Site icon Vaishnavism

030 திருவண்புருடோத்தமம் thiruvanpurushothamam

Advertisements

புருஷோத்தமநாயகி தாயார் ஸமேத புருஷோத்தமப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி

திவ்யதேசம்திருவண்புருடோத்தமம் (திருநாங்கூர் 3)
மூலவர் புருஷோத்தமன்
உத்ஸவர் புருஷோத்தமன்
தாயார்புருஷோத்தம நாயகி
திருக்கோலம்நின்ற
திசைகிழக்கு
பாசுரங்கள்10
மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 10
தொலைபேசி+91 4364-256221
Thanks to Google Map screenshot plus text edits by author (not to scale)

திருநாங்கூர் பற்றி இங்கே காணலாம்.

கோவில் பற்றி

மூலவர் புருஷோத்தமன் நின்ற திருக்கோலத்தில், ஸ்ரீதேவி, பூதேவிமார்களுடன் காட்சி அளிக்கிறார். புருஷோத்தம நாயகி நாச்சியாருக்கு தனிக்கோவில் உள்ளது. அயோத்தி எம்பெருமானே இங்கு எழுந்தருளினார்.

புருஷர்கள் மூன்று வகை. தான் இன்பம் அடைய, மற்றவனை துன்பறுத்துபவன் அதமன். எல்லோரும் இன்பமுடன் இருக்க வேண்டும் என்று விரும்புபவன் மத்யமன். தான் துன்புற்றாலும், மற்றவர் இன்பம் அடையவேண்டும் என்பவன் உத்தமன்.

தான் துன்பமுற்றாலும் பரவாயில்லை, உலகம் இன்பமுற வேண்டும் என்று அவதாரம் எடுத்ததால் இவனே உத்தமன். அயோத்தி ஸ்ரீ ராமன் புருஷர்களின் உத்தமர், அதனால், புருஷோத்தமன்.

இந்த கோவிலில் மூன்று ஆஞ்சநேயர் உள்ளனர். அதில் இராமர் சந்நிதியில் உள்ள ஆஞ்சநேயர் கைகட்டி வாய்பொத்தி காட்சி அளிப்பது சிறப்பான ஒன்று.

ஸ்தல வரலாறு

பிரம்மா முதலான தேவாதி தேவர்களுக்கு உண்டாகும் துன்பத்தைப் போக்கி தம்மை எதிர்ப்பவர்களை அழித்து உலகத்தை ரட்சிப்பதையே முக்கிய தொழிலாகக் கொண்டவர் தாம் புருஷோத்தமன். இந்த திவ்யதேசத்தில், சிறு குழந்தைக்கும் பால் வழங்கி ரட்சித்ததை பார்க்கலாம்.

வ்யாக்ரபாத முனிவர் என்பவர் எம்பெருமானுக்கு பூ பரித்து, மாலை கட்டி எம்பெருமானுக்கு சூட்டும் கைங்கர்யத்தை மேற்கொண்டிருந்தார். இக்கோவிலில் எம்பெருமானுக்கு மாலை கட்ட வந்தவர் தனது குழந்தை உபமன்யூவை உட்கார வைத்துவிட்டுப் பூப்பறிக்கச் சென்றார். குழந்தை பசியால் அழுதது. வண்புருடோத்தமன் திருப்பாற்கடலை வரவழைத்து. குழந்தைக்கு புருஷோத்தம நாயகி மூலம் பாலைப் புகட்டி அனுக்கிரஹம் புரிந்து வ்யாக்ர பாத முனிவருக்கும் காட்சி தந்தார் என்பதும் இந்த ஸ்தல வரலாறு ஆகும்.

அப்பொழுது வரவழைத்த திருப்பாற்கடல், இன்று திருப்பாற்கடல் தீர்த்தமாக இந்த திருத்தலத்தின் வடக்கே அமைந்து உள்ளது .

ஆழ்வார்

திருமங்கை ஆழ்வார் இந்த திவ்யதேச எம்பெருமானை அயோத்தி ஸ்ரீராமனாகவே பாவித்து பாசுரங்கள் பாடி உள்ளார். (பெரிய திருமொழி, 4.2.1 முதல் 4.2.10)

Google Map

திருவண்புருடோத்தமம் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

திருவண்புருடோத்தமம் பற்றி தினம் ஒரு திவ்யதேசம்

Exit mobile version