Site icon Vaishnavism

055 திருப்பவளவண்ணம் Thirupavalavannam

Advertisements

பவளவல்லி சமேத பவளவண்ணன் திருவடிகளே போற்றி போற்றி

திவ்யதேசம்திருப்பவளவண்ணன் – ப்ரவாளேச வண்ணன்
மூலவர்திருப்பவளவண்ணன்
உத்ஸவர்
தாயார்திருப்பவளவல்லி (தனிக்கோவில் நாச்சியார்)
திருக்கோலம்நின்ற
திசைமேற்கு
பாசுரங்கள்1
மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 1
தொலைபேசி+91 98423 51931

தொண்டை நாட்டு திருப்பதிகள் பற்றிய ஒரு சிறு குறிப்பினை இங்கே காணலாம், நன்றி.

கோவில் பற்றி

எம்பெருமானுக்கு நான்கு யுகங்களிலும் நான்கு வெவேறு வர்ணங்கள். க்ரித யுகத்தில் வெண்ணிறம் ; திரேதா யுகத்தில் பவள நிறம் ; துவாபார யுகத்தில் பச்சை நிறம் ; கலியுகத்தில் கருநீலம் நிறம்.

எம்பெருமானின் நிறத்தைக்கொண்டு மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம் இது ஒன்றுதான். 

இந்தப் பவள வண்ணர் கோவிலுக்கு எதிரிலேயே பச்சை வண்ணர் (மரகத வண்ணர்) கோவில் அமைந்துள்ளது இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று எதிர்த்திசையில் அமைந்துள்ளது. இந்த பச்சை வண்ணர் ஆதிசேடன் மீது
அமர்ந்த திருக்கோலத்தில் பரமபத நாதனாக எழுந்தருளியுள்ளார்.

ஸ்தல வரலாறு

பிரம்மனின் யாகத்தைக் கலைக்க சரஸ்வதி கொடிய அரக்கர் கூட்டத்தை அனுப்பிய போது, எம்பெருமான் அஷ்டபுஜகரத்தானாகத் தோன்றி, அந்த அரக்கர்களை எல்லாம் கொன்று குவித்து ரத்தக்களரியாக நின்றாரே அந்த செம்மை சேர்ந்த பவள வண்ணத்தில் இந்த பவளவண்ணர் நின்று காட்சி அளிக்கிறார்.

ஆழ்வார்

 பணி வரையின் உச்சியாய் பவள வண்ணா என்று திருநெடுந்தாண்டகத்தில் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்து உள்ளார்.

Google Map

திருப்பவளவண்ணன் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

தினம் ஒரு திவ்யதேசம், திருப்பவளவண்ணன் பற்றி சொல்வது

Exit mobile version