act either according to their wish (as told by the mind) or act in the right way (as told by Sastras or vedas). Since Emperumaan always stays in the heart, cheating Him is not possible. Azhwaar mentioned “Maalai”, to mean that He is superior to everyone, because of that also no one could ever cheat Him.

Though, Jeevathmaa is inside everyone’s body, it does not know everything that is happening inside this body. Though the sky is all-pervading, it cannot assign tasks to everyone. But since He knows everything, capable of designating anything to anyone, and the superiormost, it is absolutely impossible to deceive Him.

In Periyaazhwaar Thirumozhi (5.4.11) Periyaazhwaar sang, “Vittuchithan Manathe kovil konda kovalanai”, that Emperumaan is residing in Azhwaar’s heart.

Swami Nammazhwaar says in Thiruvaimozhi (10.6.1) “En nenjathul irundhu irunthamizh nool ivai mozhindhu” meaning that these are the words of the scriptures from my heart”. In Tiruvaimozhi (7.9.3), Azhwaar again says that Emperumaan entered into him through his tongue by “en naa mudhal vandhu pugundhu nal in kavi, thoo mudhal patharku thaan thannai sonna en vaai mudhal appanai “. In Thiruvaaimozhi 10.8.2 Azhwaar says that Emperumaan residing in Tiruppernagar had come to him on that day and He not only entered his heart, but occupied it fully with a vow, not to leave Azhwaar for ever. 

Similarly, in the Thiruvattaru Pathigam (Thiruvaimozhi 10.6.8), Azhwaar says, “Mei nindru kamazh thulava virai yeru thirumudiyan, kai ninra chakarathan karudhumidam porudhu punal, mai ninra varai polum thiru uruva vaataatraarku ennanri seydheno ennenjil thigazhvadhuve ” where Azhwaar was wondering, what he did, to deserve the grace of the Thiruvattaru Emperumaan. Azhwaar continued that Emperumaan with His fragrant Tulasi garland, has a radiant victorios discus that sets itself for action, wherever He wills. Here it can be seen as Emperumaan being inside the holy body of Azhwaar as one meaning. However the same can be seen as the good fragrance of the Thulasi moving from His holy form to His holy head. And Emperumaan feels, how blessed He is to enter into Azhwaar’s heart.

Our Acharyar, Parasara Bhattar, says that Emperuman resides in Nammazhwar’s voice and body to do good to him.

We can also recall, Thirumangaiyaazhwaar, in Periya Thirumozhi (8.9.5) the pathigam on Thirukkannapuram Souriraja Perumal, mentioned Thirukkudandhai Emperuman in “vandhaai en manathey vandhu nee pugundha pinnai, endhaai poi ariyaai“, meaning that Emperumaan came, entered Azhwaar’s heart, and after that did not know how to leave, Azhwaar’s heart. This was a great fortune Azhwaar was bestowed and could never forget this grace by Thirukudanthai Emperumaan.

Ulluvaan Unarvu Ondru Illaa

‘Ulluvaan unarvu ondru illa’ means that there is no material knowledge to think that He dwells within us. It is the opinion that there is no knowledge of Him, the Paramathmaa, Who is the Supreme Soul. In addition, there is no knowledge of Himself, who is the Jeevaathma. It is of the opinion, that only by knowing about Jeevathmaa, one will come to know about Him, the Paramathmaa, the possessor of Jeevathmaa. In the explanation of ‘ondru illa”,

  • The living soul has no knowledge about itself, the Jeevathmaa,
  • has no knowledge on Paramathmaa
  • has no knowledge about the nature of this body, which is inferior, temporary and is different from the Jeevathmaa.
  • There is no knowledge on the fact that the existence of the Jeevathmaa is for serving the Supreme Paramathmaa.

