A Simple Devotee's Views
For English version, please click here, thanks முன்பு பார்த்தது இதுவரையில் நாம் குலசேகராழ்வாரின் திருமொழியில், முதல் நான்கு பதிகங்கள் பார்த்து உள்ளோம். சக்கரவர்த்தி திருமகனான, ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியிடம் உள்ள பக்தியையே பிரதானமாக கொண்டு அவதரித்த குலசேகராழ்வார் முதல் மூன்று பதிகங்களில், திருஅரங்கத்தைப் பற்றியும், நான்காவது பதிகத்தில் திருவேங்கடத்தைப் பற்றியும் பாடி உள்ளார். அடுத்த பதிகத்தை கீழே காண்போம்.… Continue Reading “ஐந்தாம் பதிகம் – திருவித்துவக்கோடு / Fifth Subsection – Thiruvithuvakode”
For English Version, kindly click here, thanks. முன்பு பார்த்தது சென்ற வலைப்பதிவினில், நாம் குலசேகர ஆழ்வார் இயற்றிய பெருமாள் திருமொழியில் முதல் மூன்று பதிகங்கள் பற்றி சுருக்கமாக பார்த்தோம். அவை திருவரங்கத்தை பற்றியது என்றும், ஆழ்வார், தான் அரங்கனை, அங்கே கூடியுள்ள பக்தர்களுடன் சேர்ந்து என்று களிப்பது என்றும் அந்த அரங்கனிடம் பக்தி இல்லாத மற்ற மக்களை எப்படி எதிர்கொள்வது… Continue Reading “நான்காம் பதிகம் – திருவேங்கடம் / Fourth subsection – Thiruvengadam”
For English version, please click here. Thanks. குலசேகர ஆழ்வார் நாம் சென்ற வலைப்பதிவினில் குலசேகர ஆழ்வார் பற்றியும் அவருடைய பக்தியைப்பற்றியும் சிறிது கண்டோம். அவர் எழுதிய நூல்களை பற்றி இங்கே காண்போம். குலசேகர ஆழ்வார் தமிழில் எழுதிய திவ்யபிரபந்தம் பெருமாள் திருமொழி என்பதாகும். முகுந்த மாலை என்ற வடமொழி நூலையும், குலசேகர ஆழ்வார் எழுதியதாக சொல்வதுண்டு. முகுந்த மாலை மணவாள… Continue Reading “முதல் மூன்று பதிகங்கள் – ஸ்ரீரங்கம் / First Three Subsections – Srirangam”
For English version, please click here, thanks பெரியாழ்வாரின் பிறப்பு பெரியாழ்வார் மதுரைக்கு அருகில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் என்னும் ஊரில், ஆனி மாதத்தில், சுவாதி நட்சத்திரத்தில், பெருமாளின் நித்யசூரிகளில் அவருக்கு எப்போதும் வாகனமாக சேவை செய்யும் ஸ்ரீகருடாழ்வாரின் அம்சமாக அவதரித்தார். முப்புரியுட்டிய நட்சத்திரங்கள் சில தமிழ் நட்சத்திரங்கள், அவைகளில் யார் யார் பிறந்தார்களோ, அவற்றைப் பொறுத்து சில பெருமைகளை அடைகின்றன.… Continue Reading “The Birth of Thirupallandu / திருப்பல்லாண்டு பிறந்த வரலாறு”
For English version, kindly click here, thanks இதுவரை இனி, இந்த வலைப்பதிவில், அடுத்து, ஆறாவது ஆழ்வாரான, பெரியாழ்வாரைப் பற்றி சொல்ல முயற்சிக்கிறேன். பெரியாழ்வாரின் பெருமைகள் ஸ்ரீவைஷ்ணவத்தில் இரண்டு முக்கிய அடைமொழிகள், ஒன்று “நம்” மற்றது “பெரிய”. நம்பெருமாள், நம்மாழ்வார், நம்ஜீயர், நம்பிள்ளை என்று பெருமையுடன் அழைக்கப்படுகின்ற சில ‘நம்’ விசேஷங்கள். அதே போல், பெரிய கோவில், பெரிய… Continue Reading “Periyazhwar / பெரியாழ்வார்”
