A Simple Devotee's Views
வாசலட்சுமி தாயார் ஸமேத அழகிய மணவாளப் பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி
திவ்யதேசம் | திருக்கோழி / உறையூர் / உறந்தை / நிசுளாபுரி | |||
மூலவர் | அழகியமணவாளன் | |||
உத்ஸவர் | ||||
தாயார் | கமலவல்லி நாச்சியார், வாஸலக்ஷ்மி, உறையூரவல்லி | |||
திருக்கோலம் | நின்ற | |||
திசை | வடக்கு | |||
பாசுரங்கள் | 2 | |||
மங்களாசாசனம் | திருமங்கை ஆழ்வார் 1 குலசேகர ஆழ்வார் 1 |
பங்குனி உத்திரம்
திருவரங்கத்தில் நடக்கும் பங்குனி உத்திரம் என்ற விழாவில் உறையூரும் பங்கு பெற்றுஉள்ளது. உறையூர் தாயார் பங்குனி ஆயில்ய நக்ஷத்திரத்தில் உதித்தவர் ஆகையால், திருவரங்க பெருமாள் திருவரங்கத்தில் நடக்கும் பங்குனி உத்திர பெருவிழாவில், 6ம் நாள், ஆயில்ய நக்ஷ்த்திரத்தன்று காவிரி, குடமுருட்டி ஆறுகளை கடந்து உறையூர் எழுந்தருளி, கமலவல்லி நாச்சியாருடன் உறையூர் சேர்த்தி மணடபத்தில் மணக்கோலத்தில் இரவு வரை காட்சி தருகிறார்.
எம்பெருமான், உறையூரில் சேர்த்தி கண்ட பின்பு ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் வரும் போது, அவரை உள்ளே விடாமல் பெரிய பிராட்டியார் தடுப்பார். அப்பொழுது, நம்மாழ்வார் தான் வந்து சமரசம் செய்து வைப்பார். பிராட்டியாரும் நம் பெரியன் சொல்படி கேட்டோம் என்று ஆழ்வாருக்கு உயர்ந்த மரியாதையை தருவார். ‘நம் பெரியன்’ என்று சொன்னதால் நம்மாழ்வார் என்ற பெயர் தாயார் கொடுத்ததாக கொள்ளலாம்.
கோவில் பற்றி
தாயார் திருநாமம், கமலவல்லி தாயார். தாயார் பெருமாள் சந்நிதியில் பெருமாளுக்கு பக்கத்திலேயே வீற்றிந்த திருக்கோலம். தாயாருக்கு தனி சந்நிதி கிடையாது.
கார்த்திகை மாதத்தில், திருப்பாணாழ்வார் 10 நாட்கள் விழா நடைபெறுகிறது. திருப்பாணாழ்வார் இந்த தலத்தில் அவதரித்தவர். இவருக்கு இங்கு தனி சன்னதி உண்டு.
கோவில் கோபுரம் 5 நிலை உடையது. பொதுவாக வைகுண்ட ஏகாதசி நாளன்று பெருமாள் சொர்க்கவாசல் கடந்து செல்லும் வைபவம் வைஷ்ணகோவில்களில் நடக்கும். ஆனால் உறையூரில் தாயார் சொர்க்கவாசல் கடந்து செல்லும் நிகழ்ச்சி தை அல்லது மாசி மாத தேய்பிறை ஏகாதசி அன்று நடக்கும். வைகுண்ட ஏகாதசி அன்று இங்கு சொர்க்க வாசல் திறப்பதில்லை. (please reconfirm with the temple authorities, thanks)
அரங்கநாதரே கமலவல்லி நாச்சியாரை மணந்து கொண்டதால், இங்குள்ள பெருமாளும், தாயாரும், அவரை நோக்கி வடக்கு திசையை பார்த்து தரிசனம் செய்கிறார்கள். மூலஸ்தானத்தில் தாயார் மட்டுமே உற்சவராக இருக்கிறார்.
ஸ்தலபுராணம்
சோழ மன்னனின் மகளாக அவதரித்த கமலவல்லி நாச்சியார், திருவரங்கநாதன் மேல் காதல் கொண்டு, விரதம் இருக்க, அழகியமணவாளன் இங்கு வந்து நாச்சியாரை மணம் புரிந்து கொண்டதாக ஸ்தலபுராணம்.
Google Map Location
உறையூர் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்
தினம் ஒரு திவ்யதேசம் திருக்கோழி அல்லது உறையூர் பற்றி சொல்வது
2021ம் வருட சேர்த்தி உத்சவம் – நன்றி Srirengavilasam Srirangam