Antharyami and Antarathma are two different things. Antaratma is one of the five levels of the Parmathmaa, the Supreme Being within every living being. Antharyami is the determining or administering force or (Nyandrutvam) nature or quality of Antharatmaa, which is one of the five states of Paramatma, and that stays within that Jeevathmaa. In other words, Jeevathmaa is within each of us. Paramatma is the soul of Jeevathmaa itself. Shastras say that in everyone’s heart resides the all-pervading and majestic Emperumaan with Mahalakshmi in a lotus the size of a thumb. (It is wrong to say that Emperumaan is seen in a state called Antharathmaa at the size of the thumb. Our forefathers opined that the nature of Emperumaan shrinking himself is applicable only to His another state, namely archai.)

Kallathe Naan

Azhwaar says that he became a thief by hiding himself in outer guises so that the world could not recognize him as ignorant. He deceived the uninformed by saying that he had no evil qualities, known to his soul, the antharatmaa. He disguised himself according to Naichanu Santhaanam by telling the intellectuals that he had no good quality, known to the Antharathma and tricked them into thinking that Azhwaar possessed the knowledge of Jeevathmaa and Paramathamaa.

Azhwaar says that he had been harboring evil qualities since birth and made others believe that he had none of the evil qualities, and that too he has committed all these misdeeds while Emperumaan as a witness was watching him. While giving explanation to the above, the commentator also explains that Emperumaan Himself was a witness to both of Azhwaar’s actions of misdeeds and showing that he was not like that now.

Naanum Thondaai

Here the commentator quotes Valmiki, that those who did not have the connection with Emperumaan would hate themselves in Ramayana.

யஶ்ச ராமமஂ ந பஶ்யேது யம் ச ராமோ ந பஶ்யதி, நிந்தித ஸ்ஸர்வல்லோகேஷு ஸ்வாத்மாப்யேநம் விகர்ஹதே“. இராமாயணம் அயோத்யா காண்டம் (17-14)

yescha Ramam na pasyethu yam cha Ramo na pasyathi, nindhitha sarvalokeshu swaathmaapyenam vigarhathe ” Ramayanam, Ayothya Kaantam (17-14). ‘He who does not see Rama or does not think about Rama will be blamed by all in the three worlds. He hates even himself.” is the meaning of this sloka.

Here, Azhwaar says that he, who had no merit, came to do the service to Emperumaan that should be done only by those full of spiritual qualities, and hates himself for coming to do the things that only good people should do.

Thondukke Kolam poondu

Azhwaar says that not only in the case of Emperumaan, Azhwaar has cheated even good people with sattva qualities, by wearing disguises and having holy names to celebrate him. Azhwaar says that he cheated others by wearing 12 Thirumans, all over his body and adorning the five weapons, the Pancha Ayudhams.

It seems to be the practice to wear all the five weapons of Emperumaan during panchasamskaram in the days of the explanatory Acharya or earlier. But nowadays during Panchasamskaram the practice is to wear the symbols of only Conch and Discus.

By mentioning “Kolam Poondu”, Azhwaar indicates that he put only the disguise, but never did the services. Similarly by stressing the word “Thondukke”, Azhwaar indicates that he did not do the services which are to be done by only people with good qualities.

Azhwaar after realising how insane he was to utter insensible words, listed his own words in the earlier hymns, presuming himself to be a great man and preaching others.

  • Achchutha, Amarar Ere, Aayar Tham Kozhundhe (Thirumalaai 2) – the holy names of Emperumaan
  • Ichuvai thavira yaan poi …. Achuvai perinum venden (2) – here talked about the sweetness of Emperumaan
  • Naavalittuzhi tharuginrom, naman thamar thalaigal meedhu (1) – here Azhwaar talked as though he was a supreme person, that he wanted to place his foot on the the head of Yaman, the leader for handling the karmas of the jeevathmaas after death.

Ulluvaar ullitru ellaam udan irundhu aridhi enru

Azhwaar realised that Emperumaan knows all the thoughts of every person by staying with them, as Emperumaan resides in the heart of each and everyone, from where all the thoughts are generated.

It is worth noting the words of Sakunthala to Dushyantha as per the quote given by the explanatory Achaarya. “Dushyanta Maharaja, you think that you are alone, you do not know Emperumaan, Adipurusha, who resides eternally, in your heart; you are committing sin in front of Him, Who knows the sinful deeds you are committing,” Azhwaar says that when Emperumaan, who knows everything and designates everything, is in the heart of Azhwaar and that was when Azhwaar did things that no one should do.

Velgippoi

Velgi poi means being ashamed. Azhwaar feels ashamed when he thinks of his hypocrisy, that Emperumaan is omniscient and always present in his heart. Being ashamed like this, he bowed his head and could not stand before Periyaperumal, and trying to move away from Him. Azhwaar continued to think that if someone was ashamed of a certain thing, they would look for a place where that was not there and go away. Here Azhwaar felt ashamed that he forgot to remember that there is no place where He, the Emperumaan is not present and Azhwaar was searching for a place where Emperumaan was not present.

Ennulle Naan

The common people are shameless, so they would not join Azhwaar when it comes to laughing loudly without inhibition. Even if Azhwaar thought that he was moving away from Periyaperumal, He would not like to laugh at Azhwaar, whether Azhwaar was in front of Him or away from Him. Therefore Periyaperumal also would not join Azhwaar in the matter of this uninhibited laughing; As a result, Azhwaar would be left alone to laugh all by himself. The author of the text says that Azhwaar himself became his partner in this matter, realizing that he deserved to laugh, and because there was no one to laugh with him.

Vilavarach chirithittene

Azhwaar says that he laughed until his ribs were broken. He says that there was no limit to his laughter as what he had done was also bordering on laughable things. He laughed thinking that what he wanted to do like destroying himself by getting away from Periya perumal, was similar to the thinking that those who wanted to fall into a fire, tried to do the same after taking betel leaf.

In Ramayana, Bharata told Satrukhnan with joy and a beaming face that he had reached the ashram mentioned by the sage Bharadhwaja in search of Srirama.

“Kagachaneva mahaa bhaahurdhyuthimaan Bharathasthathaa

shathrugnam , abraveethirishtaasthaanamaathyaam cha sarvashaha (Ramayanam, Ayodhya kaantam, 2.99.8)

manye praapthaah smatham dhesham Bharadhvaajo yam abhraveeth,

na athidhoore hi manyeh nadhee, mandhaakineem ithaahaa (Ramayanam, Ayodhya Kaantam 2.99.9)

Before hearing the Charama sloka, in Mahabharatham, Arjuna asked Krishna about the means of attaining moksha, and was saddened that it was difficult. He remained there, thinking that if Krishna was asked again, He would give a remedy for that too, and help Arjuna reach Him through that. Similarly, Emperumaan blessed Arjuna with the Charama Slokam, thinking that had He not responded, Arjuna would leave Him with sadness.

In the same way, Swami Nammazhwaar in Thiruvaaimozhi 1.1.3, says “An nalanudai oruvanai nanuginam naame”, which means that Azhwaar, being the lowest of lowly approached Emperumaan.

From the above, we can see, when Bharata, Arjuna and Nammazhwaar tried to approach Emperumaan, here Thondaradippodi Azhwaar, wanted to move away from Emperumaan with no desire and that he should not approach Periyaperumal anymore in this matter. Therefore, he was like a person who eats betel leaves, sprinkles flowers, and smiles before entering the fire and looked to move away from Periyaperumaal.

With this song, the fourth part, Naichanusandhaanam, ends with Thondaradippodi Azhwaar claiming that he had no good qualities and possessed all bad qualities. The next part will take us to the most important and interesting part of the Thirumalai, blessed by Azhwaar. We can experience and enjoy in our nexrt weblog. Thanks.

RSS
Follow by Email