A Simple Devotee's Views
For English version, please click here, Thanks ஐந்தாவது நிலை எம்பெருமானின் ஐந்து நிலைகளை நம் பூர்வாச்சார்யர்கள் ஐந்து விதமான நீர் நிலைக்களுக்கு ஒப்பிடுவர். அவை, இந்த நிலைகளை, ‘பரம் என்பது ஆவரண ஜலம் போன்றது; வியூஹம் என்பது சமுத்திர ஜலம் போன்றது; விபவம் என்பது காட்டாற்று வெள்ளம் போன்றது; அந்தர்யாமி என்பது ஊற்று நீர் போன்றது; அர்ச்சை என்பது… Continue Reading “Archai/அர்ச்சை”
For English version, please click here, thanks. நாதமுனிகள் ஓராண் வழி ஆசார்யர்களில் நம்மாழ்வாருக்கு அடுத்த ஆசார்யன் நாதமுனிகள் ஆவார். ஆனி மாதம் அனுஷ நட்சத்திரத்தில் காட்டுமன்னர்கோயில் எனப்படும் வீரநாராயணபுரத்தில் அவதரித்தவர் ஸ்ரீ நாதமுனிகள் ஆவார். இவருக்கு ஸ்ரீ ரங்கநாத முனி என்ற திருநாமமும் உண்டு. கடைசி ஆழ்வாரான திருமங்கை ஆழ்வார் காலத்திற்கு பிறகு சுமார் 300 அல்லது 400 வருடங்கள் ஆன… Continue Reading “With Nathamunigal/நாதமுநிகளுடன்”
For English version, please click here, thanks. மதுரகவி ஆழ்வார் அவதாரம் மதுரகவி ஆழ்வார், தமிழ் மாதமான சித்திரையில், சித்ரா நட்சத்திரத்தில், (சித்திரையில் சித்திரை என்று கூறுவார்கள், கார்த்திகையில் கார்த்திகை என்பது திருமங்கையாழ்வாருக்கு! ) பெருமாளின் வாகனமான கருடனின் அம்சமாக தென் தமிழ்நாட்டில் ஆழ்வார்திருநகரிக்கு அருகில் உள்ள திருக்கோளூர் என்ற திவ்ய தேசத்தில் அவதரித்தார். மதுரகவிஆழ்வார் பெருமை மதுரகவியாழ்வார் தன்னுடையப் பாசுரங்களில் பெருமாளை பாடாது,… Continue Reading “With Madhurakavi Azhwaar/மதுரகவி ஆழ்வாருடன்”
For English version, kindly click here, thanks இராமாயண முடிவில் ஒரு காட்சி பகவானின் விபவ ரூபங்களில் வரும் தசாவதாரத்தில் ஏழாவது அவதாரமான ஸ்ரீ ராமன் நன்றாக ஆட்சி செய்து, பரமபதம் செல்ல முடிவுசெய்த பிறகு ஒரு நாள் யமதர்மன் ஸ்ரீ ராமரை தரிசித்து அவரிடம் பரமபதம் செல்வதைப் பற்றி பேச வந்தான். அப்போது ஸ்ரீ ராமன், லக்ஷ்மணனிடம் வெளியே… Continue Reading “Namazhwaar’s Birth /நம்மாழ்வாரின் அவதாரம்”
For English Version, please click here, thanks நம்மாழ்வார் பற்றிய இந்த வலைப்பதிவை பல பகுதிகளாகப் பிரிக்கலாம். நம்மாழ்வாரின் அவதாரம் நம்மாழ்வாரும் மதுரகவி ஆழ்வாரும் நம்மாழ்வாரின் படைப்புகள் நம்மாழ்வாரால் பாடல் பெற்ற ஸ்தலங்கள் நம்மாழ்வாரும் திரு அரங்கனும் நம்மாழ்வார் மோட்சம் பெற்றது நம்மாழ்வாரும் நாதமுனிகளும் அடையபோகும் பொருள் மிக உயர்ந்ததாக இருந்தால், அடையும் வழியும் சிரமானதாகவே இருக்கும். அந்த வழியைச் சொல்லி… Continue Reading “Namazhwaar’s Glories / நம்மாழ்வாரின் பெருமைகள்”