For English version, kindly click here, thanks ஆழ்வாரைப் பற்றி ஒரு சில தலைப்புகளில், அவரின் பெருமைகள், அவதாரம், மதுரகவி ஆழ்வாருடன், நாதமுனி அவர்களுடன், ஸ்ரீரங்கநாதனுடன் என்று பார்த்தோம். இன்னும் இரண்டு முக்கியமான தலைப்புகள் உள்ளன, ஒன்று, அவரின் படைப்புகள் அல்லது அவர் அருளிய திவ்ய பிரபந்தங்கள் பற்றியவை; மற்றொன்று அவர் பாடிய திவ்ய தேசங்கள். அவைகளைப் பற்றி… Continue Reading “Namazhwaar’s Moksham / நம்மாழ்வாரின் மோக்ஷம்”
For English version, please click here, thanks நம்மாழ்வார் மிகவும் உகந்த பெருமாள் நம் அரங்கனே! நம்மாழ்வாரும் அரங்கனும் சேர்ந்து வருகிற சில காட்சிகளை இங்கு காண்போம். நாம் நினைவில் கொள்ளவேண்டியது என்ன வென்றால், நம்மாழ்வார் முப்பத்திரண்டு வருடங்கள் தான் இப்பூவுலகில் இருந்தார், அதுவும் ஆழ்வார் திருநகரிலேயே புளிய மரத்தடியில்தான் வாழ்ந்தார். இந்த வலைப்பதிவில் ஆழ்வார் என்று சொல்வது எல்லாம்… Continue Reading “Thiruaranganudan/திருஅரங்கனுடன்”
For English version, please click here, thanks. நாதமுனிகள் ஓராண் வழி ஆசார்யர்களில் நம்மாழ்வாருக்கு அடுத்த ஆசார்யன் நாதமுனிகள் ஆவார். ஆனி மாதம் அனுஷ நட்சத்திரத்தில் காட்டுமன்னர்கோயில் எனப்படும் வீரநாராயணபுரத்தில் அவதரித்தவர் ஸ்ரீ நாதமுனிகள் ஆவார். இவருக்கு ஸ்ரீ ரங்கநாத முனி என்ற திருநாமமும் உண்டு. கடைசி ஆழ்வாரான திருமங்கை ஆழ்வார் காலத்திற்கு பிறகு சுமார் 300 அல்லது 400 வருடங்கள் ஆன… Continue Reading “With Nathamunigal/நாதமுநிகளுடன்”
For English version, please click here, thanks. மதுரகவி ஆழ்வார் அவதாரம் மதுரகவி ஆழ்வார், தமிழ் மாதமான சித்திரையில், சித்ரா நட்சத்திரத்தில், (சித்திரையில் சித்திரை என்று கூறுவார்கள், கார்த்திகையில் கார்த்திகை என்பது திருமங்கையாழ்வாருக்கு! ) பெருமாளின் வாகனமான கருடனின் அம்சமாக தென் தமிழ்நாட்டில் ஆழ்வார்திருநகரிக்கு அருகில் உள்ள திருக்கோளூர் என்ற திவ்ய தேசத்தில் அவதரித்தார். மதுரகவிஆழ்வார் பெருமை மதுரகவியாழ்வார் தன்னுடையப் பாசுரங்களில் பெருமாளை பாடாது,… Continue Reading “With Madhurakavi Azhwaar/மதுரகவி ஆழ்வாருடன்”
For English version, kindly click here, thanks இராமாயண முடிவில் ஒரு காட்சி பகவானின் விபவ ரூபங்களில் வரும் தசாவதாரத்தில் ஏழாவது அவதாரமான ஸ்ரீ ராமன் நன்றாக ஆட்சி செய்து, பரமபதம் செல்ல முடிவுசெய்த பிறகு ஒரு நாள் யமதர்மன் ஸ்ரீ ராமரை தரிசித்து அவரிடம் பரமபதம் செல்வதைப் பற்றி பேச வந்தான். அப்போது ஸ்ரீ ராமன், லக்ஷ்மணனிடம் வெளியே… Continue Reading “Namazhwaar’s Birth /நம்மாழ்வாரின் அவதாரம்”