005 திருஅன்பில் / Thiruanbil

அழகியவல்லித்தாயார் ஸமேத வடிவழகியநம்பி பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி

திவ்யதேசம்அன்பில் / பிரம்மபுரி
மூலவர்வடிவழகியநம்பி
உத்ஸவர்சுந்தரராஜ பெருமாள்
தாயார்அழகியவல்லி தாயார்
திருக்கோலம்கிடந்த
திசைகிழக்கு
பாசுரங்கள்1
மங்களாசாசனம்திருமழிசையாழ்வார்
தொலைபேசி+91 431 6590 672

கோவில் பற்றி

மூலவர் திருவடிவழகிய நம்பி பெருமான் புஜங்க சயனத்தில் பள்ளி கொண்டு அருள்பாலிக்கிறார். நாபிக்கமலத்தில் ப்ரஹ்மா காட்சி அளிக்கிறார்.

திருமாலின் சயனங்கள் 10 வகைப்படும்.

1. ஜல சயனம்
2. தல சயனம்
3. புஜங்க சயனம் (சேஷசயனம்)
4. உத்தியோக சயனம்
5. வீர சயனம்
6. போக சயனம்
7. தர்ப்ப சயனம்
8. பத்ர சயனம் (பத்ர எனில் ஆலமரத்து இலை)
9. மாணிக்க சயனம்
10. உத்தான சயனம்

ஆண்டாளுக்கு தனி சன்னதி. உற்சவ ஆண்டாள், அமர்ந்த கோலத்தில் காட்சி அளிப்பது சிறப்பு.

ஸ்தலபுராணம்

வடிவழகியநம்பி, பிரம்மாவின் மேல் அன்பு கொண்டு, அவரின் கர்வத்தை அடக்கி, அவர்க்கு காட்சி அளித்ததால், இந்த ஊர் அன்பில் என பெயர் பெற்றது. திருமலையான் துறை மண்டகபுரி, பிரம்மபுரி  என்ற இந்த கோயிலுக்கு வேறு பெயர்களும் உண்டு.

பிரபல மண்டுக முனிவர் ஒரு சமயம் தண்ணீருக்குள் மூழ்கி நீண்ட கால தவம் செய்து கொண்டிருந்தார்.  அப்பொழுது அவரை தேடி துர்வாச முனிவர் வந்தார்.  தவத்தில் மூழ்கியிருந்த  மண்டுக முனிவர்,  துர்வாச முனிவர் வந்ததை கவனிக்கவில்லை.  வெகு நேரம் காத்திருந்தும் மண்டுக முனிவர் தன்னை காண வரவில்லை என்ற கோபத்தால் துர்வாசர், மண்டுக முனிவரை தவளையாக  மாறும்படி சாபமிட்டு விட்டார்.  இதற்கு பிறகு மண்டுக முனிவர்,  தன் தவற்றை உணர்ந்து துர்வாச முனிவரிடம் சாபவிமோசனம் கேட்க துர்வாச முனிவர் ” இந்த திருத்தலத்தில் உள்ள பெருமாளை நோக்கி பிரார்த்தனை செய்தால் சாபவிமோசனம் கிடைக்கும்.  மறுபடியும் மனிதனாக மாறலாம் என்று வழிகாட்டினார்.  அதன்படியே மண்டுக முனிவர் அன்பில் உள்ள திரு வடிவழகிய நம்பி பெருமாளை வழிபட்டு சாப விமோசனம் பெற்றதாக வரலாறு.

சிறப்பு

This divya desam is also known as Triveni, as the three rivers Kaveri, Savitri and Phalguni rivers are said to have merged into one and flowing near this divya desam. Savitri and Phalguni are said to be flowing underground. Hence this place is also known as Dakshina gaya. Those who cannot go to Gaya, can perform the sradha for their forefathers here with an equal holy effect.

Google Map

திருஅன்பில் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

தினம் ஒரு திவ்யதேசம் திருஅன்பில் பற்றி சொல்வது

Thanks to friends from whatsapp group.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
%d bloggers like this: