Site icon Vaishnavism

006 திருப்பேர்நகர் Thirupernagar

Advertisements

இந்திராதேவி (கமலவல்லி) தாயார் ஸமேத அப்பக்குடத்தான் திருவடிகள் போற்றி போற்றி

, திவ்யதேசம்திருப்பேர்நகர் கோவிலடி, அப்பக்குடத்தான்
மூலவர்அப்பக்குடத்தான் , அப்பால ரங்கன்
உத்ஸவர்அப்பக்குடத்தான்
தாயார்இந்திராதேவி கமலவல்லி
திருக்கோலம்கிடந்த (புஜங்க சயனம்)
திசைமேற்கு
பாசுரங்கள்33
மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 19
நம்மாழ்வார் 11
பெரியாழ்வார் 2
திருமழிசையாழ்வார் 1
தொலைபேசி+91 4362 281 488; +91 4362 281 460; +91 4362 281 304; +91 99524 68956

கோவில் பற்றி

பஞ்ச ரங்க க்ஷேத்திரங்கள் ஐந்து. அவை,

  • ஆதி ரங்கம் – ஸ்ரீரங்கபட்டினம் ரங்கநாதன்,
  • மத்திய ரங்கம் – திருவரங்கம் ரங்கநாதன்,
  • அப்பாலரங்கம் கோவிலடி அல்லது திருப்பேர்நகர் அப்பக்குடத்தான் ,
  • சதுர்த்த ரங்கம் – திருக்குடந்தை சாரங்கபாணி,
  • பஞ்ச ரங்கம் – திரு இந்தளூர் பரிமளரங்கன்

எம்பெருமானுக்கு தினமும் இரவு, அப்பம் பிரசாதம் கண்டருள செய்யப்படுகிறது. எம்பெருமான் மேற்கு பார்த்தும், தாயார் கிழக்கு பார்த்தும் காட்சி அளிக்கிறார்கள்.

ஸ்தல வரலாறு

துர்வாச முனிவரால் தனக்கு ஏற்பட்ட ஒரு சாபம் தீர உபமன்யு மன்னன் தினமும் அன்னதானம் செய்து வந்தான். ஒருநாள் மஹாவிஷ்ணு அந்தணர் வேடம் தாங்கி வந்து அனைத்து உணவையும் தானே உண்டார். மன்னன் வியந்து, மேலும் என்ன வேண்டும் என்று கேட்க, ஒரு குடம் அப்பம் வேண்டும் என்று பெருமாள் கேட்டார். உபமன்யுவும் அப்பக்குடத்தைக் கொண்டு வந்துக் கொடுக்க, திருமாலும் காட்சி தந்து மன்னன் சாபம் தீர்த்தார்.

அருகில் அமர்ந்திருக்கும் உபமன்யு முனிவருக்கு ஆசி கூறும் பெருமாளின் வலது திருக்கரம் ஒர் அப்பக் குடத்தையும் வைத்துஇருப்பதாக உள்ளது.

ஆழ்வார்கள்

நம்மாழ்வாரால் கடைசியாக மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்யதேசம் இது தான். அப்பக்குடத்தான் ஆழ்வாரின் கையைப் பிடித்து அவரை மோட்சத்திற்குச் அழைத்துச் சென்றார்

நம்மாழ்வார் “பேரே உறைகின்ற பிரான், இன்று வந்து பேரேன் என் நெஞ்சு நெறையப் புகுந்தான்” (10-8-2)  என்றும், தன்னை திருநாடு கொண்டு செல்வதில்  “கருத்தின் கண் பெரியன்”,  (10-8-8) என்றும், சொல்லி  “உற்றேன் உகந்து பணிசெய,  உன பாதம்  பெற்றேன்” (10.8.10) என்று முடிக்கிறார். இதற்கு அடுத்த பதிகம் “சூழ்விசும்பு அணி முகில்” என்று பரமபதத்தில் தனக்கு கிடைத்த நல்வரவேற்பை அனுபவித்து பாட ஆரம்பித்து விடுகிறார்.

திருமங்கையாழ்வாரும் இந்த பெருமாளை பாடிவிட்டு, திருக்குறுங்குடி சென்று அங்கிருந்து பரமபதம் அடைந்தார் என்று சொல்வதுண்டு.

Google Map

அப்பக்குடத்தான் பற்றி வேளுக்குடி ஸ்வாமிகள்

தினம் ஒரு திவ்யதேசம் திருப்பேர்நகர் பற்றி சொல்வது

நம் பதிப்புகளில் திருப்பேர்நகர் பற்றி

Exit mobile version