For English Version, please click here, thanks ஆயுதங்கள் ஸ்ரீ மஹா விஷ்ணுவின் ஆயுதங்கள் பற்பல. அவைகளில் முக்கிய ஆயுதங்கள், பாஞ்சசன்னியம் என்ற சங்கு, சுதர்சனன் என்ற சக்கரம், கௌமோதகீம் என்ற கதை, சார்ங்கம் எனும் வில், மற்றும் கட்கம் அவரது வாள் . ஸ்ரீ மகா விஷ்ணு விற்கு எல்லா ஆயுதங்களுமே ஆயுதங்கள் ஆகவும் ஆபரணங்கள் ஆகவும் அடையாளமாகவும்… Continue Reading “Vishnu’s Five Weapons / விஷ்ணுவின் பஞ்சாயுதங்கள்”
For English Version, kindly click here, thanks மூன்றாவது கண் ஒரு நாள் சிவ பெருமான் தன் ரிஷப வாகனத்தில் பார்வதி தேவியுடன் சென்ற போது, கீழே திருமழிசை ஆழ்வார் இருப்பதைப் பார்த்து அவரை சந்திக்க ஆசை பட்டார். சிவபெருமான், ஆழ்வார் விஷ்ணு பக்தர், நம்மை சந்திக்க மாட்டார் என்றுஅவர் சொல்லியும் பார்வதி விரும்ப, சிவன் கீழே இறங்கினார். ஆழ்வாரிடம்… Continue Reading “Thirumazhisai Alwar in Chola Naadu / திருமழிசையாழ்வார் சோழ நாட்டில்”
முகவுரை திருமழிசை ஆழ்வார் அடுத்து வரும் ஆழ்வார். இவரை பற்றிய குறிப்புகள் அதிகம். அவற்றில் சிலவற்றை மட்டும் பார்க்கலாம். இவர் தை மதம், மஹ நட்சத்திரத்தில் திருமாலின் சக்கராயுதத்தின் அம்சமாக அவதரித்தார். இந்த ஆழ்வார் 5000 ஆண்டுகள் வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது. இவரின் பல பிரபந்தங்களில், நான்முகன் திருவந்தாதி 120 பாசுரங்களுடனும், திருச்சந்த விருத்தம் 96 பாசுரங்களுடனும் இன்று இரண்டு திவ்ய பிரபந்தங்கள் உள்ளன.… Continue Reading “Thirumazhisai Azhwaar in Thondainaadu / திருமழிசையாழ்வார் தொண்டைநாட்டில்”
For English Version, kindly click here, thanks ஆழ்வார்கள் – வட மொழியில் உள்ள வேதங்களை தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்து, மக்களுக்கு உபதேசிப்பதற்காகவே இப்பூவுலகிற்கு அனுப்பப்பட்டனர். ஆனால் அவர்கள், பகவானிடம் பக்தியில் மூழ்கி, அவருடைய கருணையால் அந்த பகவானை அனுபவிப்பதையே முதன்மையாகக் கொண்டும், உபதேசிப்பதை ஆரம்பிப்பதற்கு முன்னால் மோட்சம் அடைவதையே குறிக்கோளாக கொண்டு வாழ்ந்து, மோட்சமும் அடைந்தனர். இதனால் ஸ்ரீமன் நாராயணன் உலகத்திற்கு,… Continue Reading “Muthal Azhwaargal / முதல்ஆழ்வார்கள்”
For English Version, kindly click here, thanks (The above picture is Sri NamAzhwaar at Sri Puchong Srinivasa Perumal Temple, Kuala Lumpur, Malaysia during Vaikasi Visaka Purappadu) ஜீவாத்மாக்களை மூன்றாக பிரிக்கலாம், ஒன்று நித்யசூரிகள், இரண்டாவது முக்தாத்மாக்கள், மூன்றாவது பக்தர்கள். நித்யசூரிகள் என்றென்றும் பரமாத்மாவுக்கு சேவை செய்து கொண்டு இருப்பவர்கள்; அவருக்கு படுக்கையாகவும், ஆசனமாகவும்… Continue Reading “ஆழ்வார்களும் ஆச்சாரியர்களும் / Aazhwaargals and Achaaryars”